search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Palai"

    • நெல்லை மாவட்டத்தில் உள்ள 8 வட்டங்களில் நேற்று முதல் வருவாய் தீர்வாயம் என்று அழைக்கப்படும் ஜமாபந்தி தொடங்கியது.
    • இதில் பொதுமக்களிடம் இருந்து அதிகாரிகள் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு அதன் மீது சம்பந்தப்பட்ட துறை அதிகாரி களிடம் நடவடி க்கை எடுக்க அறிவுறுத்தினர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் உள்ள 8 வட்டங்களில் நேற்று முதல் வருவாய் தீர்வாயம் என்று அழைக்கப்படும் ஜமாபந்தி தொடங்கியது.

    கோரிக்கை மனு

    இதில் பொதுமக்களிடம் இருந்து அதிகாரிகள் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு அதன் மீது சம்பந்தப்பட்ட துறை அதிகாரி களிடம் நடவடி க்கை எடுக்க அறிவுறுத்தினர்.

    நேற்று முதல் நாள் பாளை தாலுகா அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தி நிகழ்ச்சியில் கலெக்டர் கார்த்திகேயன் கலந்து கொண்டு பொது மக்களிடம் இருந்து மனு க்களை பெற்றுக் கொண்ட நிலை யில் இன்று 2-வது நாளாக அங்கு நடந்த கூட்ட த்தில் கலெக்டர் பங்கேற்றார்.

    2-ம் நாள்

    2-ம் நாளான இன்று பாளை வட்டம் மேலப்பா ட்டம் குறு வட்டத்திற்குட்பட்ட அரியகுளம், திருத்து, கீழப்பாட்டம், கான்சாபுரம், மருதூர், கீழநத்தம், நடுவக்கு றிச்சி, சீவலப்பேரி, அவினா ப்பேரி உள்ளிட்ட கிராமங்க ளில் ஜமாபந்தி நடைபெற்றது.

    இதில் ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டு தங்களது கோரி க்கை தொடர்பான மனுக்களை அளித்தனர். பாளை தாலுகா அலுவல கத்தில் நடந்த ஜமாபந்தி நிகழ்ச்சியில் தாசில்தார் சரவணன், உதவி இயக்கு னர்கள் வாசு தேவன், கிருஷ்ண குமார், வருவாய் ஆய்வாளர் ராஜசெல்வி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • பாளை யூனியன் கீழநத்தம் ஊராட்சி மேலக்குளம் பெருமாள் சுவாமி கோவில் கொடை விழாவை முன்னிட்டு மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டி போட்டிகள் நடைபெற்றது.
    • மாட்டு வண்டி போட்டியை தி.மு.க. பொதுக்குழு உறுப்பினரும், முன்னாள் மாவட்ட கவுன்சிலருமான பரமசிவ அய்யப்பன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    நெல்லை, மே.1-

    பாளை யூனியன் கீழநத்தம் ஊராட்சி மேலக்குளம் பெருமாள் சுவாமி கோவில் கொடை விழாவை முன்னிட்டு மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டி போட்டிகள் நடைபெற்றது. மாட்டு வண்டி போட்டியை தி.மு.க. பொதுக்குழு உறுப்பினரும், முன்னாள் மாவட்ட கவுன்சிலருமான பரமசிவ அய்யப்பன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    போட்டியானது மேலக்குளம் பகுதியில் இருந்து தொடங்கி 5 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள பர்க்கிட் மாநகரம் வரை சென்று மீண்டும் மேலக்குளம் வந்தடைந்தது.

    தொடர்ந்து நடைபெற்ற குதிரை வண்டி போட்டியினை தமிழ்நாடு மாட்டு வண்டி போட்டி யாளர் சங்க தலைவர் வேலங்குளம் கண்ணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். குதிரை வண்டி போட்டி மேலக்குளத்தில் இருந்து 6 கிலோமீட்டர் தூரம் வரை சென்று மீண்டும் மேலக்குளத்தை வந்தடைந்தது.

    போட்டியில் வெற்றி பெற்ற வண்டிகளுக்கு கோப் பையும், ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் கனக ராஜ், சுப்பையா, நவீன்போஸ், பரமராஜ் பாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர். போட்டி களுக்கான ஏற்பாடு களை மேலக்குளம் பெரிய பெருமாள், சுஜித்வேல், விஜய வேல் மற்றும் விழாக் கமிட்டி யினர் செய்திருந்தனர்.

