search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "namachivayam"

    • புதுவை போலீஸ் துறையில் பணியின்போது இறந்தவர்களின் வாரிசுகள் 36 பேருக்கு பணி ஆணை வழங்கப்பட்டு பயிற்சி வழங்கப்பட்டது.
    • சட்டம்-ஒழுங்கை கட்டுப்படுத்துவதிலும், போதைப் பொருள் கடத்தலை தடுப்பதிலும் புதுவை போலீஸ் துறை சிறப்பாக பணியாற்றி வருகிறது.

    புதுச்சேரி:

    புதுவை போலீஸ் துறையில் பணியின்போது இறந்தவர்களின் வாரிசுகள் 36 பேருக்கு பணி ஆணை வழங்கப்பட்டு பயிற்சி வழங்கப்பட்டது.

    பயிற்சி நிறைவு விழா கோரிமேடு மைதானத்தில் நடந்தது. போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஏற்றுக்கொண்டார்.

    தொடர்ந்து சட்டம்-ஒழுங்கு தேர்வில் சிறப்பிடம் பிடித்த 14 பேருக்கு சான்றிதழையும், கவாத்து பயிற்சியில் சிறந்து விளங்கிய 4 பேருக்கு கோப்பைகளையும் அமைச்சர் நமச்சிவாயம் வழங்கி பேசியதாவது:-

    சட்டம்-ஒழுங்கை கட்டுப்படுத்துவதிலும், போதைப் பொருள் கடத்தலை தடுப்பதிலும் புதுவை போலீஸ் துறை சிறப்பாக பணியாற்றி வருகிறது.

    போலீஸ் துறையை நவீனப்படுத்தவும்,துறையில் காலியாக உள்ள ஆயிரத்து 92 பணியிடங்களை நிரப்பவும்நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முதல்கட்டமாக 390 கான்ஸ்டபிள்கள் தேர்வுசெய்யப்பட்டனர்.

    இப்போது 60 சப்-இன்ஸ்பெக்டர்கள் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஊர்க்காவல்படையினர் தேர்வு செய்யப்பட உள்ளனர். புதுவையில் சைபர் குற்றங்களை தடுக்க சைபர் குற்ற போலீஸ் நிலையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் டி.ஜி.பி. மனோஜ்குமார்லால், ஏ.டி.ஜி.பி. ஆனந்தமோகன், ஐ.ஜி.சந்திரன், சீனியர் போலீஸ் சூப்பிரண்டுகள் பிரதிக்ஷா கோத்ரா, தீபிகா, நாராசைதன்யா உட்படபல ர்கலந்துகொண்டனர்.

    • ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி, வில்லியனூர் திருக்கா மீஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேகம் நடைபெற உள்ளது.
    • 108 குட பால் அபிஷேகம் ஆகியவற்றில் அமைச்சர் நமச்சிவாயம் தனது மனைவி வசந்தியுடன் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தார்.

    புதுச்சேரி:

    ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி, வில்லியனூர் திருக்கா மீஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேகம் நடைபெற உள்ளது.

    இதனையொட்டி, கோவிலில் நடந்த கோ பூஜை, 108 குட பால் அபிஷேகம் ஆகியவற்றில் அமைச்சர் நமச்சிவாயம் தனது மனைவி வசந்தியுடன் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தார்.

    தொடர்ந்து கோவில் பிரகாரத்தில் அமைச்சர் நமச்சிவாயம் பக்தர்களுக்கு அன்னதானமும், 500. பெண்களுக்கு சேலையும் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் சிறப்பு அதிகாரி திருவரசன், முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் ஏகாம்பரம், தேவராசு, ஜெயமூர்த்தி, ராமதாஸ், ரமேஷ், பழனி, கதிரவன் காட்டேரிக்குப்பம் அன்பரசன், வைஷ்ணவி தேவி, ஐடியல் முகுந்தன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • புதுவை காலாப்பட்டு மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வரும் கைதி களை நன்னடத்தை அடிப்படையில் விடு தலை செய்வது தொடர் பான ஆலோசனைக் கூட் டம் தலைமைச் செயலகத்தில் நடந்தது.
    • கூட்டத்தில், நன்ன டத்தையில் உள்ள 27 கைதிகளின் விடுதலை தொடர்பான கோப்புகள் ஆலோசனைக் குழுவின் முன் வைக்கப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவை காலாப்பட்டு மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வரும் கைதி களை நன்னடத்தை அடிப்படையில் விடு தலை செய்வது தொடர் பான ஆலோசனைக் கூட் டம் தலைமைச் செயலகத்தில் நடந்தது.

    உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தலைமை யில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், புதுச்சேரி தலைமை நீதிபதி செல் வநாதன், தலைமைச் செயலர் ராஜிவ் வர்மா, சட்டத்துறை செயலர் கார்த்திகேயன் டிஜி.பி., ஆனந்தமோகன், சிறைத்துறை ஐ.ஜி ரவி தீப் சிங் சாகர், சீனியர் போலீஸ் சூப்பிரண்டு, நாரா சைதன்யா, போலீஸ் சூப்பிரண்டு விஷ்ணுகுமார், சிறைத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில், நன்ன டத்தையில் உள்ள 27 கைதிகளின் விடுதலை தொடர்பான கோப்புகள் ஆலோசனைக் குழுவின் முன் வைக்கப்பட்டது. குற்றவியல் நடைமுறை சட்டத்தின் கீழ் 14 ஆண் டிற்கு மேல் தண்டனை அனுபவித்து வரும் 12. கைதிகளின் விடுதலை குறித்து விவாதிக்கப்பட்டத

    சிறை கைதிகள் பற் றிய விபரங்கள், அவர்கள் மீதுள்ள குற்றச்சாட்டு வழக்குகள், அவர்களை விடுதலை செய்வதால் ஏற்படும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள் குறித்தும் நீண்ட நேரம் விவாதிக்கப்பட்டது.

    தொடர்ந்து 2 கைதிகள் மட்டும் விடுவிக்க முடிவு செய்து கோப்பு முதல்-அமைச்சருக்கு அனுப்பி வைக்கப்பட்டது கவர்னரின் ஒப்புதலை பெற்று, உள் துறை அமைச்சர் வாயிலாக கைதிகள் விடுவிக்கப்பட உள்ளனர்.

    • புதுவையில் வைரஸ் காய்ச்சல் பரவுவதை கட்டுப்படுத்த புதுவை, காரைக்காலில் 1 முதல் 8-ம் வகுப்புகளுக்கு ஒருவாரம் விடுமுறை விடப்பட்டிருந்தது.
    • இதுகுறித்து அவரிடம் கேட்ட போது "காய்ச்சல் பரவலைக் கட்டுப்படுத்த ஒருவார விடுமுறைக்கு பிறகு புதுவை, காரைக்காலில் பள்ளிகள் திறக்கப்படுகிறது.

    புதுச்சேரி:

    புதுவையில் வைரஸ் காய்ச்சல் பரவுவதை கட்டுப்படுத்த புதுவை, காரைக்காலில் 1 முதல் 8-ம் வகுப்புகளுக்கு ஒருவாரம் விடுமுறை விடப்பட்டிருந்தது.

    அத்துடன் முதல் காலாண்டு தேர்வு தொடங்க உள்ளதாக கல்வித்துறை தெரிவித்திருந்தது.

    இந்த நிலையில் வைரஸ் காய்ச்சல் தொடர்ந்து பரவி வருவதால் பள்ளிகளுக்கு மீண்டும் விடுமுறை விடப்படுமா என்ற கேள்வி பொதுமக்களிடம் இருந்தது.

    ஆனால் புதுவையில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் என அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவரிடம் கேட்ட போது "காய்ச்சல் பரவலைக் கட்டுப்படுத்த ஒருவார விடுமுறைக்கு பிறகு புதுவை, காரைக்காலில் பள்ளிகள் திறக்கப்படுகிறது.

