search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "District Monitoring Officer"

    • பெருமாள்புரம் தொடக்க பள்ளியில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் செல்வராஜ் கேட்டறிந்தார்.
    • மாணவர்களுடன் அமர்ந்து கண்காணிப்பு அலுவலர் செல்வராஜ், கலெக்டர் விஷ்ணு, மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் உணவு சாப்பிட்டனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் அரசின் திட்டங்கள் முழுமை யாக செயல்படுத்தப்படுவதை உறுதி செய்திடும் வகையில் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அரசு செயலாளருமான செல்வராஜ், கலெக்டர் விஷ்ணு தலைமையில் இன்று ஆய்வு செய்தார்.

    காலை உணவு திட்டம்

    அதன்படி மாநகராட்சிக்குட்பட்ட பெருமாள்புரம் மாநகராட்சி தொடக்க பள்ளியில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தின் செயல்பாடுகள் குறித்தும், பள்ளி குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வரும் காலை உணவின் வகைகள் குறித்தும் ஆசிரியர்களுடன் கேட்டறிந்தார். பின்னர் அவர்களுடன் அமர்ந்து கண்காணிப்பு அலுவலர் செல்வராஜ், கலெக்டர் விஷ்ணு, மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் உணவு சாப்பிட்டனர்.

    சுகாதார நிலையத்தில் ஆய்வு

    எண்ணும், எழுத்தும் கற்றல் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து பள்ளி ஆசிரியர்களிடம் கேட்டறிந்து அப்பள்ளி மாணவர்கள் இத்திட்டத்தின் வாயிலாக கற்ற கற்றல் திறனை கண்காணிப்பு அலுவலர் பார்வையிட்டார்.

    தொடர்ந்து பெரு மாள்புரம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு செய்து அங்கு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு தேவையான மருந்து பொருட்கள் போதுமானதாக இருப்பு உள்ளதா? என்றும் நோயாளி களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்தும் டாக்டர்களிடம் கேட்டறிந்தார்.

    • மாவட்ட கண்காணிப்பு அலுவலர் டாக்டர்.எம்.கருணாகரன் திருப்பூர் மாவட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்டப்பணிகளை ஆய்வு மேற்கொண்டார்.
    • ஆலம்பாளையத்தில் ரூ.20,000 மதிப்பீட்டில் விவசாயிகளுக்கு தெளிப்பான்களை வழங்கினார்.

    திருப்பூர் :

    ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அரசு சிறப்பு செயலர்- மாவட்ட கண்காணிப்பு அலுவலர் டாக்டர்.எம்.கருணாகரன் , மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத் முன்னிலையில் திருப்பூர் மாவட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்டப்பணிகளை ஆய்வு மேற்கொண்டார்.அந்த வகையில் குண்டடம் ஊராட்சி ஒன்றியம், புள்ளகாளிபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டத்தின் கீழ் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டுவரும் காலை உணவினை ஆய்வு மேற்கொண்டு பொங்கலூர் ஊராட்சி ஒன்றியம், கன்டியன் கோவில் ஊராட்சியில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கினைந்த வேளாண் வளர்ச்சித்திட்டத்தின் கீழ் ரூ.0.807 லட்சம் மதிப்பீட்டில் ஆலம்பாளையத்தில் குட்டை தூர்வாரும் பணிகளை ஆய்வு மேற்கொண்டு ரூ.20,000 மதிப்பீட்டில் விவசாயிகளுக்கு தெளிப்பான்களை வழங்கினார்.தொடர்ந்து, திருப்பூர் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தினை ஆய்வு செய்தும், திருப்பூர் மாநகராட்சி மண்டலம்-3 மற்றும் மண்டலம்-4 ஆகிய மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் அம்ரூத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்டப்பணிகளை ஆய்வு மேற்கொண்டுதிருப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் திருப்பூர் தெற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களுக்கு இ-சேவை மையத்தின் மூலம் வழங்கப்படும் சாதிச்சான்றுகள், வருமானச் சான்றுகள், வாரிசு சான்றுகள் மற்றும் பட்டா மாறுதல் போன்ற சேவைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

    மேலும், திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்டப்பணிகளை ஆய்வு மேற்கொண்டு, புதிய வளர்ச்சி திட்ட பணிகளை விரைவாகவும், தரமாகவும் பணிகளை முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அரசு சிறப்பு செயலர்-திருப்பூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் கருணாகரன் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.தொடர்ந்து, மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட முன்னோடி வங்கி சார்பில் மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டத்தில் பங்கேற்றார்.இந்த ஆய்வின் போது, மாநகராட்சி ஆணையாளர் கிராந்தி குமார்பாடி,திருப்பூர் சப்- கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாரயணன் , மாவட்ட ஊரக வளாச்சி முகமையின் திட்ட இயக்குநர் லட்சுமணன், துணை இயக்குநர் (வேளாண்மை ) சுருளியப்பன், துணை இயக்குநர் (தோட்டக்கலைத்துறை) சுரேஷ்ராஜா, திருப்பூர் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெயதேவராஜ் மற்றும் தொடர்புடைய அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

    ×