பாளையில் போலி ஆவணம் தயாரித்து ரூ.5 கோடி மதிப்புள்ள நிலத்தை அபகரிக்க முயற்சி - போலீசில் பெண் புகார்

பாளை வி.எம்.சத்திரம் பகுதியை சேர்ந்தவர் சாமுவேல். இவரது மனைவி கில்டா விஜயகுமாரி. இவர்களுக்கு சொந்தமான நிலம் அதே பகுதியில் உள்ள திருச்செந்தூர் ரோடு போலீஸ் சோதனை சாவடி அருகே உள்ளது. சாமுவேல் கடந்த சில வருடங்களுக்கு முன் இறந்த நிலையில் அந்த நிலத்திற்கு வேறு ஒரு நபர் சொந்தம் கொண்டாடி உள்ளார். இது தொடர்பாக கில்டா விஜயகுமாரி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.
பாளையில் போலி ஆவணம் தயாரித்து ரூ.5 கோடி மதிப்புள்ள நிலத்தை அபகரிக்க முயற்சி - போலீசில் பெண் புகார்
Published on

நெல்லை:

பாளை வி.எம்.சத்திரம் பகுதியை சேர்ந்தவர் சாமுவேல். இவரது மனைவி கில்டா விஜயகுமாரி. இவர்களுக்கு சொந்தமான நிலம் அதே பகுதியில் உள்ள திருச்செந்தூர் ரோடு போலீஸ் சோதனை சாவடி அருகே உள்ளது.

சாமுவேல் கடந்த சில வருடங்களுக்கு முன் இறந்த நிலையில் அந்த நிலத்திற்கு வேறு ஒரு நபர் சொந்தம் கொண்டாடி உள்ளார். இது தொடர்பாக கில்டா விஜயகுமாரி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.

இந்நிலையில் நெல்லையை சேர்ந்த அரசியல் பிரமுகர்கள் உள்பட 3 பேர் அந்த நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த கற்களை அப்புறப்படுத்தி உள்ளனர். இதனை அறிந்த கில்டா விஜயகுமாரி பெருமாள்புரம் போலீசில் புகார் செய்தார். அவரது புகாரின் பேரில் போலீசார் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

விசாரணையில் சுமார் ரூ.5 கோடி மதிப்புள்ள கில்டா விஜயகுமாரி நிலத்தை குறைந்த விலைக்கு அரசியல் கட்சி பிரமுகர்கள் கேட்டதும், அதற்கு அவர் மறுத்துவிட்டதும் தெரியவந்தது. இது தொடர்பாக போலியாக ஆவணம் ஏதேனும் தயாரித்து விற்க முடிவு செய்து கல்லை அப்புறப்படுத்தினார்களா என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com