search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mumbai Indians"

    • சென்னை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    • இளம் விக்கெட் கீப்பரான டோனியின் அந்த கடைசி ஓவரின் ஹாட்ரிக் சிக்ஸ் எங்களுக்கு மிகப்பெரிய அளவில் உதவியது என்று சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கூறியிருந்தார்.

    கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்ற மும்பை அணிக்கு எதிரான 29-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 206 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ருதுராஜ் 69 ரன்களும் துபே 66 ரன்களும் எடுத்தனர். மும்பை தரப்பில் ஹர்திக் பாண்ட்யா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதில் 19.2 ஓவரில் சென்னை அணி 186 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டோனி களம் இறங்கினார். அவர் அடுத்த 3 பந்துகளில் ஹாட்ரிக் சிக்சர் விளாசினார். இதனால் 20 ஓவர் முடிவில் சென்னை அணி 206 ரன்களை குவித்தது. இதுதான் ஆட்டத்தின் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது.

    இதனையடுத்து விளையாடிய மும்பை அணி 186 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் சென்னை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இளம் விக்கெட் கீப்பரான டோனியின் அந்த கடைசி ஓவரின் ஹாட்ரிக் சிக்ஸ் எங்களுக்கு மிகப்பெரிய அளவில் உதவியது என்று சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கூறியிருந்தார்.

    இந்நிலையில், போட்டியின் போது டோனி ஹாட்ரிக் சிக்சர் அடித்தபோது இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா டெண்டுல்கர் கொடுத்த ரியாக்ஷன் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    • ஐ.பி.எல். 2024 டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது
    • ஹர்திக் பாண்ட்யா கேப்டன்சி குறித்து இங்கிலாந்து முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் கருத்து தெரிவித்துள்ளார்

    ஐ.பி.எல். 2024 டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் மும்பை அணிக்கு ஐ.பி.எல். தொடரில் பல கோப்பைகளை வென்று கொடுத்த ரோகித் சர்மா கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ஹர்திக் பாண்ட்யா மும்பை அணியின் புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்டார்.இதனை மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

    போட்டி நடைபெறும்போது ஹர்திக் பாண்ட்யாவுக்கு எதிராக ரசிகர்கள் கோஷம் எழுப்பினர். தற்போதும் எழுப்பி வருகின்றனர். அணி நிர்வாகம், ரோகித் சர்மா மற்றும் ஹர்திக் பாண்ட்யா ஆகியோரால் சரி செய்ய முடியவில்லை. இது அணிக்கு பின்னடைவை ஏற்படுத்துவதாக உள்ளது.

    நடப்பு ஐ.பி.எல். தொடரில் ஹர்திக் பாண்ட்யா தலைமையில் விளையாடி வரும் மும்பை இந்தியன்ஸ் அணி முதல் 3 போட்டிகளில் தொடர்ச்சியாக தோல்வியை தழுவியது. ஆனால் அதற்கு அடுத்த 2 போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று வெற்றி பாதைக்கு அணி திரும்பியது. ஆனால் மீண்டும் நேற்று நடைபெற்ற சென்னை அணிக்கு எதிரான போட்டியில் மும்பை தோல்வியடைந்தது. அந்த தோல்விக்கு கடைசி ஓவரில் டோனிக்கு எதிராக பாண்டியா 20 ரன்கள் கொடுத்ததே முக்கிய காரணமாக அமைந்தது என்ற விமர்சனம் எழுந்துள்ளது.

    இந்நிலையில், ஹர்திக் பாண்ட்யா கேப்டன்சி குறித்து இங்கிலாந்து முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் கருத்து தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக பேசிய அவர் "ஹர்திக் பாண்ட்யா டாஸ் போடும்போதும் பேட்டிங் செய்ய வரும்போதும் அளவுக்கு அதிகமாக சிரித்த முகத்துடன் இருக்கிறார். மகிழ்ச்சியாக இருப்பதுபோல தன்னை காட்டிக்கொள்ள முயல்கிறார் ஆனால், அவர் உண்மையில் வருத்தத்தில் உள்ளார். ரசிகர்கள் BOO செய்து முழக்கமிடுவது போன்ற விஷயங்கள், ஹர்திக்கை காயப்படுத்தியுள்ளது. இது அவரது கேப்டன்சியை பாதிக்கிறது. அவரது இடத்தில் நானும் இருந்திருக்கிறேன். இது மிகவும் கடினமான சூழல்" என்று தெரிவித்துள்ளார்.

