search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "National Youth Day"

    • மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் 27வது தேசிய இளைஞர் விழாவை இன்று பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.
    • பல்வேறு மாநிலங்கள் தங்களின் தனித்துவமான கலாச்சார வரலாற்றை பிரதிபலிக்கும் நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

    சுவாமி விவேகானந்தர் ஒரு பிரபல ஆன்மீகத் தலைவர், இந்து துறவி, தத்துவ வாதி, எழுத்தாளர். 1863-இல் நரேந்திரநாத் தத்தாவாகப் பிறந்த விவேகானந்தர், பின்னர் ராமகிருஷ்ண பரமஹம்சரின் மாணவராகவும், வேதாந்தம் மற்றும் யோகா போன்ற இந்தியக் கருத்துகளின் உலகளாவிய செய்தித் தொடர்பாளராகவும் ஆனார். சுவாமி விவேகானந்தர் 19 ஆம் நூற்றாண்டில் கொல்கத்தாவில் தனது குருவின் போதனைகளின் அடிப்படையில் ராமகிருஷ்ண மடத்தை நிறுவினார்.

    ராமகிருஷ்ணா மிஷன் என்று அழைக்கப்படும் ஆன்மீக இயக்கம், வேதாந்தத்தின் பண்டைய இந்து தத்துவத்தின் அடிப்படையில் நடைபெற்றது. இந்தியா ,1984 ஆம் ஆண்டு விவேகானந்தரின் பிறந்தநாளை தேசிய இளைஞர் தினமாக கொண்டாட முடிவு செய்தது, அதன்பிறகு ஜனவரி 12, 1985 அன்று முதன்முதலில் கொண்டாடப்பட்டது. விவேகானந்தரின் தத்துவம் மற்றும் அவர் வாழ்ந்த நாட்களில் செய்த செயல், பிரசாரம், கொள்கைகள் இந்திய இளைஞர்களுக்கு உத்வேகத்தின் சிறந்த ஆதாரமாக இருக்கும் என்று அரசாங்கம் அவர் பிறந்தநாளை இளைஞர் தினமாக கொண்டாட முடிவு செய்தது.

    பிரிட்டிஷ் கட்டுப்பாட்டின் போது, விவேகானந்தர் தற்கால இந்து மதத்தை மீண்டும் கொண்டு வர உதவியதற்காகவும், தேசியவாத உணர்வை ஊக்குவிப்பதற்காகவும் புகழ் பெற்றார். அவர் 1893 இல் சிகாகோவில் தனது புகழ்பெற்ற உரைக்காக மிகவும் அங்கீகரிக்கப்பட்டார். அங்கும் அவர் மேற்கத்திய உலகிற்கு இந்து மதத்தை அறிமுகப்படுத்தினார். சிகாகோவில் உலக மதங்களின் பாராளுமன்றத்தில் அவர் உரையாற்றிய போது, அவர் பார்வையாளர்களை "அமெரிக்காவின் சகோதரிகள் மற்றும் சகோதரர்கள்" என்று குறிப்பிட்டார். இது இந்திய கலாச்சாரத்தை மேற்கத்திய நாடுகளுக்கு கொண்டு செல்வதில் ஒரு முக்கியமான தருணமாக இருந்தது. சுவாமி விவேகானந்தர் ஜூலை 4, 1902 இல் இறந்தார்.

    விவேகானந்தர் தனது புத்தகத்தில் "இந்து வேதங்களின்படி, மாட்டிறைச்சியை உண்ணாத ஒருவன் சிறந்த இந்துவாக இருக்க முடியாது" என்று குறிப்பிடுகிறார். சுபாஷ் சந்திர போஸ் விவேகானந்தரை "நவீன இந்தியாவை உருவாக்கியவர்" என்று குறிக்கிறார் மற்றும் மகாத்மா காந்தி விவேகானந்தரின் புத்தகங்களைப் படித்த பிறகு, நாட்டின் மீதான அன்பு அவருக்கு ஆயிரம் மடங்கு வளர்ந்ததாகக் கூறுகிறார்.


    இந்த நாளில் சுவாரஸ்யமான உரைகள், இசை நிகழ்ச்சிகள் முதல் தகவல் கருத்தரங்குகள் மற்றும் மாணவர் மாநாடுகள் வரை நாடு முழுவதும் பல நிகழ்வுகள் நடைபெறுகின்றன. யோகா பயிற்சி, விளக்கக்காட்சிகள் மற்றும் எழுத்துப் போட்டிகள் போன்ற கல்வி கருத்தரங்குகள் மற்றும் போட்டிகள் இளம் மனங்களை இன்னும் அதிகமாக ஈடுபடுத்த நடைபெறுகிறது. இன்று, மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் 27வது தேசிய இளைஞர் விழாவை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். மேலும் அவர் நாட்டு இளைஞர்களிடையே உரையாற்றுவார். இந்த ஆண்டின் ஐந்து நாள் திருவிழாவின் கருப்பொருள் "இளைஞர்களால், இளைஞர்களுக்காக" என்பதே, இதில் பல்வேறு மாநிலங்கள் தங்களின் தனித்துவமான கலாச்சார வரலாற்றை பிரதிபலிக்கும் நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

    • எதிர்காலம் சிறக்க, நிகழ்காலம் அடித்தளம் இடவேண்டும்.
    • இளைஞர்களின் மனங்களாலும் கரங்களாலுமே இன்றைய உலகம் சுழல்கிறது.

