search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புஷ்பலதா பள்ளியில் விளையாட்டு தினம் கொண்டாட்டம்
    X

    விளையாட்டு விழாவில் பங்கேற்ற மாணவ-மாணவிகள்.

    புஷ்பலதா பள்ளியில் விளையாட்டு தினம் கொண்டாட்டம்

    • பாளை புஷ்பலதா பிரிட்டிஷ் இன்டர்நேஷனல் பள்ளியின் 10-வது விளையாட்டு தினம் கொண்டாடப்பட்டது.
    • மாணவர்களின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு சர்வதேசப் பள்ளியின் கொடியை ஏற்றி வைத்து விழாவினை தொடங்கி வைத்தார்.

    நெல்லை:

    பாளை புஷ்பலதா பிரிட்டிஷ் இன்டர்நேஷனல் பள்ளி யின் 10-வது விளையாட்டு தினம் கொண்டாடப்பட்டது. சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு பட்டாலியன் பாபி ஜோசப் கலந்து கொண்டார்.

    இவ்விழா பள்ளியின் இயக்குனர் டாக்டர்.மரகதவல்லி மற்றும் பள்ளியின் தாளாளர் புஷ்பலதா பூர்ணன் முன்னி லையில் நடை பெற்றது.

    சிறப்பு விருந்தினர் தம் உரையில் மாணவர்கள் குழு விளையாட்டுகள் அல்லது தனி விளையாட்டுகள் மூல மாக தங்கள் விளையாட்டுத் திறமைகளை வெளிப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். மாணவர்களின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு சர்வதேசப் பள்ளியின் கொடியை ஏற்றி வைத்து விழாவினை தொடங்கி வைத்தார்.

    கராத்தே, டைஸ், டான் கிராம், ட்ரான்ஸ்பர்மேஷன், இண்டர்செக்ஷன், சர்கிள்ஸ் ஆகிய விளையாட்டு நிகழ்வுகள் அனைத்தும் கணிதத்தை மைய்யப்படுத்தியதாக அமைந்திருந்தது. இதன் மூலம் மாணவர்கள் தங்கள் விளையாட்டுத்திறமைகளை வெளிப்படுத்தினர்.

    புஷ்பலதா பள்ளிகளின் முதல்வர்கள் மற்றும் பெற் றோர்கள் கலந்து கொண்ட னர். பின்னர் பரிசளிப்பு விழா நடை பெற்றது. விழா ஏற்பாடுகளை பள்ளி முதல்வர் காட்வின்.எஸ்.லாமுவேல் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

    Next Story
    ×