search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மின்சார கட்டண உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களிடம் தொழில்துறையினர் மனு
    X

    மின்சார கட்டண உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களிடம் தொழில்துறையினர் மனு

    • 10 லட்சம் தொழில் முனைவோர், ஒரு கோடி தொழிலாளிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டுகோள்
    • சட்டமன்றத்தில் தனி தீர்மானம் கொண்டுவர கோரிக்கை

    கோவை,

    தமிழ்நாடு தொழில் துறை மின் நுகர்வோர்கள் கூட்டமைப்பு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு மற்றும் சுழற்சி ஜவுளி கூட்டமைப்பினர் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் எம்.எல்.ஏ.க்கள் அம்மன் அர்ச்சுனன், பி.ஆர். ஜி. அருண்குமார், பொள்ளாச்சி ஜெயராமன், ஏ.கே.செல்வராஜ், தாமோதரன், கே.ஆர். ஜெயராம், அமுல் கந்தசாமி, சூலூர் கந்தசாமி ஆகியோரிடம் மனு அளித்தனர்.

    அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    10 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் குறு சிறு நடுத்தர தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மூலப்பொருள் விலை ஏற்றம் உள்ளிட்ட கார ணங்களால் தவித்து வரும் தொழில் நிறுவனங்களுக்கு, தமிழக அரசு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அறிவித்த மின்கட்டண உயர்வு மேலும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

    நாங்கள் பயன்படுத்தும் யூனிட் கட்டணம் 20 சதத்துக்கும் மேல் உயர்த்தியும், நிலை கட்டணம் கிலோ வாட்டுக்கு 430 சதம் உயத்தியும், இதுவரை இல்லாத புதிய யுக்தியாக பீக்ஹவர்க்கான கட்டணம் நிரணயம் செய்து 24 மணிநேரத்தில் நாள் ஒன்றுக்கு 8 மணி நேரம் கணக்கீடு செய்து பீக்ஹவர் கட்டணமாக 15 சதம் கூடுதலாக வசூ லிக்கப்படுகிறது.

    10 சதவீத லாபம் கூட இல்லாமல் குறு, சிறு நடுத்தர தொழில்கள் இயங்கி வரும் சூழ்நிலையில் கடந்த ஆண்டில் உயர்த்தப்பட்ட 40 சதவீதம் மின் கட்டண உயர்வால் தொழில் துறை யினர் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    தொழில்களை பாதுகாக்கும் பொருட்டாக மக்களின் பிரதிநிதிகளான தாங்கள் தமிழ்நாட்டில் உள்ள 10 லட்சம் தொழில் முனைவோர்களின் வாழ்வா தாரமும் ஒரு கோடிக்கு மேல் நிறுவனங்களில் பணிபுரிந்து வரும் தொழிலாளிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும் தமிழக சட்டமன்றத்தில் தொழில் சார்ந்த பிரச்சினைக்கு தனி தீர்மா ன கொண்டு வந்து விவாதித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ெதாழில் துறை க்கான மின்சார நிலைக்க ட்டணத்தை முழுமையாக திரும்பபெற வேண்டும். பீக்ஹவர் கட்டணம் முழுமையாக திரும்பபெற வேண்டும். தமிழ்நாட்டின் தொழில் நிலை சீரடையும் வரை குறைந்தபட்சம் 2 ஆண்டுகளுக்கு மின்கட்டண உயர்வு கைவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.

    Next Story
    ×