என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Monkey"
- கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் சேட்டை செய்து வரும் குரங்குகள் அங்கிருந்து வெளியேறி மலைஅடிவார பகுதியில் சுற்றி திரிந்தது.
- சென்னிமலை கடை வீதிக்குள் நுழைந்து குரங்குகள் பழம், பன் உள்ளிட்டவற்றை தூக்கிக்கொண்டு ஓடி விடுகிறது.
சென்னிமலை:
ஈரோடு மாவட்டம் சென்னிமலை முருகன் கோவில் மலைப்பகுதியில ஏராளமான குரங்குகள் உள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் சேட்டை செய்து வரும் குரங்குகள் அங்கிருந்து வெளியேறி மலைஅடிவார பகுதியில் சுற்றி திரிந்தது.
அடிவாரப் பகுதியில் சுற்றி திரிந்த குரங்கு கூட்டம் கடந்த சில நாட்களாக அங்கிருந்து வெளியேறி சென்னிமலை நகருக்குள் நுழைந்து விட்டது. தினமும் குரங்கு கூட்டம் வீடுகளுக்கு படையெடுத்து வருகிறது.
வீடுகளின் ஜன்னல் திறந்து இருந்தால் உள்ளே நுழைந்து உணவுப் பொருட்களை எடுத்து சென்று விடுகிறது. மேலும் வெயிலில் காயவைக்கும் உணவுப் பொருட்களையும் எடுத்து சென்று விடுகிறது.
அதோடு இல்லாமல் சென்னிமலை கடை வீதிக்குள் நுழைந்து பழம், பன் உள்ளிட்டவற்றை தூக்கிக்கொண்டு ஓடி விடுகிறது. ஒரே நேரத்தில் 15-க்கும் மேற்பட்ட குரங்குகள் சுற்றி திரிந்து வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இதேபோல் சென்னிமலை நகருக்குள் குரங்கு கூட்டம் நுழைந்து அட்டகாசம் செய்து வந்தது. இதையடுத்து வனத்துறையினர் குரங்குகளை பிடித்து சத்தியமங்கலம் வனப்பகுதியில் விட்டனர். இந்த நிலையில் மீண்டும் தற்போது குரங்கு தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
உணவுப் பொருட்களை எடுத்து செல்லும் குரங்குகள் தாக்கி விடுமோ என்ற அச்சமும் உள்ளது. எனவே வனத்துறையினர் கூண்டு வைத்து இந்த குரங்குகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- புதுவை சாரம் பகுதியில் கடந்த ஒரு வாரமாக குரங்கு ஒன்று சுற்றி திரிகிறது.
- குரங்கு அதே பகுதியில் சுற்றி திரிவதால் கூண்டு வைத்து பிடித்து சிகிச்சை அளிக்க திட்டமிட்டுள்ளனர்.
புதுச்சேரி:
புதுவை சாரம் பகுதியில் கடந்த ஒரு வாரமாக குரங்கு ஒன்று சுற்றி திரிகிறது.
அதன் 2 கைகளிலும் வெட்டு காயங்கள் காணப்படுகிறது. இந்த குரங்கை அப்பகுதி மக்கள் அனுதாபத்துடன் பார்த்து உணவு வழங்கி வருகின்றனர். இது தொடர்பாக வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறையினர் குரங்குக்கு பழத்தில் மயக்க மருந்து கொடுத்து பிடிக்க முயற்சித்தனர்.
ஆனால் குரங்கு மருந்து இருப்பதை அறிந்து பழத்தை தூக்கி எறிந்து விட்டது. குரங்கு அதே பகுதியில் சுற்றி திரிவதால் கூண்டு வைத்து பிடித்து சிகிச்சை அளிக்க திட்டமிட்டுள்ளனர்.
- அறுவடைக்கு தயாராக உள்ள இளநீர், தேங்காய்கள், குரும்பைகளை குரங்குகள் கடித்தும் பறித்தும் சேதப்படுத்துகின்றன.
- குரங்குகளிடம் இருந்து தேங்காய்களை பாதுகாப்பது தென்னை விவசாயிகளுக்கு பெரும் சவாலாக இருக்கிறது.
