search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "petition"

    • சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் 11 பணியிடம் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • போதிய மருத்துவர்கள் இல்லாததால் சிகிச்சைக்கு வரும் மக்கள் சிரமத்துக்கு ஆளாகுகின்றனர்.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் வட்டத்தின் தலைமையிட மருத்துவமனையாக அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இம்மருத்துவமனையில் டாக்டர் உள்ளிட்ட 11 பணியிடம் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சாத்தான்குளம் பா.ஜ.க. தலைவர் சரவணன் தலைமையில் நகரத் தலைவர் ஜோசப் ஜெபராஜ், ஒன்றிய பொதுச் செயலர் ஜெயராஜேஷ்குமார் மற்றும் நிர்வாகிகள் சாத்தான்குளம் தாசில்தார் அலுவலகத்தில் தலைமையிடத்து துணை தாசில்தார் பிரபுவிடம் ஒரு மனு அளித்தனர். அந்த மனுவில், சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் மருத்துவர் உள்ளிட்ட 11 பணியிடங்கள் காலியாக உள்ளது. மருத்துவமனைக்கு தற்காலிகமாக மருத்துவர்கள் வந்து செல்கின்றனர். போதிய மருத்துவர்கள், பணியாளர்கள் இல்லாததால் மருத்துவ மனைக்கு சிகிச்சைக்கு வரும் மக்கள் சிரமத்துக்கு ஆளாகுகின்றனர். எனவே அரசு மருத்துவமனைக்கு கூடுதல் மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களை நியமிக்க பரிந்துரைக்க வேண்டும் என கூறி இருந்தனர்.

    உணவு பாதுகாப்பு தொடர்பான புகார்களை வாட்சாப் மூலம் தெரிவிக்க வசதி

    அரியலூர்,  

    அரியலூர் மாவட்ட கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தீபாவளி பண்டிகை காலத்தில் இனிப்பு மற்றும் கார வகைகளுக்கு சீட்டு நடத்துபவர்கள் உள்பட அனைத்து தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களும் உணவு பாதுகாப்புத்துறையில் பதிவு செய்து உரிமம் பெற்று பொதுமக்களுக்கு விற்பனை செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

    இனிப்பு, கார வகைகள் மற்றும் பேக்கரி பொருள்கள் தயாரிப்பவர்கள் தரமான மூலப்பொருள்களை கொண்டு சுகாதாரமான முறையில் தயாரித்து பாதுகாப்பான இனிப்பு, பலகார பொருள்களை மக்களுக்கு வழங்க வேண்டும்.

    உணவு தயாரிப்பில் கலப்படமான பொருள்களையோ, அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமான நிறமிகளையோ, உபயோகிக்ககூடாது, ஒருமுறை பயன்படுத்திய சமையல் எண்ணெயை மீண்டும் மீண்டும் சூடுப்படுத்தி உணவு தயாரிக்க பயன்படுத்த கூடாது.

    பண்டிகை காலத்தில் மட்டும் இனிப்பு பலகாரம் உட்பட அனைத்து தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களும் உடனடியாக இணையதளத்தில் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம், 2006-ன் கீழ் தங்களது வணிகத்தினை பதிவு செய்ய வேண்டும்.

    பேக்கிங் செய்யப்பட்ட உணவு பொருள்களுக்கு விபர சீட்டு இடும்போது அதில் தயாரிப்பாளரின் முழு முகவரி, உணவு பொருள்களின் பெயர், தயாரிப்பு அல்லது பேக்கிங் செய்யப்பட்ட தேதி சிறந்த பயன்பாட்டு காலம், காலாவதியாகும் காலம் சைவ மற்றும் அசைவ குறியீடு போன்றவற்றை அவசியம் குறிப்பிட வேண்டும். உணவு பொருள்களை ஈக்கள், பூச்சிகள் மற்றும் கிருமி தொற்று இல்லாத சுகாதாரமான சூழலில் பொதுமக்களுக்கு விற்பனை செய்ய வேண்டும்.

    மேலும் உணவு தயாரிப்பாளர்கள், உணவு பாதுகாப்பு பயிற்சிகளை பெற்றிருக்க வேண்டும். பொதுமக்களும் பண்டிகை காலங்களில் பலகாரங்கள் வாங்கும் போது உணவு பாதுகாப்புத்துறையின் பதிவு பெற்ற நிறுவனங்களில் மட்டுமே வாங்க வேண்டும். பேக்கிங் செய்யப்பட்ட பொருள்களை விபரச்சீட்டு இருந்தால் மட்டுமே வாங்கி பயன்படுத்த வேண்டும் .

