search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "metro rail"

    • கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் நொய்யல் ஆற்றின் இருபுறமும் சாலை வசதி செய்ய வேண்டும்.
    • கோவை கொடிசியா அரங்கு போல் திருப்பூரில் நிரந்தர வர்த்தக மையம் அமைக்க வேண்டும்.

     திருப்பூர்:

    கோவை மண்டல அளவிலான மாஸ்டர் பிளான்-2047 திட்டம் தயாரிக்கும் பணியை நகர் ஊரமைப்புத்துறை தொடங்கியுள்ளது. கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களுக்கு அறிக்கை தயார் செய்யப்படுகிறது. திட்ட அறிக்கை தயாரிக்கும் முன்பு, திருப்பூர் பனியன் தொழில் அமைப்புகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். அதன்படி திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க அலுவலகத்தில் தொழில்துறையினருடன் கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்துக்கு திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் கே.எம்.சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். நகர் ஊரமைப்புத்துறை உதவி இயக்குனர் புஷ்பராஜ் வரவேற்றார். சைமா சங்க தலைவர் ஈஸ்வரன், நிட்மா தலைவர் அகில் ரத்தினசாமி, திருப்பூர் நகர்ப்புற வளர்ச்சிக்குழு உறுப்பினர் சண்முகராஜ், திருப்பூர் வெற்றி அமைப்பின் தலைவர் சிவராம், டெக்பா சங்க தலைவர் ஸ்ரீகாந்த், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க பொதுச் செயலாளர் திருக்குமரன் உள்ளிட்டோர் பங்கேற்று, திருப்பூரின் எதிர்கால தேவைகள் குறித்து பேசினார்கள்.

    கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் நொய்யல் ஆற்றின் இருபுறமும் சாலை வசதி செய்ய வேண்டும். மெட்ரோ ரெயில் திட்டத்தை திருப்பூர் வரை நீட்டிக்க வேண்டும். கோவை கொடிசியா அரங்கு போல் திருப்பூரில் நிரந்தர வர்த்தக மையம் அமைக்க வேண்டும். திருப்பூரில் உள்ள ரெயில்வே கூட்ஷெட்டை விரைவில் வஞ்சிப்பாளையத்துக்கு மாற்ற வேண்டும். தொழிலாளர்களுக்கு வீட்டுவசதி வேண்டும்.

    விளையாட்டு அரங்கம் பெரிய அளவில் அமைக்க வேண்டும். தூத்துக்குடி துறைமுகத்துக்கு பின்னலாடைகளை எளிதில் கொண்டு செல்லும் வகையில் சாலை வசதிகளை மேம்படுத்த வேண்டும்.

    திருப்பூர் மாநகரை தொழில் நகருக்கு ஏற்ப அடிப்படை கட்டமைப்புகள் அனைத்தையும் செய்து கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

    • பஸ்நிலைய நிழற்குடைகள் அகற்றப்பட்டு சாலையோரத்தில் ஒரு சிறிய இடம் மட்டுமே பஸ்சுக்காக காத்திருக்கும் இடமாக மாறி உள்ளன.
    • தேவையான முன்னேற்பாடுகளை மெட்ரோ ரெயில் நிர்வாகம் செய்து கொடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டப்பணி 116.1 கிலோமீட்டர் நீளத்திற்கு 3 வழித்தடங்களில் நடைபெற்று வருகின்றன. இதில் மாதவரம் பால் பண்ணை முதல் சிறுசேரி சிப்காட் வரை 45.4 கி.மீட்டர், சென்னை கலங்கரை விளக்கம் -பூந்தமல்லி பணிமனை வரை26.1 கி.மீட்டர், மாதவரம்- சோழிங்க நல்லூர் வரை 44.6 கி.மீட்டர் தூரத்திற்கு பணிகள் தொடங்கி வேகமாக நடந்து வருகின்றன. சுரங்கம் தோண்டும் பணியும் நடந்து வருகிறது.

    மெட்ரோ ரெயில் பணிக்காக பல்வேறு இடங்களில் சாலையின் நடுவே தடுப்புகள் அமைக்கப்பட்டு போக்கு வரத்து திருப்பி விடப்பட்டு உள்ளது. இதனால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

    மேலும் மெட்ரோ ரெயில் பணி காரணமாக பல்வேறு பகுதிகளில் பஸ் நிறுத்தங்களில் பயணிகளின் தலைக்கு மேல் உள்ள நிழற்கூரை இல்லாமல் தவித்து வருகின்றனர்.

    ராயப்பேட்டை, வளசரவாக்கம், விருகம்பாக்கம் போன்ற பகுதிகளில் உள்ள பஸ்நிலைய நிழற்குடைகள் அகற்றப் பட்டு சாலையோரத்தில் ஒரு சிறிய இடம் மட்டுமே பஸ்சுக்காக காத்திருக்கும் இடமாக மாறி உள்ளன.

