search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சுற்றுச்சூழலை பாதுகாப்பது நம் கடமை- பசுமை பட்டாசுகளை மட்டுமே  பொதுமக்கள் வெடிக்க வேண்டும்- நெல்லை கலெக்டர் வேண்டுகோள்
    X

    கலெக்டர் விஷ்ணு

    சுற்றுச்சூழலை பாதுகாப்பது நம் கடமை- பசுமை பட்டாசுகளை மட்டுமே பொதுமக்கள் வெடிக்க வேண்டும்- நெல்லை கலெக்டர் வேண்டுகோள்

    • பட்டாசுகளை வெடிப்பதால் நிலம், நீர், காற்று உள்ளிட்டவை பெருமளவில் மாசுபடுகின்றன.
    • சுற்றுச்சூழலை பாதுகாப்பது அனைவரின் கடமையும் பொறுப்பும் ஆகும்.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பட்டாசு வெடிக்கும் நேரம்

    தீபாவளி திருநாள் மக்களால் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படும் நாளாகும். இந்த நாளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். அதே நேரத்தில் பட்டாசுகளை வெடிப்பதால் நம்மை சுற்றியுள்ள நிலம், நீர், காற்று உள்ளிட்டவை பெருமளவில் மாசுபடுகின்றன. பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் அதிகப்படியான ஒலி மற்றும் காற்று மாசினால் குழந்தைகள், பெரியோர்கள் மற்றும் நோய்வாய்பட்ட முதியவர்கள் உடல் அளவிலும் மனதளவிலும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.

    உச்ச நீதிமன்ற அறிவுறுத்தியுள்ளபடி தமிழ்நாட்டில் கடந்த 4 ஆண்டுகளாக தீபாவளி பண்டிகையன்று காலை 6 முதல் 7 மணி வரையும், இரவு 7 முதல் 8 மணி வரையும் மட்டுமே பட்டாசுகளை வெடிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்த ஆண்டும் அதே நேரத்தில் பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    விழிப்புணர்வு

    சுற்றுச்சூழலை பாதுகாப்பது அனைவரின் கடமையும் பொறுப்பும் ஆகும். எனவே பொதுமக்கள் பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும். மாவட்ட நிர்வாகம், உள்ளாட்சி அமைப்புகளின் முன் அனுமதியுடன் பொதுமக்கள் திறந்த வெளியில் ஒன்று கூடி கூட்டாக பட்டாசுகளை வெடிப்பதற்கு அந்தந்த பகுதிகளில் உள்ள நலச்சங்கங்கள் மூலம் முயற்சிக்க வேண்டும். மருத்துவமனை, வழிபாட்டுத்தலங்கள், குடிசை பகுதி மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×