search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Government Employees Union"

    • ஆர்ப்பாட்டத்திற்கு அரசு ஊழியர் சங்கத்தின் தென்காசி மாவட்ட இணைச்செயலாளர் மாடசாமி தலைமை தாங்கினார்.
    • பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    சிவகிரி:

    தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் சார்பாக சிவகிரி தாலுகா அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அரசு ஊழியர் சங்கத்தின் தென்காசி மாவட்ட இணைச்செயலாளர் மாடசாமி தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் கணேசன் முன்னிலை வகித்தார். இதில் வட்ட கிளைத்தலைவரும், சிவகிரி வருவாய் ஆய்வாளருமான சரவணகுமார், கூடலூர் வருவாய் ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன், வாசுதேவநல்லூர் வருவாய் ஆய்வாளர் வள்ளி, கிராம நிர்வாக அலுவலர்கள் வீரசேகரன், முருகானந்தம், ஜெயபிரகாஷ், கிராம நிர்வாக உதவியாளர்கள் அழகுராஜா, வேல்முருகன், உதவி வேளாண்மை அலுவலர்கள் சாகுல் ஹமீது, அரவிந்த், நயினார், பார்வதி, மகாலட்சுமி, கணேஷ்குமார், நிலஅளவைத்துறை அலுவலர்கள் மற்றும் பலர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசினர்.

    ஆர்ப்பாட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும், 1.1.2023 முதல் வழங்க வேண்டிய 3 சதவீதம் அக விலைப்படி, சரண்டர் உள்ளிட்டவற்றை தமிழக அரசு உடனே வழங்க வேண்டும், புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், நிரந்தர பணியிடங்களை அழித்திடும் அரசாணைகள் 115, 139, 152 ஆகியவற்றை உடனடியாக ரத்து செய்திட வேண்டும், அரசு துறையில் காலியாக இருக்கும் பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    • போராட்டத்திற்கு அரசு அலுவலர் ஒன்றிய நெல்லை மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.
    • மாநில தலைவர் சண்முகராஜன் உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்து பேசினார்.

    நெல்லை:

    தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் உண்ணாவிரத போராட்டம் பாளை பஸ் நிலையம் அருகே உள்ள ஜோதிபுரம் திடலில் இன்று நடைபெற்றது.

    இதற்கு அரசு அலுவலர் ஒன்றிய நெல்லை மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். குமரி மாவட்ட தலைவர் பகவதியப்பன் முன்னிலை வகித்தார். தென்காசி மாவட்ட தலைவர் சுப்பிரமணியன் வரவேற்றார். மாநில தலைவர் சண்முகராஜன் உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்து பேசினார்.

    அரசு அலுவலர்களின் வாழ்வாதார கோரிக்கையான பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தினை மீண்டும் அமல்படுத்த வேண்டும். அகவிலைப்படி நிலுவைத் தொகையினை உடனுக்குடன் தாமதம் இன்றி வழங்க வேண்டும். மாநகராட்சிகளில் பணியிடங்களை குறைத்திட பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது. முடிவில் தூத்துக்குடி மாவட்டத் தலைவர் மெல்வின் விக்டர் நன்றி கூறினார்.

    • செப்டம்பா் 22 ல் ஒரு நாள் தற்செயல் விடுப்பு போராட்டமும் நடத்தப்படவுள்ளது.
    • சத்துணவு ஊழியா்கள் மூலமாகவே அமல்படுத்த வேண்டும்.

    தாராபுரம்:

    தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கத்தின் மாநில செயற்குழுக் கூட்டம் தாராபுரத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநிலத் தலைவா் சு.தமிழ்ச்செல்வி தலைமை வகித்தாா்.

    கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் வருமாறு:-

    சங்க முன்னாள் மாநிலத் தலைவா் சுப்பிரமணியனின் தற்காலிகப் பணிநீக்க உத்தரவை ரத்து செய்வது உள்ளிட்ட நிலுவைக்கோரிக்கைகளை வலியுறுத்தி 3 கட்டமாகப் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில், மண்டல அளவில் வரும் ஜூலை 22 ந்தேதி தர்ணாவும், சென்னையில் வரும் ஆகஸ்ட் 16 ந்தேதி முதல் ஆகஸ்ட் 19 ந்தேதி வரையில் 72 மணி நேர உண்ணாவிரதப் போராட்டமும், செப்டம்பா் 22 ல் ஒரு நாள் தற்செயல் விடுப்பு போராட்டமும் நடத்தப்படவுள்ளது.

    சத்துணவு திட்டத்தின்கீழ் மாணவா்களுக்கு காலை சிற்றுண்டி வழங்குவது என்ற அரசின் முடிவு வரவேற்கத்தக்கது. அதே வேளையில், இந்தத் திட்டத்தின் மகளிா் சுய உதவிக்குழுக்களை ஈடுபடுத்தாமல் சத்துணவு ஊழியா்கள் மூலமாகவே அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்தில் மாவட்டத்தலைவா் ஞானசேகரன், மாநில துணைத்தலைவா்கண்ணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

    ×