search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின் வினியோகம்"

    • காலை 8 மணி முதல் பிற் பகல் 3 மணி வரை மின் வினியோகம்
    • தகவலை நாகர்கோவில் மின் வினியோக செயற் பொறியாளர் தெரிவித்துள்ளார்.

    நாகர்கோவில் :

    கன்னியாகுமரி உபமின் நிலையத்துக்குட்பட்ட மின்பாதைகளில் பராமரிப்பு பணிகள் நாளை மறு நாள் (வியாழக் கிழமை) நடக் கிறது.

    எனவே அன்று காலை 8 மணி முதல் பிற் பகல் 3 மணி வரை கன்னியாகுமரி, கோவளம், ராஜாவூர், மயிலாடி, வழுக்கம்பாறை, சுசீந்திரம், சின்னமுட்டம், கீழம ணக்குடி, அழகப்பபுரம், கொட்டாரம், சாமிதோப்பு, அஞ்சுகிராமம், கோழிக் கோட்டுப்பொத்தை, வாரி யூர், அகஸ்தீஸ்வரம், மருங் கூர், தேரூர், புது கிராமம், காக்கமூர், பொத் தையடி, தோப்பூர், ஊட்டு வாழ்மடம், தென்தாமரை குளம், பால்குளம், ராமனா திச்சன் புதூர், மேல கருப்புக் கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி களுக்கும் மின் வினியோகம் இருக்காது.

    இந்த தகவலை நாகர்கோவில் மின் வினியோக செயற் பொறியாளர் தெரிவித்துள்ளார்.

    • காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணிவரை மின் வினியோகம் இருக்காது.
    • குழித்துறை மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

    நாகர்கோவில், நவ.20-

    குழித்துறை கோட்டத்துக்கு உட்பட்ட முன்சிறை, நடைக்காவு துணை மின்நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. எனவே, நாளை காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணிவரை முன்சிறை, காப்பு க்காடு. விரிவிளை, நித்திரவிளை, இரையுமன்துறை, புதுக்கடை. ஐரேனிபுரம், தொலையாவட்டம், மாங்கரை, விழுந்தயம்பலம், வேங்கோடு, மாதாபுரம், அரசகுளம், பைங்குளம், தேங்காப்பட்டணம், ராமன் துறை, புத்தன்துறை, இனயம், கிள்ளியூர், கீழ்குளம், சென்னி த்தோட்டம், சூரியகோடு, குளப்புறம், சுந்தரவனம். மங்காடு, வாறுத்தட்டு, குழிவிளை, கோழிவிளை, கோண சேரி, சாத்தன்கோடு, வாவறை, மணலி, பாலவிளை, வளனூர், சூழால்,பாத்திமா நகர், மெதுகும்மல், வெங்க ஞ்சி, பூத்துறை, தூத்தூர், கொல்லங்கோடு, கிராத்தூர் ஆகிய இடங்களிலும், அவற்றை சார்ந்த துணை கிராமங்களுக்கும் மின் வினியோகம் இருக்காது.

    இந்த தகவலை குழித்துறை மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

    • மணிமண்டபம் துணை மின்நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தஞ்சை நகரிய உதவி செயற்பொறியாளர் பாலநேத்திரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சை மணிமண்டபம் துணை மின்நிலையத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது . எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அருளானந்தநகர், பிலோமினா நகர், காத்தூண் நகர், சிட்கோ, அண்ணாநகர், காமராஜர் நகர், பாத்திமா நகர், அன்பு நகர், திருச்சி ரோடு, வ.உ.சி.நகர், பூக்காரத்தெரு, இருபதுகண் பாலம், கோரிக்

    குளம், கணபதி நகர், ராஜப்பா நகர், மகேஸ்வரி நகர், திருப்பதி நகர், செல்வம் நகர், அண்ணாமலை நகர், ஜெ.ஜெ.நகர், டி.பி.எஸ். நகர், சுந்தரம் நகர், பாண்டியன் நகர், எஸ்.இ.அலுவலகம், கலெக்டர் பங்களா ரோடு, டேனியல் தாமஸ் நகர், ராஜ ராஜேஸ்வரி நகர், காவேரி நகர், நிர்மலா நகர், என்.எஸ்இ. போஸ் நகர், தென்றல் நகர், துளசியாபுரம், தேவன் நகர், பெரியார் நகர், இந்திரா நகர், கூட்டுறவு காலனி, நடராஜபுரம் தெற்கு காலனி, புதிய வீட்டு வசதி வாரியம், முல்லை, மருதம், நெய்தல், நட்சத்திரா நகர், வி.பி.கார்டன், ஆர்.ஆர்.நகர், சேரன் நகர், யாகப்பா நகர், அருளானந்த அம்மாள் நகர், குழந்தையேசு கோவில், பிஷப் காம்ப்ளக்ஸ் ஆகிய இடங்களில் மின் வினியோகம் இருக்காது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின் வினியோகம் இருக்காது
    • தக்கலை மின் வினியோக செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

