search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Collector Vishnu"

    • நாடு முழுவதும் 74-வது குடியரசு தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
    • நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில் பாளை வ.உ.சி. மைதானத்தில் இன்று காலை நடந்த விழாவில் கலெக்டர் விஷ்ணு கலந்து கொண்டு தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.

    நெல்லை:

    நாடு முழுவதும் 74-வது குடியரசு தினவிழா கோலாகலமாக கொண்டா டப்பட்டு வருகிறது.

    தேசிய கொடி ஏற்றினார்

    நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில் பாளை வ.உ.சி. மைதானத்தில் இன்று காலை நடந்த விழாவில் கலெக்டர் விஷ்ணு கலந்து கொண்டு தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து போலீ சாரின் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக்கொண்டார்.

    தொடர்ந்து வேளாண் துறை, தோட்டக்கலைத்துறை உள்ளிட்ட 7 துறைகளை சேர்ந்த 19 பயனாளிகளுக்கு ரூ.10 லட்சத்து 45 ஆயிரத்து 247 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் விஷ்ணு வழங்கினார்.

    மாநகராட்சி கமிஷனருக்கு நற்சான்று

    விழாவில் சிறப்பாக பணியாற்றியமைக்காக பல்வேறு அரசு துறைகளை சேர்ந்த 243 பேருக்கு நற்சான்றுகளை கலெக்டர் விஷ்ணு வழங்கினார். இதில் மாநகராட்சி சார்பில் கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்திக்கு சான்று வழங்கப்பட்டது.

    மேலும் பொறியியல் பிரிவில் சிறப்பாக பணியாற்றி யமைக்காக உதவி செயற்பொறியாளர் (பொறுப்பு) ராமசாமி, இளநிலை பொறியாளர் ராமநாதன் ஆகியோருக்கும், பொதுசுகாதார பணிகளில் சிறந்த முறையில் பணியாற்றியமைக்காக நெல்லை மண்டல சுகாதார அலுவலர் இளங்கோவுக்கும் நற்சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார்.

    பின்னர் 2023-ம் ஆண்டுக்கான தமிழக முதல்-அமைச்சர் காவலர் பதக்கம் அறிவிக்கப்பட்ட 100 காவலர்களுக்கு பதக்கங் களையும் அவர் வழங்கினார். விழாவையொட்டி வ.உ.சி. மைதானம் முழுமை யாக போலீசாரின் கட்டுப்பாட்டு க்குள் கொண்டு வரப்பட்டது.

    உணவு பகுப்பாய்வு வாகனம்

    விழாவின்போது பாளை உணவு பகுப்பாய்வு ஆய்வகத்திற்கு ஒதுக்கப்பட்ட நடமாடும் உணவு பகுப்பாய்வகம் எனப்படும் வாகனத்தை கலெக்டர் விஷ்ணு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இந்த வாகனமானது பொதுமக்கள், வியாபாரிகள், பள்ளி-கல்லூரி மாணவர்கள் மத்தியில் உணவு கலப்படம் மற்றும் உணவு பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த உள்ளது. மேலும் இந்த வாகனத்தில் மேற்கொள்ளப்படும் பரிசோதனையானது சத்தான உணவினை உட்கொள்ள வழிவகை செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் நெல்லை, தென்காசி, குமரி, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் மாவட்ட நியமன அலுவலர் மற்றும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மூலமாக பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது.

    கலை நிகழ்ச்சிகள்

    விழாவில் பள்ளி கல்வித்துறை சார்பில் மாணவ-மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    சந்திப்பு மீனாட்சிபுரம் மற்றும் பர்கிட் மாநகரில் உள்ள மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவிகள் 24 பேர் செவ்வியல் நடனமாடினர். பேட்டை ராணி அண்ணா பள்ளி, ஜவகர் பள்ளி, கல்லணை பள்ளி மாணவிகள் கும்மி நடமாடினர். தொடர்ந்து பர்கிட் மாநகர் பள்ளி மாணவர்கள் கணியன் கூத்து மற்றும் பறை ஆட்டமும், மூலக்கரைப்பட்டி மாணவர்கள் நாட்டுப்புற நடனமும் ஆடினர். கடைசியாக செண்டை மேளம் முழங்க மேற்கத்திய நடனம் நடைபெற்றது.

    கலந்து கொண்டவர்கள்

    விழாவில் மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி, நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார், மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன், நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன், மாநகர போலீஸ் துணை கமிஷனர்கள் சீனிவாசன், சரவணகுமார், அனிதா, சேரன்மகாதேவி சப்-கலெக்டர் முகமது சபீர் ஆலம், உதவி கலெக்டர் (பயிற்சி) கோகுல் உள்ளிட்ட அரசுத்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். 