    திட்டமிட்டப்படி புதுவை, காரைக்காலில் காலாண்டு தேர்வுகளும்  தொடங்கும். தேர்வுகள் வருகிற 30-ந் தேதி வரை நடக்கும். தேர்வு முடிந்த பிறகு ஒருவாரத்துக்கு விடுமுறை விடப்படும். அக்டோபர் 6-ந் தேதி முதல் 2-ம் பருவத்துக்கு பள்ளிகள் திறக்கப்படும்" என்றும் தெரிவித்தார்.

    • போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது. பிரதான சாலை ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்.
    • ஓட்டல் நிறுவன போர்டுகளை அகற்றினால் உடனடியாக சிபாரிசுக்கு வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுவை சட்டசபையில் கேள்விநேரத்தின்போது நடந்த விவாதம் வருமாறு:-

    நேரு(சுயேச்சை):- அரசு துறைகளில் வருவாயை பெருக்கவும், ஆக்கிரமிப்பு இடங்களை மீட்பது போன்ற அரசு நடவடிக்கையின்போது தனியார் நிறுவனங்கள், தனி நபர்கள் அரசுக்கு எதிராக வழக்கு தொடர்ந்து தடை ஆணை பெறுகிறார்கள்.

    இந்த தடை ஆணையை நீக்க அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? இந்த வழக்குகள் எத்தனை நிலுவையில் உள்ளது?

    அமைச்சர் நமச்சிவாயம்: ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

    நேரு: போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது. பிரதான சாலை ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும். ஓட்டல் நிறுவன போர்டுகளை அகற்றினால் உடனடியாக சிபாரிசுக்கு வருகின்றனர். இதை மீறி ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற வேண்டும்.

    ஏ.கே.டி.ஆறுமுகம்(அரசு கொறடா): மேட்டுப்பாளையத்தில் டிராபிக் சிக்னல் வேலை செய்யவில்லை. போலீசாரும் இல்லை.

    ரமேஷ்(என்ஆர்.காங்): போக்குவரத்து போலீசார் இருப்பதில்லை.

    நமச்சிவாயம்: புதுவையில் 37 சிக்னல் அமைக்க உள்ளோம். நடைபாதை கடைகள் அதிகரித்துள்ளது. காலி செய்யும்போது போராட்டம் செய்கின்றனர். இதற்கு அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவிக்கின்றன. பல துறைகள் இணைந்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

    சிவசங்கர்(சுயே): தனி இடத்தில் நடை பாதை கடைகள் அமைக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதிகாரிகள் தவறாக சாலையோரங்களில் கடைகள் அமைக்க அனுமதிக்கின்றனர். கடை வைப்பவர்களிடம் நகராட்சி அடிக்காசு வசூலிக்கிறது.

    நமச்சிவாயம்: நகராட்சி அடிக்காசு குறிப்பிட்ட இடத்துக்குத்தான் வாங்குகின்றனர். அனைத்து இடங்களுக்கும் வாங்குவதில்லை.

    கென்னடி(தி.மு.க.): பேனர்களை அதிகளவு வைக்கிறார்கள். அதை அகற்றுங்கள்.

    சம்பத்(தி.மு.க.): சாலையோர ஆக்கிரமிப்பு அகற்றத்தை ஏன் நிறுத்தினீர்கள்?

    நமச்சிவாயம்: உங்கள் ஒத்துழைப்பு தேவை. நீங்கள் யாரும் வராமல் போனால் ஆக்கிரமிப்புகளை அகற்றிவிடலாம். மீண்டும் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு விவாதம் நடந்தது.

    • மடுகரையில் அமைந்துள்ள அரசு தொடக்கப்பள்ளிக்கு எம்.ஆர்.சுப்புராயன் அரசு தொடக்கப்பள்ளி என கடந்த ஆட்சியில் அரசாணை வெளியிடப்பட்டு நடை முறையில் உள்ளதை சுப்புராய கவுண்டர் அரசு தொடக்கப்பள்ளி என திருத்தம் செய்து அரசாணை வெளியிடப்படுமா?
    • புதிய கல்வி கொள்கை அடிப்படையில் ஆசிரியர், மாணவர் விகிதாச்சாரம் எவ்வளவு? இது அரசு, தனியார் பள்ளிகளில் கடைபிடிக்கப்படுகிறதா? இதை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டுள்ளதா?