    • பாளை தெற்கு பஜாரில் உள்ள ராமசாமி கோவில் பிரசித்தி பெற்றது.
    • இந்த கோவிலையொட்டி உள்ள தெப்பக்குளத்தில் ஆண்டு தோறும் பங்குனி மாதம் நடைபெறும் தெப்ப உற்சவம் சிறப்பு வாய்ந்தது.

    நெல்லை:

    பாளை தெற்கு பஜாரில் உள்ள ராமசாமி கோவில் பிரசித்தி பெற்றது. இந்த கோவிலை யொட்டி உள்ள தெப்பக்குளத்தில் ஆண்டு தோறும் பங்குனி மாதம் நடைபெறும் தெப்ப உற்சவம் சிறப்பு வாய்ந்தது.

    சிதிலமடைந்த தெப்பக்குளம்

    கடந்த சில ஆண்டுகளாகவே தெப்பக்குளத்தை சுற்றி உள்ள கல் சுவர்கள் உடைந்து விழுந்ததோடு, தெப்பக்குளம் சிதிலம் அடைந்து காணப்படுவதாக பக்தர்கள் புகார் கூறினர்.

    எனவே தெப்பக்குளத்தை சீரமைத்து தெப்ப உற்சவம் நடத்த வேண்டும் என பக்தர்களும், பல்வேறு அமைப்புகளும் கோரிக்கை வைத்தனர்.

    சீரமைப்பு பணிகள்

    இந்நிலையில் கடந்த 2 நாட்களாக கோவில் தெப்பகுளத்தில் மீன்கள் செத்து மிதந்த வண்ணம் உள்ளன. இதுகுறித்து பக்தர்கள் கோவில் செயல் அலுவலர் சுஜாதாவிடம் புகார் கூறினர்.

    இதுபற்றி செயல் அலுவலர் சுஜாதா கூறுகை யில், கோவில் தெப்பகுளம் பல வருடங்களாக சீரமைக் கப்படாமல் உள்ளது. எனவே சிதிலம் அடைந்து காணப்படும் தெப்பக்குக் குளத்தை சீரமைத்து திருப்பணிகள் நடைபெற உள்ளது. இதற்காக தெப்பக்குளத்தில் உள்ள தண்ணீரை வெளியேற்ற வேண்டியது அவசியமாக உள்ளது.

    எனவே 2 அடிக்கு மட்டும் தண்ணீர் வைத்து விட்டு மீதமுள்ள தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் மீன்களுக்காக தெப்பக்குளத்திற்குள் ஒரு கிணறு உள்ளது. அதையும் தாண்டி தற்போது வெயி லின் தாக்கத்தால் மீன்கள் இறந்துள்ளது.

    விரைவில் தெப்பக்குளத்தை முழுமையாக சீரமைத்து திருப்பணிகள் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • பாளை பஸ் நிலையம் அருகே உள்ள ஒய்.எம்.சி.ஏ. தொண்டு நிறுவனம் மற்றும் ஓட்டுனர் பயிற்சி பள்ளி இணைந்து சாலை பாதுகாப்பு பேரணியை இன்று நடத்தியது.
    • சாலை விபத்து என்பது ஒரு சில நொடிகளிலேயே நடந்து விடுகிறது.

    நெல்லை:

    பாளை பஸ் நிலையம் அருகே உள்ள ஒய்.எம்.சி.ஏ. தொண்டு நிறுவனம் மற்றும் ஓட்டுனர் பயிற்சி பள்ளி இணைந்து சாலை பாது காப்பு பேரணியை இன்று நடத்தியது.

    விழிப்புணர்வு பேரணி

    மகளிர் தினத்தையொட்டி நடந்த இந்த விழிப்புணர்வு பேரணியை லோக் அதாலெத் மாவட்ட நீதிபதி சமீனா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் கூறியதாவது:-

    சாலை விபத்து என்பது ஒரு சில நொடிகளிலேயே நடந்து விடுகிறது. ஆனால் அதன் பாதிப்பு என்பது நீண்ட காலம் தொடரக்கூடியது. சாலை விபத்துகளில் இளம் வயதினர் உயிரிழப்பது அவர்களது பெற்றோருக்கு ஈடு செய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தும்.