    சென்னை:

    சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளான ஜனவரி 12-ந்தேதி தேசிய இளைஞர் நாள் என்றும் விவேகானந்தர் ஜெயந்தி என்றும் அழைக்கப்படுகிறது. இந்நாள் இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது.

    இந்நிலையில் மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், எதிர்காலம் சிறக்க, நிகழ்காலம் அடித்தளம் இடவேண்டும். இளைஞர்களின் மனங்களாலும் கரங்களாலுமே இன்றைய உலகம் சுழல்கிறது. நாளைய உலகை ஆளவிருக்கும் இளையோருக்கு, தேசிய இளைஞர் நாளில் இனிய வாழ்த்துகள் என கூறியுள்ளார்.

    • தேசிய இளைஞர் தினத்தையொட்டி நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
    • கல்லூரியில் நடைபெற்ற 37- வது விளையாட்டு விழாவில் கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி புலத்தலைவர் தேரடிமணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஒலிம்பிக் தீபத்தினை ஏற்றி வைத்து விழாவை தொடங்கி வைத்தார்.

    நெல்லை:

    பாளை சாரதா கல்லூரியில் தேசிய இளைஞர் தினம் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் கணினி பயன்பாட்டியல் துறை தலைவர் அனுஷா வரவேற்று பேசினார்.

    போட்டிகள்

    கல்வியியல் கல்லூரி செயலர் யதீஸ்வரி துர்காப்ரியா அம்பா விவேகானந்தரின் பிறந்தநாளை தேசிய இளைஞர் தினமாக கொண்டாடுவதன் காரணம் குறித்து விளக்கி பேசினார்.

    சிறப்பு விருந்தினராக திண்டுக்கல் மாவட்ட காந்தி கிராம் கிராமப்புற நிறுவனத்தின் சமூகவியல் துறை பேராசிரியர் ரூபா ஹரி கலந்து கொண்டு பேசினார். முன்னதாக கல்லூரி முதல்வர் கமலா சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து பேசினார்.

    விழாவில் கல்லூரி மாணவிகள் பூரணி, சந்தியா, ஷாலினி ஆகியோர் உரையாற்றினர். மேலும் தேசிய இளைஞர் தினத்தையொட்டி நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவி களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    இதில் கல்லூரி கல்வி இயக்குநர் சந்திரசேகரன், கல்லூரி பேராசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மாணவி சுபஜோதி நன்றி கூறினார்.

    விளையாட்டு விழா

    இதேபோல் கல்லூரியில் நடைபெற்ற 37- வது விளையாட்டு விழாவில் கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி புலத்தலைவர் தேரடிமணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஒலிம்பிக் தீபத்தி னை ஏற்றி வைத்து விழாவை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் சாரதா கல்லூரி செயலர் யதீஸ்வரி துர்காப்பிரியா, கல்லூரி இயக்குநர் சந்திரசேகர் கிள்ளிகுளம் வேளாண் ஆராய்சி நிறுவனத்தை சேர்ந்த ஜூலியட் ஹெப்சிபா மற்றும் செந்தில்குமார், ஆகியோர் கலந்து கொண்டனர். கல்லூரி முதல்வர் கமலா வரவேற்றார்.

    உடற்கல்வியியல் துறை பேரா சிரியர் வெயிலு முத்து ஆண்டறிக்கை வாசித்தார். நிகழ்ச்சியில் மாணவிகளின் விழிப்பு ணர்வு அணிவகுப்புகள் மற்றும் நாடகங்கள், கலை நிகழ்ச்சிககள், நடை பெற்றது. தொடர்ந்து பார்வையாளர்களுக்கும் போட்டிகள் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற வர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. முடிவில் மாணவி நன்றி கூறினார்.

    • மன்னார்குடியில் சுவாமி விவேகானந்தர் பிறந்தநாளை முன்னிட்டு தேசிய இளைஞர் தினம் கொண்டாடப்பட்டது.
    • பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் சுவாமி விவேகானந்தரை பற்றி சிறப்புரை ஆற்றினார்கள்.

    மன்னார்குடி:

    மன்னார்குடியில் சுவாமி விவேகானந்தர் பிறந்தநாளை முன்னிட்டு தேசிய இளைஞர் தினம் கொண்டாடப்பட்டது.

    இதில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் சுவாமி விவேகானந்தரை பற்றி சிறப்புரை ஆற்றினார்கள்.

    இதில் சிறப்பாக உரையாற்றிய மாணவ- மாணவிகளுக்கு பா.ஜ.க. மாநில செயற்குழு உறுப்பினர் ராகவன், மாவட்டத் தலைவர் பாஸ்கர், மாவட்ட அரசு தொடர்பு பிரிவு தலைவர் மருத்துவர் வி.பாலகிருஷ்ணன், மாவட்ட ஓ.பி.சி. அணி தலைவர் பாஸ்கர், மாவட்ட சிறுபான்மை அணி தலைவர் கமாலுதீன், மாவட்ட வெளிநாடு பிரிவு தலைவர் செந்தில் பாலன், நகர தலைவர் ரகுராமன் ஆகியோர் மாணவர்களுக்கு சான்றிதழும் பரிசுகளும் வழங்கினர்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட மகளிர் அணி செயலாளர் இலக்கியா, நகர செயலாளர் செந்தில் ராஜ்குமார், நகர இளைஞரணி தலைவர் மனோஜ் குமார் ஆகியோர் செய்து இருந்தனர்.

    ×