search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "EDUCATIONAL ASSISTANCE"

    • பழங்குடியின மாணவர்கள் புகார்
    • கல்லூரி நிர்வாகத்திடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி

    வந்தவாசி:

    வந்தவாசி அடுத்த தென்னாங்கூர் கிராமத்தில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு, கல்வி உதவி தொகை பெற ஆன்லைனில் புதிய சாதிச்சான்றிதழ் பதிவு செய்ய வேண்டும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது.

    இந்த நிலையில் பழங்குடி மாணவ மாணவிகளுக்கு கோட்டாட்சியர் மூலமாக வழங்கப்பட்ட நிரந்தர சாதிச்சான்றிதழை பதிவேற்றம் செய்ய வழிவகை செய்திட வேண்டும், மேலும் புதிய சாதிச்சான்றிதழ் பெற பல நடைமுறை சிக்கல்களான கால தாமதம், மற்றும் கோட்டாட்சியர் மூலமாக விசாரணை தாமதம் ஆகியவற்றை களைய காலநீட்டிப்பு ஆகியவை வழங்கிட வேண்டும் என கோரிக்கை அடங்கிய மனுவினை வந்தவாசி தாசில்தார் முருகானந்தத்திடம் வழங்கினர்.

    இது குறித்து தாசில்தாரிடம் கேட்டதற்கு உடனடியாக கல்லூரியிலேயே மாணவ மாணவிகளுக்கு சாதிச்சான்றிதழ் வழங்கிட ஆன்லைன் முகாம் அமைத்து தர கல்லூரி நிர்வாகத்திடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

    • தமிழக அரசு பல்வேறு திட்டங்களின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது.
    • இலவச கல்வித்திட்டத்தின் கீழ் எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவ- மாணவிகளுக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது.

    மூன்றாண்டுபயிலும்அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை பட்டப்படிப்பு மாணவ-மாணவிகளுக்கு இலவச கல்வித்திட்டத்தின் கீழ் எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. முதுகலை, பாலிடெக்னிக், தொழிற்படிப்பு போன்ற தொழிற்படிப்பு போன்ற பிற படிப்புகளுக்கு பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ.2,50,000-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

    பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மாணவ-மாணவியர்களுக்கான கல்வி உதவித்தொகை இணையதளம் (Scholarship Portal) புதுப்பித்தலுக்கு 10.11.2022 முதல் செயல்பட துவங்கும். புதுப்பித்தலுக்கான (Renewal) விண்ணப்பங்கள் 06.12.2022-க்குள் இணையதளம் மூலம் கேட்புகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். அதே போல் புதிய இனங்களுக்கு (Fresh) இணையதளம் 15.12.2022 முதல் செயல்படத் துவங்கும். புதிய இனங்களுக்கான விண்ணப்பங்கள் 20.10.2023-க்குள் இணையதளம் மூலம் கேட்புகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

    மேலும் விவரங்களுக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை (மின்னஞ்சல் முகவரி dbcwotpr@gmail.com மற்றும் தொலைபேசி 616001.0421-2999130) அணுகலாம் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

    http://www.bcmbcmw.tn.gov.in/welfschemes.htm#scholarship schemes என்ற அரசு இணையதளத்திலும் இத்திட்டங்கள் குறித்த விவரங்கள் மற்றும் விண்ணப்ப படிவங்கள் உள்ளது என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார். 

    • தமிழக அரசு பல்வேறு திட்டங்களின் கீழ் கல்வி உதவி தொகை வழங்கி வருகிறது.
    • மாணவர்களுக்கு இலவச கல்வித்திட்டத்தின் கீழ் எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவி தொகை வழங்கப்படுகிறது.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு வெளி யிட்டுள்ள செய்திருக் குறிப் பில் கூறியுள்ளதாவது:-

    அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபின பிரிவை சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களின் கீழ் கல்வி உதவி தொகை வழங்கி வருகிறது.

    அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை, மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 3 ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவிகளுக்கு இலவச கல்வித்திட்டத்தின் கீழ் எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவி தொகை வழங்கப்படுகிறது.