    • ஒவ்வொறு மாதமும் அனைத்து தாசில்தார் அலுவலகங்களிலும் பொது விநியோகத்திட்ட மக்கள் குறைதீர் முகாம் நடத்தப்படுகிறது.
    • குடும்ப அட்டை பெற உரிய ஆவணங்களை எடுத்து செல்ல வேண்டும் என கலெக்டர் விஷ்ணு தெரிவித்துள்ளார்.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பொது வினியோக திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்க ளுக்கும் வழங்குவதன் பொருட்டு ஒவ்வொறு மாதமும் நெல்லை மாவட்டத்தின் அனைத்து தாசில்தார் அலுவலகங்களிலும் பொது விநியோகத்திட்ட மக்கள் குறைதீர் முகாம் நடத்தப்படுகிறது. அதன்படி நாளை (சனிக்கிழமை) நடைபெறும் இக்குறைதீர் முகாமில் கீழ்கண்ட சேவைகளை மக்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.

    புதிதாக குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை மற்றும் நகல் அட்டை கோரி விண்ணப்பித்தல், குடும்ப அட்டையில் செல்போன் எண் பதிவு, மாற்றம் செய்தல், பொது விநியோக திட்ட கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் தரம் குறித்த புகார் அளித்தல், குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கல் முகவரி மாற்றம் மற்றும் புதிய குடும்ப அட்டை, நகல் குடும்ப அட்டை பெற விண்ணப்பிக்க செல்லும் பயனாளர் உரிய ஆவணங்களுக்குரிய ஆதார் அட்டை, பிறப்பு, இறப்பு சான்று குடியிருப்பு முகவரிக்கு ஆதாரமான ஆவணங்கள் ஆகியவற்றினை எடுத்து செல்ல வேண்டும். மேலும், செல்போன் எண் பதிவு, மாற்றம் செய்வதற்கு ஏதுவாக சம்பந்தப்பட்ட செல்போனை கொண்டு செல்ல வேண்டும். மேற்படி, முகாம் மற்றும் பொதுவிநியோகத்திட்ட செயல்பாடுகள் குறித்த புகார்களுக்கு நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலக பொது விநயோ கத்திட்ட கட்டுப்பாட்டு அறை எண்: 9342471314-ல் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நவம்பர் 9-ந் தேதி வரைவு வாக்காளர் பட்டியலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்டார்.
    • 5 சட்டமன்ற தொகுதியில் இறுதி வாக்காளர் பட்டியல் படி 13 லட்சத்து 65 ஆயிரத்து 632 வாக்காளர்கள் உள்ளனர்.

    நெல்லை:

    1.1.2023- ஐ தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்டு வாக்காளர் பட்டியலில் சிறப்பு சுருக்க முறையில் திருத்தம் செய்வதற்கு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. அதற்கு வசதியாக கடந்த நவம்பர் 9-ந் தேதி வரைவு வாக்காளர் பட்டியலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்டார்.

    இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

    தொடர்ந்து வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் கடந்த டிசம்பர் 8-ந் தேதி முடிவடைந்தன. இந்த காலகட்டத்தில் பெறப்பட்ட விண்ணப்பங்களை பரிசீலித்து இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இன்று இந்த இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

    நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த இந்த வாக்காளர் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சியில் அனைத்து அரசியல் கட்சியினர் முன்னிலையில் மாவட்ட கலெக்டர் விஷ்ணு இறுதி பட்டியலை வெளியிட மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி பெற்றுக்கொண்டார். இதனைத் தொடர்ந்து கலெக்டர் விஷ்ணு செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    பெண்கள் அதிகம்

    நெல்லை மாவட்டத்தில் நெல்லை, பாளை, ராதாபுரம், நாங்குநேரி, அம்பை ஆகிய 5 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த 5 சட்டமன்ற தொகுதியில் இறுதி வாக்காளர் பட்டியல் படி 13 லட்சத்து 65 ஆயிரத்து 632 வாக்காளர்கள் உள்ளனர்.

    இதில் ஆண் வாக்காளர் கள் 6 லட்சத்து 68 ஆயிரத்து 47 பேரும் , பெண் வாக்காளர்கள் 6 லட்சத்து 97 ஆயிரத்து 451 பேரும், இதர பாலினத்தவர்கள் 134 பேரும் உள்ளனர். அதிகபட்சமாக நெல்லை சட்டமன்ற தொகுதியில் 5097 பேர் புதிய வாக்காளர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

    வாக்குச்சாவடிகள்

    ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிகபட்சமாக 5220 வாக்காளர்கள் பெயர் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. வாக்குசாவடியை பொறுத்தவரை நாங்குநேரியில் புதிதாக ஒரு வாக்கு சாவடி அதிகரிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் மொத்தம் 1484 வாக்குசாவடிகள் உள்ளது.