சிங்கம்புணரி:
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகாவில் சுமார் 1,600 ஏக்கர் பரப்பளவில் தென்னை விவசாயம் செய்யப்படுகிறது. தென்னை வளர்க்கும் விவசாயிகள் சிலர் பருவமழையை நம்பி மானாவாரியாகவும், மற்ற விவசாயிகள் கிணற்று பாசனத்திலும் தென்னை மரங்களை வளர்த்து வருகின்றனர்.
இங்கு மலைபகுதிகளும், வனப்பகுதிகளும் அதிகம் உள்ளதால் குரங்குகள் ஏராளமாக இருக்கிறது. அவை உணவு தேடி கிராம பகுதிகளுக்குள் வந்து விடுகிறது. அங்குள்ள வயல் மற்றும் தோட்டங்களில் பயிரிடப்பட்டுள்ள பழங்கள், தேங்காய் உள்ளிட்டவைகளை சேதப்படுத்துகிறது.
பிரான்மலை வனப்பகுதியில் ஏராளமான குரங்குகள் மற்றும் அணில்கள் இந்த தென்னை மரத்தை தேடி வந்து தென்னை மரத்தில் ஏறி அறுவடைக்கு தயாராக உள்ள இளநீர், தேங்காய்கள், குரும்பைகளை கடித்தும் பறித்தும் சேதப்படுத்தி, அதில் உள்ள தண்ணீரை குடித்தும் விடுகிறது.
இதனால் தென்னை விவசாயிகளுக்கு அதிக நஷ்டம் ஏற்படுகிறது. குரங்குகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருப்பதால், அவைகளிடம்இருந்து தேங்காய்களை பாதுகாப்பது தென்னை விவசாயிகளுக்கு பெரும் சவாலாக இருக்கிறது.
இந்த பகுதியில் உள்ள விவசாயிகள் முதலில் ஒரு சில மரங்களில் முள்வேலி அமைத்து பார்த்தனர். அதை குரங்குகள் லாவகமாக அகற்றிவிட்டு மேலே ஏறி சென்று தேங்காய்களை சேதப்படுத்தின. இதனால் விவசாயிகள் தற்போது வித்தியாசமாக புதிய முயற்சியில் இறங்கி உள்ளனர்.
பாம்பை கண்டால் படையும் நடுங்கும் என்ற பழமொழிக்கு ஏற்ப, பாம்பு நெளிவது போன்ற ஓவியத்தை தனித்தனியாக ஒவ்வொரு தென்னை மரத்திலும் பெயிண்டு மூலம் வரைந்துள்ளனர். இந்த ஓவியத்தை காணும் குரங்குகள் மற்றும் அணில்கள் தென்னை மரத்தில் நிஜபாம்புதான் இருக்கிறது என நினைத்து பயந்துபோய் மரத்தில் ஏறாமல் அங்கிருந்து சென்று விடுவதாக கூறப்படுகிறது.
இதுபற்றி ஒடுவன்பட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி வீரனன் கூறியதாவது:-
இந்த பகுதியில் குரங்குகள் அதிகமான அளவில் தொந்தரவு செய்து தேங்காய் விளைச்சலில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குரங்குகள் தென்னை மரத்தின் மீது ஏறி குறும்பைகள், இளநீர் காய்கள் மற்றும் பூக்களை சேதப்படுத்துவதால் தென்னை மரத்தில் அதிக விளைச்சல் காண முடியவில்லை.
குரங்குகளுக்கு பாம்பு என்றால் பயம் என்று பெரியவர்கள் சொல்லி கேள்விப்பட்டுள்ளேன். அதை மனதில் வைத்து எனக்கு சொந்தமான இடத்தில் உள்ள தென்னை மரங்களில் பாம்பு படம் வரைந்துள்ளேன். தென்னை மரங்களில் பாம்பு படம் வரைந்ததால் இந்த படத்தை பார்த்த குரங்குகள் நிஜ பாம்பு என்று பயந்து மரத்தில் ஏறுவதில்லை. இதனால் எனக்கு தென்னை விவசாயத்தில் சரியான மகசூல் கிடைத்து வருகிறது.
இளநீர் மற்றும் தேங்காய்களை பறித்து குரங்குகள் அட்டகாசம் செய்தால் பாம்பு ஓவியத்தை தென்னை மரத்தில் விவசாயிகள் அனைவரும் வரைந்து பயன்பெறலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- குரங்கை வாழைப்பழம் கொடுத்து பிடித்து, உடுமலை சின்னாறு வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டார்.