    நாகர்கோவில் :

    வீயன்னூர், பேச்சிப்பாறை துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நாளை மறுநாள் (புதன்கிழமை) நடக்கிறது. எனவே, நாளை மறுநாள் காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வீயன்னூர் மின் நிலைய பகுதிகளான ஆற்றூர், திருவட்டார், செரும்பாலூர், வெண்டலிகோடு, வலி யாற்று முகம், பிலாவிளை, குமரன்குடி, பூவன்கோடு, வேர்க்கிளம்பி, மணலிக்கரை, மணக்கா விளை, முகிலன்கரை, பெருஞ்சக்கோணம், காயல்கரை, சித்திரங்கோடு, சாண்டம், ஆத்துக்கோணம் ஆகிய இடங்களுக்கும், பேச்சிப்பாறை மின் நிலைய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 வரை கடை யாலுமூடு, கோதையார், குற்றியார், மைலார், உண்ணி யூர்கோணம், சிற்றார், களியல், ஆலஞ்சோலை, பத்துகாணி, திற்பரப்பு, திருநந்திக்கரை, அரசமூடு ஆகிய இடங்களுக்கும், அவற்றை சார்ந்த துணை கிராமங்களுக்கும் மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை தக்கலை மின் வினியோக செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

    • பழுதடைந்த மின்கம்பங்களை மாற்றும் அவசர கால பணியும் 30-ம் தேதி நடக்கிறது.
    • இதனால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    தஞ்சாவூர்:

    திருவையாறு தமிழ்நாடு மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் பாலமுருகன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருவையாறு துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட விளாங்குடி 11 கிலோ வாட் உயரழுத்த மின்பாதையில் மின்கம்பி தரம் உயர்த்தவும், பழுதடைந்த மின்கம்பங்களை மாற்றும் அவசர கால பணியும் 30-ம் தேதி (சனிக்கிழமை) நடக்கிறது.

    எனவே தஞ்சை அருகே உள்ள பெரும்புலியூர், புனல்வாசல், விளாங்குடி, வில்லியநல்லூர், ஒக்கக்குடி, செம்மங்குடி, அணைக்குடி, மடம் ஆகிய பகுதிகளில் 30-ந்தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நடைக்காவு துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நாளை மறுநாள் (சனிக்கிழமை) நடக்கிறது.
    • குழித்துறை மின் வினியோக செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

    நாகர்கோவில் :

    குழித்துறை, முன்சிறை, நடைக்காவு துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நாளை மறுநாள் (சனிக்கிழமை) நடக்கிறது.

    எனவே, அன்று காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை ஆலுவிளை, மேல் பறம், மருதங்கோடு, கோட்ட விளை செம்மங்காலை, இடைக்கோடு, மலைக்கோடு, புலியூர் சாலை, மேல்பாலை, பனச்சமூடு, அருமனை, பளுகல், களியக்காவிளை, மடிச்சல், பாலவிளை, பெருந்தெரு, பழவார், விளவங்கோடு, கழுவன் திட்டை, குழித்துறை, இடைத்தெரு, முன்சிறை, காப்புக்காடு, விரிவிளை, நித்திரவிளை, இரையு மன்துறை, புதுக்கடை, ஐரேனிபுரம், தொலை யாவட்டம், மாங்கரை, விழுந்தயம்பலம், வேங்கோடு, மாதாபுரம், அரசகுளம், பைங்குளம், தேங்காப்பட்டணம், ராமன்துறை, புத்தன்துறை, இனயம், கிள்ளியூர், கீழ்கு ளம், சென்னித்தோட்டம், சூரியகோடு, குளப்புறம், சுந்தரவனம், மங்காடு, வாறுத்தட்டு, குழிவிளை, சூழால், பாத்திமாநகர், மெதுகும்மல், வெங்கஞ்சி, பூத்துறை, தூத்தூர், கொல்லங்கோடு, கிராத்தூர் ஆகிய இடங்களுக்கும் அவற்றை சுற்றியுள்ள துணை கிராமங்களுக்கும் மின் வினியோகம் இருக்காது.