    தற்போது இருசக்கர வாகனங்கள் மூலமாக ஏற்படும் விபத்துகள் அதிகரித்துள்ளது. இளம் வயதினர் பலர் சாலையின் நடுவே மோட்டார் சைக்கிள் களை வேகமாக ஓட்டி செல்கின்றனர். இதனை தவிர்க்க வேண்டும்.

    கவனம் தேவை

    பல நேரங்களில் பெரிய வாகனங்களின் மீது மோட்டார் சைக்கிள்கள் மோதும் போது சிறிய வாகனங்களுக்கு தான் சேதம் அதிகமாகிறது. எனவே அதிக கவனம் தேவை. பெண்கள் உள்பட அனைத்து இருசக்கர வாகன ஓட்டிகளும் சாலை விதிமுறைகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த பேரணியில் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த 250-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டு சாலை பாதுகாப்பு குறித்த பதாகைகளை ஏந்தியப்படி பேரணியாக சென்றனர்.

    பேரணியானது தொண்டு நிறுவனத்தில் தொடங்கி ஐகிரவுண்டு சாலை வழியாக பாளை பஸ் நிலையம் வந்தடைந்து அங்கிருந்து மீண்டும் தொண்டு நிறுவ னத்தில் முடிவடைந்தது. தொடர்ந்து பேரணியில் பங்கேற்ற மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப் பட்டன.

    • மாவட்ட அருங்காட்சியகம் சார்பில் கண்ணாடி பாட்டில்களில் ஓவியம் வரைவதற்கான பயிற்சி வழங்கப்பட்டது.
    • காருக்குறிச்சி மண்பாண்ட தொழிலாளர் சார்பில் சிறிய அளவிலான மண் பானைகள், மண்ணால் செய்யப்பட்ட பொருட்கள் தயார் செய்யும் பணியை பள்ளி மாணவ- மாணவிகள் ஆர்வமுடன் கண்டுகளித்தனர்.

    நெல்லை :

    பொருநை நெல்லை புத்தகத் திருவிழாவின் 6-வது நாளான இன்று பாளை வ.உ.சி. மைதானத்தில் உள்ள விளையாட்டு அரங்கில் அமைக்கப்பட்டுள்ள ஒரு அரங்கில் மாவட்ட அருங்காட்சியகம் சார்பில் கண்ணாடி பாட்டில்களில் ஓவியம் வரைவதற்கான பயிற்சி வழங்கப்பட்டது.

    இதில் கல்லூரி மாணவ- மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டு பாட்டில்களில் பல வண்ண ஓவியங்களை வரையும் பயிற்சியில் ஈடுபட்டனர். மேலும் அங்கு மகளிர் சுய உதவி குழு சார்பில் அமைக்கப்பட்ட அரங்கில் காருக்குறிச்சி மண்பாண்ட தொழிலாளர் சார்பில் சிறிய அளவிலான மண் பானைகள், மண்ணால் செய்யப்பட்ட பொருட்கள் தயார் செய்யும் பணியை பள்ளி மாணவ மாணவிகள் ஆர்வமுடன் கண்டு களித்தனர்.

    இது தவிர தேவர் குலத்தை சார்ந்த பொதுமக்கள் சார்பில் பனை பொருட்களான நார் பெட்டிகள், வண்ண மாலைகள் உள்ளிட்டவை தயார் செய்யும் அரங்கு அமைக்கப்பட்டிருந்தது.

    பத்தமடை பகுதியில் புகழ்பெற்ற கோரை பாய் தயாரிக்கும் அரங்கு அமைக்கப்பட்டிருந்தது. அதில் கோரை புற்களைக் கொண்டு பாய் தயாரிக்கும் பணியில் பெண் தொழிலாளி ஒருவர் ஈடுபட்டிருந்தார்.

    இதுபோல ஐ.எஸ்.ஆர்.ஒ. சார்பில் அமைக்கப்பட்டுள்ள அரங்கில் ராக்கெட்டுகள், செயற்கை கோள்கள் உள்ளிட்டவை தத்ரூபமாக அமைக்கப்பட்டு அதனை பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் ஆர்வமுடன் கண்டு களித்தனர். செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் தமிழ்நாடு அரசின் திட்டங்கள் மற்றும் அதில் பயனாளிகள் அடைந்த நன்மைகள் குறித்த புகைப்பட கண்காட்சிகள் வைக்கப்பட்டிருந்தது.