    இந்த வாக்காளர் பட்டியல் தாசில்தார் அலுவலகம், ஆர்.டி.ஓ. அலுவலகம், வாக்குசாவடி அமைவிடங்கள், ஊராட்சி மன்றங்கள், மாநகராட்சி அலுவலகம் ஆகிய இடங்களில் மக்கள் பார்வைக்கு வைக்கப்படும். வாக்காளர்கள் தங்கள் பெயர் உள்ளதா என்பதை அறிய அந்த பட்டியலை பார்துக்கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் உதவி கலெக்டர் (பயிற்சி) கோகுல், தி.மு.க. வக்கீல் அணி செல்வ சூடாமணி, அ.தி.மு.க. பகுதி செயலாளர் சிந்து முருகன், காங்கிரஸ் சொக்கலிங்க குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பெருமாள்புரம் தொடக்க பள்ளியில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் செல்வராஜ் கேட்டறிந்தார்.
    • மாணவர்களுடன் அமர்ந்து கண்காணிப்பு அலுவலர் செல்வராஜ், கலெக்டர் விஷ்ணு, மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் உணவு சாப்பிட்டனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் அரசின் திட்டங்கள் முழுமை யாக செயல்படுத்தப்படுவதை உறுதி செய்திடும் வகையில் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அரசு செயலாளருமான செல்வராஜ், கலெக்டர் விஷ்ணு தலைமையில் இன்று ஆய்வு செய்தார்.

    காலை உணவு திட்டம்

    அதன்படி மாநகராட்சிக்குட்பட்ட பெருமாள்புரம் மாநகராட்சி தொடக்க பள்ளியில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தின் செயல்பாடுகள் குறித்தும், பள்ளி குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வரும் காலை உணவின் வகைகள் குறித்தும் ஆசிரியர்களுடன் கேட்டறிந்தார். பின்னர் அவர்களுடன் அமர்ந்து கண்காணிப்பு அலுவலர் செல்வராஜ், கலெக்டர் விஷ்ணு, மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் உணவு சாப்பிட்டனர்.

    சுகாதார நிலையத்தில் ஆய்வு

    எண்ணும், எழுத்தும் கற்றல் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து பள்ளி ஆசிரியர்களிடம் கேட்டறிந்து அப்பள்ளி மாணவர்கள் இத்திட்டத்தின் வாயிலாக கற்ற கற்றல் திறனை கண்காணிப்பு அலுவலர் பார்வையிட்டார்.

    தொடர்ந்து பெரு மாள்புரம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு செய்து அங்கு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு தேவையான மருந்து பொருட்கள் போதுமானதாக இருப்பு உள்ளதா? என்றும் நோயாளி களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்தும் டாக்டர்களிடம் கேட்டறிந்தார்.

    • நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்டத்தில் உள்ள 204 பஞ்சாயத்து தலைவர்களுக்கான பயிற்சி கூட்டம் மாவட்ட கலெக்டர் விஷ்ணு தலைமையில் இன்று நடைபெற்றது.
    • நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் இருக்கும் நீர் நிலைகளை 2024-ம் ஆண்டுக்குள் புனரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது

    நெல்லை:

    நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்டத்தில் உள்ள 204 பஞ்சாயத்து தலைவர்களுக்கான பயிற்சி கூட்டம் மாவட்ட கலெக்டர் விஷ்ணு தலைமையில் இன்று நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன், மாநகர துணை போலீஸ் கமிஷனர் சீனிவாசன், மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தலைவர்கள், மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்கள், ஊரக உள்ளாட்சித் துறை அதிகாரிகள் உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

    மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளுக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது மற்றும் ஊராட்சிகளுக்கு தேவையான வசதிகள் குறித்து பேசப்பட்டது. மேலும் ஊராட்சி தலைவர்கள், ஊரக உள்ளாட்சித் துறை தவிர்த்து மற்ற துறைகளில் உள்ள திட்டங்கள் குறித்து அறிந்து கொள்ளும் வகையில் ஆலோசனை களும் வழங்கப் பட்டது.

    தொட ர்ந்து கலெக்டர் விஷ்ணு தலைமையில் போதை யில்லா நெல்லையை உருவாக்கும் வகையில் அனைத்து ஊராட்சி தலைவ ர்களும் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடை பெற்றது.

