search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Grievance Redressal Day Camp"

    • ஈரோடு மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட குறைதீர்க்கும் நாள் முகாம் நாளை (சனிக்கிழமை) அனைத்து வட்டங்களிலும் நடைபெற உள்ளது.
    • முகாமில் புதிய குடும்ப அட்டை மனுக்கள் பெறுதல், நகல் குடும்ப அட்டை, குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்கம், கைபேசி எண் போன்ற கோரிக்கைகளை பொதுமக்கள் மனுக்கள் மூலம் தெரிவிக்கலாம்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட குறைதீர்க்கும் நாள் முகாம் நாளை (சனிக்கிழமை) அனைத்து வட்டங்களிலும் நடைபெற உள்ளது.

    மேற்கண்ட முகாமில் புதிய குடும்ப அட்டை மனுக்கள் பெறுதல், நகல் குடும்ப அட்டை, குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்கம், கைபேசி எண் போன்ற கோரிக்கைகளை பொதுமக்கள் மனுக்கள் மூலம் தெரிவிக்கலாம்.

    குறைதீர்க்கும் நாள் முகாம் கீழ்க்கண்ட இடங்களில் அந்தந்த வட்டங்களில் நடைபெற உள்ளது.

    அதன்படி ஈரோடு வட்டத்திற்கு கரட்டுப்பாளையம் ரேஷன் கடையில் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் நடை பெறுகிறது. பெருந்துறை வட்டத்திற்கு கருமாண்டி செல்லிபாளையம்-௧ ரேஷன் கடையில் மாவட்ட வழங்கல் அலுவலர் தலை மையில் நடைபெறுகிறது.

    மொடக்குறிச்சி வட்டத்திற்கு ஆயி கவுண்டன் பாளையம் ேரஷன் கடையில் ஈரோடு, உதவி ஆணையர் (கலால்) தலைமையில் நடை பெறுகிறது. கொடுமுடி வட்டத்திற்கு காரவலசு ரேஷன் கடையில் ஈரோடு, துணைப்பதிவாளர் (பொது விநியோகத் திட்டம்) தலை மையில் நடைபெறுகிறது.

    கோபிசெட்டிபாளையம் வட்டத்திற்கு ஆலங்கா ட்டுப்புதூர் ேரஷன் கடையில் கோபி செட்டிபாளையம் வருவாய் கோட்ட அலுவலர் தலை மையில் நடைபெறுகிறது.

    நம்பியூர் வட்டத்திற்கு குருமந்தூர் ரேஷன் கடையில் கோபி செட்டிபாளையம், வருவாய் கோட்ட அலுவலர் தலை மையில் நடைபெறுகிறது. பவானி வட்டத்திற்கு மாணிக்கம் பாளையம் ேரஷன் கடையில் ஈரோடு மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் தலைமையில் நடைபெறுகிறது.

    அந்தியூர் வட்டத்திற்கு முகாசிபுதூர் ரேஷன் கடையில் ஈரோடு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் தலைமையில் நடைபெறுகிறது. சத்தியமங்கலம் வட்டத்திற்கு கூத்தம்பாளையம் ரேஷன் கடையில் ஈரோடு தனித்துணை ஆட்சியர் தலைமையில் நடைபெறுகிறது.

    தாளவாடி வட்டத்திற்கு இக்கலூர் ரேஷன் கடையில் கோபிசெட்டிபாளையம் துணைப்பதிவாளர் (பொது விநியோகத் திட்டம்) தலைமையில் நடைபெறுகிறது. எனவே பொதுமக்கள் இந்த முகாமை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

    இந்த தகவலை ஈரோடு மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார். 

    • ஒவ்வொறு மாதமும் அனைத்து தாசில்தார் அலுவலகங்களிலும் பொது விநியோகத்திட்ட மக்கள் குறைதீர் முகாம் நடத்தப்படுகிறது.
    • குடும்ப அட்டை பெற உரிய ஆவணங்களை எடுத்து செல்ல வேண்டும் என கலெக்டர் விஷ்ணு தெரிவித்துள்ளார்.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பொது வினியோக திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்க ளுக்கும் வழங்குவதன் பொருட்டு ஒவ்வொறு மாதமும் நெல்லை மாவட்டத்தின் அனைத்து தாசில்தார் அலுவலகங்களிலும் பொது விநியோகத்திட்ட மக்கள் குறைதீர் முகாம் நடத்தப்படுகிறது. அதன்படி நாளை (சனிக்கிழமை) நடைபெறும் இக்குறைதீர் முகாமில் கீழ்கண்ட சேவைகளை மக்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.

    புதிதாக குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை மற்றும் நகல் அட்டை கோரி விண்ணப்பித்தல், குடும்ப அட்டையில் செல்போன் எண் பதிவு, மாற்றம் செய்தல், பொது விநியோக திட்ட கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் தரம் குறித்த புகார் அளித்தல், குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கல் முகவரி மாற்றம் மற்றும் புதிய குடும்ப அட்டை, நகல் குடும்ப அட்டை பெற விண்ணப்பிக்க செல்லும் பயனாளர் உரிய ஆவணங்களுக்குரிய ஆதார் அட்டை, பிறப்பு, இறப்பு சான்று குடியிருப்பு முகவரிக்கு ஆதாரமான ஆவணங்கள் ஆகியவற்றினை எடுத்து செல்ல வேண்டும். மேலும், செல்போன் எண் பதிவு, மாற்றம் செய்வதற்கு ஏதுவாக சம்பந்தப்பட்ட செல்போனை கொண்டு செல்ல வேண்டும். மேற்படி, முகாம் மற்றும் பொதுவிநியோகத்திட்ட செயல்பாடுகள் குறித்த புகார்களுக்கு நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலக பொது விநயோ கத்திட்ட கட்டுப்பாட்டு அறை எண்: 9342471314-ல் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×