search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீக்காயம்"

    • சோம சமுத்திரத்தை சேர்ந்தவர் மாதவன்.
    • பூஜை அறையில் விளக்கு ஏற்றினார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த சோம சமுத்திரத்தை சேர்ந்தவர் மாதவன். இவரது மகள் சாதனா (வயது 11). செஞ்சியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த ஜனவரி 27-ந் தேதி சாதனா வீட்டில் பூஜை அறையில் விளக்கு ஏற்றிய போது அவரது பாவாடையில் தீப்பிடித்துக் கொண்டது. இதனால் உடலில் தீக்காயம் ஏற்பட்ட நிலைமையில் அவரை செஞ்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து முதல் உதவி சிகிச்சை அளித்து பின்னர் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு மருத்துவ மனையில் அனுமதித்தனர்.

    அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதித்து அங்கு சிகிச்சை பலனின்றி மூன்றரை மாதங்களுக்குப் பிறகு அவர் பரிதாபமாக இறந்து போனார். இது குறித்து புகாரின் பேரில் அனந்தபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மின்சாரம் தாக்கி தீக்காயம் அடைந்த வாலிபருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    • அப்போது அவர் உற்சாக மிகுதியால் ரெயில் என்ஜின் மீது ஏறி கொடியுடன் நின்ற போது மின்சாரம் தாக்கி படுகாயமடைந்தார்.

    மதுரை

    ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதில் கலந்து கொள்வதற்காக 20 பேர் தேவகோட்டைக்கு வந்தனர். அவர்கள் ரெயில் என்ஜின் மீது ஏறி கொடியுடன் கோஷம் போட்டனர். இதில் பனிப்புலான்வயல் பகுதியைச் சேர்ந்த முகேஷ் (18) என்பவர் மீது உயர் அழுத்த மின்சாரம் தாக்கியது.

    தீ காயங்களுடன் அவர் பரமக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அனுப்பானடியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். முகேசுக்கு 50 சதவீத தீக்காயங்கள் உள்ளன. உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடும் வாலிபருக்கு டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். முகேஷ் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ்- டூ படித்து வருகிறார். நேற்று விடுமுறை என்பதால் அவர் பள்ளிக்கு செல்லவில்லை. நண்பர்களுடன் திருச்சி- ராமேசுவரம் ரெயில் மூலம் பரமக்குடி வந்து உள்ளார்.

    அப்போது அவர் உற்சாக மிகுதியால் ரெயில் என்ஜின் மீது ஏறி கொடியுடன் நின்ற போது மின்சாரம் தாக்கி படுகாயமடைந்தார்.

    • திட்டக்குடியில் தீக்காயத்துடன் உயிருக்கு போராடி குரங்கு அவதிப்பட்டு சுற்றி வருகிறது.
    • வனத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட குரங்கை மீட்டு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    திட்டக்குடி பெரியார் நகர் பகுதியில் குரங்கு ஒன்று உடலில் தீ காயம் ஏற்பட்டு உயிருக்கு போராடி வருகிறது/ இது குறித்து வனத்துறை அதிகாரிகளிடம் தகவல் கொடுத்து உள்ளனர். அப்பகுதி மக்கள் கூறுகையில் அப்பகுதியில் கடந்த 4 நாட்களாக அந்த குரங்கு தீக்காயங்கள் ஏற்பட்டு மக்கள் வசிக்கும் பகுதியில் அவதிப்பட்டு சுற்றி வருகிறது. இதனைப் பார்க்கும் போது மிகவும் வேதனையாக உள்ளது எனவே வனத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட குரங்கை மீட்டு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

    ×