    புதுச்சேரி:

    புதுவை சட்டசபையில் கேள்விநேரத்தின்போது நடந்த விவாதம் வருமாறு:-

    ஏ.கே.டி. ஆறுமுகம்(என்.ஆர்.காங்கிரஸ்):- மடுகரையில் அமைந்துள்ள அரசு தொடக்கப்பள்ளிக்கு எம்.ஆர்.சுப்புராயன் அரசு தொடக்கப்பள்ளி என கடந்த ஆட்சியில் அரசாணை வெளியிடப்பட்டு நடை முறையில் உள்ளதை சுப்புராய கவுண்டர் அரசு தொடக்கப்பள்ளி என திருத்தம் செய்து அரசாணை வெளியிடப்படுமா? புதிய கல்வி கொள்கை அடிப்படையில் ஆசிரியர், மாணவர் விகிதாச்சாரம் எவ்வளவு? இது அரசு, தனியார் பள்ளிகளில் கடைபிடிக்கப்படுகிறதா? இதை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டுள்ளதா?

    அமைச்சர் நமச்சிவாயம்: அமைச்சரவையின் முடிவுக்கு ஏற்ப பெயர் திருத்தம் செய்யப்படும். தேசியகல்வி கொள்கையில் மாணவர், ஆசிரியர் விகிதாச்சாரம் 30:1 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தேசிய கல்வி கொள்கை முழுமையாக நடைமுறைப்படுத்தப் படாததால் அனைத்து பள்ளிகளிலும் கல்வி உரிமை சட்ட விதிமுறைகளை கடைபிடிக்க அறி வுறுத்தப்பட்டுள்ளனர். இதை கண்காணிக்க அமைப்பும், நெறிமுறையும் வரையறுக்கப்படும்.

    கல்யாண சுந்தரம்(பா.ஜனதா): சமுதாய தலைவர்களின் பெயர்களுக்கு பின்னால் ஜாதி இடம் பெற்றிருக்கும். புதுவையில் 60 சதவீதம் வன்னியர்கள் வசித்து வருகின்றனர். பல சமுதாய தலைவர்களின் பெயர்களில் உள்ள பள்ளிகளில் ஜாதியும் இடம்பெற்றுள்ளது. கவுண்டர் மட்டும் எடுப்பது ஏன்?

    ஏ.கே.டி. ஆறுமுகம்: பிறந்த பதிவு சான்றிதழில் கூட சுப்புராய கவுண்டர் என்றே பெயர் இடம்பெற்றுள்ளது. அது மட்டுமின்றி அவர் எம்.எல்.ஏ.வாக இருந்தபோதும் எம்.ஆர்.சுப்புராய கவுண்டர் என்ற பெயரில்தான் இருந்தார்.

    அமைச்சர் நமச்சிவாயம்:- இதில் மாற்றுக்கருத்து ஏதும் இல்லை. அமைச்சரவை முடிவெடுத்து பெயர் மாற்றம் செய்யப்படும். கடந்தகாலத்தில் ஒரு அமைப்பு புகார் செய்ததால்தான் அரசாணை திரும்பப்பெறப்பட்டது. நிச்சயமாக பெயர் மாற்றம் செய்யப்படும்.

    கல்யாணசுந்தரம்: கல்வி உரிமை சட்டம் ஏன் தனியார் பள்ளிகளில் நடைமுறைப்படுத்தாமல் உள்ளீர்கள்?

    அமைச்சர் நமச்சிவாயம் :- கல்வி உரிமை சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவீதம் மாணவர்களுக்கு அரசே முழுமையாக செலவு செய்ய வேண்டும். நாம் ஏற்கனவே கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறோம். அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளும் செயல்பட்டு வருகிறது.

    பிற மாநிலங்களை போல ஒரு பள்ளிக்கும், மற்றொரு பள்ளிக்கும் தூரமும் இல்லை. கூடுதல் செலவாகும் என்பதால் நிறைவேற்றாமல் உள்ளோம்.

