என் மலர்
புதுச்சேரி

அமைச்சர் நமச்சிவாயத்திடம் மனு அளித்த காட்சி.
பள்ளிகளில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்-நமச்சிவாயத்திடம் மனு
- அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் காலி பணியிடங்களை நிரப்பக் கோரி, கூட்டு போராட்டக் குழுவினர், அமைச்சர் நமச்சிவாயத்திடம் மனு அளித்தனர்.
- 7-வது ஊதியக் குழு பரிந்துரைத்த ஊதியம் அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் இடம் பெற்றுள்ளன.
புதுச்சேரி:
அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் காலி பணியிடங்களை நிரப்பக் கோரி, கூட்டு போராட்டக் குழுவினர், அமைச்சர் நமச்சிவாயத்திடம் மனு அளித்தனர்.
கூட்டு போராட்ட குழு கன்வீனரும் பெத்தி செமினார் பள்ளி முதல்வருமான பாஸ்கல்ராஜ் தலைமையில் நிர்வாகிகள், கல்வி அமைச்சர் நமச்சிவாயத்தை சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில், அரசு நிதியுதவி பெறும் தனியார் பள்ளிகளில் உள்ள காலி பணியிடங்கள் நிரப்ப வேண்டும்.
7-வது ஊதியக் குழு பரிந்துரைத்த ஊதியம் அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் இடம் பெற்றுள்ளன. மறைமாவட்ட கல்வி செயலர் ஜோசப்ராஜ், இமாகுலேட் பள்ளி முதல்வர் அமலோற்பவம், தனியார் பள்ளி சம்மேளனத் தலைவர் வின்சென்ட்ராஜ், செயலாளர் கிறிஸ்டோபர் ஆகியோர் உடனிருந்தனர்.
Next Story






