search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதுக்கோட்டை மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
    X

    புதுக்கோட்டை மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

    • புதுக்கோட்டை மாவட்ட மக்கள்குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர்மெர்சி ரம்யா, தலைமையில் நடைபெற்றது
    • பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 505 மனுக்களை பொதுமக்கள் அளித்தனர்

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்ட மக்கள்குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர்மெர்சி ரம்யா, தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில், முதியோர் உதவித்தொகை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை, பட்டாமாறுதல், போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 505 மனுக்களை பொதுமக்கள் அளித்தனர். இம்மனுக்களின் மீது விசாரணை மேற்கொள்ள சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். தனி மாவட்ட வருவாய் அலுவலர்சரவணன், மாவட்ட கலெக்டர் நேர்முக உதவியாளர் தங்கவேல், தனித்துணை ஆட்சியர் செய்யது முகம்மது, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ஸ்ரீதர், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உலகநாதன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×