    இந்த கூட்டத்தை தொடங்கி வைத்து கலெக்டர் விஷ்ணு பேசிய தாவது:-

    நெல்லை மாவட்டத்தில் உள்ள ஊராட்சி மன்ற தலைவர்கள் செய்ய வேண்டிய பணிகள் குறித்து விளக்கம் அளிக்கும் வகையில் இந்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    ஊராட்சி மன்ற தலைவர், தலைவிகள் சப்ஸ்டியூட் இன்றி இயங்கும் வகையில் இந்த கூட்டம் கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது. தமிழக அரசின் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்துவதில் ஊராட்சிகளின் பங்களிப்பு அதிகம் உள்ளது. ஊராட்சி மன்ற தலைவர்கள் ஊரக உள்ளாட்சி துறை தாண்டிய திட்டங்கள் குறித்து அறிந்து கொள்ளும் வகையில் அனைத்து துறை அதிகாரிகள் இதில் கலந்து கொண்டுள்ளனர்.

    நெல்லை மாவட்ட நிர்வாகம் பள்ளி கல்விக்கு தனி கவனம் செலுத்தி பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. 2023- ம் நிதி ஆண்டுக்குள் அனைத்து கட்டமைப்பு வசதிகளும் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி பள்ளிகளில் பூர்த்தி செய்து தேவை என்பது குறித்து வேண்டுகோள் வைக்கும் நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்த கூட்டம் அமைய வேண்டும். ஊராட்சி பள்ளிகளில் அடிப்படை தேவையாக ஸ்மார்ட் வகுப்பறை என்பது தற்போதைய சூழலில் உள்ளது.

    ஒரு பள்ளிக்கு ஒரு ஸ்மார்ட் வகுப்பறை என்ற திட்டத்தை சட்டமன்ற உறுப்பினர் நிதி உதவியுடன் அமைக்க ஊராட்சித் தலைவர்கள் முயற்சி எடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும். போதை இல்லா தமிழகத்தை உருவாக்கும் வகையில் ஊராட்சி தலைவர்கள் பங்களிப்பு அதிக முக்கியம் வாய்ந்ததாக உள்ளது. நெல்லை மாவட்டம் நீர் மேலாண்மைக்கு தனிக்கவனம் செலுத்தி வருகிறது.

    நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் இருக்கும் நீர் நிலைகளை 2024-ம் ஆண்டுக்குள் புனரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளும் நீர் மேலாண்மைக்கு தனி முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

    2024-ம் ஆண்டுக்குள் இந்தியாவிலேயே சிறந்த மாவட்டமாக நெல்லை மாவட்டத்தை மாற்றும் வகையில் மாவட்டத்திலுள்ள அனைத்து ஊராட்சி தலைவர் களும் உறுதி ஏற்று செயல்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார். 

    • நெல்லை மாவட்டத்திற்கு உட்பட்ட 1484 வாக்குச்சாவடி மையங்களிலும் வருகிற 26, 27-ந் தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.
    • பொதுமக்கள் தங்கள் வார்டுக்குட்பட்ட வாக்குசாவடி மையங்களில் காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை மனுக்களை அளிக்கலாம்.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    நெல்லை மாவட்டத்திற்கு உட்பட்ட 1484 வாக்குச்சாவடி மையங்களிலும் வருகிற 26, 27-ந் தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.

    பெயர் சேர்க்க, நீக்க

    இதில் 2023 ஜனவரி 1-ந் தேதி அன்று 18 வயது பூர்த்தியடைந்தவர்கள், வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரினை சேர்க்க படிவம் 6, வாக்காளர் பட்டியலில் ஏற்கனவே இடம் பெற்றுள்ள நபர்களில் இறந்தவர்கள், இரட்டை பதிவு உள்ள வர்களின் பெயரினை நீக்கம் செய்ய படிவம் 7, பெயர், முகவரி மற்றும் புகைப்பட விபரங்களை திருத்தம் செய்ய மற்றும் அதே தொகுதிக்குள் இடமாற்றம் செய்திட படிவம் 8 ஆகியவற்றை வழங்கி பொதுமக்கள் பயனடையுமாறு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    ஆன்லைனிலும் விண்ணப்பிக்கலாம்

    பொதுமக்கள் தங்கள் வார்டுக்குட்பட்ட வாக்குசாவடி மையங்களில் காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை மனுக்களை அளிக்கலாம். மேலும் தேர்தல் ஆணையத்தின் இணையதளம் www.nvsp.in மூலமாகவும், Voter Helpline Mobile App மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.

    மேலும் பாளை வட்டத்திற்கு உட்பட்ட கீழ்காணும் வாக்குச்சாவடி மையங்களில் 26-ந் தேதி காவலர் எழுத்து தேர்வு தொடர்பான ஆயத்தபணி மற்றும் 27-ந் தேதி காவலர் எழுத்து தேர்வு நடைபெறுகிறது.

    மாற்று மையங்கள்

    எனவே அந்த வாக்குச்சாவடி மையங்க ளுக்கு பதிலாக வேறு பள்ளி களில் வாக்குச்சாவடி மையங்களை அந்த 2 தேதிகளில் மட்டும் மாற்றிய மைக்கப்பட்டுள்ளது.