    இந்த தகவலை குழித்துறை மின் வினியோக செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

    • காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
    • மின்பாதைக்கு இடையூறாக உள்ள மரக்கிளைகள் வெட்டி அகற்றப்படுகிறது.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் மின் வினியோக செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தெங்கம்புதூர், மீனாட்சிபுரம், ராஜாக்கமங்கலம் ஆகிய உபமின் நிலையங்களுக்குட்பட்ட பகுதியில் நாளை மறுநாள் (9-ந்தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் இங்கிருந்து மின் வினியோகம் பெறும் தெங்கம்புதூர், பறக்கை, மேலமணக்குடி, முகிலன்விளை, மணிக்கட்டிபொட்டல், ஒசரவிளை, காட்டுவிளை, புதூர், ஈத்தாமொழி, தர்மபுரம், பழவிளை பொட்டல், வெள்ளாளன்விளை, மேலகிருஷ்ணன்புதூர், பள்ளம், பிள்ளையார்புரம், புத்தளம், முருங்கவிளை, புத்தன்துறை, ராஜாக்கமங்கலம், ஆலன்கோட்டை, காரவிளை, பருத்திவிளை, வைராகுடி, கணபதிபுரம், தெக்கூர், தெக்குறிச்சி, காக்காதோப்பு, பழவிளை, வடிவீஸ்வரம், கோட்டார், மீனாட்சிபுரம், இடலாக்குடி, ஒழுகினசேரி, தளியபுரம், ராஜபாதை, கரியமாணிக்கபுரம், செட்டிக்குளம் சந்திப்பு, சர்குணவீதி, ராமன்புதூர், வெள்ளாளர் காலனி, சவேரியார் கோவில் சந்திப்பு, ராமவர்மபுரம் உள்ளிட்ட பகுதிகளில் காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    இந்த நேரத்தில் மின்பாதைக்கு இடையூறாக உள்ள மரக்கிளைகள் வெட்டி அகற்றப்படுகிறது. இதற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

    • திடீரென மின் வினியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டதால் மெட்ரோ ரெயில்களை இயக்க முடியாமல் போனது.
    • விம்கோ நகர் நிலையத்தில் இருந்து சுங்கச்சாவடி நிலையம் வரை ஒரு வழிப்பாதையில் மட்டும் ரெயில்கள் இயக்கப்பட்டன.

    சென்னை:

    சென்னையில் 2 வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. அதிகாலை 5 மணி முதல் இரவு 11.30 மணி வரை இயக்கப்பட்டு வருவதால் பொதுமக்கள் போக்கு வரத்து நெரிசலில் சிக்காமல் நிம்மதியுடன் பயணம் செய்து வருகிறார்கள்.

    இந்நிலையில் இன்று அதிகாலை 5.45 மணியளவில் விம்கோ நகர் மெட்ரோ நிலையம் மற்றும் விம்கோநகர் டெப்போ நிலையம் இடையே மின்வினியோகத்தில் தடை ஏற்பட்டது. இதனால் மெட்ரோ ரெயில்களை இயக்க முடியாத நிலை ஏற்பட்டது.

    விம்கோ நகர் பணிமனை மெட்ரோ நிலையம் தான் கடைசியாகும். திடீரென மின் வினியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டதால் மெட்ரோ ரெயில்களை இயக்க முடியாமல் போனது.

    இதனால் விம்கோ நகர் பணிமனை நிலையம்-விம்கோ நகர் இடையே மெட்ரோ ரெயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

    விம்கோ நகர் நிலையத்தில் இருந்து சுங்கச்சாவடி நிலையம் வரை ஒரு வழிப்பாதையில் மட்டும் ரெயில்கள் இயக்கப்பட்டன. மற்றொரு பாதையில் சேவை நடைபெறாது என மெட்ரோ ரெயில் நிர்வாகம் அறிவித்தது. 18 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் அங்கிருந்து இயக்கப்பட்டன.

    மெட்ரோ ரெயில்கள் காலை அலுவலக நேரங்களில் 10 நிமிடத்திற்கு ஒரு சேவை வீதம் இயக்கப்படும். ஆனால் மின்சார தொழில் நுட்ப கோளாறால் குறைந்த அளவில் அதிக இடை வெளியில் ரெயில்கள் இயக்கப்பட்டன. இதனால் மெட்ரோ ரெயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது.

