search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Electrical Maintenance Works"

    • முதல் கட்டமாக 25 இடங்களில் சாய்ந்த மின் கம்பங்கள் சரி செய்யப்பட்டுள்ளன.
    • தொடர்ந்து 2-ம் கட்ட பணிகள் நேற்று 1-ந்தேதி முதல் 31-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் நளினி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சாவூர் மாவட்டத்தில் வட கிழக்கு பருவமழையின் போது ஏற்படும் பாதிப்பு களை குறைக்கும் வகையில் முதல் கட்டமாக கடந்த மாதம் 1-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை தஞ்சாவூர், கும்பகோணம், பட்டுக்கோட்டை மற்றும் ஒரத்தநாடு கோட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் மின் பரா மரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டதில் 10358 இடங்களில் மரக் கிளைகள் அகற்றப்பட்டுள்ளன.

    25 இடங்களில் சாய்ந்த மின் கம்பங்கள் சரி செய்யப்பட்டுள்ளன.

    173 மின் மாற்றி கட்டமைப்பு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

    215 பழுதான மின்கம்பங்கள் மாற்றப்படும்.

    125 இடங்களில் இடை செருகல் கம்பங்கள் நிறுவப்பட்டு உள்ளன.

    தொடர்ந்து 2-ம் கட்ட பணிகள் நேற்று 1-ந்தேதி முதல் 31-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது.

    இந்த பணிகள் காரணமாக தேவைப்படும் பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும்.

    அவ்வாறு மின் நிறுத்தம் செய்வதற்கான குறுந்த தகவல் பெறுவதற்கு மின் நுகர்வோர் தங்களது சரியான கைப்பேசி எண்ணை தாங்கள் உபயோகப்படுத்தும் மின் இணைப்பு எண்ணுடன் இணைத்துக் கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடக்கிறது
    • மின்வாரிய செயற்பொறியாளர் தகவல்

    வேலூர்:

    வேலூர் மின்பகிர்மான வட்டத்தை சேர்ந்த வேலூர், இறைவன்காடு ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர அத்தியாவசிய மின்சாதன பராமரிப்பு பணிகள் நாளை (சனிக்கிழமை) நடக்கிறது.

    இதனால் நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை புதிய பஸ் நிலையம், பைபாஸ் ரோடு, தோட்டப்பாளையம், பழைய பஸ் நிலையம், வேலூர் டவுன் பஜார், சலவன்பேட்டை, அண்ணாசாலை, அப்துல்லாபுரம், கிருஷ்ணாநகர், பிஷப்டேவிட்நகர், கஸ்பா, ஊசூர், கொணவட்டம், சேண்பாக்கம் மற்றும் விருதம்பட்டு, செங்காநத்தம் ரோடு, கொசப்பேட்டை அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும். வல்லண்டராமம், விரிஞ்சிபுரம், இறைவன்காடு, செதுவாலை, கந்தனேரி, மருதவல்லிபாளையம், அன்பூண்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

    இந்த தகவலை செயற்பொறியாளர் ஆரோக்கியராஜ் தெரிவித்துள்ளார்.

    • மாதாந்திர மின்பராமரிப்பு பணிகள் நடக்கிறது.
    • விழுப்புரம் செய ற்பொறியாளர் சைம ன்சார்லஸ் தெரிவித்துள்ளார்.

    விழுப்புரம்:

    திருவெண்ணைநல்லூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் நாளை (17-ந் தேதி) மாதாந்திர மின்பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே அன்று காலை 9 மணி முதலர் மாலை 5 மணி வரை பெரியசெவலை சக்கரை ஆலை பகுதி,பெரி யசெவலை , துலங்கம்பட்டு, கூவாகம், வேலூர், ஆமூர், பெரும்பாக்கம், பரிக்கல், மாரனோடை, துலக்க ப்பாளையம், மணக்குப்ப ம், பாவந்தூர் , பெண்ணை வலம், பணப்பாக்கம், டி.எடையா ர், கீரிமேடு, தடுத்தா ட்கொண்டூர், கிராமம், மேலமங்கலம், கண்ணாரம்பட்டு, ஏமப்பூர், சிறுவானூர், மாரங்கியூர், ஏனாதிமங்கலம், எரளுர், கரடிப்பாக்கம், செம்மார், வளையாம்பட்டு, பையூர், கொங்க ராயனூர், திருவெண்ணைநல்லூர், சேத்தூர், அமாவா சைபா ளையம், தி.கொளத்தூ ர், சிறுமதுரை, பூசாரிபாளையம், ஒட்ட னந்தல், அண்டராயநல்லூர் மற்றும் கொண்டசமுத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரம் நிறுத்தபடுகிறது. இந்த தக வலை விழுப்புரம் செய ற்பொறியாளர் சைம ன்சார்லஸ் தெரிவித்துள்ளார்.

    • சின்னசேலம் துணை மின் நிலையத்தில்நாளை (18-ந் தேதி) மாதாந்திர மின்பராமரிப்பு பணிகள் நடக்கிறது.
    • காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நாளை மின் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    கள்ளக்குறிச்சி:

    சின்னசேலம் துணை மின் நிலையத்தில்நாளை (18-ந் தேதி) மாதாந்திர மின்பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கணியாமூர், சின்னசேலம், தொட்டியம், நமச்சிவாயபுரம் பைத்துந்துறை, எளியத்தூர் பங்காரம், வினை தீர்த்தபுரம், தச்சூர், தென் கீரனூர், உலகம் காத்தான், இந்திலி, மலைக்கோட்டாலம், சிறுவத்தூர், ராயர் பாளையம், நாட்டார்மங்கலம், லட்சியம், காட்டனத்தல், தென்தொரசலூர், மேலூர், ஏரவார், பொற்படாகுறிச்சி, விளம்பாவூர் ஆகிய பகுதிகளில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    ×