search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "EB Office"

    • மண்ணரை மற்றும் பாளையக்காடு பகுதியில் பல்லாயிரக்கணக்கான வீடுகள் உள்ளன .
    • தினந்தோறும் இரவு 12 மணிக்கு மின்வெட்டு ஏற்பட்டு அடுத்த நாள் தான் வருகிறது.

    திருப்பூர் :

    திருப்பூர் மண்ணரையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் மண்ணரை மற்றும் பழைய காடு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பாரதிய ஜனதா கட்சியினர் இன்று காலை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் மின்வாரிய அலுவலர்களை சந்தித்து ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

    மண்ணரை மற்றும் பாளையக்காடு பகுதியில் பல்லாயிரக்கணக்கான வீடுகள் உள்ளன . இங்கு ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் இந்த பகுதிகளில் தினந்தோறும் இரவு 12 மணிக்கு மின்வெட்டு ஏற்பட்டு அடுத்த நாள் தான் வருகிறது. இதனால் வேலைக்கு செல்லும் ஆண்கள்,பெண்கள் மற்றும் வயதான பெரியவர்கள் தற்போது பள்ளி திறந்துள்ள நிலையில் மின்வெட்டால் மாணவ, மாணவிகளும் பாதிப்படைத்து வருகின்றனர். மேலும் இந்த இரவு நேரம் மின்தடையால் அதிக சமூக விரோத செயல்கள் நடந்து வருகிறது. இதனால் எங்கள் பகுதியில் இருக்கும் மக்கள் மிகவும் அச்சத்துடன் வசித்து வருகின்றனர்.

    அதே போல் கடந்த ஒரு வாரத்தில் அதிக மின் அழுத்தம் காரணமாக டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின் என்று பல பொருட்கள் பல வீட்டில் சேதம் அடைந்துள்ளது. எனவே இதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.

    • மகாராஜநகரில் உள்ள மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக அலுவலகத்தை முற்றுகையிட்டு சி.ஐ.டி.யு. தொழிற்சங்கம் சார்பில் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
    • தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஒப்பந்த ஊழியர்களாக பணியாற்றி வருகிறார்கள்.

    நெல்லை:

    நெல்லை மகாராஜநகரில் உள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக அலுவலகத்தை முற்றுகையிட்டு சி.ஐ.டி.யு. தொழிற்சங்கம் சார்பில் 300-க்கும் மேற்பட்ட மின் வாரிய ஊழியர்கள் இன்று போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

    சாலை மறியல்

    அப்போது, தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஒப்பந்த ஊழியர்களாக பணியாற்றி வருகிறார்கள். அவர்களை பணி நிரந்தரப்படுத்துவது என்பது நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது.

    மேலும் புயல் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பேரிடர் காலங்களில் பணியாற்றிய ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரப்படுத்த வேண்டும், மின்சார வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களில் ஒப்பந்த தொழிலாளர்களை நியமிக்க வேண்டும், ஒப்பந்த தொழிலாளர்களுக்கான தினக்கூலி ரூ. 380 முழுமையாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

    திடீரென சாலையில் அமர்ந்து அவர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டதால், அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

    • பலத்த காயம் அடைந்த 2 மின் ஊழியர்களும் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    • பாதுகாப்பு உத்தரவாதம் வழங்கக்கோரி மின்ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    நெல்லை:

    வண்ணார்பேட்டை மின்வாரிய அலுவலகத்தில் கம்பியாளர் முத்து–கிருஷ்ணன். சமாதானபுரத்தை சேர்ந்த முத்துப்பாண்டி ஆகிய 2 மின் ஊழியர்களும் நேற்றிரவு ராஜா புதுக்குடியிருப்பு பகுதியில் மின்பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டுகொண்டி ருந்தனர்.

    தாக்குதல்

    அப்போது அங்கு வந்த மர்மநபர்கள் மின் ஊழியர்களை தாக்கினர். இதில் பலத்த காயம் அடைந்த அவர்கள் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்நிலையில் ஊழியர்கள் தாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பாதுகாப்பு உத்தரவாதம் வழங்கக்கோரியும் மின்ஊழியர்கள் சமாதானபுரம் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக சி.ஐ.டி.யூ. ஊழியர்களும் கலந்து கொண்டனர்.

    பேச்சுவார்த்தை

    அவர்களுடன் நெல்லை மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் குருசாமி பேச்சுவார்த்தை நடத்தினார்.

    இதைத்தொடர்ந்து ஊழியர்கள் தற்காலிகமாக தங்களது போராட்டத்தை கைவிட்டு பணிக்கு சென்றனர். ஊழியர்கள் தாக்கப்பட்டது குறித்து பாளை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சாத்தான்குளம் கிராம உதவி மின் பொறியாளர் அலுவலகத்தில் பயன்படுத்தப்பட்ட காப்பர் வயர் மற்றும் காப்பர் கோர்கள் கிலோ கணக்கில் வைக்கப்பட்டிருந்தது.
    • தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் டேவிட் தலைமையிலான போலீசார் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. காமிரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் கிராம உதவி மின் பொறியாளர் அலுவலகத்தில் பயன்படுத்தப்பட்ட காப்பர் வயர் மற்றும் காப்பர் கோர்கள் கிலோ கணக்கில் வைக்கப்பட்டிருந்தது.