    "ஹர்திக் பாண்ட்யாவுக்கு என்ன நடக்கிறது. அவருக்கு எதிர்ப்பு தெரிவித்த ரசிகர்கள் தற்போது முன்னாள் சி.எஸ்.கே கேப்டன் டோனி பாண்ட்யாவை அடித்து நொறுக்குவதை பார்த்து மகிழ்ச்சியடைகிறார்கள். அது அவருக்கு வலியை கொடுக்கும். ஏனெனில் இந்திய வீரரான அவர் உணர்ச்சிவசப்படுகிறார். எனவே இப்படி நடக்கும் போது அது அவரை பாதிக்கிறது. இது நடக்காமல் இருக்க ஏதாவது நடக்க வேண்டும்" என்று கூறினார்.

    அத்துடன் வேகப்பந்து வீச்சாளர்கள் ரன்களை வாரி வழங்கும் போது உடனடியாக ஸ்பின்னர்களை பயன்படுத்தி எதிரணியை அட்டாக் செய்யும் யுக்தியை கேப்டனாக பாண்ட்யா பின்பற்றவில்லை என பீட்டர்சன் விமர்சித்தார். அந்த வகையில் மிகப்பெரிய அழுத்தத்திற்குள் தவிக்கும் பாண்ட்யா அடுத்து வரும் போட்டிகளில் மும்பையை வெற்றி பாதைக்கு கொண்டு வர வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்" என்று அவர் தெரிவித்தார்.

    • தனி ஆளாக போராடிய ரோகித் சதம் விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
    • சென்னை அணி தரப்பில் பத்திரனா 4 விக்கெட்டை வீழ்த்தினார்.

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்று நடைபெற்றுவரும் 29-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் மோதி வருகின்றன. இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ருதுராஜ் 69 ரன்களும் துபே 66 ரன்களும் எடுத்தனர். மும்பை தரப்பில் ஹர்திக் பாண்ட்யா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    இதனையடுத்து மும்பை அணியின் தொடக்க வீரர்களாக ரோகித்- இஷான் கிஷன் களமிறங்கினர். இருவரும் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 70 ரன்கள் குவித்தது. இந்த ஜோடியை பத்திரனா பிரித்தார். இஷான் கிஷன் 23 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த சூர்யகுமார் அந்த ஓவரிலேயே 0 ரன்னில் வெளியேறினார்.

    இதனையடுத்து ரோகித் - திலக் ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். அதிரடியாக விளையாடிய ரோகித் 30 பந்தில் அரை சதம் விளாசினார். சிறப்பாக விளையாடி திலக் 30 ரன்னில் வெளியேறினார். அடுத்து வந்த கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 2 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இதனை தொடர்ந்து வந்த டிம் டேவிட் 13, ஷெப்பர்ட் 1 என வெளியேறினர். தனி ஆளாக போராடிய ரோகித் சதம் விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இறுதியில் மும்பை அணி 186 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் சென்னை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சென்னை அணி தரப்பில் பத்திரனா 4 விக்கெட்டை வீழ்த்தினார்.

    • மும்பை அணி மூன்று போட்டிகளில் தோல்வியுற்றது.
    • சென்னை அணி மூன்று வெற்றிகளை பெற்றுள்ளது.

    ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெறும் இரண்டாவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    இதுவரை மும்பை அணி விளையாடிய ஐந்து போட்டிகளில் இரண்டு வெற்றிகளை பெற்று, மூன்று தோல்விகளை சந்தித்துள்ளது. சென்னை அணி ஐந்து போட்டிகளில் மூன்று வெற்றி, இரண்டு தோல்விகளை சந்தித்துள்ளது.