- குரங்கை பிடித்த வனத்துறையினருக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.
பல்லடம் :
பல்லடம் அருகே உள்ள கரைப்புதூர் ஊராட்சி அவரப்பாளையம் பகுதியில் காட்டில் இருந்து வழிதவறிய குரங்கு ஓன்று அந்தப்பகுதியில் சுற்றி திரிந்து கொண்டு பொதுமக்களை அச்சுறுத்தி வந்தது. இது குறித்து பல்லடம் பா.ஜ.க. வடக்கு ஒன்றிய தலைவர் பூபாலன் திருப்பூர் வனச்சரக அலுவலர் சுரேஷ்கிருஷ்ணனிடம் தகவல் தெரிவித்தார். அவரது அறிவுறுத்தலின்படி வனச்சரகப் பணியாளர் மணிகண்டன் அவரப்பாளையம் வந்து குரங்கை தேடி கண்டு பிடித்தார். அந்த குரங்கை வாழைப்பழம் கொடுத்து பிடித்து, உடுமலை சின்னாறு வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டார். குரங்கை பிடித்த வனத்துறையினருக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.
- வகுப்பறையின் பின்வரிசையில் அந்த குரங்கு சாதாரணமாக அமர்கிறது.
- பள்ளியில் இணைந்த புதிய மாணவர் என டுவிட்டர் பதிவு.
ஹசாரிபாக்:
ஜார்கண்ட் மாநிலம் ஹசாரிபாக் நகரில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் மாணவர்களுடன் அமர்ந்து ஆசிரியர் பாடம் நடத்துவதை கவனிக்கும் குரங்கு குறித்து வீடியோ சமூக வளைதளங்களில் வைரலாகி உள்ளது. இந்த சம்பவம் எப்போது நடந்தது என்பது குறித்த தகவல் வெளியாக வில்லை.
மாணவர்கள் நிறைந்த வகுப்பறைக்குள் நுழையும் அந்த குரங்கு பின்வரிசையில் சாதாரணமாக அமர்க்கிறது. அதை பொருட்படுத்தாமல் அந்த வகுப்பு ஆசிரியர் பாடங்களை தொடர்ந்து நடத்திக் கொண்டிருப்பது வீடியோவில் இடம் பெற்றுள்ளது.
அரசுப் பள்ளியில் மாணவர்களுடன் காட்டு லங்கூர் பாடம் படிக்கிறார் என்ற தலைப்பில் அந்த வீடியோ இடம் பெற்றுள்ளது. ஒரு வகுப்பில் முன் வரிசையில் குரங்கு அமர்ந்திருப்பது குறித்த புகைப்படமும் இணையதளத்தில் வெளியாகியது. பள்ளியில் இணைந்த புதிய மாணவர் என்று இது குறித்து டுவிட்டர் பதிவில் குறிப்பிடப்பட்டது.
முன்னதாக சில குரங்குகள் இணைந்து மொபைல் போனைப் பயன்படுத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி 18 லட்சம் பாரவையாளர்களையும் ஆயிரக்கணக்கான விருப்பங்களை பெற்றுள்ளது. குரங்குகளும் ஸ்மார்ட்போன்களுக்கு அடிமையாகி விட்டதாக சிலர் கருத்து தெரிவித்திருந்தனர்.
- தாய் குரங்கு லாரியில் அடிபட்டு காயமடைந்து துடிப்பதை கண்ட குட்டி குரங்கு அதன் அருகே சென்று தாயின் மீது தனது கைகளை வைத்துக் கொண்டு கண்ணீர் விட்டு அழுது கொண்டு இருந்தது.
- அந்த வழியாக சென்றவர்கள் பரிதாபப்பட்டனர். ஆனால் குரங்குக்கு உதவி செய்ய யாரும் முன் வரவில்லை.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம் கரீம் நகர், சிதுரு மாமுடி மண்டலம், முனுக்களூர் சாலையோரம் தாய் குரங்கு ஒன்று தனது குட்டியுடன் அங்குள்ள மரங்களில் விளையாடிக் கொண்டு இருந்தது. தாய் குரங்கு தனது குட்டியுடன் சாலையை கடக்க வேகமாக ஓடியது.