    அதனையும் மாணவ மாணவிகள் பார்த்து தெரிந்து கொண்டனர். பழங்கால பொருட்களின் கண்காட்சியும் இடம்பெற்று இருந்தது.

    • மேலப்பாளையம், பாளை விரிவாக்கப்பகுதிகளில் ஏற்பட்டுள்ள தற்காலிக குடிநீர் தட்டுப்பாட்டினை போக்க துரித நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
    • சுத்தமல்லி நீரேற்று நிலையத்தில் இருந்து வரும் பிரதான குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்டு நீண்ட காலமானதால் அவற்றில் ஆங்காங்கே உடைப்பு ஏற்படுகிறது.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ண மூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி யுள்ளதாவது:-

    நெல்லை மாநகராட்சி பகுதிகளான மேலப் பாளையம், பாளை விரிவாக்கப்பகுதிகளில் ஏற்பட்டுள்ள தற்காலிக குடிநீர் தட்டுப்பாட்டினை போக்க துரித நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    இந்த பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யும் சுத்தமல்லி நீரேற்று நிலையத்தில் இருந்து வரும் பிரதான குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்டு நீண்ட காலமானதால் அவற்றில் ஆங்காங்கே உடைப்பு ஏற்படுகிறது. இதனால் சீரான குடிநீர் விநியோகம் செய்வதில் அடிக்கடி தடங்கல் ஏற்படுகிறது.

    இவ்வாறு குழாய்களில் ஏற்படும் உடைப்புகளை சரிசெய்யும் பொருட்டு அடிக்கடி உடைப்பு ஏற்படும் பகுதிகள் கண்டறியப்பட்டு அவற்றை மாற்றுவதற்காக தனியாக ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது.

    கோடை காலங்களில் ஏற்படும் குடிநீர் தட்டுப்பாட்டி னை போக்குவதற்கு நிரந்திர தீர்வாகவும் சுத்தமல்லி தலைமை நீரேற்று நிலை யத்தில் இருந்து குடிநீர் விநியோகம் செய்யும் பழைய பிரதான குழாய்களை அகற்றி அங்கு புதிதாக குழாய் அமைப்பதற்காக ரூ.8.30 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    தற்போது மேலப்பாளை யம், பாளை விரிவாக்க பகுதிகளில் ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பாட்டினை நீக்க தற்காலிகமாக மாநகராட்சி லாரிகள் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகின்றது.

    மேலும் நிரந்தர தீர்வாக இந்த பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யும் பொருட்டு அரியநாயகிபுரம் குடிநீர் மேம்பாட்டு திட்டத்தின் மூலம் சேவியர் காலனி குடிநீர் மேல்நிலைநீர்த் தேக்க தொட்டியில் இருந்து மகிழ்ச்சிநகர் மற்றும் ஆசிரியர்காலனி பகுதிகளில் உள்ள தரைமட்ட நீர்த்தேக்க தொட்டிகளில் நிரப்பி ஆசிரியர் காலனி, தமிழ்நகர், மகிழ்ச்சிநகர்,என்.ஜி.ஓ. 'பி' காலனி, எழில்நகர், திருமால்நகர், பெருமாள்புரம் சி காலனி, குமரேசன் காலனி,கனரா பேங்க் காலனி,பி.ஏ.பிள்ளை நகர் (தியாகராஜநகர்),எல்.கே.எஸ். நகர், அன்புநகர் ஆகிய இடங்களில் உள்ள 12 குடிநீர் மேல்நிலைநீர்த் தேக்க தொட்டிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்ய துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆங்காங்கே தேவைப்படும் இடங்களில் சிறிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    மேலும் பொதுமக்கள் மத்திகள் குடிநீர் விநியோகம் தொடர்பாக வதந்திகள் ஏதும் பரப்ப வேண்டாம் எனவும் எச்சரிக்கப்படுகிறது. மாநகராட்சி குடிநீர் விநியோக வால்வு களை மாநகராட்சி சம்பந்தமில்லாத நபர்கள் யாரேனும் இயக்கினால் அவர்கள் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்படுகின்றது.

    இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

    • மகாராஜநகரில் உள்ள மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக அலுவலகத்தை முற்றுகையிட்டு சி.ஐ.டி.யு. தொழிற்சங்கம் சார்பில் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
    • தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஒப்பந்த ஊழியர்களாக பணியாற்றி வருகிறார்கள்.

    நெல்லை:

    நெல்லை மகாராஜநகரில் உள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக அலுவலகத்தை முற்றுகையிட்டு சி.ஐ.டி.யு. தொழிற்சங்கம் சார்பில் 300-க்கும் மேற்பட்ட மின் வாரிய ஊழியர்கள் இன்று போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

    சாலை மறியல்

    அப்போது, தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஒப்பந்த ஊழியர்களாக பணியாற்றி வருகிறார்கள். அவர்களை பணி நிரந்தரப்படுத்துவது என்பது நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது.

    மேலும் புயல் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பேரிடர் காலங்களில் பணியாற்றிய ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரப்படுத்த வேண்டும், மின்சார வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களில் ஒப்பந்த தொழிலாளர்களை நியமிக்க வேண்டும், ஒப்பந்த தொழிலாளர்களுக்கான தினக்கூலி ரூ. 380 முழுமையாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

    திடீரென சாலையில் அமர்ந்து அவர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டதால், அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

    • ஆண்களுக்கான போட் டியை இந்திய மாணவர் சங்கத்தின் முன்னாள் மாநில செயலாளர் ஸ்ரீராம் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
    • போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

    நெல்லை:

    சுற்றுச்சூழலை பாதுகாத்திட வலியுறுத்தியும், விபத் துகளை தவிர்த்திடவும், பொது போக்குவரத்தை பலப்படுத்தவும் விழிப்பு ணர்வு மினி மாரத்தான் போட்டி அண்ணா விளை யாட்டு மைதானத்தில் இன்று நடைபெற்றது.

    ஆயிரம் பேர்

    அரசு போக்குவரத்து மற்றும் விரைவு போக்கு வரத்து சி.ஐ.டி.யு. சங்கத்தின் சார்பில் நடைபெற்ற இப்போட்டியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டனர்.

    ஆண்களுக்கான போட் டியை இந்திய மாணவர் சங்கத்தின் முன்னாள் மாநில செயலாளர் ஸ்ரீராம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பெண்களுக்கான போட்டியை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநில துணை தலைவர் நாறும்பூநாதன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்்.

    முதல் பரிசு ரூ. 5 ஆயிரம்

    ஆண்கள் மற்றும் பெண் கள் பிரிவில் பங்கேற்று போட்டியில் வெற்றி பெற்ற வர்களுக்கு முதல் பரிசு ரூ. 5 ஆயிரம், 2-ம் பரிசு ரூ.3 ஆயிரம், 3-ம் பரிசாக ரூ.2 ஆயிரம் பாராட்டு சான்றிதழ் மற்றும் பதக்கங்களும் வழங்கப்பட்டது. போட்டி யில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியினை தடகள பயிற்சியாளர் டாக்டர் சத்யா, உடற்கல்வி ஆசிரியர் கள் மற்றும் அரசு போக்கு வரத்து சி.ஐ.டி.யு. சங்கத்தின் தலைவர் காமராஜ், பொதுச் செயலாளர் ஜோதி, மாநில துணைத் தலைவர் செண்ப கம், மாவட்ட தலைவர் பீர்முகமது ஷா, மாவட்ட செயலாளர் முருகன், பொரு ளாளர் ராஜன் மற்றும் அரசுப்போக்குவரத்தில் செயல்படும் தொழிற்சங்க தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    போட்டிக்கான பாது காப்பு ஏற்பாடுகள், போக்கு வரத்து ஒழுங்குபடுத்துதல் பணிகளை பாளை இன்ஸ்பெக்டர் வாசிவம், போக்கு வரத்து இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து தலைமையில் போலீசார் செய்திருந்தனர்். முடிவில் அரசு போக்கு வரத்து சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோதி நன்றி கூறினார்.

    • பாளை புஷ்பலதா பிரிட்டிஷ் இன்டர்நேஷனல் பள்ளியின் 10-வது விளையாட்டு தினம் கொண்டாடப்பட்டது.
    • மாணவர்களின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு சர்வதேசப் பள்ளியின் கொடியை ஏற்றி வைத்து விழாவினை தொடங்கி வைத்தார்.