    அந்த வகையில் இரு அணிகள் விளையாடும் ஆறாவது போட்டியில் வெற்றி பெறும் முனைப்பில் களமிறங்குகின்றன. 

    • நடப்பு ஐ.பி.எல். சீசனில் ரோகித் சர்மா கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
    • மும்பை அணியின் புதிய கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா நியமனம் செய்யப்பட்டார்.

    புதுடெல்லி:

    ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி 5 முறை கோப்பையை வென்றுள்ளது. நடப்பு சீசனில் ரோகித் சர்மா கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டு புதிய கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா நியமனம் செய்யப்பட்டார்.

    ரோகித் சர்மா கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டதற்கு ரசிகர்கள் பலர் அதிருப்தி தெரிவித்ததுடன் ஐ.பி.எல். போட்டி தொடரின் போது ஹர்திக் பாண்ட்யாவுக்கு எதிராக கோஷம் எழுப்பி வருகிறார்கள். தற்போது ஹர்திக் பாண்ட்யா தலைமையின் கீழ் மும்பை அணியில் ஒரு வீரராக ரோகித் சர்மா விளையாடி வருகிறார்.

    இதற்கிடையே, அடுத்த ஆண்டு ரோகித் சர்மா வேறு அணிக்கு மாறக்கூடும் என செய்திகள் வெளியாகி வருகின்றன.

    இந்நிலையில், இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:

    தோனிக்கு மாற்றாக ரோகித் சர்மா சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு செல்வார் என நினைக்கிறேன்.

    சென்னை அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் இந்த ஆண்டு மட்டுமே இருப்பார். அடுத்த ஆண்டு ரோகித் சர்மாவை சென்னை அணி கேப்டனாக பார்க்கலாம்.

    ஹர்திக் பாண்ட்யா தற்போது கடினமான காலகட்டத்தில் இருக்கிறார். இது அவரது தவறு கிடையாது.

    மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இருக்கிறீர்களா என்று அணி நிர்வாகம் கேட்டால் எந்த வீரர் தான் வேண்டாம் என்று சொல்வார்.

    இந்திய டி20 அணியின் கேப்டனாக இருக்கும் ரோகித் சர்மாவை மும்பை அணி கேப்டனாக இந்த ஆண்டு நீட்டித்திருக்க வேண்டும் என்பதே எனது தனிப்பட்ட கருத்தாகும் என தெரிவித்தார்.

    • குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ஹர்திக் பாண்ட்யா மும்பை அணியின் புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்டார்
    • நடப்பு ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி முதல் 3 போட்டிகளில் தொடர்ச்சியாக தோல்வியை தழுவியது

    ஐ.பி.எல். 2024 டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் மும்பை அணிக்கு ஐ.பி.எல். தொடரில் பல கோப்பைகளை வென்று கொடுத்த ரோகித் சர்மா கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ஹர்திக் பாண்ட்யா மும்பை அணியின் புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்டார்.

    நடப்பு ஐ.பி.எல். தொடரில் ஹர்திக் பாண்ட்யா தலைமையில் விளையாடி வரும் மும்பை இந்தியன்ஸ் அணி முதல் 3 போட்டிகளில் தொடர்ச்சியாக தோல்வியை தழுவியது. ஆனால் அதற்கு அடுத்த 2 போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று வெற்றி பாதைக்கு அணி திரும்பியுள்ளது.

    ஆனால் தோல்வியடைந்த முதல் 3 போட்டிகளில் முழுமையாக பந்துவீசிய ஹர்திக் பாண்ட்யா அடுத்தடுத்த 2 போட்டிகளில் குறைவான ஓவர்கள் மட்டுமே பந்துவீசி வருவதை பற்றி நியூசிலாந்து அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சைமன் டவுல் கருத்து தெரிவித்துள்ளார்.