    போரூர் முதல் வடபழனி வரை ஆற்காடு சாலையின் நடுவே பள்ளம் தோண்டப்பட்டு ராட்சத தூண்கள் அமைக்கும் பணி இரவு பகலாக நடந்து வருகிறது. இதனால் சாலையின் நடுவே தடுப்புகள் அமைக்கப்பட்டு ஆற்காடு சாலை ஆங்காங்கே குறுகிய நிலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

    போரூர் தொடங்கி காரம்பாக்கம், லட்சுமி நகர், வளசரவாக்கம், கேசவர்த்தினி, விருகம்பாக்கம், ஆவிச்சி பள்ளி, வடபழனி பஸ் நிலையம் என அடுத்தடுத்து ஆற்காடு சாலையில் பஸ் நிறுத்தங்கள் உள்ளன. இதில் வளசரவாக்கம் மற்றும் ஆழ்வார்திருநகர் ஆகிய இடங்களில் இருந்த பஸ் நிறுத்தம் மெட்ரோ ரெயில் பணிக்காக அகற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து அருகில் தற்காலிக பஸ் நிறுத்தம் என்ற பெயரில் பயணிகள் அமர்வதற்கு கூட வசதி இல்லாமல் கடும் அவதி அடைந்து வருகிறார்கள். பாதுகாப்பு கேள்விக்குறி

    கடந்த மாதம் மழை பெய்த போது பயணிகள் கடும் இன்னல்களை சந்தித்தனர். சாலையோரம் பயணிகள் நிற்கும் இடம் மிகவும் குறுகி உள்ளதால் பஸ்சுக்கு காத்து நிற்கும் பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.

    மேலும் ஆற்காடு சாலையில் உள்ள மற்ற பஸ் நிறுத்தங்களிலும் பஸ்சை நிறுத்தி பயணிகளை ஏற்று வதற்கும் பயணிகள் இறங்கி செல்வதற்கும் சிரமப்பட்டு வருகின்றனர். ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரி அருகே பஸ்நிலைய மேற்கூரை இல்லாததால் பயணிகள் மழையின் போது அருகில் உள்ள மரத்தடியில் தஞ்சம் அடையும் நிலை ஏற்பட்டது. தற்போது வெயிலில் தவித்து வருகிறார்கள்.

    புரசைவாக்கம் கெல்லீஸ் சந்திப்பு பகுதியில் மெட்ரோ ரெயில் பணிக்காக ஏற்கனவே போக்குவரத்து மாற்றி விடப்பட்டு உள்ளது. அயனாவரத்தில் இருந்து புரசைவாக்கம் நோக்கி செல்லும் வாகனங்கள் பால்பர் சாலை வழியாக சுற்றி சென்று வருகின்றன. இதனால் எப்போதும் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

    இந்நிலையில் தற்போது கெல்லீஸ் சந்திப்பு பகுதியில் நடுரோட்டில் தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகிறது. மேலும் புரசைவாக்கத்தில் இருந்து கெல்லீஸ் நோக்கி ஒருவழிப்பாதையில் வரும் வாகனங்களுக்கு அமைக்கப்பட்ட சாலை குண்டும்,குழியுமாக மாறி உள்ளன. சீரமைக்கப்படாத இந்த சாலையில் வாகனங்கள் செல்லவே தடுமாறி வருகின்றன. மேலும் அங்குள்ள பஸ்நிறுத்தமும் மிகவும் மோசமான நிலையில் காணப்படுகிறது.

    எனவே மெட்ரோ ரெயில் பணியின் போது போக்குவரத்துக்கும், பஸ் பயணிகளுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் தேவையான முன்னேற்பாடுகளை மெட்ரோ ரெயில் நிர்வாகம் செய்து கொடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • கவுண்டர்களில் நீண்ட நேரம் காத்து நிற்காமல் உடனே செல்ல வசதியாக டிக்கெட் பெறுவதில் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறது.
    • கேட்டில் கார்டை காண்பிக்கும் போது உள்ளே செல்ல தானாகவே அனுமதி கிடைக்கும்.

    சென்னை:

    சென்னை மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்ய டிக்கெட் எடுப்பதற்கு நீண்ட வரிசையில் நிற்பதை தவிர்க்க பல்வேறு வசதிகளை செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    டிக்கெட் கவுண்டர்களில் கட்டணம் செலுத்தி டோக்கன் பெறுதல், பயண அட்டை, கியூஆர் கோடு மற்றும் வாட்ஸ் அப் மூலம் டிக்கெட் பெற்று செல்லுதல் போன்ற நடைமுறைகள் தற்போது உள்ளன.

    பயணிகள் சிரமமில்லாமல் எளிதாக டிக்கெட் தானியங்கி கேட்டுகளில் செல்ல வசதியாக புதிய தொழில் நுட்பங்கள் கையாளப்படுகின்றன. மெட்ரோ ரெயில்களில் நாளுக்கு நாள் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் கவுண்டர்களில் நீண்ட நேரம் காத்து நிற்காமல் உடனே செல்ல வசதியாக டிக்கெட் பெறுவதில் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறது.

    வார நாட்களில் பயணிகள் அதிகளவில் பயணிக்கிறார்கள். தினமும் பயணம் செய்வோரின் எண்ணிக்கை 3 லட்சத்தை நெருங்குகிறது.