    விம்கோ நகர் நிலையத்தில் இருந்து திருவொற்றியூர், தேரடி, காலடிப்பேட்டை சுங்கச்சாவடி நிலையம் வரை ஒரு வழிப்பாதையில் ரெயில்கள் இயக்கப்பட்டன.

    இதனால் வட சென்னை பகுதியில் இருந்து சென்ட்ரல், கோயம்பேடு, வடபழனி, அசோக்நகர் மற்றும் தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை, கிண்டி, விமான நிலையம் செல்பவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளானார்கள்.

    இதற்கிடையில் மின் வினியோக கோளாறை சரி செய்யும் பணியில் தொழில் நுட்ப பணியாளர்கள் ஈடுபட்டனர். ஆனாலும் அதனை சரி செய்து இயல்பான சேவையை தொடங்க 4 மணி நேரம் நீடித்தது. காலை 9.30 மணி முதல் போக்குவரத்து சீரானது.

    • ஆரப்பாளையம், அரசரடி, கோவில் பகுதியில் மின் வினியோகம் நாளை நிறுத்தப்படுகிறது.
    • இந்த தகவலை மின் செய்பொறியாளர் மோகன் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    மதுரை ஆரப்பாளையம், கோவில், அரசரடி ஆகிய துணை மின்நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் அதன் மூலம் மின்சாரம் பெறும் பகுதியில் நாளை (19-ந்தேதி) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது.

    அதன்படி ஆரப்பாளையம் துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட சுடுதண்ணீர் வாய்க்கால் ரோடு, ராஜா மில் ரோடு, கனகவேல் காலனி, மணி நகர் மெயின் 1, 2-வது தெரு, ஒர்க்ஷாப் ரோடு, பேச்சியம்மன் படித்துறை, வெங்கடசாமி நாயுடு அக்ரஹாரம், தமிழ்ச்சங்கம் ரோடு, கிருஷ்ணராயர் தெப்பக்குளம், ஆதிமூலம் பிள்ளை அக்ரஹாரம், திலகர் திடல் சந்தை, பாரதியார் ரோடு, அங்கையற்கண்ணி வளாகம், அழகரடி 1, 4-வது தெரு, விவேகானந்தர் ரோடு, ஆரப்பாளையம் கிராஸ் ரோடு, ஆரப்பாளையம் மெயின்ரோடு, புட்டு தோப்பு மெயின் ரோடு, எச்.எம்.எஸ். காலனி, மேலப்பொன்னகரம் மெயின் ரோடு, புது ஜெயில் ரோடு, கரிமேடு ஏரியா முழுவதும், மோதிலால் மெயின் ரோடு, ராஜேந்திர மெயின் ரோடு 1, 2-வது தெரு, பாரதியார் ரோடு முழுவதும், பொன்னகரம் பிராட்வே ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படும்.கோவில் துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட வடக்கு சித்திரை வீதி, கீழப்பட்டமார் தெரு, மேல பட்டமார் தெரு, வடக்காவணி மூலவீதி, மேற்கு சித்திரை வீதி, மேல ஆவணி மூல வீதி, வெள்ளியம்பலம் தெரு, மேலச்செட்டி, கீழச்செட்டி, மறவர்ச்சாவடி, ஜடாமுனி கோவில் தெரு, தெற்கு ஆவணிமூல வீதி ஒரு பகுதி, கீழச்சித்திரை அம்மன் சன்னதி, சுவாமி சன்னதி, கிழக்கு ஆவணி மூல வீதி, மேலநாப்பாளையம், கீழநாப்பாளையம், கீழமாசி வீதி, தாசில்தார் பள்ளிவாசல் தெரு, தளவாய் தெரு, தொட்டியன் கிணற்றுச்சந்து, கீழமாரட் வீதி, மீனாட்சி கோவில் தெரு, அனுமார் கோவில் படித்துறை, வடக்கு மாசி வீதி, வக்கீல் புதுத்தெரு, செல்லத்தம்மன் கோவில் தெரு, காமாட்சி அம்மன் கோவில் தெரு, நெல்பேட்டை, காயிதே மில்லத் தெரு, சுங்கம் பள்ளிவாசல், ஆட்டு மந்தை பொட்டல், சோமசுந்தர அக்ரஹாரம், மேல சித்திரை வீதி, நேதாஜி மெயின் ரோடு ஒரு பகுதி, பேச்சியம்மன் படித்துறை, திருமலை ராயர் படித்துறை, தைக்கால் தெரு, வடக்கு வெளி வீதி, தெற்கு சித்திரை வீதி, தெற்கு காவல் கூட தெரு, மேல கோபுரம் வீதி ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படும்.