    இது குறித்து பேசிய அவர், "இப்படி, ஒரு போட்டியில் அதிக ஓவர் வீசிவிட்டு, அடுத்த போட்டியில் பந்து வீசவில்லை என்றால், அவர் காயம் அடைந்துள்ளார். அவரிடம் ஏதோ தவறு இருக்கிறது. அவர் அதை ஒப்புக்கொள்ளவில்லை. ஆனால், அவரிடம் ஏதோ தவறு இருப்பது உறுதி. அது என் உள்ளுணர்வு" என்று தெரிவித்துள்ளார்.

    டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நடைபெற இருக்கும் நிலையில், அவருக்கு கடுமையான காயம் ஏற்படாமல் தடுப்பதற்காகவே ஹர்திக் பாண்ட்யா பந்து வீசுவதை குறைக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

    ஏற்கனவே ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் பந்து வீசும் போது ஹர்திக் பாண்ட்யாவிற்கு காலில் காயம் ஏற்பட்ட நிலையில், உலகக் கோப்பை தொடரிலிருந்து விலகினார். அதன் பிறகு ஆஸ்திரேலியா டி20 தொடர், தென் ஆப்பிரிக்கா டெஸ்ட், ஒருநாள் கிரிக்கெட் மற்றும் டி20 தொடர், ஆப்கானிஸ்தான் டி20 தொடர், இங்கிலாந்து டெஸ்ட் தொடர் என்று எந்த தொடரிலும் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • ரன் சேசிங்கில் ரோகித், இஷான் கிஷன் பேட்டிங் செய்த விதம், ஆட்டத்தை முன் கூட்டியே முடிப்பது எங்களுக்கு முக்கியமானதாக இருந்தது.
    • மும்பை அணியில் பும்ரா இருப்பது எனது அதிர்ஷ்டம். நான் அவரிடம் கேட்கும் ஒவ்வொரு முறையும் அவர் விக்கெட்டுகளைப் எடுத்து தருகிறார்.

    மும்பை:

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று மும்பையில் நடந்த 25-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் தோற்கடித்தது. முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 196 ரன்கள் எடுத்தது. கேப்டன் டு பிளிசிஸ் 61 ரன்னும், படிதார் 50 ரன்னும், தினேஷ் கார்த்திக் 53 ரன்னும் எடுத்தனர். மும்பை தரப்பில் பும்ரா 5 விக்கெட் வீழ்த்தினார்.

    பின்னர் விளையாடிய மும்பை, 15.3 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 199 ரன்கள் எடுத்து வென்றது. தொடர்ந்து இஷான் கிஷன் 69 ரன்னும், ரோகித் சர்மா 38 ரன்னும், சூர்ய குமார் யாதவ் 52 ரன்னும் எடுத்தனர்.

    வெற்றி குறித்து மும்பை கேப்டன் ஹர்திக் பாண்ட்யா கூறியதாவது:-

    வெற்றி பெறுவது எப்போதும் அற்புதமானது. நாங்கள் வெற்றி பெற்ற விதம் சிறப்பாக இருந்தது. இம்பாக்ட் பிளேயர் விதியால் கூடுதல் பந்து வீச்சாளரைப் பயன்படுத்த முடிகிறது. இது எனக்கு கூடுதல் பயனை அளித்தது. ரன் சேசிங்கில் ரோகித் சர்மா, இஷான் கிஷன் பேட்டிங் செய்த விதம், ஆட்டத்தை முன் கூட்டியே முடிப்பது எங்களுக்கு முக்கியமானதாக இருந்தது.

