search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Woman complained"

    • திருமண நிகழ்ச்சிக்காக வங்கி லாக்கரிலிருந்து நகைகளை எடுத்து வீட்டிற்கு கொண்டு வந்தேன்.
    • விட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது தங்க நகைகளை காணவில்லை.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் கீழவாசல் சாமியப்பா பிள்ளை வீதியை சேர்ந்தவர் முகமது முஸ்தபா கமால் பாட்ஷா.

    இவரது மனைவி தாகிருநிசா பேகம் (வயது 58).

    இவர் தஞ்சை கிழக்கு போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார்.

    அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    நான் எனது உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்காக வங்கி லாக்கரிலிருந்து நகைகளை எடுத்து வீட்டிற்கு கொண்டு வந்தேன்.

    அதில் இருந்து 24 பவுன் தங்க நகைகளை மட்டும் வீட்டில் ஒரு அறையில் வைத்து விட்டு மீதி நகைகளை கழுத்தில் அணிந்து கொண்டு திருமண நிகழ்ச்சிக்கு வீட்டை பூட்டிவிட்டு சென்றேன்.

    திரும்பி வந்து பார்த்தபோது வைத்திருந்த இடத்தில் 24 பவுன் தங்க நகைகளை காணவில்லை.

    வீட்டின் பல இடங்களில் தேடி பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை.

    எனது வீட்டில் பணிபுரி வர்கள் மீது சந்தேகம் உள்ளது.

    காணாமல் போன நகைகளை மீட்டு தர வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    அதன் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் சுதா மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பாளை வி.எம்.சத்திரம் பகுதியை சேர்ந்தவர் சாமுவேல். இவரது மனைவி கில்டா விஜயகுமாரி. இவர்களுக்கு சொந்தமான நிலம் அதே பகுதியில் உள்ள திருச்செந்தூர் ரோடு போலீஸ் சோதனை சாவடி அருகே உள்ளது.
    • சாமுவேல் கடந்த சில வருடங்களுக்கு முன் இறந்த நிலையில் அந்த நிலத்திற்கு வேறு ஒரு நபர் சொந்தம் கொண்டாடி உள்ளார். இது தொடர்பாக கில்டா விஜயகுமாரி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.

    நெல்லை:

    பாளை வி.எம்.சத்திரம் பகுதியை சேர்ந்தவர் சாமுவேல். இவரது மனைவி கில்டா விஜயகுமாரி. இவர்களுக்கு சொந்தமான நிலம் அதே பகுதியில் உள்ள திருச்செந்தூர் ரோடு போலீஸ் சோதனை சாவடி அருகே உள்ளது.

    சாமுவேல் கடந்த சில வருடங்களுக்கு முன் இறந்த நிலையில் அந்த நிலத்திற்கு வேறு ஒரு நபர் சொந்தம் கொண்டாடி உள்ளார். இது தொடர்பாக கில்டா விஜயகுமாரி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.

    இந்நிலையில் நெல்லையை சேர்ந்த அரசியல் பிரமுகர்கள் உள்பட 3 பேர் அந்த நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த கற்களை அப்புறப்படுத்தி உள்ளனர். இதனை அறிந்த கில்டா விஜயகுமாரி பெருமாள்புரம் போலீசில் புகார் செய்தார். அவரது புகாரின் பேரில் போலீசார் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

    விசாரணையில் சுமார் ரூ.5 கோடி மதிப்புள்ள கில்டா விஜயகுமாரி நிலத்தை குறைந்த விலைக்கு அரசியல் கட்சி பிரமுகர்கள் கேட்டதும், அதற்கு அவர் மறுத்துவிட்டதும் தெரியவந்தது. இது தொடர்பாக போலியாக ஆவணம் ஏதேனும் தயாரித்து விற்க முடிவு செய்து கல்லை அப்புறப்படுத்தினார்களா என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×