search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Palai"

    • நெல்லை மாவட்டத்தில் இந்த உடல் தகுதி தேர்வு நடைபெற உள்ளதை யொட்டி பாளை ஆயுதப் படை மைதானத்தில் எழுத்து தேர்வில் வெற்றி பெற்றவர் களுக்கு உடல் தகுதி தேர்வு கலந்து கொள்வதற்காக பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
    • நெல்லை மாவட்டத்தில் 1,100 ஆண்களும், 450 பெண்களும் உடல் தகுதி தேர்வில் கலந்து கொள்ள உள்ளனர்.

    நெல்லை:

    தமிழக காவல்துறையில் இரண்டாம் நிலை பிரிவில் காவலர், சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் பணிகளுக்கு உள்ள 3,552 காலிப் பணியிடங்களுக் கான தேர்வு அறிவிப்பு கடந்த ஜூன் மாதம் 30-ம் தேதி வெளியிடப்பட்டது.

    உடல் தகுதி தேர்வு

    அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 15-ம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இப்பணி களுக்கான எழுத்து தேர்வு கடந்த நவம்பர் 27-ம் தேதி நடைபெற்றது.

    அதில் வெற்றி பெற்ற வர்களுக்கு உடல் தகுதி தேர்வு வருகிற 5-ந் தேதி நடைபெற உள்ளது.

    ஆயுதப் படை மைதானத்தில் பயிற்சி

    நெல்லை மாவட்டத்தில் இந்த உடல் தகுதி தேர்வு நடைபெற உள்ளதை யொட்டி பாளை ஆயுதப் படை மைதானத்தில் எழுத்து தேர்வில் வெற்றி பெற்றவர் களுக்கு உடல் தகுதி தேர்வு கலந்து கொள்வதற்காக பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

    இதற்காக கயிறு ஏறுதல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், பந்து எறிதல், ஓட்டப்பயிற்சி உள்ளிட்டவை அளிக்கப்பட்டு வருகிறது.

    தனித்தனி இடங்கள்

    நெல்லை மாவட்டத்தில் 1,100 ஆண்களும், 450 பெண்களும் உடல் தகுதி தேர்வில் கலந்து கொள்ள உள்ளனர்.

    ஆண்களுக்கான உடல் தகுதி தேர்வு காலை ஆயுதப்படை மைதானத்தில் வைத்தும், பெண்களுக்கான உடல் தகுதி தேர்வு தனியார் கல்லூரி வளாகத்திலும் நடைபெற உள்ளது.

    • தமிழகம் முழுவதும் ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எதிராக காங்கிரஸ் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் பாளை ஜோதிபுரத்தில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.
    • ஆர்ப்பாட்டத்தில் ஆளுநர் வரம்பு மீறி செயல்படுவதாகவும், சட்டமன்ற கூட்டத்தில் உரையாற்றிய போது காமராஜர், அம்பேத்கர் உள்ளிட்ட தலைவர்கள் பெயரை கூற மறுத்ததற்கு கண்டனம் தெரிவித்தும் கோஷம் எழுப்பப்பட்டது.

    நெல்லை:

    தமிழகம் முழுவதும் ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எதிராக காங்கிரஸ் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் பாளை ஜோதிபுரத்தில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.

    கண்டன கோஷம்

    மாநகர் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

    ஆர்ப்பாட்டத்தில் ஆளுநர் வரம்பு மீறி செயல்படுவதாகவும், சட்டமன்ற கூட்டத்தில் உரையாற்றிய போது காமராஜர், அம்பேத்கர் உள்ளிட்ட தலைவர்கள் பெயரை கூற மறுத்ததற்கு கண்டனம் தெரிவித்தும் கோஷம் எழுப்பப்பட்டது.