    முதுகலை பாலிடெக்னிக், தொழிற்படிப்பு போன்ற பிற படிப்புகளுக்கு மாண வர்களின் பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ. 2 லட்சத்து 50 ஆயிரத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

    பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மாணவ, மாணவி களுக்கான கல்வி உதவித்தொகை இணை யதளம் புதுப்பித்தலுக்கு கடந்த 10- ந் தேதி முதல் தொடங்கப்பட்டுள்ளது. புதுப்பித்தலுக்கான விண்ணப்பங்கள் டிசம்பர் 6-ந் தேதிக்குள் இணையதளம் மூலம் கேட்புகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

    அதே போல் புதிய இனங்களுக்கு இணையதளம் அடுத்த மாதம் 15-ந் தேதி முதல் செயல்படத் தொடங்கும். புதிய இனங்களுக்கான விண்ணப்பங்கள் ஜனவரி 20-ந் தேதிக்குள் இணைய தளம் மூலம் கேட்புகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

    http://www.bcmbcmw.tn.gov.in/welfschemes.htm# scholarshipschemes-என்ற அரசு இணையதளத்தில் இத்திட்டங்கள் குறித்த விவரங்கள் மற்றும் விண்ணப்ப படிவங்கள் உள்ளது.

    மேலும் விவரங்களுக்கு மாவட்ட கலெக்டர் அலு வலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணு கலாம்.

    இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

    • த.மு.மு.க. சார்பில் கல்வி-மருத்துவ உதவி வழங்கும் விழா நடந்தது.
    • கண் அறுவை சிகிச்சைக்கு ரூ. 20 ஆயிரம் மருத்துவ உதவியும் வழங்கப்பட்டது.

    ராமநாதபுரம்

    த.மு.மு.க. 28-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு ராமநாதபுரம் நகர் த.மு.மு.க. சார்பில் கல்வி மற்றும் மருத்துவ உதவித்தொகை வழங்கும் விழா த.மு.மு.க. நகர் தலைவர் முஹம்மது அமின் தலைமையில் நடந்தது.

    மாநில செயலாளர் சலிமுல்லாஹ்கான், மாநில செயற்குழு உறுப்பினர் மவுலவி உசேன் மன்பஈ முன்னிலை வகித்தனர். விழாவில் 2-ம் ஆண்டு கல்வி உதவி தொகையாக உயர் கல்வி பயிலும் மாணவர்கள் அப்துல்லா, முருகன், ரபிக் ராஜா, சைரோஸ் ஆகிய 4 மாணவர்களுக்கு தலா ரூ 7 ஆயித்து 500 வீதம் ரூ.30 ஆயிரம் வழங்கப்பட்டது. ஜக்கரியா என்ற தொழிலாளிக்கு கண் அறுவை சிகிச்சைக்கு ரூ. 20 ஆயிரம் மருத்துவ உதவியும், ராமநாதபுரம் அருகே லாந்தை சவுந்தரபாண்டி என்ற மாற்றுத் திறனாளிகளிக்கு சிறு தொழில் தொடங்க ரூ.3 ஆயிரம் வழங்கப்பட்டது.

    முன்னதாக மாநில செயலாளர் சலிமுல்லாஹ்கான் த.மு.மு.க. கொடியேற்றி வைத்தார். த.மு.மு.க. மாவட்ட செயலாளர் அப்துல் ரஹீம், 15-வது வார்டு ம.ம.க. நகர் மன்ற உறுப்பினர் காதர் பிச்சை, வர்த்தக அணி மாவட்ட செயலாளர் பிரிமியர் இப்ராஹிம், மாவட்ட துணை செயலாளர் சாகுல் ஹமீது, ம.ம.க. மாவட்ட துணைச் செயலாளர் ஜாகீர் பாபு, மருத்துவ அனி மாவட்ட செயலாளர் சுலைமான் உள்பட பலர் கலந்து கொண்டனர். கீழக்கரையில் த.மு.மு.க. 28-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு பல்வேறு முக்கிய சாலைகளில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டது.