    இந்நிலையில் மெட்ரோ ரெயில் 2ம் கட்ட பணியில் அமைகின்ற ரெயில் நிலையங்களில் மெட்ரோ ரெயில் பயணத்தை மேலும் எளிதாக்கும் வகையில் கூடுதல் வசதிகளை நிர்வாகம் தர இருக்கிறது.

    கவுண்டர்களில் காத்து நின்று டிக்கெட் பெற்று பயணிப்பதற்கு பதிலாக பயணிகள் தங்கள் வங்கி டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டை காண்பித்து பயணம் செய்யும் நவீன தொழில் நுட்பம் கையாளப்போவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மெட்ரோ ரெயில் நிலையங்களில் தானியங்கி டிக்கெட் நுழைவு வாயலில் டெபிட், கிரெடிட் கார்டை காண்பித்தால் போதுமானது. கட்டண தொகை வங்கி கணக்கில் இருந்து எடுத்துக் கொள்வதோடு செல்போனில் இது பற்றிய விவரங்கள் வரும்.

    வங்கி அட்டையை பயன்படுத்தும் முறையில் பயணிகள் காத்து நிற்க தேவையில்லை. கேட்டில் கார்டை காண்பிக்கும் போது உள்ளே செல்ல தானாகவே அனுமதி கிடைக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • திடீரென மின் வினியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டதால் மெட்ரோ ரெயில்களை இயக்க முடியாமல் போனது.
    • விம்கோ நகர் நிலையத்தில் இருந்து சுங்கச்சாவடி நிலையம் வரை ஒரு வழிப்பாதையில் மட்டும் ரெயில்கள் இயக்கப்பட்டன.

    சென்னை:

    சென்னையில் 2 வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. அதிகாலை 5 மணி முதல் இரவு 11.30 மணி வரை இயக்கப்பட்டு வருவதால் பொதுமக்கள் போக்கு வரத்து நெரிசலில் சிக்காமல் நிம்மதியுடன் பயணம் செய்து வருகிறார்கள்.

    இந்நிலையில் இன்று அதிகாலை 5.45 மணியளவில் விம்கோ நகர் மெட்ரோ நிலையம் மற்றும் விம்கோநகர் டெப்போ நிலையம் இடையே மின்வினியோகத்தில் தடை ஏற்பட்டது. இதனால் மெட்ரோ ரெயில்களை இயக்க முடியாத நிலை ஏற்பட்டது.

    விம்கோ நகர் பணிமனை மெட்ரோ நிலையம் தான் கடைசியாகும். திடீரென மின் வினியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டதால் மெட்ரோ ரெயில்களை இயக்க முடியாமல் போனது.

    இதனால் விம்கோ நகர் பணிமனை நிலையம்-விம்கோ நகர் இடையே மெட்ரோ ரெயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

    விம்கோ நகர் நிலையத்தில் இருந்து சுங்கச்சாவடி நிலையம் வரை ஒரு வழிப்பாதையில் மட்டும் ரெயில்கள் இயக்கப்பட்டன. மற்றொரு பாதையில் சேவை நடைபெறாது என மெட்ரோ ரெயில் நிர்வாகம் அறிவித்தது. 18 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் அங்கிருந்து இயக்கப்பட்டன.

    மெட்ரோ ரெயில்கள் காலை அலுவலக நேரங்களில் 10 நிமிடத்திற்கு ஒரு சேவை வீதம் இயக்கப்படும். ஆனால் மின்சார தொழில் நுட்ப கோளாறால் குறைந்த அளவில் அதிக இடை வெளியில் ரெயில்கள் இயக்கப்பட்டன. இதனால் மெட்ரோ ரெயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது.

    விம்கோ நகர் நிலையத்தில் இருந்து திருவொற்றியூர், தேரடி, காலடிப்பேட்டை சுங்கச்சாவடி நிலையம் வரை ஒரு வழிப்பாதையில் ரெயில்கள் இயக்கப்பட்டன.

    இதனால் வட சென்னை பகுதியில் இருந்து சென்ட்ரல், கோயம்பேடு, வடபழனி, அசோக்நகர் மற்றும் தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை, கிண்டி, விமான நிலையம் செல்பவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளானார்கள்.

    இதற்கிடையில் மின் வினியோக கோளாறை சரி செய்யும் பணியில் தொழில் நுட்ப பணியாளர்கள் ஈடுபட்டனர். ஆனாலும் அதனை சரி செய்து இயல்பான சேவையை தொடங்க 4 மணி நேரம் நீடித்தது. காலை 9.30 மணி முதல் போக்குவரத்து சீரானது.

    • டிரைவர் இல்லாமல் இயக்கப்படும் ரெயில்கள் ஆகும்.
    • பயணிகள் பயன்பாட்டிற்கு வருவதற்கு முன்பு ஒரு வருடத்திற்கு விரிவான அளவில் சோதனை ஓட்டங்கள் நடைபெறும்.