    கலந்து கொண்டவர்கள்

    இதில் கவுன்சிலர்கள் அனுராதா சங்கர பாண்டியன், அம்பிகா, மண்டல தலைவர்கள் கோட்டூர் முருகன், ரசூல் மைதீன், ராஜேந்திரன், அய்யப்பன், கெங்கராஜ், பொதுக்குழு உறுப்பி னர்கள் கவி பாண்டியன், சொக்கலிங்க குமார், பொதுச் செயலாளர் மகேந்திர பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பின்னர் பாளை-திருவனந்தபுரம் சாலையில் உள்ள மதுக் கடையை மூட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    பின்னர் முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் கூறியதாவது:-

    தமிழக ஆளுனரின் செயல் சட்டமன்றத்தை அவமதிப்பதாக உள்ளது, எனவே அவரை உடனடி யாக தமிழகத்தில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும். அவரின் அவமதிப்பு நடவடிக்கை காரணமாகவே முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆளுனருக்கு எதிராக கண்டன தீர்மானத்தை நிறைவேற்றினார். ஆளுநரை ஒன்றிய அரசு திரும்ப பெறவேண்டும் என தெரிவித்தார். 

    • மர்மநபர்கள் அவரது வீட்டின் பின் கதவை உடைத்து உள்ளே நுழைந்து, பீரோவில் இருந்த 120 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.
    • சம்பவத்தன்று நள்ளிரவு நேரத்தில் 4 பேர் சேர்ந்து வீட்டின் பின்கதவை உடைப்பது தெரிய வந்தது.

    நெல்லை:

    பாளை பெருமாள்புரம் கனராபேங்க் காலனியை சேர்ந்தவர் பன்னீர் செல்வம்.

    120 பவுன் நகை கொள்ளை

    இவரது மனைவி தேவி (வயது 58) நெடுஞ் சாலைத் துறையில் உதவி பொறியா ளராக பணியாற்றி வருகி றார். தேவி கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் வெளியூர் சென்றார்.

    இந்நிலையில் மர்மநபர் கள் அவரது வீட்டின் பின் கதவை உடைத்து உள்ளே நுைழந்து, பீரோவில் இருந்த 120 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.

    சி.சி.டி.வி. ஆய்வு

    இதுகுறித்து தேவி அளித்த புகாரின்பேரில் பெருமாள்புரம் போலீசார் விரைந்து சென்று விசா ரணை நடத்தினர். சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது.

    மேலும் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிரா காட்சிகளை சேகரித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது சம்பவத்தன்று நள்ளிரவு நேரத்தில் 4 பேர் சேர்ந்து வீட்டின் பின்கதவை உடைப்பது தெரிய வந்தது.

    5 தனிப்படைகள் அமைப்பு

    ஆனால் அந்த 4 பேரின் உருவங்களும் தெளிவாக தெரியவில்லை. எனினும் கிடைத்த காட்சிகளை வைத்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    கொள்ளையர்களை பிடிப்பதற்காக உதவி கமிஷனர் மேற்பார்வையில் 5 தனிப்படைகள் அமைக்கப் பட்டுள்ளது. தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசார ணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    • பாளை வி.எம்.சத்திரம் பகுதியை சேர்ந்தவர் சாமுவேல். இவரது மனைவி கில்டா விஜயகுமாரி. இவர்களுக்கு சொந்தமான நிலம் அதே பகுதியில் உள்ள திருச்செந்தூர் ரோடு போலீஸ் சோதனை சாவடி அருகே உள்ளது.
    • சாமுவேல் கடந்த சில வருடங்களுக்கு முன் இறந்த நிலையில் அந்த நிலத்திற்கு வேறு ஒரு நபர் சொந்தம் கொண்டாடி உள்ளார். இது தொடர்பாக கில்டா விஜயகுமாரி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.

    நெல்லை:

    பாளை வி.எம்.சத்திரம் பகுதியை சேர்ந்தவர் சாமுவேல். இவரது மனைவி கில்டா விஜயகுமாரி. இவர்களுக்கு சொந்தமான நிலம் அதே பகுதியில் உள்ள திருச்செந்தூர் ரோடு போலீஸ் சோதனை சாவடி அருகே உள்ளது.

    சாமுவேல் கடந்த சில வருடங்களுக்கு முன் இறந்த நிலையில் அந்த நிலத்திற்கு வேறு ஒரு நபர் சொந்தம் கொண்டாடி உள்ளார். இது தொடர்பாக கில்டா விஜயகுமாரி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.