    எனவே, நுகர்வோர் உணவு பொருள்களை வாங்கும் போது அவற்றில் தயாரிப்பு தேதி, தயாரிப்பாளர் விபரம் மற்றும் உணவு பாதுகாப்பு உரிமம் எண் போன்றவற்றை சரிபார்த்து வாங்க வேண்டும். மேலும் உணவு பொருள்களின் தரம் தொடர்பான புகார்களுக்கு உணவு பாதுகாப்பு துறையின் 9444042322 எண்ணிற்கு வாட்சாப் மூலம் புகார் தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

    • சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
    • பெண்கள் திண்டிவனம் தாசில்தார் அலுவல கத்தில் தாசில்தாரி டம் மனு கொடுக்க வந்தனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் 20-வது வார்டில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இதில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு மட்டும் மகளிர் உரிமை கிடைத்துள்ள தாகவும் ஆனால் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு தகுதி இருந்தும் மகளிர் உரிமை தொகை கிடைக்க வில்லை என கூறி 20-வது வார்டு கவுன்சிலர் ரம்யா ராஜாவுடன் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் திண்டிவனம் தாசில்தார் அலுவல கத்தில் தாசில்தாரி டம் மனு கொடுக்க வந்தனர். அப்போது தாசில்தார் இல்லாததால் திண்டிவனம் வருவாய் ஆய்வாளர் டோமிஸ் சேவியரை முற்றுகையிட்டு 100-க்கும் மேற்பட்ட பெண்கள் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்ட னர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • சேர்வைகாரன்மடம் கிராமத்தில் உள்ள காமராஜர் நகர் பகுதிகளில் கனரக வாகனம் வந்து செல்வதால் கிராமப்புற சாலைகள் ரோடு சேதம் அடைந்து வருகிறது.
    • எனவே அதிக பாரம் ஏற்றும் கனரக வாகனங்கள் செல்வதை தடுக்கும் வகையில் காமராஜர் நகர் நுழைவுப் பகுதிகளில் “தடுப்பு ஆர்ச் “ அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தூத்துக்குடி:

    பெருந்தலைவர் மக்கள் கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் மாரியப்பன் தலைமையில் பொதுமக்கள், கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில் கூறியிருப்ப தாவது:-

    தூத்துக்குடி, புதுக்கோட்டை, சாயர்புரம், ஸ்ரீவைகுண்டம், சாத்தான்குளம் உள்ளிட்ட தூத்துக்குடி மாவட்ட பகுதிகளில் நிலத்தடி நீர் அதிகளவில் உறிஞ்சப் பட்டு விற்பனை செய்யப் பட்டு வருகிறது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே அதிகளவு நீர் உறிஞ்சப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்.

    சேர்வைகாரன் மடம் கிராமத்தில் உள்ள காம ராஜர்நகர் பகுதிகளில் அதிக பாரம் ஏற்றும் கனரக வாகனங்கள் நாள்தோறும் கிராமப்புற ரோடுககளில் வந்து செல்வதால் இந்த பகுதியில் வசிக்கும் குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். கனரக வாகனம் வந்து செல்வதால் கிராமப்புற சாலைகள் ரோடு சேதம் அடைந்து வருகிறது. இதனால் ரோடுகள் அடிக்கடி குண்டும், குழியுமாக காணப்படுகிறது. கிராமப்புற சாலைகளில் கனரக வாகனம் செல்ல அனுமதியில்லை என விதிமுறைகள் இருந்தும் இந்த விதிமுறைகள் முற்றிலும் மீறப்பட்டு வருகிறது. எனவே அதிக பாரம் ஏற்றும் கனரக வாகனங்கள் செல்வதை தடுக்கும் வகையில் காமராஜர்நகர் நுழைவுப் பகுதிகளில் "தடுப்பு ஆர்ச் " அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    அப்போது பெருந்தலை வர் மக்கள் கட்சி பொருளாளர் மில்லை தேவராஜ், நிர்வாகிகள் சரவணன், சண்முகவேல், சரவணக்குமார், கதிர் ெஜயக்குமார், ஞானப்பூஅம்மாள் மற்றும் பலர் உடனிருந்தனர்.