    கென்னடி: தனியார் பள்ளிகளில் கல்வி உரிமை சட்டத்தை செயல்படுத்த அரசு முயற்சிக்க வேண்டும்.

    அமைச்சர் நமச்சிவாயம் : கல்வி உரிமை சட்டத்தை அமல்படுத்தினால் அரசுக்கு ரூ.40 கோடி கூடுதலாக செலவாகும். தேசிய கல்வி கொள்கை திட்டத்தை நடைமுறைப்படுத்த தயாராகும் சூழலில் உள்ளோம். அத்திட்டத்தில் என்ன சொல்லப்பட்டுள்ளது என ஆராய்ந்து நடவடிக்கை எடுப்போம்.

    ஏ.கே.டி. ஆறுமுகம்:- கொரோனாவுக்கு பிறகு அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளது. கடந்த காலத்தைவிட ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் அரசு பள்ளியில் சேர்ந்துள்ளனர். இவர்களுக்கு ஏற்ப ஆசிரியர்கள் இல்லை.

    அமைச்சர் நமச்சிவாயம் :- அரசின் காலி பணியிடங்கள் அனைத்தும் நிரப்பப்படும் என முதல்-அமைச்சர் உறுதியளித்துள்ளார். ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கியுள்ளோம். புதிதாக 73 ஆசிரியர்களை நியமிக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். தொடர்ந்து காலி பணியிடங்களை கணக்கிட்டு நிரப்புவோம்.

    கல்யாணசுந்தரம்: சமீபத்தில் என் தொகுதியில் உள்ள பள்ளிக்கு சென்றேன். அங்குள்ள மாணவர்கள் அடிப்படை வசதியில்லை என புகார் தெரிவித்தனர். கழிப்பறை சுத்தம் செய்யப்படாமல் சீர்கேடாக இருந்தது. உள்கட்டமைப்பு வசதிகளும் இல்லை. இதற்கு குரூப் டி பணியில் ஆட்களை எடுக்காததுதான் காரணம்.

    அமைச்சர் நமச்சி வாயம்:- ரொட்டி, பால் ஊழியர்கள்தான் பள்ளிகளை சுத்தம் செய்யும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர். 10 ஆண்டு பணி முடித்தவர்கள் நிரந்தரம் செய்யப்பட உள்ளனர்.

    அத்திட்டத்தின் கீழ் ரொட்டி, பால் ஊழியர்களையும் பணிநிரந்தரம் செய்து அவர்களுக்கு கூடுதலாக இந்த பணி வழங்க உள்ளோம்.

    இவ்வாறு விவாதம் நடந்தது.

    • அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் காலி பணியிடங்களை நிரப்பக் கோரி, கூட்டு போராட்டக் குழுவினர், அமைச்சர் நமச்சிவாயத்திடம் மனு அளித்தனர்.
    • 7-வது ஊதியக் குழு பரிந்துரைத்த ஊதியம் அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் இடம் பெற்றுள்ளன.

    புதுச்சேரி:

    அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் காலி பணியிடங்களை நிரப்பக் கோரி, கூட்டு போராட்டக் குழுவினர், அமைச்சர் நமச்சிவாயத்திடம் மனு அளித்தனர்.

    கூட்டு போராட்ட குழு கன்வீனரும் பெத்தி செமினார் பள்ளி முதல்வருமான பாஸ்கல்ராஜ் தலைமையில் நிர்வாகிகள், கல்வி அமைச்சர் நமச்சிவாயத்தை சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில், அரசு நிதியுதவி பெறும் தனியார் பள்ளிகளில் உள்ள காலி பணியிடங்கள் நிரப்ப வேண்டும்.

    7-வது ஊதியக் குழு பரிந்துரைத்த ஊதியம் அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் இடம் பெற்றுள்ளன. மறைமாவட்ட கல்வி செயலர் ஜோசப்ராஜ், இமாகுலேட் பள்ளி முதல்வர் அமலோற்பவம், தனியார் பள்ளி சம்மேளனத் தலைவர் வின்சென்ட்ராஜ், செயலாளர் கிறிஸ்டோபர் ஆகியோர் உடனிருந்தனர்.