    இந்நிலையில் நெல்லையை சேர்ந்த அரசியல் பிரமுகர்கள் உள்பட 3 பேர் அந்த நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த கற்களை அப்புறப்படுத்தி உள்ளனர். இதனை அறிந்த கில்டா விஜயகுமாரி பெருமாள்புரம் போலீசில் புகார் செய்தார். அவரது புகாரின் பேரில் போலீசார் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

    விசாரணையில் சுமார் ரூ.5 கோடி மதிப்புள்ள கில்டா விஜயகுமாரி நிலத்தை குறைந்த விலைக்கு அரசியல் கட்சி பிரமுகர்கள் கேட்டதும், அதற்கு அவர் மறுத்துவிட்டதும் தெரியவந்தது. இது தொடர்பாக போலியாக ஆவணம் ஏதேனும் தயாரித்து விற்க முடிவு செய்து கல்லை அப்புறப்படுத்தினார்களா என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தேசிய இளைஞர் தினத்தையொட்டி நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
    • கல்லூரியில் நடைபெற்ற 37- வது விளையாட்டு விழாவில் கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி புலத்தலைவர் தேரடிமணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஒலிம்பிக் தீபத்தினை ஏற்றி வைத்து விழாவை தொடங்கி வைத்தார்.

    நெல்லை:

    பாளை சாரதா கல்லூரியில் தேசிய இளைஞர் தினம் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் கணினி பயன்பாட்டியல் துறை தலைவர் அனுஷா வரவேற்று பேசினார்.

    போட்டிகள்

    கல்வியியல் கல்லூரி செயலர் யதீஸ்வரி துர்காப்ரியா அம்பா விவேகானந்தரின் பிறந்தநாளை தேசிய இளைஞர் தினமாக கொண்டாடுவதன் காரணம் குறித்து விளக்கி பேசினார்.

    சிறப்பு விருந்தினராக திண்டுக்கல் மாவட்ட காந்தி கிராம் கிராமப்புற நிறுவனத்தின் சமூகவியல் துறை பேராசிரியர் ரூபா ஹரி கலந்து கொண்டு பேசினார். முன்னதாக கல்லூரி முதல்வர் கமலா சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து பேசினார்.

    விழாவில் கல்லூரி மாணவிகள் பூரணி, சந்தியா, ஷாலினி ஆகியோர் உரையாற்றினர். மேலும் தேசிய இளைஞர் தினத்தையொட்டி நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவி களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    இதில் கல்லூரி கல்வி இயக்குநர் சந்திரசேகரன், கல்லூரி பேராசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மாணவி சுபஜோதி நன்றி கூறினார்.

    விளையாட்டு விழா

    இதேபோல் கல்லூரியில் நடைபெற்ற 37- வது விளையாட்டு விழாவில் கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி புலத்தலைவர் தேரடிமணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஒலிம்பிக் தீபத்தி னை ஏற்றி வைத்து விழாவை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் சாரதா கல்லூரி செயலர் யதீஸ்வரி துர்காப்பிரியா, கல்லூரி இயக்குநர் சந்திரசேகர் கிள்ளிகுளம் வேளாண் ஆராய்சி நிறுவனத்தை சேர்ந்த ஜூலியட் ஹெப்சிபா மற்றும் செந்தில்குமார், ஆகியோர் கலந்து கொண்டனர். கல்லூரி முதல்வர் கமலா வரவேற்றார்.

    உடற்கல்வியியல் துறை பேரா சிரியர் வெயிலு முத்து ஆண்டறிக்கை வாசித்தார். நிகழ்ச்சியில் மாணவிகளின் விழிப்பு ணர்வு அணிவகுப்புகள் மற்றும் நாடகங்கள், கலை நிகழ்ச்சிககள், நடை பெற்றது. தொடர்ந்து பார்வையாளர்களுக்கும் போட்டிகள் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற வர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. முடிவில் மாணவி நன்றி கூறினார்.

