search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Panchayat Presidents"

    • நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்டத்தில் உள்ள 204 பஞ்சாயத்து தலைவர்களுக்கான பயிற்சி கூட்டம் மாவட்ட கலெக்டர் விஷ்ணு தலைமையில் இன்று நடைபெற்றது.
    • நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் இருக்கும் நீர் நிலைகளை 2024-ம் ஆண்டுக்குள் புனரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது

    நெல்லை:

    நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்டத்தில் உள்ள 204 பஞ்சாயத்து தலைவர்களுக்கான பயிற்சி கூட்டம் மாவட்ட கலெக்டர் விஷ்ணு தலைமையில் இன்று நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன், மாநகர துணை போலீஸ் கமிஷனர் சீனிவாசன், மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தலைவர்கள், மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்கள், ஊரக உள்ளாட்சித் துறை அதிகாரிகள் உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

    மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளுக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது மற்றும் ஊராட்சிகளுக்கு தேவையான வசதிகள் குறித்து பேசப்பட்டது. மேலும் ஊராட்சி தலைவர்கள், ஊரக உள்ளாட்சித் துறை தவிர்த்து மற்ற துறைகளில் உள்ள திட்டங்கள் குறித்து அறிந்து கொள்ளும் வகையில் ஆலோசனை களும் வழங்கப் பட்டது.

    தொட ர்ந்து கலெக்டர் விஷ்ணு தலைமையில் போதை யில்லா நெல்லையை உருவாக்கும் வகையில் அனைத்து ஊராட்சி தலைவ ர்களும் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடை பெற்றது.

    இந்த கூட்டத்தை தொடங்கி வைத்து கலெக்டர் விஷ்ணு பேசிய தாவது:-

    நெல்லை மாவட்டத்தில் உள்ள ஊராட்சி மன்ற தலைவர்கள் செய்ய வேண்டிய பணிகள் குறித்து விளக்கம் அளிக்கும் வகையில் இந்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    ஊராட்சி மன்ற தலைவர், தலைவிகள் சப்ஸ்டியூட் இன்றி இயங்கும் வகையில் இந்த கூட்டம் கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது. தமிழக அரசின் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்துவதில் ஊராட்சிகளின் பங்களிப்பு அதிகம் உள்ளது. ஊராட்சி மன்ற தலைவர்கள் ஊரக உள்ளாட்சி துறை தாண்டிய திட்டங்கள் குறித்து அறிந்து கொள்ளும் வகையில் அனைத்து துறை அதிகாரிகள் இதில் கலந்து கொண்டுள்ளனர்.

    நெல்லை மாவட்ட நிர்வாகம் பள்ளி கல்விக்கு தனி கவனம் செலுத்தி பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. 2023- ம் நிதி ஆண்டுக்குள் அனைத்து கட்டமைப்பு வசதிகளும் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி பள்ளிகளில் பூர்த்தி செய்து தேவை என்பது குறித்து வேண்டுகோள் வைக்கும் நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்த கூட்டம் அமைய வேண்டும். ஊராட்சி பள்ளிகளில் அடிப்படை தேவையாக ஸ்மார்ட் வகுப்பறை என்பது தற்போதைய சூழலில் உள்ளது.

    ஒரு பள்ளிக்கு ஒரு ஸ்மார்ட் வகுப்பறை என்ற திட்டத்தை சட்டமன்ற உறுப்பினர் நிதி உதவியுடன் அமைக்க ஊராட்சித் தலைவர்கள் முயற்சி எடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும். போதை இல்லா தமிழகத்தை உருவாக்கும் வகையில் ஊராட்சி தலைவர்கள் பங்களிப்பு அதிக முக்கியம் வாய்ந்ததாக உள்ளது. நெல்லை மாவட்டம் நீர் மேலாண்மைக்கு தனிக்கவனம் செலுத்தி வருகிறது.

    நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் இருக்கும் நீர் நிலைகளை 2024-ம் ஆண்டுக்குள் புனரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளும் நீர் மேலாண்மைக்கு தனி முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

    2024-ம் ஆண்டுக்குள் இந்தியாவிலேயே சிறந்த மாவட்டமாக நெல்லை மாவட்டத்தை மாற்றும் வகையில் மாவட்டத்திலுள்ள அனைத்து ஊராட்சி தலைவர் களும் உறுதி ஏற்று செயல்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார். 

    ×