    சென்னை:

    சென்னையில் 2-வது கட்ட மெட்ரோ ரெயில் திட்டப்பணிகள் வேகமாக நடந்து வருகிறது. 2-வது கட்ட மெட்ரோ ரெயில் திட்டத்தில் டிரைவர் இல்லாத ரெயில்களை இயக்க மெட்ரோ ரெயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதன் முதல் சேவை 2026-ம் ஆண்டு முதல் தொடங்கப்பட உள்ளது. ஆரம்பத்தில் இந்த ரெயில்களில் கண்காணிப்பு ஊழியர்களை வைத்திருக்க மெட்ரோ ரெயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

    இதுகுறித்து மெட்ரோ ரெயில் அதிகாரிகள் கூறியதாவது:-

    2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டத்தின் கீழ் 3 பெட்டிகள் கொண்ட 138 ரெயில்கள் வாங்கப்படுகிறது. இவை டிரைவர் இல்லாமல் இயக்கப்படும் ரெயில்கள் ஆகும். மாதவரம் - சிப்காட், கலங்கரை விளக்கம்-பூந்தமல்லி, மாதவரம் - சோழிங்கநல்லூர் ஆகிய 3 வழித்தடங்களுக்கு இந்த ரெயில்கள் வாங்கப்படும்.

    இந்த ரெயில்கள், பயணிகள் பயன்பாட்டிற்கு வருவதற்கு முன்பு ஒரு வருடத்திற்கு விரிவான அளவில் சோதனை ஓட்டங்கள் நடைபெறும். ஆனாலும் ஆரம்பத்தில் ஏதேனும் கோளாறு அல்லது பிரச்சினை ஏற்படாமல் கண்காணிக்க ஊழியர்களை வைத்திருப்பது முக்கியம் என நாங்கள் கருதுகிறோம். முதல் 3 ஆண்டுகளில் இந்த ஊழியர்கள் மூலம் ரெயில் ஓட்டத்தை கண்காணிக்க திட்டமிட்டுள்ளோம். ரெயில் பெட்டிகளுக்கான வடிவமைப்புகள் இறுதி செய்யப்பட்டு இன்னும் ஒரு மாதத்தில் தயாராகிவிடும். பூந்தமல்லி - போரூர் இடையே முதலில் இயக்கப்பட உள்ள 26 ரெயில்கள் அடுத்த ஆண்டு மத்தியில் ஒப்படைக்கப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    • நிர்வாகம் ஒரு களஆய்வை நடத்த திட்டமிட்டு செயல்படுத்தி வருகிறது.
    • பயணத்தின்போது ஏதாவது பிரச்சினை உள்ளதா? எனவும் ஆய்வு நடைபெறுகிறது.

    சென்னை:

    சென்னையில் மெட்ரோ ரெயில்களில் தினமும் சராசரியாக 2.5 லட்சம் பேர் பயணம் செய்கிறார்கள். இதில் 30 முதல் 35 சதவீதம் பெண் பயணிகள் பயணிக்கின்றனர்.

    அரசு ஊழியர்கள், தனியார் நிறுவன பணியாளர்கள், அதிகாரிகள், மாணவர்கள் என பலதரப்பட்ட பிரிவினரும் பயணிக்கின்றனர்.

    மெட்ரோ ரெயிலில் பெண்களுக்கு பாதுகாப்பு எப்படி உள்ளது. அதனை மேம்படுத்துவது குறித்து நிர்வாகம் ஒரு களஆய்வை நடத்த திட்டமிட்டு செயல்படுத்தி வருகிறது.

    பெண் பயணிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு எந்த பகுதியில் தேவை, இன்னும் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டுமா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுகுறித்து சென்னையில் மெட்ரோ ரெயில் நிர்வாக அதிகாரிகள் கூறியதாவது:-

    பெண்களின் பாதுகாப்பு குறித்து கடந்த 2 வாரத்திற்கு முன்பு ஆய்வு தொடங்கப்பட்டது. 30 ஆயிரம் பெண்களிடம் பாதுகாப்பு குறித்து கருத்து கேட்கப்படுகிறது. இதுவரையில் 1,500 பேரிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளது. இதுபோன்ற கணக்கெடுப்பு அவசியமானது.

    பெண்களுக்கு தனி பெட்டிகள் உள்ளன. இந்த பெட்டிகளில் பாதுகாப்பு எவ்வாறு உள்ளது. ஆண்கள் அந்த இடங்களை ஆக்கிரமிக்கிறார்களா? ரெயில்கள் மற்றும் ரெயில் நிலைய வளாகங்களில் ராக்கிங், கேலி கிண்டல், துன்புறுத்தல் எதுவும் சந்தித்தீர்களா என்பது குறித்த கேள்வி கேட்கப்படுகிறது.

    பயணத்தின்போது ஏதாவது பிரச்சினை உள்ளதா? எனவும் ஆய்வு நடைபெறுகிறது. பாதுகாப்பு பணியாளர்கள் எந்தெந்த பகுதிக்கு அதிகப்படுத்த வேண்டும்.