    • நெல்லை சித்தா கல்லூரி சார்பில் சித்தா விழிப்புணர்வு பேரணி மற்றும் மனித சங்கிலி இன்று நடைபெற்றது.
    • சித்த மருத்துவ விழிப்புணர்வு சம்பந்தமான துண்டு பிரசுரங்கள் வழிநெடுகிலும் உள்ள பொதுமக்களிடம் வழங்கப்பட்டது.

    நெல்லை:

    சித்தமருத்துவத்தின் தந்தை என அழைக்கப்படும் அகத்தியர் பிறந்த நடசத்திரமான மார்கழி மாத ஆயில்யம் நட்சத்திரத்தில் தேசிய சித்தா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 6-வது தேசிய சித்தா தினம் நாளை கொண்டாப்படுகிறது.

    விழிப்புணர்வு பேரணி

    இதை முன்னிட்டு நெல்லை சித்தா கல்லூரி சார்பில் சித்தா விழிப்புணர்வு பேரணி மற்றும் மனித சங்கிலி இன்று நடைபெற்றது. சித்தமருத்துவக் கல்லூரி முதல்வர் சாந்தா மரியா தலைமை தாங்கினார். போலீஸ் துணை கமிஷனர் ஸ்ரீனிவாசன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

    விழிப்புணரவு ஓட்டமானது பாளை சித்த மருத்துவக் கல்லூரியில் தொடங்கி வ.உ.சி. மைதானம், எல்.ஐ.சி அலுவலகம், லூர்து நாதர் சிலைவழியாக சென்று சித்த மருத்துவக் கல்லூரியில் முடிவடைந்தது.

    துண்டுபிரசுரம்

    தொடர்ந்து மனித சங்கிலி பாளை சித்த மருத்துவக் கல்லூரியில் வளாகத்தில் நடந்தது. சித்த மருத்துவ விழிப்புணர்வு சம்பந்தமான துண்டு பிரசுரங்கள் வழிநெடுகிலும் உள்ள பொதுமக்களிடம் வழங்கப்பட்டது.

    சித்தர்கள் சொன்ன சித்த மருத்துவக் கோட்பாடு, தத்துவங்கள் மற்றும் போதை பொருள் ஒழிப்பு வாசகங்கள் அச்சிட்ட தகவல் பலகைகளை மாணவ- மாணவிகள் கையிலேந்தி சென்றனர்.

    பாளை சித்த மருத்துவக் கல்லூரியின் உறைவிட மருத்துவர் ராமசாமி, மருத்துவர்கள் வனிதா, பூமாதேவி, ருக்மணி, நடராஜன் , ராஜாசங்கர் சித்த மருத்துவக் கல்லூரி பேராசிரியர்கள் அப்துல்காதர் ஜெயலானி, ராஜராஜேஸ்வரி, ராஜகுமாரி, மாணவ மாணவிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.  

    • தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே உள்ள மியாம் பள்ளி சர்ச் தெருவை சேர்ந்தவர் ஜெபராஜ் (வயது 22). இவர் பாளையில் ஏ.சி. மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார்.
    • பாளை கே.டி.சி. நகர் அருகே உள்ள தனியார் கல்லூரி அருகே சென்றபோது அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.

    நெல்லை:

    தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே உள்ள மியாம் பள்ளி சர்ச் தெருவை சேர்ந்தவர் சேகர். இவரது மகன் ஜெபராஜ் (வயது 22). இவர் பாளையில் ஏ.சி. மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார்.

    இந்நிலையில் நேற்று இரவு பணியை முடித்துக் கொண்டு ஜெபராஜ் மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்பிக்கொண்டு இருந்தார். பாளை கே.டி.சி. நகர் அருகே உள்ள தனியார் கல்லூரி அருகே சென்றபோது அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.

    இதில் முகம் மற்றும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே ஜெபராஜ் பரிதாபமாக இறந்தார். இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து பாளை தாலுகா போலீஸ் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் ஜெபராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற வாக னத்தை தேடி வருகின்றனர்.

    • தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட தலைநகரங்களில் இன்று மாநிலம் தழுவிய உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
    • இதில் சுமார் 500-க்கும் மேற்பட்ட சத்துணவு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    நெல்லை:

    தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட தலைநகரங்களில் இன்று மாநிலம் தழுவிய உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. நெல்லை மாவட்டத்தில் பாளை ஜோதிபுரம் திடலில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் செபஸ்தியாள் என்ற ஜெயா தலைமை தாங்கினார்.

