search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Damaged power poles"

    • பழுதடைந்த மின்கம்பங்களை மாற்றும் அவசர கால பணியும் 30-ம் தேதி நடக்கிறது.
    • இதனால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    தஞ்சாவூர்:

    திருவையாறு தமிழ்நாடு மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் பாலமுருகன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருவையாறு துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட விளாங்குடி 11 கிலோ வாட் உயரழுத்த மின்பாதையில் மின்கம்பி தரம் உயர்த்தவும், பழுதடைந்த மின்கம்பங்களை மாற்றும் அவசர கால பணியும் 30-ம் தேதி (சனிக்கிழமை) நடக்கிறது.

    எனவே தஞ்சை அருகே உள்ள பெரும்புலியூர், புனல்வாசல், விளாங்குடி, வில்லியநல்லூர், ஒக்கக்குடி, செம்மங்குடி, அணைக்குடி, மடம் ஆகிய பகுதிகளில் 30-ந்தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • முதல் கட்டமாக 25 இடங்களில் சாய்ந்த மின் கம்பங்கள் சரி செய்யப்பட்டுள்ளன.
    • தொடர்ந்து 2-ம் கட்ட பணிகள் நேற்று 1-ந்தேதி முதல் 31-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் நளினி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சாவூர் மாவட்டத்தில் வட கிழக்கு பருவமழையின் போது ஏற்படும் பாதிப்பு களை குறைக்கும் வகையில் முதல் கட்டமாக கடந்த மாதம் 1-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை தஞ்சாவூர், கும்பகோணம், பட்டுக்கோட்டை மற்றும் ஒரத்தநாடு கோட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் மின் பரா மரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டதில் 10358 இடங்களில் மரக் கிளைகள் அகற்றப்பட்டுள்ளன.

    25 இடங்களில் சாய்ந்த மின் கம்பங்கள் சரி செய்யப்பட்டுள்ளன.

    173 மின் மாற்றி கட்டமைப்பு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

    215 பழுதான மின்கம்பங்கள் மாற்றப்படும்.

    125 இடங்களில் இடை செருகல் கம்பங்கள் நிறுவப்பட்டு உள்ளன.

    தொடர்ந்து 2-ம் கட்ட பணிகள் நேற்று 1-ந்தேதி முதல் 31-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது.

    இந்த பணிகள் காரணமாக தேவைப்படும் பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும்.

    அவ்வாறு மின் நிறுத்தம் செய்வதற்கான குறுந்த தகவல் பெறுவதற்கு மின் நுகர்வோர் தங்களது சரியான கைப்பேசி எண்ணை தாங்கள் உபயோகப்படுத்தும் மின் இணைப்பு எண்ணுடன் இணைத்துக் கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மின்கம்பங்கள் அடிப்பாகம் சேதமடைந்து காரைகள் பெயர்ந்து, எந்த நேரமும் உடைந்து விழும் அபாய நிலையில் உள்ளது.
    • புதிய மின் கம்பத்தை மாற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    குள்ளனம்பட்டி:

    சாணார்பட்டி அருகே வீரசின்னம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட 2 மற்றும் 4வது வார்டில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    இங்கு 2 மற்றும் 4 வது வார்டில் 2 மின் கம்பங்கள்அதன் அடிப்பாகம் சேதமடைந்து காரைகள் பெயர்ந்து, எந்த நேரமும் உடைந்து விழும் அபாய நிலையில் உள்ளது. இதுகுறித்து மின்வாரிய அலுவலகத்திற்கு பல முறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் பொதுமக்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.

    எனவே மின் கம்பம் உடைந்து ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்படும் முன்பு மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அந்தப் பகுதியில் புதிய மின் கம்பத்தை மாற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×