    பாதுகாப்பு குறைவான இடங்கள் எவை? என்பது பற்றி பெண்களிடம் கேட்கப்பட்டு அதன் அடிப்படையில் பாதுகாப்பை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இதன்மூலம் பயணிகள் எண்ணிக்கை மேலும் உயரும் என்று நம்புகிறோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • திருமங்கலம் மெட்ரோ ரெயில் நிலைய பயணிகளுக்காக தொடங்கப்பட்டு உள்ளது.
    • ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.25 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

    சென்னை:

    மெட்ரோ ரெயில் பயணிகள் தங்களது இருப்பிடத்தில் இருந்து மெட்ரோ ரெயில் நிலையம் வந்து செல்லவும், மெட்ரோ நிலையத்தில் இருந்து அவர்கள் பணிபுரியும் இடங்களுக்கு செல்லவும் பல்வேறு இணைப்பு சேவைகள் வழங்கப்படுகின்றன. இந்த நிலையில் தற்போது மாநகர போக்குவரத்து கழகத்தின் இணைப்பு மினி பஸ் சேவை மற்றும் ஆட்டோ இணைப்பு சேவை, திருமங்கலம் மெட்ரோ ரெயில் நிலைய பயணிகளுக்காக தொடங்கப்பட்டு உள்ளது.

    இவற்றை மெட்ரோ ரெயில் நிறுவன இயக்குனர் ராஜேஷ் சதுர்வேதி நேற்று தொடங்கி வைத்தார். இதன்மூலம் மெட்ரோ பயணிகள் திருமங்கலம் மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து அருகில் உள்ள இடங்களுக்கு பயணிக்க முடியும். ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.25 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மாநகரப் போக்குவரத்துக்கழக மினி பஸ் திருமங்கலம் மற்றும் கொரட்டூர் வாட்டர் கேனல் சாலை இடையே இயக்கப்படுகிறது.

    • மதுரை மெட்ரோ ரெயில் பணிகள் விரிவான திட்ட அறிக்கை தொடர்பான ஆய்வு தொடங்கியது.
    • மாசி வீதிகளை அதிகாரி சித்திக் பார்வையிட்டார்.

    மதுரை

    ஸ்மார்ட் சிட்டியாக மாறி வரும் மதுரை மாநகரில் ரூ. 8,500 கோடி மதிப்பீட்டில் மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.

    மதுரையில் ஒத்தக்கடை, திருமங்கலத்தை இணைக்கும் வகையில் 31 கிலோ மீட்டர் தொலைவுக்கு, திருமங்க லத்தில் இருந்து தோப்பூர், திருநகர், மதுரை கல்லூரி, காளவாசல், சிம்மக்கல், கோரிப்பாளை யம், கே.புதூர், மாட்டுத்தாவணி, ஐகோர்டு வழியாக ஒத்தக்கடை வரை மெட்ரோ ரெயில் திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்ய ப்பட்டுள்ளது. அதற்கான சாத்திய கூறு ஆய்வுகள் நடத்தப்பட்டு அது தொடர்பான அறிக்கை தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

    இந்தநிலையில் மதுரையில் மெட்ரோ ரெயில் திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை யை தயாரிப்ப தற்கான ஒப்பந்தம் கையெ ழுத்திடப்பட்டது.

    அந்த அறிக்கை ஜூலை 15-ந்தேதி அரசிடம் சமர்பிக்கப்படும் என அதிகாரிகள் தெரி வித்துள்ளனர். விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க சென்னை மெட்ரோ ரெயில் நிறுவ னத்தை அரசு கேட்டுக் கொண்டு உள்ளது.

    சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், மதுரை மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகளை தனியார் நிறுவ னத்திடம் வழங்கி உள்ளது.

    இந்த நிலையில் மெட்ரோ ரெயில் மேலாண் இயக்குனர் சித்திக் மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு அருகில் உள்ள நான்கு மாசி வீதிகளில் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.

    ஏற்கனவே திருமங்கலம் முதல் ஒத்தக்கடை வரை சுமார் 70-க்கும் மேற்பட்ட இடங்களில் மண் பரிசோத னையும், போக்குவரத்து சோதனையும் நடத்தப் பட்டுள்ளது.

    மேலும் நில எடுப்பு நில அளவை உள்ளிட்ட பணி களும் நடைபெற்று உள்ளது. குறிப்பாக அரசு நிலங்கள், பணிகளுக்கு எடுக்கப்பட வேண்டிய நிலங்கள் குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. இதனைத்தொடர்ந்து ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

    மதுரை நகரின் மைய பகுதிகளில் பூமிக்கு அடியில், திருமங்கலத்தையும், ஒத்தக்கடையையும் இணைக்கும் வகையில் அமைய இருக்கும் மதுரை மெட்ரோ ரெயில் திட்டமா னது, மத்திய அரசின் ஒப்புதல் பெறப்பட்டு பன்னாட்டு நிறுவனங்களின் நிதி உதவியுடன் செயல் படுத்தப்படும் என தெரி விக்கப்பட்டுள்ளது.

    • கிரீன்வேஸ் சாலையில் சுரங்கம் தோண்டும் பணிக்காக 4 சுரங்கம் தோண்டும் எந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.
    • அடையாறு ஆற்றின் நீருக்கு அடியில் களிமண் மற்றும் மணலின் கலவை இருப்பதாக சோதனை மூலம் தெரிய வந்துள்ளது.

    சென்னை:

    சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டப் பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன. ரூ.61,843 கோடி செலவில் 3 வழித் தடங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

    இதற்கான வழித்தடம் அமைக்கும் பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன.