    இந்த ஆடுகளத்தில் இலக்கு குறைவாக இருந்ததால், ரன் ரேட்டை உயர்த்த நினைத்தோம். மும்பை அணியில் பும்ரா இருப்பது எனது அதிர்ஷ்டம். நான் அவரிடம் கேட்கும் ஒவ்வொரு முறையும் அவர் விக்கெட்டுகளைப் எடுத்து தருகிறார். அவருக்கு அனுபவமும் நம்பிக்கையும் அதிகம். பெங்களூரு கேப்டன் டு பிளிசிஸ் சில இடங்களில் பந்தை அடித்தார். அது போன்று வேறு வீரர்கள் அடித்து நான் பார்த்ததில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பெங்களூரு கேப்டன் டு பிபெலிசிஸ் கூறும்போது, ஆட்டத்தில் பனி ஒரு பெரிய பங்கை வகிக்கும் என்று எங்களுக்குத் தெரியும். எங்களுக்கு 215-220 ரன்கள் தேவைப்பட்டது. 190 ரன் போதுமானதாக இல்லை. பனி படிந்தவுடன் மிகவும் கடினமாக இருந்தது. பந்தை பலமுறை மாற்றினோம். மும்பை அணி வீரர்கள் எங்கள் பந்துவீச்சாளர்களை நிறைய தவறுகளைச் செய்ய வைத்தார்கள். முக்கியமான கட்டங்களில் முக்கிய விக்கெட்டுகளை இழந்தோம். பும்ரா சிறப்பாக பந்து வீசினார். மலிங்கா போன்ற ஒருவர் 20 ஓவர் கிரிக்கெட டில் சிறந்த பந்துவீச்சாளராக இருந்தார். அதை தற்போது பும்ரா வைத்துள்ளார் என்றார்.

    மும்பை அணி 2-வது வெற்றியை பெற்றது. பெங்களூரு 5-வது தோல்வியை சந்தித்தது.

    • அதிரடியாக விளையாடிய தினேஷ் கார்த்திக் 23 பந்தில் அரை சதம் அடித்து அசத்தினார்.
    • தினேஷ் கார்த்திக் களத்தில் பேட்டிங் செய்த போது மும்பை இந்தியன்ஸ் வீரர் ரோகித் சர்மா அவரை கிண்டலடித்தார்.

    மும்பை:

    ஐபிஎல் தொடரில் நேற்றிரவு நடந்த 25-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற மும்பை பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி களமிறங்கிய பெங்களூரு அணி தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. கோலி 3 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த வில் ஜாக் 8 ரன்கள் என வெளியேறினர். அதனை தொடர்ந்து டுபிளிசிஸ் மற்றும் பட்டித்தார் ஆகிய இருவரும் அரை சதம் விளாசி ஸ்கோரை கணிசமாக உயர்த்தினர்.

    இறுதியில் அதிரடியாக விளையாடிய தினேஷ் கார்த்திக் 23 பந்தில் அரை சதம் அடித்து அசத்தினார். இதனால் ஆர்சிபி அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுக்கு 196 ரன்கள் சேர்த்தது. இதனையடுத்து களமிறங்கிய மும்பை அணி 15.3 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 199 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    முன்னதாக தினேஷ் கார்த்திக் களத்தில் பேட்டிங் செய்த போது மும்பை இந்தியன்ஸ் வீரர் ரோகித் சர்மா அவரை கிண்டலடித்தார். அந்த வீடியோவில் சிலிப்பில் நின்று கொண்டிருந்த ரோகித் அதிரடியாக விளையாடி கொண்டிருந்த தினேஷ் கார்த்திக்கை சபாஷ் டிகே, உலகக் கோப்பை அணியில் உன்னை சேர்த்திடலாம் என கிண்டலடித்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    களத்தில் ரோகித் சர்மா இதுபோன்று நிறைய பேரை கிண்டலடித்துள்ளார். அது தொடர்பான வீடியோ டிரெண்டாகும். அந்த வகையில் இந்த வீடியோவும் டிரெண்டாகி வருகிறது. உலகக் கோப்பை தொடரில் தினேஷ் கார்த்திக்கை செல்லமாக ரோகித் சர்மா திட்டுவது அந்த நாட்களில் வைரலானது.



    • இந்த போட்டியில் நடுவர்கள் மும்பை அணிக்கு சாதகமாக வழங்கிய முடிவுகள் ரசிகர்களை அதிருப்தியில் ஆழ்த்தியது.
    • மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மட்டும் 12 வீரர்கள் களத்தில் விளையாடுவதாக ரசிகர்கள் கிண்டல் செய்வது வழக்கம்.