    நெல்லை:

    பாளை புஷ்பலதா பிரிட்டிஷ் இன்டர்நேஷனல் பள்ளி யின் 10-வது விளையாட்டு தினம் கொண்டாடப்பட்டது. சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு பட்டாலியன் பாபி ஜோசப் கலந்து கொண்டார்.

    இவ்விழா பள்ளியின் இயக்குனர் டாக்டர்.மரகதவல்லி மற்றும் பள்ளியின் தாளாளர் புஷ்பலதா பூர்ணன் முன்னி லையில் நடை பெற்றது.

    சிறப்பு விருந்தினர் தம் உரையில் மாணவர்கள் குழு விளையாட்டுகள் அல்லது தனி விளையாட்டுகள் மூல மாக தங்கள் விளையாட்டுத் திறமைகளை வெளிப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். மாணவர்களின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு சர்வதேசப் பள்ளியின் கொடியை ஏற்றி வைத்து விழாவினை தொடங்கி வைத்தார்.

    கராத்தே, டைஸ், டான் கிராம், ட்ரான்ஸ்பர்மேஷன், இண்டர்செக்ஷன், சர்கிள்ஸ் ஆகிய விளையாட்டு நிகழ்வுகள் அனைத்தும் கணிதத்தை மைய்யப்படுத்தியதாக அமைந்திருந்தது. இதன் மூலம் மாணவர்கள் தங்கள் விளையாட்டுத்திறமைகளை வெளிப்படுத்தினர்.

    புஷ்பலதா பள்ளிகளின் முதல்வர்கள் மற்றும் பெற் றோர்கள் கலந்து கொண்ட னர். பின்னர் பரிசளிப்பு விழா நடை பெற்றது. விழா ஏற்பாடுகளை பள்ளி முதல்வர் காட்வின்.எஸ்.லாமுவேல் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

    • போராட்டத்திற்கு அரசு அலுவலர் ஒன்றிய நெல்லை மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.
    • மாநில தலைவர் சண்முகராஜன் உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்து பேசினார்.

    நெல்லை:

    தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் உண்ணாவிரத போராட்டம் பாளை பஸ் நிலையம் அருகே உள்ள ஜோதிபுரம் திடலில் இன்று நடைபெற்றது.

    இதற்கு அரசு அலுவலர் ஒன்றிய நெல்லை மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். குமரி மாவட்ட தலைவர் பகவதியப்பன் முன்னிலை வகித்தார். தென்காசி மாவட்ட தலைவர் சுப்பிரமணியன் வரவேற்றார். மாநில தலைவர் சண்முகராஜன் உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்து பேசினார்.

    அரசு அலுவலர்களின் வாழ்வாதார கோரிக்கையான பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தினை மீண்டும் அமல்படுத்த வேண்டும். அகவிலைப்படி நிலுவைத் தொகையினை உடனுக்குடன் தாமதம் இன்றி வழங்க வேண்டும். மாநகராட்சிகளில் பணியிடங்களை குறைத்திட பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது. முடிவில் தூத்துக்குடி மாவட்டத் தலைவர் மெல்வின் விக்டர் நன்றி கூறினார்.

    • நாடு முழுவதும் 74-வது குடியரசு தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
    • நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில் பாளை வ.உ.சி. மைதானத்தில் இன்று காலை நடந்த விழாவில் கலெக்டர் விஷ்ணு கலந்து கொண்டு தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.

    நெல்லை:

    நாடு முழுவதும் 74-வது குடியரசு தினவிழா கோலாகலமாக கொண்டா டப்பட்டு வருகிறது.

    தேசிய கொடி ஏற்றினார்

    நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில் பாளை வ.உ.சி. மைதானத்தில் இன்று காலை நடந்த விழாவில் கலெக்டர் விஷ்ணு கலந்து கொண்டு தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து போலீ சாரின் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக்கொண்டார்.

    தொடர்ந்து வேளாண் துறை, தோட்டக்கலைத்துறை உள்ளிட்ட 7 துறைகளை சேர்ந்த 19 பயனாளிகளுக்கு ரூ.10 லட்சத்து 45 ஆயிரத்து 247 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் விஷ்ணு வழங்கினார்.