    இதில் மாதவரம்-சிப் காட் இடையேயான வழித்தடத்தில் அடையாறு ஆற்றின் கீழே தண்ணீருக்கு அடியில் சுரங்கப்பாதை அமைக்கப்பட உள்ளது. கிரீன் வேஸ் சாலையை அடையாறு பகுதியுடன் இணைக்க இந்த சுரங்கம் அமைக்கப்படுகிறது.

    4 மாதங்களுக்கு முன்பு கிரீன்வேஸ் சாலையில் சுரங்கம் தோண்டும் பணி தொடங்கப்பட்டது. இதற்காக காவேரி எனப்படும் சுரங்கம் தோண்டும் எந்திரம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இனி அடுத்து அடையாறு ஆற்றின் கீழே தண்ணீருக்கு அடியில் சுரங்கம் தோண்டும் பணி விரைவில் தொடங்க உள்ளது. இந்த சவாலான பணியில் ஈடுபட நூற்றுக் கணக்கான ஊழியர்கள் தயாராகி வருகிறார்கள்.

    இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரெயில் அதிகாரிகள் கூறியதாவது:-

    கிரீன்வேஸ் சாலையில் சுரங்கம் தோண்டும் பணிக்காக 4 சுரங்கம் தோண்டும் எந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. இதில் 2 சுரங்கம் தோண்டும் எந்திரங்கள் அடையாறு நோக்கி சுரங்கப்பாதை அமைக்கும் பணியில் ஈடுபடும்.

    மற்ற 2 எந்திரங்கள் மந்தவெளியை நோக்கி சுரங்கப்பாதை அமைக்கும். இதில் காவேரி என்ற எந்திரம் மட்டும் 150 மீட்டர் தூரத்துக்கு அடையாறு ஆற்றின் கீழ் தண்ணீருக்கு அடியில் சுரங்கப்பாதை அமைக்கும் பணியை தொடங்கும். இந்த பணிகள் மிகவும் கடினமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கிரீன்வேஸ் சாலை மற்றும் அடையாறு மெட்ரோ ரெயில் நிலையங்களுக்கு இடையே உள்ள மொத்த தூரம் ஒரு கிலோ மீட்டர் ஆகும்.

    ஆற்றுபடுகையின் மட்டத்தில் பொதுவாக சிறிய மாறுபாடு இருப்பதாலேயே தண்ணீருக்கு அடியில் சுரங்கப்பாதை அமைக்க கடினமாக இருக்கும். அதற்கு ஏற்ப சுரங்கம் தோண்டும் எந்திரத்தில் அழுத்த அளவுகளில் சிறிது மாற்றம் செய்ய வேண்டும்.

    ஆற்றுப்படுகையின் ஆழம் சுமார் 3 முதல் 5 மீட்டர் ஆகும். அதற்கு கீழே 11 முதல் 13 மீட்டர் வரை துளையிட வேண்டும். இதன் மூலம் ரெயில் மட்டம் 18 மீட்டர் ஆக இருக்கும். அதற்கு ஏற்ப கவனமாக அளவிட்டு சுரங்கம் தோண்ட வேண்டும்.

    அடையாறு ஆற்றின் நீருக்கு அடியில் களிமண் மற்றும் மணலின் கலவை இருப்பதாக சோதனை மூலம் தெரிய வந்துள்ளது. சுரங்கப்பாதை தோண்டும் போது இதில் மாறுபாடு காணப்படலாம் என அதற்கும் தயாராக இருக்க வேண்டும். சுரங்கம் தோண்டும் எந்திரம் இன்னும் சில வாரங்களில் ஆற்றுப்படுகையை அடையும்.

    சவாலான சூழ்நிலைகள் காரணமாக இந்த சுரங்கப் பாதை பணிகளை முடிக்க 5 முதல் 6 மாதங்கள் ஆகும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    • பூமிக்கு அடியில் 40 மீட்டர் ஆழத்துக்குள் நடந்த இந்த பணியில் சுமார் 1000 பணியாளர்கள் ஈடுபட்டு இருந்தனர்.
    • சுரங்கம் தோண்டும் பணியில் ஈடுபட்ட ஆனைமலை எந்திரம் அடுத்ததாக அயனாவரம் பகுதியில் சுரங்கம் தோண்ட பயன்படுத்தப்பட உள்ளது.

    சென்னை:

    சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்ட பணிகள் நடந்து வருகிறது. மொத்தம் 116.1 கிலோ மீட்டர் தூரத்துக்கு 3 வழித்தடங்களில் பாதைகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதில் 43 கிலோ மீட்டர் தூரம் சுரங்கப்பாதையில் அமைகிறது.

    அதிலும் மாதவரம்-சிப்காட் தடத்தில் 26.7 கிலோ மீட்டர் தொலைவுக்கு சுரங்கப்பாதை அமைக்கப்படுகிறது.

    இந்த வழித்தடத்தில் முதல் சுரங்கம் தோண்டும் பணியை கடந்த அக்டோபர் மாதம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    மாதவரத்தில் இருந்து வேணுகோபால் நகர் வரை 415 மீட்டர் தூரத்துக்கு சுரங்கம் தோண்டும் பணியை 'ஆனைமலை' என்று பெயரிடப்பட்ட எந்திரம் தொடங்கியது.