    • 10 லட்சம் தொழில் முனைவோர், ஒரு கோடி தொழிலாளிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டுகோள்
    • சட்டமன்றத்தில் தனி தீர்மானம் கொண்டுவர கோரிக்கை

    கோவை,

    தமிழ்நாடு தொழில் துறை மின் நுகர்வோர்கள் கூட்டமைப்பு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு மற்றும் சுழற்சி ஜவுளி கூட்டமைப்பினர் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் எம்.எல்.ஏ.க்கள் அம்மன் அர்ச்சுனன், பி.ஆர். ஜி. அருண்குமார், பொள்ளாச்சி ஜெயராமன், ஏ.கே.செல்வராஜ், தாமோதரன், கே.ஆர். ஜெயராம், அமுல் கந்தசாமி, சூலூர் கந்தசாமி ஆகியோரிடம் மனு அளித்தனர்.

    அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    10 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் குறு சிறு நடுத்தர தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மூலப்பொருள் விலை ஏற்றம் உள்ளிட்ட கார ணங்களால் தவித்து வரும் தொழில் நிறுவனங்களுக்கு, தமிழக அரசு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அறிவித்த மின்கட்டண உயர்வு மேலும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

    நாங்கள் பயன்படுத்தும் யூனிட் கட்டணம் 20 சதத்துக்கும் மேல் உயர்த்தியும், நிலை கட்டணம் கிலோ வாட்டுக்கு 430 சதம் உயத்தியும், இதுவரை இல்லாத புதிய யுக்தியாக பீக்ஹவர்க்கான கட்டணம் நிரணயம் செய்து 24 மணிநேரத்தில் நாள் ஒன்றுக்கு 8 மணி நேரம் கணக்கீடு செய்து பீக்ஹவர் கட்டணமாக 15 சதம் கூடுதலாக வசூ லிக்கப்படுகிறது.

    10 சதவீத லாபம் கூட இல்லாமல் குறு, சிறு நடுத்தர தொழில்கள் இயங்கி வரும் சூழ்நிலையில் கடந்த ஆண்டில் உயர்த்தப்பட்ட 40 சதவீதம் மின் கட்டண உயர்வால் தொழில் துறை யினர் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    தொழில்களை பாதுகாக்கும் பொருட்டாக மக்களின் பிரதிநிதிகளான தாங்கள் தமிழ்நாட்டில் உள்ள 10 லட்சம் தொழில் முனைவோர்களின் வாழ்வா தாரமும் ஒரு கோடிக்கு மேல் நிறுவனங்களில் பணிபுரிந்து வரும் தொழிலாளிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும் தமிழக சட்டமன்றத்தில் தொழில் சார்ந்த பிரச்சினைக்கு தனி தீர்மா ன கொண்டு வந்து விவாதித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ெதாழில் துறை க்கான மின்சார நிலைக்க ட்டணத்தை முழுமையாக திரும்பபெற வேண்டும். பீக்ஹவர் கட்டணம் முழுமையாக திரும்பபெற வேண்டும். தமிழ்நாட்டின் தொழில் நிலை சீரடையும் வரை குறைந்தபட்சம் 2 ஆண்டுகளுக்கு மின்கட்டண உயர்வு கைவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.

    • 10 ஆண்டுகளுக்கு முன்பு மேற்கு புறவழிச் சாலை திட்டம் அமைக்க பரிசீலனை செய்யப்பட்டது.
    • புறவழிச்சாலை அமைய உள்ள நிலங்களை கையகப்படுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடை பெற்றது. இதில் மாவட் டத்தின் பல்வேறு பகுதி களில் இருந்தும் பொது மக்கள் திரண்டு வந்து மனு அளித்தனர்.

    மேற்கு புறவழிச்சாலை திட்டம்

    தாழையூத்து பஞ்சாயத்துக்கு உட்பட்ட வடக்கு தாழையூத்து ஊர் பொதுமக்கள் திரண்டு வந்து அளித்த மனு வில் கூறியிருப்பதாவது:-

    நெல்லையில் மாநகர பகுதியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வித மாக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மேற்கு புறவழிச் சாலை திட்டம் அமைக்க பரிசீலனை செய்யப்பட்டது.

    கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நெல்லை வந்த முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின், மேற்கு புற வழிச்சாலை திட்டத்தை விரைவுப்படுத்த உத்தர விட்டார்.

