search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வடகிழக்கு பருவமழை பாதிப்புகளை குறைக்க மின்பராமரிப்பு பணிகள்
    X

    வடகிழக்கு பருவமழை பாதிப்புகளை குறைக்க மின்பராமரிப்பு பணிகள்

    • முதல் கட்டமாக 25 இடங்களில் சாய்ந்த மின் கம்பங்கள் சரி செய்யப்பட்டுள்ளன.
    • தொடர்ந்து 2-ம் கட்ட பணிகள் நேற்று 1-ந்தேதி முதல் 31-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் நளினி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சாவூர் மாவட்டத்தில் வட கிழக்கு பருவமழையின் போது ஏற்படும் பாதிப்பு களை குறைக்கும் வகையில் முதல் கட்டமாக கடந்த மாதம் 1-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை தஞ்சாவூர், கும்பகோணம், பட்டுக்கோட்டை மற்றும் ஒரத்தநாடு கோட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் மின் பரா மரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டதில் 10358 இடங்களில் மரக் கிளைகள் அகற்றப்பட்டுள்ளன.

    25 இடங்களில் சாய்ந்த மின் கம்பங்கள் சரி செய்யப்பட்டுள்ளன.

    173 மின் மாற்றி கட்டமைப்பு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

    215 பழுதான மின்கம்பங்கள் மாற்றப்படும்.

    125 இடங்களில் இடை செருகல் கம்பங்கள் நிறுவப்பட்டு உள்ளன.

    தொடர்ந்து 2-ம் கட்ட பணிகள் நேற்று 1-ந்தேதி முதல் 31-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது.

    இந்த பணிகள் காரணமாக தேவைப்படும் பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும்.

    அவ்வாறு மின் நிறுத்தம் செய்வதற்கான குறுந்த தகவல் பெறுவதற்கு மின் நுகர்வோர் தங்களது சரியான கைப்பேசி எண்ணை தாங்கள் உபயோகப்படுத்தும் மின் இணைப்பு எண்ணுடன் இணைத்துக் கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×