    பூமிக்கு அடியில் 40 மீட்டர் ஆழத்துக்குள் நடந்த இந்த பணியில் சுமார் 1000 பணியாளர்கள் ஈடுபட்டு இருந்தனர்.

    கடந்த 4 மாதங்களாக பூமிக்கு அடியில் சுரங்கம் தோண்டப்பட்டது. 415 மீட்டர் தூரத்தையும் சுரங்கம் தோண்டிவிட்டு வேணு கோபால் நகரில் பூமியை துளைத்துக் கொண்டு வெளியே வந்த ஆனைமலை எந்திரத்தை அதிகாரிகளும், ஊழியர்களும் உற்சாகமாக வரவேற்றனர். அப்போது பலூன்களையும் பறக்க விட்டு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.

    இந்த வழித்தடத்தில் 2 பாதைகள் வேண்டுமென்பதால் கடந்த 5-ந் தேதி பால்பண்ணையில் இருந்து மற்றொரு சுரங்கம் தோண்டும் பணியை சேர்வராயன் என்ற எந்திரம் தொடங்கியது.

    இந்த எந்திரம் பணியை முடித்துவிட்டு வருகிற ஆகஸ்ட் மாதம் வேணுகோபால் நகரில் வெளியே வரும் என்று அதிகாரிகள் கூறினார்கள்.

    சுரங்கம் தோண்டும் பணியில் 23 எந்திரங்களை பயன்படுத்த திட்டமிட்டு இருப்பதாகவும், தற்போது 6 எந்திரங்கள் மட்டுமே சுரங்கம் தோண்டி கொண்டிருப்பதாகவும் தெரிவித்தனர்.

    2-ம் கட்ட மெட்ரோ வழித்தடத்தில் உயர்மட்ட ரெயில் பாதைக்கான கட்டுமான பணிகள் அடுத்த ஆண்டு (2024) முடிந்துவிடும். 2025-ம் ஆண்டில் இருந்து படிப்படியாக மெட்ரோ ரெயில் சேவை தொடங்கும். 2027-ம் ஆண்டுக்குள் உயர்மட்ட பாதைக்கான பணிகள் முழுவதுமாக முடிந்துவிடும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    தற்போது சுரங்கம் தோண்டும் பணியில் ஈடுபட்ட ஆனைமலை எந்திரம் அடுத்ததாக அயனாவரம் பகுதியில் சுரங்கம் தோண்ட பயன்படுத்தப்பட உள்ளது.

    • நிர்வாகம் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது
    • ரெயில்வே அதிகாரிகள் தகவல்

    அரக்கோணம்,

    சென்னை கோட்டத்தில் அம்ரீத் பாரத் திட்டத்தின் மூலமாக 15 ரெயில் நிலையங்களில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்த அறிவிக்கப்பட்ட பட்டியலில் அரக்கோணம் இடம்பெற்றுள்ளது.

    அதற்கான பணிகளை தொடங்க ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.

    அதேபோல் வந்தே பாரத் ரெயிலும் அரக்கோணம் வழியாக இயக்கப்படுகிறது. இதுவரை பயணிகள் இந்த ரெயிலில் அமர்ந்து மட்டும் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டு வந்தது.

    தற்போது வந்தே பாரத் ரெயிலில் படுக்கை வசதிகள் கொண்டதாகவும் மின்சார ரெயில்களுக்கு மாற்றாக இயக்குவதற்காக வந்தே மெட்ரோ ரெயில்கள் தயாரிப்பு பணிகளும் ரெயில்வே துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    அதன்படி அரக்கோணம்- ஜோலார்பேட்டை போன்ற நகரங்களை இணைக்கும் மின்சார ரெயில்களுக்கு மாற்றாக இயக்குவதற்காக வந்தே மெட்ரோ ரெயில் தயாரிக்கும் பணிகளும் மேற்கொள்ளப்படுகிறது.

    இந்த பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு பயணிகள் சேவைக்காக இயக்கப்பட உள்ளது என ரெயில்வே அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து தென்னக ரெயில்வே மண்டல பயணிகள் ஆலோசனைக் குழு உறுப்பினரும், அரக்கோணம் ரெயில் பயணிகள் சங்க தலைவருமான நைனா மாசிலாமணி கூறும்போது:-

    வரலாற்று சிறப்பு வாய்ந்த ரெயில் நிலையமாக அரக்கோணம் உள்ளது. இங்கு 8 நடைமேடைகள் உள்ளன. பலதரப்பட்ட மக்கள் அதிக அளவில் பயணம் செய்து வருகின்றனர். ரெயில் நிலையத்தை மேம்படுத்த பல்வேறு கட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    ஆனால் பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கையாக ெரயிலுக்காக காத்திருக்கும் பயணிகளுக்கு பெட்டிகள் எங்கு உள்ளது என்பதை அறிய மின்சாரத்தில் இயங்கும் கோச் பொசிஷன் போர்டு அமைக்கப்படாமல் உள்ளது.