    பணிகள் மும்முரம்

    அதன் அடிப்படையில் தற்போது புறவழிச்சாலை அமைய உள்ள நிலங்களை கையகப்படுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    இந்த புறவழிச்சாலை யானது தாழையூத்து, சத்திரம் புதுக்குளம், ராமையன்பட்டி, ராமலிங்க நேரி, அபிஷேகப்பட்டி, திருப்பணி கரிசல்குளம், கொண்டாநகரம், சுத்தமல்லி, நரசிங்கநல்லூர், கருங்காடு, கோபால சமுத்திரம் வழியாக முன்னீர் பள்ளம் சென்று பொன்னாக்குடி பகுதியில் நான்கு வழி சாலையை அடைகிறது.

    கூடுதலாக 5 கிலோ மீட்டர்

    இந்த சாலை பணிக்காக நிலங்கள் கையகப்படுத்தப் பட்டு பெரும்பாலான இடங் களில் எல்லை கற்களும் நடப்பட்டு விட்டது. ஆனால் இந்த பாதையில் தனிப்பட்ட நபர் ஒருவர் நிலம் இருப்ப தால் அந்த பகுதியில் உள்ள சாலையை மாற்றி வேறு பாதையில் அமைக்க அதிகாரிகள் திட்டமிட்டுள் ளதாக தெரிகிறது.

    இதனால் கூடுதலாக 5 கிலோ மீட்டர் சுற்றிவர வேண்டிய நிலை இருக்கிறது. நில எடுப்பு செய்வது தொடர்பாக அதன் உரிமை யாளர்களிடம் பேச்சு வார்த்தை நடத்திய பின்னர் தற்போது புதிய பாதையை பரிசீலனை செய்வது வேடிக்கையாக உள்ளது.

    விபத்து அதிகம்

    தாழையூத்து ஊராட்சியில் 18 ஆயிரம் மக்கள் தொகை உள்ளனர். சுமார் 2 ஆயிரம் குழந்தைகள் சங்கர் மேல் நிலைப்பள்ளியில் மற்றும் தனியார் பள்ளிகளில் படித்து வரும் நிலையில் அந்த வழியாக புறவழிச் சாலை அமைந்தால் விபத்துக்கள் அதிகம் நடக்க வாய்ப்பு உள்ளது.

    எனவே நாரணம்மாள் புரம் பகுதி 1 வழியாக இந்த புறவழிச்சாலையை அமைப்பதற்கு ஊர் பொது மக்கள் சார்பில் கேட்டுக் கொள்கிறோம். புறவழிச் சாலை என்பது ஊருக்கு முன்பு தான் தொடங்க வேண்டுமே தவிர ஊருக்கு உள்ளே வரக்கூடாது.

    எனவே மாவட்ட கலெக்டர் இதனை மறு ஆய்வு செய்து ஏற்கனவே அறிவித்தபடி மேற்கு வழி சாலையை ஐ.சி.எல். நியூ காலனி குடியிருப்பு அருகே நாரணம்மாள்புரம் கிராமம் வழியாக தொடங்கும் வகை யில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.

    • பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்களில் 85 மனுக்கள் ஏற்கப்பட்டது.
    • கோரிக்கை மற்றும் புகார்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டு தீர்வு காணப்படும்.

    குத்தாலம்:

    மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே பாலையூரில் நடைபெற்ற மாவட்ட ஆட்சியரின் மக்கள் தொடர்பு முகாமில் 96 பயனாளிகளுக்கு ரூ.12.89 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் மகாபாரதி வழங்கினார்.

    பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன், மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் உமாமகேஸ்வரி சங்கர் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற முகாமில், பாலையூர், காஞ்சிவாய், நல்லாவூர், ஸ்ரீகண்டபுரம் ஆகிய கிராம ங்களை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    முகாமை யொட்டி செப்டம்பர் 5-ஆம் தேதியில் இருந்து அலுவலர்கள் பாலையூர் கிராமத்தில் முகாமிட்டு பொதுமக்களிடம் இருந்து பெற்ற 101 கோரிக்கை மனுக்களை பரிசீலனை செய்ததில் 85 மனுக்கள் ஏற்கப்பட்டது. 16 மனுக்கள் நிராகரிக்கப்பட்டது.