அப்போது வேகமாக வந்த லாரி ஒன்று சாலையை கடக்க முயன்ற தாய் குரங்கு மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட தாய் குரங்கு படுகாயம் அடைந்து வலியால் துடித்தது.
தாய் குரங்கு லாரியில் அடிபட்டு காயமடைந்து துடிப்பதை கண்ட குட்டி குரங்கு அதன் அருகே சென்று தாயின் மீது தனது கைகளை வைத்துக் கொண்டு கண்ணீர் விட்டு அழுது கொண்டு இருந்தது.
அந்த வழியாக சென்றவர்கள் பரிதாபப்பட்டனர். ஆனால் குரங்குக்கு உதவி செய்ய யாரும் முன் வரவில்லை.
அப்போது அந்த வழியாக வந்த வெங்கடேஷ் என்பவர் தாய்க்குரங்கை மீட்டு பால் வாங்கி ஊற்றி அதன் பின்னர் கால்நடை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தார்.
தாய் குரங்கு காயம் அடைந்தது முதல் சிகிச்சை பெறுவது வரை குட்டி குரங்கு அதன் அருகிலேயே கண்ணீர் சிந்திய படி வேதனையுடன் இருந்தது. குட்டி குரங்கின் பாசத்தை கண்டு அனைவரும் வியந்து போயினர்.
சிகிச்சை பெற்று வரும் தாய்குரங்கின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கால்நடை டாக்டர் தெரிவித்துள்ளார்.
- குடியிருப்பு பகுதிகளில் திரியும் குரங்குகளை பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- பைகளை கொண்டு செல்பவர்களை கடிப்பது போல் சென்று பறித்துச் செல்வதும், வாடிக்கையாகி வருகிறது.
மேலூர்
மேலூர் அருகே உள்ள அ. வல்லாளபட்டி பஸ் நிலையம், செட்டியார்பட்டி சண்முகநாதபுரம், அரியப்பன்பட்டி சிலுப்பி பட்டி, முஸ்லிம் தெரு உள்ளிட்ட 7-வது வார்டு முதல் 15-வது வார்டு வரை உள்ள பகுதிகளில் குரங்குகள் தொல்லை அதிகரித்து வருகிறது.
குரங்குகள் வீடுகளில் புகுந்து பொருட்களை தூக்கி செல்வதும், கடைகளில் வெளியே தொங்கும் பொருட்களை எடுத்துச் செல்வதும், பைகளை கொண்டு செல்பவர்களை கடிப்பது போல் சென்று பறித்துச் செல்வதும், வாடிக்கையாகி வருகிறது. குரங்கினால் பொதுமக்கள் படும் அவஸ்தையை கண்டு வல்லாளப்பட்டி பேரூராட்சி சேர்மன் குமரன், மதுரை மாவட்ட வன அலுவலகத்திற்கு சென்று வள்ளாளப்பட்டி பேரூராட்சி பகுதிகளில் திரியும் குரங்குகளை பிடித்து காட்டுப் பகுதியில் விட வேண்டும் என வலியுறுத்தி கோரிக்கை மனு கொடுத்தார்.
அவருடன் தி.மு.க. பேரூர் செயலாளர் கார்த்திகேயன், முன்னாள் பேரூராட்சி துணைத் தலைவர் மோகன் ஆகியோர் சென்றனர்.
- திட்டக்குடியில் தீக்காயத்துடன் உயிருக்கு போராடி குரங்கு அவதிப்பட்டு சுற்றி வருகிறது.
- வனத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட குரங்கை மீட்டு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திட்டக்குடி பெரியார் நகர் பகுதியில் குரங்கு ஒன்று உடலில் தீ காயம் ஏற்பட்டு உயிருக்கு போராடி வருகிறது/ இது குறித்து வனத்துறை அதிகாரிகளிடம் தகவல் கொடுத்து உள்ளனர். அப்பகுதி மக்கள் கூறுகையில் அப்பகுதியில் கடந்த 4 நாட்களாக அந்த குரங்கு தீக்காயங்கள் ஏற்பட்டு மக்கள் வசிக்கும் பகுதியில் அவதிப்பட்டு சுற்றி வருகிறது. இதனைப் பார்க்கும் போது மிகவும் வேதனையாக உள்ளது எனவே வனத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட குரங்கை மீட்டு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
சத்தியமங்கலம்:
சத்தியமங்கலம் அருகே உள்ள புது வட வள்ளி பண்ணாரியம்மன் நகரில் வசித்து வருபவர் ராமலிங்கம் ஓய்வு பெற்ற அரசு ஊழியர். விவசாயி. இவரது வீட்டின் எதிரே கால்நடை துறைக்கு சொந்தமான காலி இடம் உள்ளது. இதில் ஏராளமான மரங்கள் செழித்து வளர்ந்துள்ளன.