    இதனால் பயணிகள் மிகவும் சிரமப்படு கின்றனர். உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் போது இவைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். திருவள்ளூரில் இருந்து வரும் 3,4-வது அகல ரெயில் பாதைகள் குறுக்கும் நெடுக்கமாக உள்ளன.

    மேல் பாக்கம் ரெயில் நிலையம் வெளிப்புறம் சிக்னல் பாயிண்ட் வரை பாதைகளை நேராக மாற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் ரூ.63,246 கோடி மதிப்பில், 118.9 கி.மீ. தொலைவுக்கு 3 வழித்தடங்களில் பணிகள் நடைபெற்று வருகின்றன.
    • ஆவடி வரை பாதைகளை நீட்டிக்க அதிக பிளாட்பார்ம் அமைக்கப்படுகிறது.

    சென்னை:

    போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் சென்னையில் மெட்ரோ ரெயில் திட்டம் உருவாக்கப்பட்டது. இதில் முதல் கட்டமாக விமான நிலையம் முதல் விம்கோ நகர் வரையும், பரங்கிமலை - சென்ட்ரல் வரையும் 2 வழித்தடங்களில் 55 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் ரூ.63,246 கோடி மதிப்பில், 118.9 கி.மீ. தொலைவுக்கு 3 வழித்தடங்களில் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    மாதவரம் - சிறுசேரி சிப்காட் வரை 3-வது வழித்தடத்தில் 45.8 கி.மீ. தொலைவுக்கும், கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி பைபாஸ் வரை 4-வது வழித்தடத்தில் 26.1கி.மீ. தொலைவுக்கும், மாதவரம் - சோழிங்கநல்லூர் வரை 5-வது வழித்தடத்தில் 47 கி.மீ. தொலைவுக்கும் பணிகள் நடைபெறுகின்றன.

    இந்தப் பணிகளை 2025-ம் ஆண்டு இறுதிக்குள் முடித்து மெட்ரோ ரெயில்களை இயக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. ஆனால் அதைவிட கூடுதல் காலமாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் சென்னையின் அடுத்த மெட்ரோ ரெயில் மையமாக கோயம்பேடு சில ஆண்டுகளில் அமைய இருக்கிறது. 3 வழித்தடங்கள் சந்திக்கும் ஜங்ஷனாக மாறுகிறது.

    கோயம்பேடுவில் தற்போதுள்ள மெட்ரோ ரெயில் நிலையத்திற்கு மேலே 2-ம் கட்ட திட்டத்தில் ரெயில் நிலையத்தை உருவாக்க திட்டமிடப்பட்டு உள்ளது. மேலும் ஆவடி வரை பாதைகளை நீட்டிக்க அதிக பிளாட்பார்ம் அமைக்கப்படுகிறது.

    2 வது கட்ட திட்டத்தில் மாதவரம் பால் பண்ணை- சோழிங்கநல்லூர் இடையேயான 5 - வது வழித்தடத்தில் கோயம்பேடு இடம்பெறுகிறது. 2-வது கட்ட திட்டத்தில் முதலில் கோயம்பேடு இடம்பெறவில்லை. பின்னர் அது மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது.

    எதிர்காலத்தில் திருமங்கலம் முதல் ஆவடி வரை மெட்ரோ ரெயில் பாதை நீடிக்கப்படுகிறது. இதன் காரணமாக கோயம்பேடு ரெயில் நிலையம் குறைந்த பட்சம் 3 வழித்தடங்களை இனணக்கும். இது குறித்து மெட்ரோ ரெயில் அதிகாரி ஒருவர் கூறியதாவது: -

    இரண்டாம் கட்ட பணியின் 5-வது வழித்தடம் கோயம்பேடுவில் சென்ட்ரல் - பரங்கிமலை இடையேயான வழித்தடத்துடன் இணைக்கப்படும். எதிர்காலத்தில் திருமங்கலம் - ஆவடி விரிவாக்க பாதையும் இனணக்கப்படும்.

    கோயம்பேடுவில் கட்டம்-2 நிலையத்தின் வடிவமைப்பை மாற்றி அமைத்து, ஆவடி வரையிலான நீட்டிப்புப் பாதைக்கு கூடுதல் தளங்களைக் கட்டுவதற்கான கட்டமைப்பு வசதிகளுக்காக விட்டுவிடுகிறோம். அந்த பிளாட்பார்ம்களை நாங்கள் 2- ம் கட்ட நிலையத்தின் லெவலுடன் இணைப்போம், இது முதல் கட்ட ஸ்டேஷனுடன் இணைக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முகப்பேர், அம்பத்தூர் ஆவடியில் வசிப்பவர்கள் சென்ட்ரல் அல்லது எழும்பூர் ரெயில் நிலையங்களுக்கு செல்ல எஸ்கலேட்டர் அல்லது லிப்ட் மூலம் ஏறி கோயம்பேட்டில் பிளாட்பாரங்களை மாற்றி கொள்ளலாம்.

    விமான நிலையத்துக்கும் நேரடியாக செல்லலாம். இதேபோல மாதவரம் அல்லது ஓ.எம்.ஆர். பகுதிக்கும் பயணிக்க முடியும்.

    ×