search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தி.மு.க.வுக்கு எம்.பி. தொகுதியை விட்டு கொடுக்க மாட்டோம்: நமச்சிவாயம் அறிவிப்பு
    X

    தி.மு.க.வுக்கு எம்.பி. தொகுதியை விட்டு கொடுக்க மாட்டோம்: நமச்சிவாயம் அறிவிப்பு

    தி.மு.க. உள்ளிட்ட எந்த கட்சிக்கும் புதுவை எம்.பி. தொகுதியை விட்டுக் கொடுக்க மாட்டோம் என்று நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான நமச்சிவாயம் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பாராளுமன்ற தேர்தலை கூட்டணி கட்சிகள் இணைந்து சந்திக்க காங்கிரஸ் கட்சி தயாராகவே உள்ளது. புதுவை பாராளுமன்ற தொகுதி பாரம்பரியமாக காங்கிரஸ் போட்டியிடும் தொகுதியாகும்.

    தி.மு.க. உள்ளிட்ட எந்த கட்சிக்கும் புதுவை எம்.பி. தொகுதியை விட்டுக் கொடுக்க மாட்டோம். என்.ஆர். காங்கிரசிடம் இருந்து புதுவை தொகுதியை மீட்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம். இதனால், எங்கள் தொகுதியை ஏன் மற்றவர்களுக்கு விட்டுத்தர வேண்டும்?

    அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளரும், புதுவை மாநில பொறுப்பாளருமான முகுல் வாஷ்னிக் வருகிற 5-ந் தேதி புதுவை வருகிறார். அப்போது மாவட்ட தலைவர்கள், வட்டார தலைவர்கள், மாநில பிரதிநிதிகள் பட்டியலை அறிவிக்கிறார்.

    உள்கட்சி தேர்தல் மூலம் தேர்வு செய்யப்பட்ட வட்டார, மாவட்ட தலைவர்கள் பட்டியலுக்கு ஏற்கனவே அகில இந்திய காங்கிரஸ் ஒப்புதல் வழங்கியுள்ளது.

    உள்ளாட்சி தேர்தலை நடத்த மாநில தலைமை தேர்தல் ஆணையாளரை நியமிக்க உள்ளோம். இதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. இந்த கோப்பு தற்போது கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    தி.மு.க. மற்றும் பிற கூட்டணி கட்சிகளுடன் இணைந்து உள்ளாட்சி தேர்தலை சந்திக்கவும் காங்கிரஸ் தயாராகி வருகிறது.

    இவ்வாறு நமச்சிவாயம் கூறினார்.

    புதுவை பாராளுமன்ற தொகுதியில் கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் வெற்றி பெற்றது. என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் எம்.பி.யாக உள்ளார்.

    Next Story
    ×