    புதுவை நிதி சுமையில் சிக்கி தவிக்க மூல காரணமானவரே ரங்கசாமிதான் என்று நமச்சிவாயம் குற்றம் சாட்டியுள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவை பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து மாநில காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம் தீவிர பிரசாரம் செய்து வருகிறார்.

    மணவெளி தொகுதிக்குட்பட்ட நோணாங்குப்பம், எடையார்பாளையம், தவளகுப்பாம், தானாம்பாளையம், பூரணாங்குப்பம், அபிஷேகப் பாக்கம் உள்ளிட்ட பகுதியில் திறந்த ஜீப்பில் வீதி, வீதியாக சென்று காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    புதுவையில் காங்கிரஸ் ஆட்சிக்கு இன்னும் 2 ஆண்டு காலம் உள்ளது. இலவச அரிசி, முதியார் பென்‌ஷன், சென்டாக் உதவித்தொகை தங்கு தடையின்றி கிடைக்க மத்தியில் ராகுல்காந்தி பிரதமர் ஆக வேண்டும். புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்குவதாக ராகுல்காந்தி உறுதியளித்துள்ளார். மக்கள் மீது அக்கறையும், பரிவும் கொண்ட கூட்டணி காங்கிரஸ் கூட்டணி.

    இந்தியாவை மீண்டும் ஒரு முறை நரேந்திர மோடி ஆட்சி செய்ய அனுமதித்தால் அனைவரும் அடிமையாகி விடுவோம். என்ஆர்.காங்கிரஸ் பயந்துபோய் பா.ஜனதாவோடு கூட்டணி அமைத்துள்ளது. கடந்த காலங்களில் மக்கள் பிரச்சினைகளை பற்றி எந்த கவலையும்படாத ரங்கசாமி தேர்தல் என்றவுடன் மக்களிடம் வந்துள்ளார்.

    புதுவை நிதி சுமையில் சிக்கி தவிக்க மூல காரணமானவரே ரங்கசாமிதான். எனவே அனுபவம் வாய்ந்த காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்திற்கு கை சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெறச்செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பிரசாரத்தின்போது அமைச்சர் கந்தசாமி, அரசு கொறடா அனந்தராமன் மற்றும் தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    கவர்னர் கிரண்பேடி தன்னுடைய முயற்சியால் மின்கட்டண பாக்கி வசூலாகி உள்ளதாக பொய்பிரசாரம் செய்து வருகிறார் என்று நமச்சிவாயம் குற்றம் சாட்டியுள்ளார்.

    புதுச்சேரி:

    அமைச்சர் நமச்சிவாயம் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    புதுவை அரசு எடுத்த நடவடிக்கையாலும் பெரும் முயற்சியாலும் மட்டுமே மின்துறை அதிக அளவில் மின் கட்டண பாக்கி வசூலாகி உள்ளது. ஆனால் கவர்னர் கிரண்பேடி தன்னுடைய முயற்சியால் மின்கட்டண பாக்கி வசூலாகி உள்ளதாக பொய்பிரசாரம் செய்து வருகிறார். காகம் உட்கார பனம்பழம் விழுந்த கதையாகத்தான் இது உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தி.மு.க. உள்ளிட்ட எந்த கட்சிக்கும் புதுவை எம்.பி. தொகுதியை விட்டுக் கொடுக்க மாட்டோம் என்று நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான நமச்சிவாயம் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பாராளுமன்ற தேர்தலை கூட்டணி கட்சிகள் இணைந்து சந்திக்க காங்கிரஸ் கட்சி தயாராகவே உள்ளது. புதுவை பாராளுமன்ற தொகுதி பாரம்பரியமாக காங்கிரஸ் போட்டியிடும் தொகுதியாகும்.

    தி.மு.க. உள்ளிட்ட எந்த கட்சிக்கும் புதுவை எம்.பி. தொகுதியை விட்டுக் கொடுக்க மாட்டோம். என்.ஆர். காங்கிரசிடம் இருந்து புதுவை தொகுதியை மீட்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம். இதனால், எங்கள் தொகுதியை ஏன் மற்றவர்களுக்கு விட்டுத்தர வேண்டும்?

    அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளரும், புதுவை மாநில பொறுப்பாளருமான முகுல் வாஷ்னிக் வருகிற 5-ந் தேதி புதுவை வருகிறார். அப்போது மாவட்ட தலைவர்கள், வட்டார தலைவர்கள், மாநில பிரதிநிதிகள் பட்டியலை அறிவிக்கிறார்.

    உள்கட்சி தேர்தல் மூலம் தேர்வு செய்யப்பட்ட வட்டார, மாவட்ட தலைவர்கள் பட்டியலுக்கு ஏற்கனவே அகில இந்திய காங்கிரஸ் ஒப்புதல் வழங்கியுள்ளது.

    உள்ளாட்சி தேர்தலை நடத்த மாநில தலைமை தேர்தல் ஆணையாளரை நியமிக்க உள்ளோம். இதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. இந்த கோப்பு தற்போது கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    தி.மு.க. மற்றும் பிற கூட்டணி கட்சிகளுடன் இணைந்து உள்ளாட்சி தேர்தலை சந்திக்கவும் காங்கிரஸ் தயாராகி வருகிறது.

    இவ்வாறு நமச்சிவாயம் கூறினார்.

    புதுவை பாராளுமன்ற தொகுதியில் கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் வெற்றி பெற்றது. என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் எம்.பி.யாக உள்ளார்.

    4 ஆண்டு ஆட்சியில் வாக்குறுதியை நிறைவேற்றாததால் பிரதமர் மோடியை கண்டித்து நாளை காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.

    புதுச்சேரி

    மாநில காங்கிரஸ் தலைவர் அமைச்சர் நமச்சிவாயம் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

    2014-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பொய்யான வாக்குறுதிகளை அளித்து பொது மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த மோடி தலைமையிலான மக்கள் விரோத மத்திய பா.ஜ.க. அரசு கடந்த 4 ஆண்டுகளில் ஒரு வாக்குறுதியை கூட நிறைவேற்ற முடியாத வக்கற்ற அரசாக உள்ளது. மக்களிடம் ஆசை வார்த்தைகள் கூறி அவர்களின் வாழ்க்கையை கேள்விகுறியாக்கிய மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு செய்தது என்ன?

    இந்திய நாட்டை முன்னேற்ற பாதைக்கு அழைத்து செல்ல ஒரு திட்டத்தையாவது மோடி நிறைவேற்றினாரா? அனைவரது வங்கி கணக்கிலும் தலா ரூ.15 லட்சம் செலுத்தப்படும் என்று சொன்னாரே செய்தாரா? வெளிநாட்டில் உள்ள கருப்பு பணத்தை மீட்டு இந்தியாவுக்கு கொண்டு வந்தாரா? வருடத்திற்கு 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கி தந்தாரா? விவசாயிகளின் குறைகளை தீர்க்க திட்டங்கள் கொண்டுவந்தாரா? வியாபாரிகளின் நலனை காத்தாரா? தனி நபர் வருமானத்தை உயர்த்தினாரா? பெண்கள் நல முன்னேற்றத்தில் அக்கறை காட்டியது உண்டா? மேக் இன் இந்தியாவையும், டிஜிட்டல் இந்தியாவையும் உருவாக்கினாரா? இந்திய தேசத்தின் ஒற்றுமைக்கு பாடுபட்டாரா? இது போன்ற எண்ணற்ற கேள்விகள் இந்தியா முழுவதும் பிரதமர் மோடியிடம் மக்கள் கேட்க தொடங்கியுள்ளனர்.

    புதிய இந்தியாவை உருவாக்கி சாதனைகள் பலபடைப்பேன் என்று கூறிய பாரத பிரதமர் மோடி பணமதிப்பிழப்பு சட்டம் கொண்டுவந்து அனைத்து தரப்பு மக்களையும் வங்கி வாசல்களில் அலையவிட்டது தான் உங்கள் சாதனையா?,

    ஜி.எஸ்.டி.வரியை அமுல் படுத்தி வியாபாரிகளின் வாழ்க்கையை கேள்விக் குறியாக்கியது தான் உங்கள் சாதனையா, அத்தியாவசிய பொருட்களின் விலையை கடுமையாக உயர்த்தி அன்றாட மக்களை அல்லல் பட வைத்தது தான் சாதனையா?