    • சிறுபான்மையின மாணவ-மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    • 31-ந்தேதி வரையிலும் இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

    பெரம்பலூர்:

    தமிழ்நாட்டில் சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டுள்ளவர்கள் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் மத்திய-மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் 2022-23-ம் கல்வியாண்டில் 1 முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கு பள்ளி படிப்பு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

    இதற்கும், இதேபோல் 11-ம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை (ஐ.டி.ஐ., ஐ.டி.சி, வாழ்க்கை தொழிற்கல்வி, பாலிடெக்னிக், செவிலியர், ஆசிரியர் பட்டயப் படிப்பு, இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகள் உள்பட) பயில்பவர்களுக்கு பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகையும் மற்றும் தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்ப கல்வி பயில்பவர்களுக்கு தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகையும் பெறுவதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    இதற்கு தகுதியான பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த சிறுபான்னையின மாணவ-மாணவிகள் பள்ளி படிப்பு கல்வி உதவி தொகை திட்டத்திற்கு அடுத்த மாதம் (செப்டம்பர்) 30-ந்தேதி வரையிலும், பள்ளி மேற்படிப்பு மற்றும் தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவி தொகைக்கு மாணவ-மாணவிகள் வருகிற அக்டோபர் மாதம் 31-ந்தேதி வரையிலும் இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். இத்திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு அந்தந்த கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை தொடர்பு கொண்டு பயன்பெறலாம். இந்த தகவல் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் இருந்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

    • 1928 மாணவர்களுக்கு ரூ.1.27 கோடி கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.
    • பல்கலைக்கழக வேந்தர் சீனிவாசன் உதவிவழங்கினார்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் அறக்கட்டளை சார்பாக கல்வி உதவித் தொகை தேர்வு நடத்தப்பட்டு அதில் தேர்ச்சியடைந்த ஆயிரத்து 928 மாணவர்களுக்கு ரூ.1 கோடியே 27 லட்சம் உதவி தொகை வழங்கப்பட்டது.

    பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் அறக்கட்டளை சார்பில் 2022 கடந்த மார்ச் மாதம் உதவித் தொகை க்கான தேர்வு பெரம்பலூர் , அரியலூர் ,கடலூர், விழுப்புரம் மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களில் உள்ள தனியார், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்பட்டது. இந்த தேர்வில் 392 பள்ளிகளிலிருந்து 28 ஆயிரத்து 431 மாணவ,மாணவிகள் தேர்வெழுதினர்.

    இந்த தேர்வின் மூலம் தேர்ச்சி பெற்று தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியில் 234 மாணவர்களும், தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 618 மாணவர்களும், சீனிவாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 757 மாணவர்களும், தனலட்சுமி சீனிவாசன் பாலிடெக்னிக் கல்லூரியில் 241 மாணவர்களும், தனலட்சுமி சீனிவாசன் கல்வியியல் கல்லூரியில் 53 மாணவர்களும், தனலட்சுமி சீனிவாசன் உடற் கல்வியியல் கல்லூரியில் 25 மாணவர்களும் என மொத்தம் ஆயிரத்து 928 மாணவ,மாணவிகள் கல்வி பயிலசேர்ந்துள்ளனர்.

    கல்வி உதவி தொகை வழங்கும் நிகழ்ச்சியில் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தர் சீனிவாசன், பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு தலா ரூ. 30 ஆயிரமும், கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கல்வியியல் கல்லூரி, உடற்கல்வியியல் , பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கு தலா ரூ. 5 ஆயிரமும் என மொத்தம் ஆயிரத்து 928 மாணவ,மாணவிகளுக்கு ஒரு கோடியே 26 லட்சத்து 92 ஆயிரத்திற்கான காசோலையை வழங்கி பாராட்டினார்.

    நிகழ்ச்சியில் கல்விநிறுவன முதல்வர்கள் இளங்கோவன், உமாதேவிபொங்கியா, வெற்றிவேலன், சுகுமார், சாந்தகுமாரி, பாஸ்கர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    ×