    மும்பை:

    ஐபிஎல் தொடரில் நேற்றிரவு நடந்த 25-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற மும்பை பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி களமிறங்கிய பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுக்கு 196 ரன்கள் சேர்த்தது. இதனையடுத்து களமிறங்கிய மும்பை அணி 15.3 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 199 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இந்த போட்டியில் நடுவர்கள் மும்பை அணிக்கு சாதகமாக வழங்கிய முடிவுகள் ரசிகர்களை அதிருப்தியில் ஆழ்த்தியது.

    மும்பை இந்தியன்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகள் மோதும் போட்டியில், நடுவர்கள் சர்ச்சைக்குரிய முடிவுகளை வழங்குவது தொடர்கதையாகவே இருந்துவருகிறது. ஐபிஎல்லில் இந்த இரண்டு அணிகளுக்கு இடையே முட்டிய நோ-பால் சர்ச்சை தான், சர்வதேச அளவ் டி20 போட்டிகளில் கூட முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தியது.

    2019-ம் ஆண்டு மும்பை மற்றும் ஆர்சிபி அணிகள் மோதிய போட்டியில் கடைசி 1 பந்துக்கு 7 ரன்கள் அடிக்கவேண்டிய இடத்தில், லசித் மலிங்கா கடைசி பந்தை நோ-பாலாக வீசியும் நோ-பால் வழங்கப்படாமல் போட்டியில் மும்பை அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெறும். பவுலிங் லைனை தாண்டி வந்து மலிங்கா பந்தைவீசியது ரீப்ளேவில் எளிதாகவே தெரிந்தது. ஆனால் அதை நடுவர் ஏன் நோ-பாலாக வழங்கவில்லை என்ற சர்ச்சை அப்போது பெரிதாக வெடித்தது.

    அப்போது தொடங்கிய நடுவர்கள் சர்ச்சையானது, நேற்றைய ஆர்சிபி மற்றும் மும்பை இந்தியன்ஸ் போட்டியிலும் பெரிதாக வெடித்தது. நேற்றைய போட்டியில் நடுவர்களின் மோசமான முடிவுகளை பார்த்த ரசிகர்கள் "Umpires Indians" என்ற ஹேஷ்டேக்கை எக்ஸ் தளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

     

    நேற்றைய போட்டியில் மும்பை அணிக்கு சாதகமாக நடுவர்கள் அளிக்கப்பட்ட முடிவுகள்:-

    தினேஷ் கார்த்திக்கு எதிராக நோ-பால் வழங்காமல் விட்டது. பவுண்டரி லைனில் பீல்டிங் செய்த மத்வால் பந்தை பிடிக்கும்போது பவுண்டரி லைனில் டச் செய்ததை பார்க்காமல் 1 ரன் வழங்கியது.

    மும்பை அணிக்கு இருந்த ரிவியூ தீர்ந்தபிறகும் களநடுவர் நாட்-அவுட் கொடுத்த பிறகும் மும்பை அணிக்காக ரிவியூ எடுக்கப்பட்டது. ஒயிடு இல்லாத பந்துக்கு ஆர்சிபி அணிக்கு ஒயிடு வழங்கியது. 

    என நடுவர்கள் வழங்கிய பல முடிவுகள் சர்ச்சையாக மாறி போட்டியின் முடிவில் பெரிய பங்காற்றின. அதைப்பார்த்த ரசிகர்கள் "Umpires Indians" என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து மும்பை இந்தியன்ஸ் அணியை ட்ரோல் செய்து வருகின்றனர்.

    முன்னதாக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மட்டும் 12 வீரர்கள் களத்தில் விளையாடுவதாக ரசிகர்கள் கிண்டல் செய்வதை வழக்கமாக கொண்டிருக்கும் நிலையில் இந்த சம்பவம் அதை உண்மையாக்கும் வகையில் உள்ளது.