    கடந்த ஜூலை 27-ந்தேதி அன்று நள்ளிரவு காப்பர் வயர்கள் மற்றும் காப்பர் கோர்கள் காணாமல் போனது.

    இதுகுறித்து மின்வாரிய இளநிலை பொறியாளர் எட்வர்ட் ஜெயபாலன் அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் மற்றும் தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் டேவிட் தலைமையிலான போலீசார் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. காமிரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.

    இதன் அடிப்படையில் காப்பர் வயர்களை திருடிய புதியம்புத்தூர் நீராவி பகுதியை சேர்ந்த முருகன் மகன் பரமசிவன் (வயது 30) என்பவர் நள்ளிரவில் மின்வாரிய அலுவலகத்தில் புகுந்து லோடு வாகனத்தில் காப்பர் வயர்களை திருடியது தெரியவந்தது.

    இதனையடுத்து தனிப்படை போலீசார் பரமசிவனை கைது செய்து அவரிடமிருந்த ரூ.3.58 லட்சம் மதிப்பிலான 126 கிலோ காப்பர் வயர் மற்றும் காப்பர் கோர்களை பறிமுதல் செய்தனர்.

    மேலும் இதுகுறித்து சாத்தான்குளம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • மின் கட்டணம் செலுத்துவதற்கான கட்டிட பகுதி உள்ளது.
    • மின்சார வாரிய அலுவலகத்தின் முன்புறம் வங்கி ஏடிஎம் மையம் செயல்பட்டு வருகிறது.

    உடுமலை :

    உடுமலை திருப்பூர் சாலையில் அமைந்துள்ள மின்சார வாரிய அலுவலகத்தில் மின் கட்டணம் செலுத்துவதற்கான கட்டிட பகுதி உள்ளது. இதன் பின்புறம் புதர் மண்டி காடு போல் காணப்படுகிறது. மேலும் இந்த பகுதியின் முன்புறம் வங்கி ஏடிஎம் மையம் செயல்பட்டு வருகிறது .

    புதர் நிறைந்த இந்த பகுதிக்கு செல்லவே பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். எனவே புதர்பகுதியை அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மங்கலத்தில் சுமார் 10000, பூமலூரில் 8000, அக்ரஹாரபுத்துரில் 5000, வஞ்சிப்பாளையத்தில் 9000 இணைப்புகள் உள்ளன.
    • இணைப்புகளை ஒன்றாக இணைத்து மங்கலம் மின் செயற்பொறியாளர் அலுவலகம் அமைத்திட வேண்டும்.

    திருப்பூர் :

    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் மங்கலம் கிராம நீரினை பயன்படுத்தும் பாசன விவசாயிகள் நலச்சங்கத்தை சேர்ந்தவர்கள் மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

    சோமனூர் மின் வாரிய டிவிசனுக்கு உட்பட்டு மங்கலம், பூமலூர், அக்ரஹாரப்புத்தூர், வஞ்சிபாளையம், பரமசிவப்பாளையம், அய்யன்கோவில், கோம்பக்காடு, போன்றவை உதவி செயற்பொறியாளர் அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. இதனை திருப்பூர், பல்லடம், அவினாசி என 3 டிவிசன்களாக பிரிக்க உத்தேசிக்கப்பட்டு வருவதாக தெரிய வருகிறது. இதனை இணைப்பதற்கு விவசாயிகள், மற்றும் பொதுமக்களிடம் கருத்து கேட்காமல் மாற்றம் செய்ய கூடாது. மங்கலம் செயற்பொறியாளர் அலுவலகம் அங்கேயே செயல்பட வேண்டும். மங்கலத்தில் சுமார் 10000 இணைப்புகளும் , பூமலூரில் 8000 இணைப்புகளும், அக்ரஹாரபுத்துரில் 5000 இணைப்புகளும், வஞ்சிப்பாளையத்தில் 9000 இணைப்புகளும் உள்ளன. இந்த இணைப்புகளை ஒன்றாக இணைத்து மங்கலம் மின் செயற்பொறியாளர் அலுவலகம் அமைத்திட வேண்டும்.

    மங்கலம், வஞ்சிப்பாளையம் ஆகியவற்றை திருப்பூர் டிவிசனுடன் இணைத்திட வேண்டும். மங்கலம் திருப்பூர் நகரத்திற்கு அருகில் உள்ளது. விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் திருப்பூருக்கு வந்து செல்ல எளிதாக இருக்கும். அவினாசியுடன் மங்கலத்தை இணைப்பதை நிறுத்த வேண்டும் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது .

    ×