அருகே வனப்பகுதி உள்ளதால் அங்கிருந்து ஏராளமான குரங்குகள் இந்த இடத்தில் நமக்கு ஏதாவது உணவு மற்றும் தண்ணீர் கிடைக்குமா? என வந்து செல்லும்.
இதை கண்ட ராமலிங்கம் அந்த குரங்குகளுக்கு உணவு மற்றும் தண்ணீர் கொடுக்க எண்ணினார்.
குரங்குகளுக்கு முதலில் குடிப்பதற்கு தண்ணீர் வழங்கி வந்த ராமலிங்கத்திடம் குரங்குகள் அன்பாக பழக தொடங்கியது. அவரும் குரங்குகளுக்கு தோழனாகி விட்டார்.
தண்ணீர் மட்டும் வழங்கி வந்த ராமலிங்கம் பிறகு தன்னை தே(நா)டி வரும் குரங்குகளுக்கு பழம், கரும்பு போன்ற உணவுகளையும் வழங்கி வருகிறார்.
மேலும் அந்த குரங்குகள் விளையாட ஊஞ்சலும் கட்டி உள்ளார். உணவை ருசித்த குரங்குகள் அந்த ஊஞ்சலில் அமர்ந்து ஆடி உற்சாகமாக விளையாடுகிறது.
தினமும் அங்கு 20 குரங்குகள் வருகிறது. ராமலிங்கம் கொடுக்கும் உணவை சாப்பிட்டு அவரது தோளில் உரிமையுடன் உட்கார்ந்து அவர் ஊட்டும் உணவை சாப்பிடுகிறது.
இந்த அபூர்வ காட்சி தினமும் நடந்து வருகிறது. #monkeys
எகிப்து நாட்டில் நைல் டெல்டா நகரில் செல்லப்பிராணிகளை விற்பனை செய்கிற கடைக்கு பஸ்மா என்ற 25 வயது பெண், கடந்த அக்டோபர் மாதத்தில் ஒரு நாள் சென்றிருந்தார்.
அங்கு அவர் ஒரு குரங்கினைப் பார்த்து ரசித்து அதனுடன் விளையாடினார். அப்போது அவர் சிரித்தவாறே அந்த குரங்கின் பிறப்புறுப்பை சீண்டி, செக்ஸ் தொல்லை கொடுத்தார். இதை அங்கிருந்தவர்கள் வேடிக்கை பார்த்தனர்.
இதை ஒருவர் ரகசியமாக செல்போனில் படம் பிடித்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். 90 விநாடிகள் ஓடிய அந்த வீடியோ, அங்கு தீவிரமாக பரவியது.
அதைத் தொடர்ந்து அந்தப் பெண் கைது செய்யப்பட்டார். அவர் மீது மன்சூரா நகர கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. விசாரணையின்போது அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, பஸ்மா மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதாக கூறி, அவருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தார். #Egypt #Monkey #Women
வந்தவாசி:
வந்தவாசி நகராட்சி அலுவலகத்தில் 3 வது வார்டு 5 வது குறுக்கு தெரு பொதுமக்கள் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-
வந்தவாசி நகராட்சிக்குட்பட்ட 3-வது வார்டு 5வது குறுக்கு தெருவில் நிரந்தரமாக வசித்துவருகிறோம். எங்களுக்கு குடும்ப அட்டையும், வாக்காளர் அட்டையும் உள்ளது. கடந்த 6 மாத காலமாக குரங்குகள் மற்றும் நாய்கள் தொல்லைகள் அதிகமாக உள்ளது.
இதனை நேரிடையாக பார்வையிட்டு எங்களுக்கு குரங்குகள், மற்றும் நாய்கள் தொல்லையிலிருந்து விடுவித்து உதவிடுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்