    சத்துணவு உண்ணும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை சத்துணவு ஊழியர்களை கொண்டு நடைமுறைப்படுத்த வேண்டும், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், சத்துணவு அமைப்பாளர்களுக்கு ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்திட வேண்டும், வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் சுமார் 500-க்கும் மேற்பட்ட சத்துணவு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    • பாளை கே.டி.சி.நகர் பிருந்தாவன்நகரை சேர்ந்தவர் ஜுடி. இவருக்கு சொந்தமாக பாளையஞ்செட்டிகுளம் பகுதியில் 24 சென்ட் நிலம் உள்ளது.
    • இவ்வழக்கில் திறம்பட விசாரணை மேற்கொண்டு ரூ. 36 லட்சம் மதிப்புள்ள 24 சென்ட் நிலத்தினை மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைக்க காரணமாக இருந்த மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு போலீசாருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

    நெல்லை:

    பாளை கே.டி.சி.நகர் பிருந்தாவன்நகரை சேர்ந்தவர் ஜுடி. இவருக்கு சொந்தமாக பாளையஞ்செட்டிகுளம் பகுதியில் 24 சென்ட் நிலம் உள்ளது.

    எஸ்.பி.யிடம் மனு

    இந்த நிலத்தை போலி ஆவணம் தயார் செய்து வேறொருவருக்கு இடம் விற்பனை செய்யப்பட்டிருப்பதாக ஜுடிக்கு தெரியவரவே, அவர் தனது நிலத்தை மீட்டு தருமாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணனிடம் மனு அளித்தார்.

    இதுதொடர்பாக மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டதில் நிலமானது போலி ஆவணம் மூலம் வேறு நபருக்கு மாற்றப்பட்டது கண்டறியப்பட்டது.

    போலி ஆவணம்

    இதனையடுத்து மாவட்ட வருவாய் துறையினர் மற்றும் மாவட்ட காவல் துறையினர் இணைந்து நடத்தி வரும் நில அபகரிப்பு தொடர்பான முகாமில் நில உரிமையாளர் ஜுடி மற்றும் எதிர் மனுதாரர்கள் ஆகியோர் முகாமிற்கு அழைக்கப்பட்டு, துணை கலெக்டர் தமிழரசி , தாசில்தார் பகவதிபெருமாள் ஆகியோர் முயற்சியால் சம்மந்தப்பட்ட துறைகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு, அது போலி ஆவணம் என உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து ஜுடியிடம் நிலத்தை ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இவ்வழக்கில் திறம்பட விசாரணை மேற்கொண்டு ரூ. 36 லட்சம் மதிப்புள்ள 24 சென்ட் நிலத்தினை மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைக்க காரணமாக இருந்த மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு போலீசாருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

    மற்றொரு சம்பவம்

    நாங்குநேரி அருகே உள்ள தளபதி சமுத்திரம் வேப்பங்குளத்தை சேர்ந்தவர் சுப்பையா. இவருக்கு தளபதி சமுத்திரம் பகுதியில் நிலம் உள்ளது. அந்த நிலத்தை ஒலி ஆவணம் மூலம் மற்றொரு நபர் பத்திர பதிவு செய்திருப்பதை அறிந்த சுப்பையா தனது நிலத்தை மீட்டு தருமாறு நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கடந்த மாதம் 28-ந்தேதி புகார் அளித்து இருந்தார். அந்த மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் உத்தரவிட்டார்.

    அதன் பேரில் டி.எஸ்.பி. ஜெயபால் பர்ணபாஸ் மேற்பார்வையில் நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் மீரால் பானு மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் தனலெட்சுமி தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து அந்த நிலத்தை மீட்டு அதற்கான ஆவணத்தை நில உரிமையாளர் சுப்பையாவிடம் வழங்கினர். 