    அதன்படி பாளை தூய யோவான் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடி மாற்றாக பாளை ஏஞ்சலோ மெட்ரிக் பள்ளியில் செயல்படும். சாராள் தக்கர் பள்ளி வாக்குசாவடி சி.எஸ்.ஐ.மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் செயல்படும்.

    தியாகராஜநகர் புஷ்ப லதா மெட்ரிக் பள்ளி வாக்குச்சாவடி மையம் ஏற்கனவே 5 வாக்குச்சாவடி மையங்கள் செயல்பட்டு வரும் தியாகராஜநகரில் உள்ள ராம்நகர் ரோஸ் மேரி பள்ளியில் கூடுதல் வாக்குசாவடி மையமாக செயல்படும். மேலும் வி.எம்.சத்திரம் தூத்துக்குடி மெயின்ரோட்டில் உள்ள ரோஸ் மேரி மெட்ரிக் பள்ளி வாக்குச்சாவடி மையம் கே.டி.சி நகர் ஓயாசிஸ் மெட்ரிக்குலேசன் பள்ளியில் வாக்குசாவடி மையமாக செயல்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தமிழ்மொழியின் இலக்கிய மரபுகளை கொண்டாடும் வகையில் சென்னை, வைகை, காவேரி, சிறுவானி, பொருநை ஆகிய ஐந்து இலக்கிய திருவிழாக்கள் நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது.
    • பொருநை இலக்கிய திருவிழா குறித்த லோகோவை கலெக்டர் விஷ்ணு வெளியிட்டார்.

    நெல்லை:

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பை தொடர்ந்து நெல்லையில் பொருநை இலக்கிய திருவிழா வருகிற 26, 27 -ந் தேதிகளில் நடைபெறுகிறது.

    கலெக்டர் பேட்டி

    இதுகுறித்து நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    தமிழ்மொழியின் இலக்கிய மரபுகளை கொண்டாடும் வகையில் சென்னை, வைகை, காவேரி, சிறுவானி, பொருநை ஆகிய ஐந்து இலக்கிய திருவிழாக்கள் நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது.

    இதில் முதல் திருவிழாவாக நெல்லையில் பொருநை இலக்கிய திருவிழா வரும் நவம்பர் 26, 27 ஆகிய தேதிகளில் நடத்தப்பட உள்ளது.

    5 அரங்குகள்

    இந்த பொருநை திருவிழாவில் தனித் தனியாக மொத்தம் 5 அரங்குகள் அமைக்கப்பட உள்ளது. அதன்படி நேருஜி அரங்கம், நூற்றாண்டு மண்டபம் வ.உ.சி அரங்கம், பி.பி.எல். திருமண மண்டபம், பாளை மேற்கு கோட்டை வாசல் ஆகிய 5 அரங்குகளில் திருவிழா நடைபெறும்.

    இதில் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்த உள்ளன. இதுகுறித்து அந்தந்த பள்ளி கல்லூரி நிர்வாகத்தினரிடம் ஆலோசனை நடத்தி வருகிறோம்.

    ஓலைச்சுவடிகள்

    இலக்கிய திருவிழாவில் ஓலைச்சுவடிகள் மற்றும் நாட்டுப்புற கலை பொருட்கள் குறித்து காட்சிப்படுத்தப்படும். ஏற்கனவே நெல்லை புத்தக திருவிழாவில் கலை பொருட்கள் காட்சிப்படுத்தியிருந்தோம். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

    எனவே பொதுமக்கள் மற்றும் இலக்கிய ஆர்வலர்கள் தங்களிடம் ஓலைச்சுவடி நாட்டுப்புற கலை பொருட்கள் இருப்பின் வரும் 24-ந் தேதிக்குள் கலெக்டர் அலுவ லகத்தில் மக்கள் தொடர்பு அலுவலரிடம் வழங்கலாம்.

    பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள்

    பொருநை இலக்கிய திருவிழா தொடர்பான லோகோ இன்று வெளியிடப்படுகிறது. https://porunailitfest.in/ என்ற இணையதளத்தில் கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ளலாம். இலக்கிய திருவிழாவில் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடத்தவும் திட்டமிட்டுள்ளோம். மண்டல அளவில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களை ஒருங்கிணைத்து இத்திருவிழா நடக்கிறது

    நெல்லையில் கானி மக்கள் மத்தியில் இருக்க கூடிய மருத்துவம் சார்ந்த விஷயங்களை டிஜிட்டல் மையம் ஆக்க நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக பொருநை இலக்கிய திருவிழா குறித்த லோகோவை கலெக்டர் விஷ்ணு வெளியிட்டார். அப்போது மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி மற்றும் பயிற்சி உதவி கலெக்டர் கோகுல் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    • தமிழக அரசு பல்வேறு திட்டங்களின் கீழ் கல்வி உதவி தொகை வழங்கி வருகிறது.
    • மாணவர்களுக்கு இலவச கல்வித்திட்டத்தின் கீழ் எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவி தொகை வழங்கப்படுகிறது.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு வெளி யிட்டுள்ள செய்திருக் குறிப் பில் கூறியுள்ளதாவது:-

    அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபின பிரிவை சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களின் கீழ் கல்வி உதவி தொகை வழங்கி வருகிறது.

    அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை, மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 3 ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவிகளுக்கு இலவச கல்வித்திட்டத்தின் கீழ் எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவி தொகை வழங்கப்படுகிறது.

    முதுகலை பாலிடெக்னிக், தொழிற்படிப்பு போன்ற பிற படிப்புகளுக்கு மாண வர்களின் பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ. 2 லட்சத்து 50 ஆயிரத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

    பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மாணவ, மாணவி களுக்கான கல்வி உதவித்தொகை இணை யதளம் புதுப்பித்தலுக்கு கடந்த 10- ந் தேதி முதல் தொடங்கப்பட்டுள்ளது. புதுப்பித்தலுக்கான விண்ணப்பங்கள் டிசம்பர் 6-ந் தேதிக்குள் இணையதளம் மூலம் கேட்புகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

    அதே போல் புதிய இனங்களுக்கு இணையதளம் அடுத்த மாதம் 15-ந் தேதி முதல் செயல்படத் தொடங்கும். புதிய இனங்களுக்கான விண்ணப்பங்கள் ஜனவரி 20-ந் தேதிக்குள் இணைய தளம் மூலம் கேட்புகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

    http://www.bcmbcmw.tn.gov.in/welfschemes.htm# scholarshipschemes-என்ற அரசு இணையதளத்தில் இத்திட்டங்கள் குறித்த விவரங்கள் மற்றும் விண்ணப்ப படிவங்கள் உள்ளது.

    மேலும் விவரங்களுக்கு மாவட்ட கலெக்டர் அலு வலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணு கலாம்.

    இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

    • வி.எம்.சத்திரம் அருகே மூர்த்தி நயினார்குளத்தில் கரைகள் பலப்படுத்தப்பட்டு வருகிறது.
    • நெல்லை மாவட்டம் முழுவதும் 600 கிலோ மீட்டர் தூரத்துக்கு கால்வாய்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் தூர்வாரப்பட்டுள்ளது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையை யொட்டி முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை கலெக்டர் விஷ்ணு ஆய்வு செய்து வருகிறார்.

    கலெக்டர் ஆய்வு

    வி.எம்.சத்திரம் அருகே மூர்த்தி நயினார்குளத்தில் கரைகள் பலப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த பணி களை இன்று கலெக்டர் விஷ்ணு, மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ண மூர்த்தி ஆகியோர் ஆய்வு செய்தனர்.

    பின்னர் கலெக்டர் விஷ்ணு நிருபர்களிடம் கூறியதாவது:-

    கட்டுப்பாட்டு அறை

    நெல்லை மாவட்டம் முழுவதும் 600 கிலோ மீட்டர் தூரத்துக்கு கால்வாய்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் தூர்வாரப்பட்டுள்ளது. 75 கிலோ மீட்டர் தூரத்துக்கு கரைகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.

    மழை பாதிப்பு குறித்து பொது மக்கள் புகார் செய்ய 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பொது மக்கள் தங்கள் பகுதிகளில் தேங்கும் மழை நீர் குறித்து புகார் செய்வதற்காக பிரத்யேக செயலி ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது.

    நீர் இருப்பு

    நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை 3 வகைகளில் வெள்ளப் பெருக்கு ஆபத்து ஏற்படலாம். இதில் தாமிரபரணி ஆற்றை பொறுத்தவரை 60 ஆயிரம் அடி வரை கொள்ளளவு கொண்டது. மேலும் தற்போது பாபநாசம் அணையில் 42 சதவீதம் மட்டுமே நீர் இருப்பு உள்ளது. மணிமுத்தாறு அணையில் 29 சதவீதம் மட்டுமே நீர் இருப்பு உள்ளது.

    எனவே கனமழை பெய்தாலும் ஆற்றில் பெரிய அளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புகள் இல்லை.

    கடந்த ஆண்டு மாநகர பகுதியில் உள்ள குளங்களில் இயற்கையான திசை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆனால் தற்போது அவற்றை சரி செய்துள்ளோம். மேலும் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள வேய்ந்தான்குளமும் தூர்வாரப்பட்டு உள்ளது.