    மாநகராட்சி கமிஷனருக்கு நற்சான்று

    விழாவில் சிறப்பாக பணியாற்றியமைக்காக பல்வேறு அரசு துறைகளை சேர்ந்த 243 பேருக்கு நற்சான்றுகளை கலெக்டர் விஷ்ணு வழங்கினார். இதில் மாநகராட்சி சார்பில் கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்திக்கு சான்று வழங்கப்பட்டது.

    மேலும் பொறியியல் பிரிவில் சிறப்பாக பணியாற்றி யமைக்காக உதவி செயற்பொறியாளர் (பொறுப்பு) ராமசாமி, இளநிலை பொறியாளர் ராமநாதன் ஆகியோருக்கும், பொதுசுகாதார பணிகளில் சிறந்த முறையில் பணியாற்றியமைக்காக நெல்லை மண்டல சுகாதார அலுவலர் இளங்கோவுக்கும் நற்சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார்.

    பின்னர் 2023-ம் ஆண்டுக்கான தமிழக முதல்-அமைச்சர் காவலர் பதக்கம் அறிவிக்கப்பட்ட 100 காவலர்களுக்கு பதக்கங் களையும் அவர் வழங்கினார். விழாவையொட்டி வ.உ.சி. மைதானம் முழுமை யாக போலீசாரின் கட்டுப்பாட்டு க்குள் கொண்டு வரப்பட்டது.

    உணவு பகுப்பாய்வு வாகனம்

    விழாவின்போது பாளை உணவு பகுப்பாய்வு ஆய்வகத்திற்கு ஒதுக்கப்பட்ட நடமாடும் உணவு பகுப்பாய்வகம் எனப்படும் வாகனத்தை கலெக்டர் விஷ்ணு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இந்த வாகனமானது பொதுமக்கள், வியாபாரிகள், பள்ளி-கல்லூரி மாணவர்கள் மத்தியில் உணவு கலப்படம் மற்றும் உணவு பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த உள்ளது. மேலும் இந்த வாகனத்தில் மேற்கொள்ளப்படும் பரிசோதனையானது சத்தான உணவினை உட்கொள்ள வழிவகை செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் நெல்லை, தென்காசி, குமரி, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் மாவட்ட நியமன அலுவலர் மற்றும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மூலமாக பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது.

    கலை நிகழ்ச்சிகள்

    விழாவில் பள்ளி கல்வித்துறை சார்பில் மாணவ-மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    சந்திப்பு மீனாட்சிபுரம் மற்றும் பர்கிட் மாநகரில் உள்ள மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவிகள் 24 பேர் செவ்வியல் நடனமாடினர். பேட்டை ராணி அண்ணா பள்ளி, ஜவகர் பள்ளி, கல்லணை பள்ளி மாணவிகள் கும்மி நடமாடினர். தொடர்ந்து பர்கிட் மாநகர் பள்ளி மாணவர்கள் கணியன் கூத்து மற்றும் பறை ஆட்டமும், மூலக்கரைப்பட்டி மாணவர்கள் நாட்டுப்புற நடனமும் ஆடினர். கடைசியாக செண்டை மேளம் முழங்க மேற்கத்திய நடனம் நடைபெற்றது.

    கலந்து கொண்டவர்கள்

    விழாவில் மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி, நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார், மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன், நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன், மாநகர போலீஸ் துணை கமிஷனர்கள் சீனிவாசன், சரவணகுமார், அனிதா, சேரன்மகாதேவி சப்-கலெக்டர் முகமது சபீர் ஆலம், உதவி கலெக்டர் (பயிற்சி) கோகுல் உள்ளிட்ட அரசுத்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். 

    பாளை அருகே சிறுமி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    நெல்லை:

    பாளை பர்கிட் மாநகரை அடுத்த நடுவக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் விநாயகம். கூலித்தொழிலாளி.

     இவரது மகள் சீதா (வயது 17). இவர் சம்பவத்தன்று விஷத்தை குடித்து மயங்கி கிடந்தார்.

     இதனை பார்த்த அவரது உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை சீதா பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து பாளை தாலுகா போலீசார் வழக்குப்பதிந்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×