search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை மாவட்டத்தில் நாளை  பொது வினியோக திட்ட குறைதீர்க்கும் நாள் முகாம்- தாசில்தார் அலுவலகங்களில் நடக்கிறது
    X

    கலெக்டர் விஷ்ணு

    நெல்லை மாவட்டத்தில் நாளை பொது வினியோக திட்ட குறைதீர்க்கும் நாள் முகாம்- தாசில்தார் அலுவலகங்களில் நடக்கிறது

    • ஒவ்வொறு மாதமும் அனைத்து தாசில்தார் அலுவலகங்களிலும் பொது விநியோகத்திட்ட மக்கள் குறைதீர் முகாம் நடத்தப்படுகிறது.
    • குடும்ப அட்டை பெற உரிய ஆவணங்களை எடுத்து செல்ல வேண்டும் என கலெக்டர் விஷ்ணு தெரிவித்துள்ளார்.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பொது வினியோக திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்க ளுக்கும் வழங்குவதன் பொருட்டு ஒவ்வொறு மாதமும் நெல்லை மாவட்டத்தின் அனைத்து தாசில்தார் அலுவலகங்களிலும் பொது விநியோகத்திட்ட மக்கள் குறைதீர் முகாம் நடத்தப்படுகிறது. அதன்படி நாளை (சனிக்கிழமை) நடைபெறும் இக்குறைதீர் முகாமில் கீழ்கண்ட சேவைகளை மக்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.

    புதிதாக குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை மற்றும் நகல் அட்டை கோரி விண்ணப்பித்தல், குடும்ப அட்டையில் செல்போன் எண் பதிவு, மாற்றம் செய்தல், பொது விநியோக திட்ட கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் தரம் குறித்த புகார் அளித்தல், குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கல் முகவரி மாற்றம் மற்றும் புதிய குடும்ப அட்டை, நகல் குடும்ப அட்டை பெற விண்ணப்பிக்க செல்லும் பயனாளர் உரிய ஆவணங்களுக்குரிய ஆதார் அட்டை, பிறப்பு, இறப்பு சான்று குடியிருப்பு முகவரிக்கு ஆதாரமான ஆவணங்கள் ஆகியவற்றினை எடுத்து செல்ல வேண்டும். மேலும், செல்போன் எண் பதிவு, மாற்றம் செய்வதற்கு ஏதுவாக சம்பந்தப்பட்ட செல்போனை கொண்டு செல்ல வேண்டும். மேற்படி, முகாம் மற்றும் பொதுவிநியோகத்திட்ட செயல்பாடுகள் குறித்த புகார்களுக்கு நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலக பொது விநயோ கத்திட்ட கட்டுப்பாட்டு அறை எண்: 9342471314-ல் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×