    கச்சா எண்ணெய் விலை குறைந்தும் டீசல், பெட் ரோல், கேஸ் சிலிண்டர் விலையை வரலாறு காணாத அளவு உயர்த்தியது தான் சாதனையா? மகளிர் முன்னேற்றத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியை குறைத்தது தான் சாதனையா, நாடெங்கிலும் பெண்கள் மற்றும் சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த இரக்க மற்ற அரக்கர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்த்தது தான் சாதனையா?

    கவர்னர்களை தங்களுடைய கைப்பாவையாக வைத்துக் கொண்டு ஜனநாயக படுகொலைகளை நித்தம் நிகழ்த்திக் கொண்டிருக்கும் மோடி தலைமையிலான மத வாத மத்திய அரசுக்கு மக்கள் சக்தியால் நாம் பாடம் புகட்டவேண்டும்.

    கடந்த 4 ஆண்டுகளாக இந்திய தேசத்தை பின்னோக்கி அழைத்து சென்று நாட்டின் பொருளாதாரத்தையும், வளர்ச்சியையும் கேள்விக் குறியாக்கி ஒட்டு மொத்த இந்திய மக்களின் வாழ்க்கை தரத்தை சீர்குலைத்துக் கொண்டிருக்கும் மோடி தலைமையிலான மக்கள் விரோத மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்து ராகுல்காந்தி ஆணைப்படி நாளை (சனிக்கிழமை) மாலை 5 மணியளவில் தலைமை தபால் நிலையம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

    கண்டன ஆர்ப்பாட்டத்தில் தாங்கள் திரளாக பங்கேற்குமாறு புதுவை பிரதேச காங்கிரஸ் கமிட்டி சார்பில் கேட் டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு நமச்சிவாயம் கூறியுள்ளார்.

    தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து நாளை புதுவையில் நடைபெறும் முழு அடைப்புக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு அளிப்பதாக நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில காங்கிரஸ் தலைவர் அமைச்சர் நமச்சிவாயம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    நீர் வளத்தையும், நில வளத்தையும் சூறையாடும் ஸ்டெர்லைட் ஆலையை மூடவேண்டும் என்று தூத்துக்குடி பகுதி மக்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள்.

    கடந்த 100 நாட்களாக ஒட்டுமொத்த மக்களும் மாசு ஏற்படுத்தி உயிர் பலி வாங்கி கொண்டிருக்கும் அபாயமிக்க ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இவர்களின் நியாயமான போராட்டத்திற்கு தீர்வு காணாமல் தமிழக அரசும், மத்திய அரசும் மெத்தன போக்கோடு செயல்பட்டு போராட்டத்தை நீர்த்துப்போக செய்யும் வேளையில் ஈடுபட்டு உள்ளது.

    இதன் விளைவாக ஒட்டுமொத்த மக்களின் எதிர்ப்பை தெரிவிக்கும் வண்ணம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகையிடும் போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டனர்.

    போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணாமல் காவல்துறை மூலமாக கண் மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர்.

    மிருக வெறிபிடித்து 13 அப்பாவி மக்களை கொலை வெறியோடு கொன்று குவித்துள்ளனர். இதுபோன்ற காட்டு மிராண்டித்தனமான மாபாதக செயலை புதுவை பிரதேச காங்கிரஸ் கமிட்டி வன்மையாக கண்டிக்கிறது.

    உண்மையாக போராடும் மக்கள் சக்தி ஒன்று திரண்டால் மக்கள் விரோத ஆட்சிகள் தூக்கி எறியப்படும் என்பதை தமிழகம் மற்றும் மத்திய அரசு நினைவில் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    மேலும் நாளை புதுவையில் நடைபெறும் முழு அடைப்புக்கு ஆதரவு அளிப்பதாகவும் அவர் கூறி இருக்கிறார்.

    ×