    மழை குறைவு

    இதனால் மாநகர பகுதியில் வெள்ளப் பெருக்கு பாதிப்பு குறித்து பொது மக்கள் அச்சப்பட தேவையில்லை. நெல்லை மாவட்டத்தில் தற்போது வரை மழை பாதிப்பு இல்லை. கடந்த ஆண்டை விட தற்போது 60 சதவீதம் மழை குறைவாகவே பெய்து உள்ளது.

    நெல்லை மாவட்டத்தில் குளங்கள், கால்வாய்கள் தூர்வாரப்பட்டுள்ளதால் 20 சதவீதம் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

    மானூர், ராதாபுரம் வட்டார பகுதிகளில் மட்டும் நிலத்தடி நீர்மட்டம் குறைவாக உள்ளது. இந்த வட்டாரங்கள் 'ரெட் பிளாக்' பகுதிகளாக அறிவிக்கப்பட்டு அங்கு நிலத்தடி நீர்மட்டத்தை பெருக்குவதற்காக 3 புதிய திட்டங்கள் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    கடந்த ஆண்டு வெள்ள பாதிப்பு அதிகம் ஏற்படும் இடங்கள் என 74 இடங்கள் கண்டறியப்பட்டிருந்தன. தற்போது அவை 63 ஆக குறைந்துள்ளது.

    பொதுமக்கள் கால் வாய்களில் குப்பைகளை கொட்டுவதால் மழை நீர் செல்லும் பாதை அடைத்து வெள்ள பாதிப்பு ஏற்படுகிறது. எனவே கால்வாய்களில் குப்பை களை கொட்ட வேண்டாம் என பொது மக்களை கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின் போது பொதுப்பணித்துறை செயற் பொறியாளர் மாரியப்பன், பாளை தாசில்தார் ஆனந்த பிரகாஷ், பேரிடர் மீட்பு தாசில்தார் செல்வன் ஆகியோர் உடனிருந்தனர்.

    • பட்டாசுகளை வெடிப்பதால் நிலம், நீர், காற்று உள்ளிட்டவை பெருமளவில் மாசுபடுகின்றன.
    • சுற்றுச்சூழலை பாதுகாப்பது அனைவரின் கடமையும் பொறுப்பும் ஆகும்.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பட்டாசு வெடிக்கும் நேரம்

    தீபாவளி திருநாள் மக்களால் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படும் நாளாகும். இந்த நாளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். அதே நேரத்தில் பட்டாசுகளை வெடிப்பதால் நம்மை சுற்றியுள்ள நிலம், நீர், காற்று உள்ளிட்டவை பெருமளவில் மாசுபடுகின்றன. பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் அதிகப்படியான ஒலி மற்றும் காற்று மாசினால் குழந்தைகள், பெரியோர்கள் மற்றும் நோய்வாய்பட்ட முதியவர்கள் உடல் அளவிலும் மனதளவிலும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.

    உச்ச நீதிமன்ற அறிவுறுத்தியுள்ளபடி தமிழ்நாட்டில் கடந்த 4 ஆண்டுகளாக தீபாவளி பண்டிகையன்று காலை 6 முதல் 7 மணி வரையும், இரவு 7 முதல் 8 மணி வரையும் மட்டுமே பட்டாசுகளை வெடிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்த ஆண்டும் அதே நேரத்தில் பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    விழிப்புணர்வு

    சுற்றுச்சூழலை பாதுகாப்பது அனைவரின் கடமையும் பொறுப்பும் ஆகும். எனவே பொதுமக்கள் பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும். மாவட்ட நிர்வாகம், உள்ளாட்சி அமைப்புகளின் முன் அனுமதியுடன் பொதுமக்கள் திறந்த வெளியில் ஒன்று கூடி கூட்டாக பட்டாசுகளை வெடிப்பதற்கு அந்தந்த பகுதிகளில் உள்ள நலச்சங்கங்கள் மூலம் முயற்சிக்க வேண்டும். மருத்துவமனை, வழிபாட்டுத்தலங்கள், குடிசை பகுதி மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தயாரிப்பாளர்கள்,விற்பனையாளர்கள் உணவு பாதுகாப்புதுறையில் உரிமம் பெற்று விநியோகம் செய்வது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.
    • சமையல் எண்ணெயை மறுபடியும் சூடுபடுத்தி உணவுதயாரிக்க பயன்படுத்தக்கூடாது.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தீபாவளி பலகாரம்

    தீபாவளி பண்டிகையில் இனிப்பு மற்றும் காரவகைகளுக்கு சீட்டு நடத்துபவர்கள், தற்காலிகமாக திருமணமண்டபங்களில் பெரிய அளவில் இனிப்பு, காரவகைகளை தயாரிக்கும் நிறுவனங்கள் உள்பட அனைத்து இனிப்புகார வகைகள் தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களும் உணவு பாதுகாப்புதுறையில் பதிவு செய்து உரிமம் பெற்று பொதுமக்களுக்கு விநியோகம் செய்வது உணவு பாதுகாப்பு சட்டம் மற்றும் விதிகளில் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.

