search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "dogs torture"

    காட்பாடி பகுதியில் நாய்கள் தொல்லை அதிகம் உள்ளதால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.

    வேலூர்:

    காட்பாடியில் கல்புதூர், பர்னீஷ்புரம், ஆசிரியர் காலனி விரிவு பகுதி, செங்குட்டை ஆகிய பகுதிகளில் தெருநாய்கள் அதிகளவில் கூட்டம், கூட்டமாக சுற்றி வருகின்றன.

    இதனால் பொதுமக்கள், குழந்தைகள் தெருக்களில் நடந்து செல்ல முடியாமல் அச்சத்தில் உள்ளனர். மேலும் வாகனங்களில் பொதுமக்கள் செல்லும் போது நாய்கள் விரட்டி செல்வதாகவும், இதனால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதாகவும் கூறகின்றனர்.

    எனவே மாநகராட்சி ஊழியர்கள் நாய்களை பிடித்து ஆட்கள் நடமாட்டம் இல்லாத வேறு பகுதிகளில் கொண்டு விடும்படி அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    வந்தவாசியில் குரங்கு மற்றும் நாய்கள் தொல்லைகள் அதிகமாக இருப்பதால் தொல்லையிலிருந்து விடுவித்து உதவிடுமாறு நகராட்சியில் பொதுமக்கள் புகார் மனு அளித்துள்ளனர்.

    வந்தவாசி:

    வந்தவாசி நகராட்சி அலுவலகத்தில் 3 வது வார்டு 5 வது குறுக்கு தெரு பொதுமக்கள் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

    வந்தவாசி நகராட்சிக்குட்பட்ட 3-வது வார்டு 5வது குறுக்கு தெருவில் நிரந்தரமாக வசித்துவருகிறோம். எங்களுக்கு குடும்ப அட்டையும், வாக்காளர் அட்டையும் உள்ளது. கடந்த 6 மாத காலமாக குரங்குகள் மற்றும் நாய்கள் தொல்லைகள் அதிகமாக உள்ளது.

    இதனை நேரிடையாக பார்வையிட்டு எங்களுக்கு குரங்குகள், மற்றும் நாய்கள் தொல்லையிலிருந்து விடுவித்து உதவிடுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.

    ×