    அதன்படி, வருவாய் துறையின் சார்பில் 5 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா தலா ரூ.20,000 மதிப்பிலும், சமூக பாதுகாப்பு திட்டத்தின் மூலம் முதியோர் மற்றும் இதர உதவித்தொகை 34 பயனாளிகளுக்கு ரூ.5 லட்சம் மதிப்பிலும், திருமண உதவித்தொகை (மகன் திருமணம்) 11 பயனாளிகளுக்கு தலா ரூ.8,000 மதிப்பிலும், திருமண உதவித்தொகை (மகள் திருமணம்) 5 பயனாளிகளுக்கு தலா ரூ.10,000 மதிப்பிலும், இயற்கை மரண உதவி த்தொகை 21 பயனாளிகளுக்கு தலா ரூ.21,500 உள்பட மொத்தம் 96 நபர்களுக்கு ரூ.12,89,700 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி மற்றும் எம்எல்ஏ நிவேதா எம்.முருகன் ஆகியோர் வழங்கினர்.

    இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பேசியதாவது:-

    மயிலாடுதுறை மாவட்டத்தில் பொதுமக்கள் தங்களது கோரிக்கை மற்றும் புகார்களை 7092255255 என்ற வாட்ஸ் அப் எண் மூலம் தெரிவிக்கலாம். அந்த கோரிக்கை மற்றும் புகார் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டு உடனுக்குடன் தீர்வு ஏற்படுத்தித் தரப்படும் என்றார்.

    இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் மு.மணிமேகலை, சமூக பாதுகாப்பு த் திட்ட தனித்துணை ஆட்சியர் கண்மணி, கோட்டாட்சியர் யுரேகா, ஒன்றியக்குழுத் தலைவர் மகேந்திரன், வட்டாட்சியர் சித்ரா மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • புதுக்கோட்டை மாவட்ட மக்கள்குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர்மெர்சி ரம்யா, தலைமையில் நடைபெற்றது
    • பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 505 மனுக்களை பொதுமக்கள் அளித்தனர்

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்ட மக்கள்குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர்மெர்சி ரம்யா, தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில், முதியோர் உதவித்தொகை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை, பட்டாமாறுதல், போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 505 மனுக்களை பொதுமக்கள் அளித்தனர். இம்மனுக்களின் மீது விசாரணை மேற்கொள்ள சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். தனி மாவட்ட வருவாய் அலுவலர்சரவணன், மாவட்ட கலெக்டர் நேர்முக உதவியாளர் தங்கவேல், தனித்துணை ஆட்சியர் செய்யது முகம்மது, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ஸ்ரீதர், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உலகநாதன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

    • முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை மனுவை நகர்மன்ற தலைவர் வழங்கினார்.
    • சிவகங்கை நகர் மக்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்ற சிவகங்கை மாவட்டம் சார்பில் வேண்டு கோள் விடுக்கிறோம்.

    சிவகங்கை

    சிவகங்கை தி.மு.க. நகர் மன்ற தலைவர் துரை ஆனந்த் முதல் அமைச் சர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை மனு அளித்தார் அதில் கூறியிருப்பதாவது:-

    இந்திய நாட்டின் விடு தலைக்கு தமிழ்நாட்டிற்கு தனிச்சிறப்பு உண்டு. அதில் மாமன்னர் மருதுபாண்டி யர்கள் வீரம், கொடை, சாதி மதம் பாராமல் சமூக நீதி பார்வையோடு இந்திய நாட் டின் விடுதலைக்கு பாடுபட்ட வரலாற்று சிறப்புமிக்க மாமன்னர் மருது பாண்டியர் களின் நினைவை போற்றும் விதமாக தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் வெண்கல சிலையை வைப்பதற்கு ஆணை பிறப் பித்த முதல் அமைச் சருக்கு சிவகங்கை நகர்மன்றத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    அதுபோல சிவகங்கையை ஆண்ட மாமன்னர் மருது பாண்டியர்களுக்கு பெருமை சேர்க்கும் விதமாக சிவகங்கை மாவட்டத்தில் வெண்கல சிலை வைப்பதற்கு ஆணை பிறப்பிக்க சிவகங்கை நகர்மன்றத்தால் சிறப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. (நகர்மன்ற தீர்மானம் எண்.202) மேலும் சிவகங்கை நகரில் மன்னர் மருதுபாண்டியர்களுக்கு வெண்கல சிலையை அமைப்பதற்கும், சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரிக்கு மன்னர் மருதுபாண்டியர் களின் பெயரை சூட்டவும், காளையார்கோவில் நினைவிடம் அருகில் மணி மண்டபம் அமைக்கவும், சிவகங்கை நகர் மக்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்ற சிவகங்கை மாவட்டம் சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம்.

    இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

    • மழைநீர் செல்லக்கூடிய வழிகள் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதால் மழைநீர் குடியிருப்பு பகுதிகளிலேயே தேங்கி நிற்கிறது.
    • விஷ ஜந்துக்கள் மழை நீரோடு வீட்டிற்குள் வந்து விடுகிறது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டத்திற்குட்பட்ட பூமலூர் அபிராமி கார்டன் பகுதியில் 30க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரக்கூடிய நிலையில் மழை பெய்யும் போது அப்பகுதியில் முறையான வடிகால் மற்றும் மழைநீர் செல்லக்கூடிய வழிகள் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதால் மழைநீர் குடியிருப்பு பகுதிகளிலேயே தேங்கி நிற்கிறது.

    இதனால் அப்பகுதி பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாவதோடு மட்டுமல்லாமல் , விஷ ஜந்துக்கள் மழை நீரோடு வீட்டிற்குள் வந்து விடுகிறது. மேலும் நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அப்பகுதியில் முறையான வடிநீர் வடிகால் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் .

    மழைநீர் செல்லக்கூடிய பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தர வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் பா.ம.க., கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் நிர்வாகிகள் கிரிஷ் சரவணன் , ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.

    • 5 மகள்களுக்கு பங்கு கொடுக்காமல் ஏமாற்றியதாக புகார் தெரிவித்தார்.
    • சொத்துகளை மீட்டு தரக்கோரி கலெக்டரிடம் கண்ணீர் மல்க மனு அளித்தார்.

    கோவை,

    கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள நாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரங்கநாயகி. இவருக்கு 2 மகன்கள், 5 மகள்கள் உள்ளனர். இவரது சொத்துகளை தனது 2 மகன்களும் அபகரித்துக்கொண்டு தன்னை கவனிக்காமலும், 5 மகள்களுக்கு பங்கு கொடுக்காமல் ஏமாற்றியதாகவும், சொத்துகளை மீட்டு தரக்கோரி ரங்கநாயகி கலெக்டரிடம் கண்ணீர் மல்க மனு அளித்தார்.

    இதேபோல் மோப்பரிபாளையம் பேரூராட்சி எம் பாப்பம்பட்டியை சேர்ந்த பொதுமக்கள் இன்று அளிக்க வந்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: நாங்கள் இந்த பகுதியில் 30க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். பேரூராட்சியால் எங்கள் பகுதிக்கு கடந்த 2013 ம் ஆண்டு தார் சாலை அமைக்கப்பட்டது. தனிநபர் ஒருவர் இதனை ஆக்கிரமித்து கற்களை கொட்டி வைத்து செல்ல வழி இல்லாமல் செய்துள்ளார். இது குறித்து அதிகாரிகளை சந்தித்து பலமுறை மனு அளித்தோம். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவே உடனடியாக நடவடிக்கை எடுத்து சாலை ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர்.

    • முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
    • பசுமை தமிழகத்தை உருவாக்கிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

    பெரம்பலூர்

    தமிழ்நாடு வேளாண்மை பட்டதாரிகள் ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள் மாநில தலைவர் அக்ரி மாதவன் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

    இந்த அம்மனுவில் கூறப் பட்டுள்ளதாவது, வேளாண் அறிவியல் கல்வியை அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும் அறிமுகம் செய்து வேளாண்மை பட்ட தாரிகளை முதுநிலை ஆசிரி யர்களாக நியமனம் செய்ய வேண்டுதல்.

    மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில் வேளாண் அறிவியல் ஆசி ரியர் காலிப் பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்,

    வேளாண்மை மற்றும் தோட்டக்கலை தொழில்நுட்ப பட்டதாரிகளை பள்ளிக்கல்வித்துறை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை ஆகியவற்றில் உரிய பணியிடங்களில் நியமனம் செய்து பல்லாயிரக்கணக்கான வேலையில்லா வேளாண் பட்டதாரிகளின் வாழ்வில் ஒளி ஏற்றி பசுமை தமிழகத்தை உருவாக்கிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

    ×