    • பாளை மனக்காவலம் பிள்ளை நகர் நேரு மெயின்ரோட்டை சேர்ந்தவர் தாமஸ். இவரது மகன் ராபர்ட்(வயது 27). இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது.
    • சமீபத்தில் ராபர்ட்டுக்கும், அதே பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது. அதன் காரணமாக கார் கண்ணாடி உடைக்கப்பட்டு இருக்கலாமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    நெல்லை:

    பாளை மனக்காவலம் பிள்ளை நகர் நேரு மெயின்ரோட்டை சேர்ந்தவர் தாமஸ். இவரது மகன் ராபர்ட்(வயது 27). இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது.

    ராபர்ட் தனது காரை வீட்டு முன்பு நிறுத்திவிட்டு தூங்க செல்வது வழக்கம். அதன்படி நேற்றிரவு காரை நிறுத்திவிட்டு தூங்க சென்றுவிட்டார். இன்று அதிகாலை தேவாலயம் செல்வதற்காக ராபர்ட் காரை எடுக்க சென்றார்.

    அப்போது கார் கண்ணாடி உடைக்கப்பட்டு இருந்தது. அதிர்ச்சி அடைந்த அவர் பாளை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் கண்ணாடியை உடைத்த மர்ம நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சமீபத்தில் ராபர்ட்டு க்கும், அதே பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது. அதன் காரணமாக கார் கண்ணாடி உடைக்கப்பட்டு இருக்கலாமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • பாளை ரெட்டியார்பட்டியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.
    • சில நாட்களுக்கு முன்பு இவர் தனது வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் வெளியூர் சென்றிருந்தார்.

    நெல்லை:

    பாளை ரெட்டியார்பட்டியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 54). இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர் தனது வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் வெளியூர் சென்றி ருந்தார்.

    இந்நிலையில் அவர்கள் இன்று காலை வீடு திரும்பினர். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது.

    இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த கிருஷ்ண மூர்த்தி உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த ரூ.3 ஆயிரம் ரொக்கம் மற்றும் வீட்டில் இருந்த டி.வி, மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள் ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து கிருஷ்ணமூர்த்தி பாளை பெருமாள்புரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு குற்றப்பிரிவு போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    மேலும் இது தொடர் பாக வழக்குப்பதிவு செய்து, கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

    • 3 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு திறமை தின விழா நடந்தது.
    • ஆடல், பாடல், நாடகம், மவுன மொழி, நடனம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளை நடத்தினர்.

    நெல்லை:

    பாளை புஷ்பலதா வித்யா மந்திர் பள்ளியில் 3 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு திறமை தின விழா நடந்தது.

    நெல்லை அரசு மருத்துவ கல்லூரி புற்றுநோயியல் மருத்துவர் பிரபுராஜ், அன்னை வேளாங்கண்ணி மருத்துவமனை எலும்பியல் மருத்துவர் பிரான்சிஸ் ராய் மற்றும் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருந்தியல் மருத்துவர் எழில் ரம்யா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினர்.

    3-ம் வகுப்பு மாண வர்கள் `பொம்மைகளின் உலகம்' என்ற தலைப்பிலும், 4- ம் வகுப்பு மாணவர்கள் `தாமிரபரணியின் வழித்தடங்கள்' என்ற தலைப்பிலும், 5-ம் வகுப்பு மாணவர்கள் `நாகரீகம்' என்ற தலைப்பிலும் ஆடல், பாடல், நாடகம், மவுன மொழி, நடனம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளை நடத்தினர்.

    பல்வேறு நாட்டின் பொம்மைகள், தரணி பாயும் நெல்லையின் சிறப்புகள் மற்றும் பல்வேறு நாட்டின் நாகரீக வளர்ச்சிகளை காட்சிப்படுத்திய விதம் பார்வையாளர்களின் கண்ணையும், கருத்தையும் கவரும் விதமாக அமைந்தது. பள்ளி தாளாளர் புஷ்பலதா பூரணன், பள்ளி முதல்வர் புஷ்பவேணி அய்யப்பன், நிர்வாக இயக்குநர் டாக்டர் மரகதவல்லி மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் கலந்து கொண்டனர்.

    ×