search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "horse cart"

    • பாளை யூனியன் கீழநத்தம் ஊராட்சி மேலக்குளம் பெருமாள் சுவாமி கோவில் கொடை விழாவை முன்னிட்டு மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டி போட்டிகள் நடைபெற்றது.
    • மாட்டு வண்டி போட்டியை தி.மு.க. பொதுக்குழு உறுப்பினரும், முன்னாள் மாவட்ட கவுன்சிலருமான பரமசிவ அய்யப்பன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    நெல்லை, மே.1-

    பாளை யூனியன் கீழநத்தம் ஊராட்சி மேலக்குளம் பெருமாள் சுவாமி கோவில் கொடை விழாவை முன்னிட்டு மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டி போட்டிகள் நடைபெற்றது. மாட்டு வண்டி போட்டியை தி.மு.க. பொதுக்குழு உறுப்பினரும், முன்னாள் மாவட்ட கவுன்சிலருமான பரமசிவ அய்யப்பன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    போட்டியானது மேலக்குளம் பகுதியில் இருந்து தொடங்கி 5 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள பர்க்கிட் மாநகரம் வரை சென்று மீண்டும் மேலக்குளம் வந்தடைந்தது.

    தொடர்ந்து நடைபெற்ற குதிரை வண்டி போட்டியினை தமிழ்நாடு மாட்டு வண்டி போட்டி யாளர் சங்க தலைவர் வேலங்குளம் கண்ணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். குதிரை வண்டி போட்டி மேலக்குளத்தில் இருந்து 6 கிலோமீட்டர் தூரம் வரை சென்று மீண்டும் மேலக்குளத்தை வந்தடைந்தது.

    போட்டியில் வெற்றி பெற்ற வண்டிகளுக்கு கோப் பையும், ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் கனக ராஜ், சுப்பையா, நவீன்போஸ், பரமராஜ் பாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர். போட்டி களுக்கான ஏற்பாடு களை மேலக்குளம் பெரிய பெருமாள், சுஜித்வேல், விஜய வேல் மற்றும் விழாக் கமிட்டி யினர் செய்திருந்தனர்.

    ×