search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மழை நீர் வடிகால் வசதி கேட்டு மனு
    X

    மனு அளிக்க வந்த பொதுமக்கள்.

    மழை நீர் வடிகால் வசதி கேட்டு மனு

    • மழைநீர் செல்லக்கூடிய வழிகள் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதால் மழைநீர் குடியிருப்பு பகுதிகளிலேயே தேங்கி நிற்கிறது.
    • விஷ ஜந்துக்கள் மழை நீரோடு வீட்டிற்குள் வந்து விடுகிறது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டத்திற்குட்பட்ட பூமலூர் அபிராமி கார்டன் பகுதியில் 30க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரக்கூடிய நிலையில் மழை பெய்யும் போது அப்பகுதியில் முறையான வடிகால் மற்றும் மழைநீர் செல்லக்கூடிய வழிகள் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதால் மழைநீர் குடியிருப்பு பகுதிகளிலேயே தேங்கி நிற்கிறது.

    இதனால் அப்பகுதி பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாவதோடு மட்டுமல்லாமல் , விஷ ஜந்துக்கள் மழை நீரோடு வீட்டிற்குள் வந்து விடுகிறது. மேலும் நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அப்பகுதியில் முறையான வடிநீர் வடிகால் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் .

    மழைநீர் செல்லக்கூடிய பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தர வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் பா.ம.க., கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் நிர்வாகிகள் கிரிஷ் சரவணன் , ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.

    Next Story
    ×