    • ஆகாஷ் தீப் மற்றும் வில் ஜாக்ஸ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
    • சூர்யகுமார் யாதவ் 52 ரன்களை குவித்தார்.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் 25-ஆவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் பேட்டிங்கை துவங்கிய பெங்களூரு அணிக்கு விராட் கோலி 3 ரன்களுக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். அடுத்து வந்த வில் ஜாக்ஸ் 8 ரன்களில் நடையை கட்டினார். துவக்க வீரராக களமிறங்கிய பாப் டு பிளெசிஸ் 40 பந்துகளில் 61 ரன்களை விளாச, அடுத்து வந்த ராஜத் பட்டிதர் 26 பந்துகளில் 50 ரன்களை விளாசினார்.

    போட்டி முடிவில் பெங்களூரு அணி 8 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்களை குவித்தது. பெங்களூரு சார்பில் தினேஷ் கார்த்திக் 53 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். மும்பை சார்பில் சிறப்பாக பந்துவீசிய பும்ரா ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றினார். கோட்சீ, ஆகாஷ், ஸ்ரேயஸ் கோபால் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    197 ரன்களை துரத்திய மும்பை அணிக்கு துவக்க வீரர்களான இஷான் கிஷன் மற்றும் ரோகித் சர்மா நல்ல துவக்கம் கொடுத்தனர். இஷான் கிஷன் 34 பந்துகளில் 69 ரன்களையும், ரோகித் சர்மா 24 பந்துகளில் 38 ரன்களையும் குவித்தனர். அடுத்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஒருபக்கம் கேப்டன் ஹர்திக் பாண்டியா சிறப்பாக ஆடினார்.

    சூர்யகுமார் யாதவ் 52 ரன்களில் ஆட்டமிழக்க ஹர்திக் பாண்டியா 6 பந்துகளில் 21 ரன்களை குவித்தார். மும்பை அணி 15.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து வெற்றி இலக்கை எட்டியது. இதன் மூலம் மும்பை அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பெங்களூரு அணி சார்பில் ஆகாஷ் தீப், விஜய்குமார் வைசாக் மற்றும் வில் ஜாக்ஸ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    • ராஜத் பட்டிதர் 26 பந்துகளில் 50 ரன்களை விளாசினார்.
    • பும்ரா ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் 25-ஆவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் பேட்டிங்கை துவங்கிய பெங்களூரு அணிக்கு விராட் கோலி 3 ரன்களுக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். அடுத்து வந்த வில் ஜாக்ஸ் 8 ரன்களில் நடையை கட்டினார். துவக்க வீரராக களமிறங்கிய பாப் டு பிளெசிஸ் 40 பந்துகளில் 61 ரன்களை விளாச, அடுத்து வந்த ராஜத் பட்டிதர் 26 பந்துகளில் 50 ரன்களை விளாசினார்.


     

    இதன் மூலம் பெங்களூரு அணி சரிவில் இருந்து மீண்டது. போட்டி முடிவில் பெங்களூரு அணி 8 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்களை குவித்தது. பெங்களூரு சார்பில் தினேஷ் கார்த்திக் 53 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

    மும்பை சார்பில் சிறப்பாக பந்துவீசிய பும்ரா ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றினார். கோட்சீ, ஆகாஷ், ஸ்ரேயஸ் கோபால் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். 

    • மும்பை அணி விளையாடிய முதல் மூன்று போட்டிகளில் தோல்வியை சந்தித்தது.
    • ஐந்து போட்டிகளில் ஒரே ஒரு வெற்றியை மட்டுமே பெற்றுள்ளது.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் 25-ஆவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.

    முன்னதாக மும்பை அணி விளையாடிய முதல் மூன்று போட்டிகளில் தோல்வியை சந்தித்தது. நான்காவது போட்டியில் வெற்றி பெற்றது. பெங்களூரு அணி இதுவரை விளையாடிய ஐந்து போட்டிகளில் ஒரே ஒரு வெற்றியை மட்டுமே பெற்றுள்ளது.

    இரு அணிகளும் அதிக தோல்விகளை சந்தித்துள்ள நிலையில், இன்றைய போட்டியில் வெற்றி பெறும் முனைப்பில் களமிறங்குகின்றன. 

    ×