என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
காலாண்டு தேர்வு நாளை தொடங்கும்-அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு
- புதுவையில் வைரஸ் காய்ச்சல் பரவுவதை கட்டுப்படுத்த புதுவை, காரைக்காலில் 1 முதல் 8-ம் வகுப்புகளுக்கு ஒருவாரம் விடுமுறை விடப்பட்டிருந்தது.
- இதுகுறித்து அவரிடம் கேட்ட போது "காய்ச்சல் பரவலைக் கட்டுப்படுத்த ஒருவார விடுமுறைக்கு பிறகு புதுவை, காரைக்காலில் பள்ளிகள் திறக்கப்படுகிறது.
புதுச்சேரி:
புதுவையில் வைரஸ் காய்ச்சல் பரவுவதை கட்டுப்படுத்த புதுவை, காரைக்காலில் 1 முதல் 8-ம் வகுப்புகளுக்கு ஒருவாரம் விடுமுறை விடப்பட்டிருந்தது.
அத்துடன் முதல் காலாண்டு தேர்வு தொடங்க உள்ளதாக கல்வித்துறை தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் வைரஸ் காய்ச்சல் தொடர்ந்து பரவி வருவதால் பள்ளிகளுக்கு மீண்டும் விடுமுறை விடப்படுமா என்ற கேள்வி பொதுமக்களிடம் இருந்தது.
ஆனால் புதுவையில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் என அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவரிடம் கேட்ட போது "காய்ச்சல் பரவலைக் கட்டுப்படுத்த ஒருவார விடுமுறைக்கு பிறகு புதுவை, காரைக்காலில் பள்ளிகள் திறக்கப்படுகிறது.
திட்டமிட்டப்படி புதுவை, காரைக்காலில் காலாண்டு தேர்வுகளும் தொடங்கும். தேர்வுகள் வருகிற 30-ந் தேதி வரை நடக்கும். தேர்வு முடிந்த பிறகு ஒருவாரத்துக்கு விடுமுறை விடப்படும். அக்டோபர் 6-ந் தேதி முதல் 2-ம் பருவத்துக்கு பள்ளிகள் திறக்கப்படும்" என்றும் தெரிவித்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்