    மேலும் இனிப்பு கார வகைகள் மற்றும் பேக்கரி உணவு பொருட்களை தயாரிப்பவர்கள் தரமான மூலப்பொருட்களைக் கொண்டு தயாரித்து பாதுகாப்பான உணவு பொருட்களை பொதுமக்களுக்கு வழங்க வேண்டும்.

    உணவு தயாரிப்பில் கலப்படமான பொருட்களை செயற்கை நிறமிகளையோ உபயோகிக்கக் கூடாது.

    ஒருமுறை பயன்படுத்திய சமையல் எண்ணெயை மறுபடியும் சூடுபடுத்தி உணவுதயாரிக்க பயன்படுத்தக்கூடாது. பேக்கிங் செய்யப்பட்ட உணவு பொருட்களில் தயாரிப்பாளாரின் முழு முகவரி, உணவுபொருளின் காலாவதியாகும் காலம் ஆகியவற்றை அவசியம் குறிப்பிட வேண்டும்.

    உரிமம்

    உணவு பொருட்களை விற்பனை செய்த பின்னர் வழங்கும் ரசீது - பில்களில் உணவு அங்காடியின் உரிமம் எண் அல்லது பதிவு எண்ணை அச்சடித்து இருத்தல் வேண்டும். உணவு பொருட்களை பூச்சிகள் மற்றும் கிருமி தொற்று இல்லாத சுகாதாரமான சூழலில் பொதுமக்களுக்கு விற்பனை செய்ய வேண்டும்.

    பண்டிகை காலத்தில் மட்டும் பலகாரங்கள் தயாரிப்பவர்கள் உள்பட அனைத்து தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களும் உடனடியாக http:/foscos.fssai.gov.in என்ற இணையதளத்தில் இந்திய உணவுபாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டத்தின் 2006-ன் கீழ் தங்களது வணிகத்தினை பதிவு உரிமம் பெற்றுக் கொள்ள வேண்டும்.

    மேலும் உணவு (இனிப்பு மற்றும் கார வகைகள்) தயாரிப்பாளர்கள் அனைவரும் உணவு பாதுகாப்பு அடிப்படை பயிற்சி பெற்றிருக்க வேண்டும். இது தொடர்பான உணவு புகார்கள் ஏதும் இருப்பின் 9444042322 என்ற வாட்ஸ்-அப் புகார் எண்ணிற்கு

    பொதுமக்கள் புகார்களை தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    நெல்லை மாவட்டத்தில் கால்வாய்கள் தூர்வாரும் பணி கலெக்டர் விஷ்ணு இன்று தொடங்கி வைத்தார்
    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தின் பிரதான அணையான 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் மூலமாக கார், பிசான பருவ சாகுபடி அதிக அளவில் நடைபெறும்.

     
    மாவட்டம் முழுவதும் சுமார் 50 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பு இந்த அணை மூலமாக பாசன வசதி பெற்று வருகிறது.

    ஆண்டுதோறும் ஜூன் 1-ந்தேதி நெல் சாகுபடி பணிக்காக அணையில் இருந்து தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்படும்.

    இந்த ஆண்டும் பாபநாசம் அணையில் நீர்மட்டம் 70 அடியை எட்டியுள்ளது. இதனால் 1-ந்தேதி அணை திறக்கப்படும் என்று விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர். அதே நேரத்தில் மழைக்கு முன்னதாக அனைத்து கால்வாய்களையும் தூர்வார விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
    அவர்களின் கோரிக்கையை ஏற்று நெல்லை மாவட்டத்தில் உள்ள பாளையங்கால்வாய், கோடகன் கால்வாய் மற்றும் நெல்லை கால்வாய் ஆகியவற்றை முழுமையாக தூர்வார மாவட்ட நிர்வாகம் சார்பில்  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

     அதன்படி இன்று நெல்லை டவுன் கல்லணை பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள நெல்லை கால்வாயை தூர்வாரும் பணியை கலெக்டர் விஷ்ணு தொடங்கி வைத்தார்
    . ஜே.சி.பி. எந்திரம் மூலம் கால்வாயில் படர்ந்திருந்த அமலைச்செடிகள் அகற்றப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் நெல்லை ஆர்.டி.ஓ. சந்திரசேகர், செயற்பொறியாளர் மாரியப்பன், உதவி செயற் பொறியாளர் தங்கராஜ், மாநகராட்சி உதவி கமிஷனர் லெனின், நெல்லை தாசில்தார் (பொறுப்பு) ெலட்சுமி, பேரிடர் மேலாண்மை தாசில்தார் செல்வம், உதவி பொறியாளர்கள் மாரியப்பன், சண்முக நந்தினி மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள், தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.
    ×