    அரசரடி துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட புது ஜெயில் ரோடு, ஜெயில் காலனி, முரட்டான் பத்திரி, கிரம்மர்புரம், கரிமேடு ஏரியா, மேலப் பொன்னகரம் மெயின் ரோடு, இளந்தோப்பு 1, 2, 3-வது தெருக்கள், ராஜேந்திரா 1, 2, 3-வது தெருக்கள், மில்கேட் பகுதிகள், பொன்னகரம் ஒரு பகுதி, மணிஐயர் சந்து, ஸ்காட் ரோடு, எல்.ஐ.சி., குட்செட் தெரு, மேல மாரட் வீதி, மேலப் பெருமாள் மேஸ்திரி வீதி மற்றும் சம்பந்த மூர்த்தி தெரு ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படும்.

    இந்த தகவலை மின் செய்பொறியாளர் மோகன் தெரிவித்துள்ளார்.

    • அறிவிக்கப்படாத மின் தடையால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகும் நிலை உள்ளது.
    • தடையில்லா மின் வினியோகம் செய்ய வேண்டும் என அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் பகுதியில் கடந்த ஒரு வாரமாக தினமும் இரவு, பகல் பாராமல் அடிக்கடி அறிவிக்கப்படாத மின்தடை ஏற்பட்டு வருவதால் அனைத்து தரப்பு மக்களும் பெரும் அவதியடைந்து வருகின்றனர்.

    இதனால் வியாபாரிகள், கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். கோடை வெயிலின் தாக்கத்தால் மக்கள் அவதிப்பட்டு வரும் வேளையில் இந்த மின்தடையால், மேலும் அவதிக்குள்ளாக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.

    சில பகுதிகளில் மின்தடை ஏற்பட்டு மீண்டும் மின்சாரம் வந்தாலும் குறைந்த மின் அழுத்தமாக உள்ளது. இது குறித்து பொதுமக்கள் மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் செய்தாலும் கண்டு கொள்வது கிடையாது. எந்த வித முன் அறிவிப்பும் இல்லாமல் இரவு நேத்தில் மின் தடை ஏற்படுத்தி வருவது மக்களுக்கு பெரும் வேதனையை அளித்தள்ளது.

    இரவு நேரங்களில் ஏற்படும் தொடர் மின்தடை யால் கைக்குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியோர்கள், உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் என அனைத்து தரப்பினரும் கொசுக்கடியிலும், புழுக்கம் காரணமாகவும் தூக்கத்தை தொலைத்து அவதிப்பட்டு வருகின்றனர்.

    இந்த தொடர் மின்தடை ஏற்பட காரணம் தெரியாமல் பொதுமக்கள் புலம்பி தவித்து வருகின்றனர். மின் தடைக்கு பொது மக்களும், சமூக ஆர்வலர்களும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். எனவே மின்சார வாரியம் உரிய நடவடிக்கை மேற்கொண்டு தடையில்லா மின் வினியோகம் செய்ய வேண்டும் என அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அரை மணி நேரம் மின்சாரம் தடை
    • மின்வாரியத்துறையினர் நடவடிக்கை

    ஆம்பூர்:

    ஆம்பூரை அடுத்த விண்ண மங்கலம் பகுதியில் துணை மின் நிலையம் அமைந்துள் ளது. இங்கிருந்து தான் ஆம்பூர் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் வினி யோகிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று மாலை சுமார் 6 மணியளவில் திடீ ரென ஒருடிரான்ஸ்பார்மரில் தீ பற்றியது.

    அடுத்த வினா டியே தீ மளமளவென டிரான்ஸ்பார்மர் முழுவதும் பரவியது.

    இதன் எதிரொலியாக ஆம் பூர் பகுதிகளில் சுமார் அரை மணி நேரம் மின்சாரம் தடை ஏற்பட்டது. தகவலறிந்து சம் பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையி னர் சில நிமிடங்கள் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    அதன் பின் மின் வினியோகம் சீர் செய்ய மின்வாரியத் துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.

    ×