search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "debit card"

    • புதிய வகை ஏ.டி.எம்.- யு.பி.ஐ. ஏ.டி.எம். என்று அழைக்கப்படுகிறது.
    • புதிய வகை ஏ.டி.எம். கொண்டு யு.பி.ஐ. மூலம் எளிதில் பணம் எடுக்க முடியும்.

    மொபைல் சாதனங்களில் இருந்து யுனைஃபைடு பேமண்ட் இண்டர்ஃபேஸ் (யு.பி.ஐ.) மூலம் பணப் பரிமாற்றம் செய்து கொள்ளும் வழிமுறை இந்தியாவில் அதிகளவு பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் தேசிய அளவில் வேகமாகவும் வளர்ந்து வருகிறது. இந்த நிலையில், கார்டு இல்லாமல் பணம் எடுத்துக் கொள்ளும் வசதி முதல் முறையாக அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

    சர்வதேச ஃபின்டெக் ஃபெஸ்ட் நிகழ்வில் டெபிட் கார்டு எதுவும் இன்றி ஏ.டி.எம்.-இல் இருந்து பணம் எடுக்கும் வழிமுறை இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதற்காக அறிமுகமாகி இருக்கும் புதிய வகை ஏ.டி.எம். ஆனது "யு.பி.ஐ. ஏ.டி.எம்." என்று அழைக்கப்படுகிறது. இந்த புதிய வகை ஏ.டி.எம். கொண்டு யு.பி.ஐ. மூலம் எளிதில் பணம் எடுக்க முடியும்.

    இவ்வாறு செய்யும் போது பயனர்கள் டெபிட் கார்டு இல்லாமல், தங்களது மொபைல் போனில் இருக்கும் யு.பி.ஐ. சேவை மூலம் ஏதேனும் செயலி மூலமாக ஏ.டி.எம்.-இல் இருந்து பணம் எடுத்துக் கொள்ளலாம்.

    இது தொடர்பான வீடியோ ஒன்றை மத்திய மந்திரி பியூஷ் கோயல் தனது எக்ஸ் பதிவில் வெளியிட்டு உள்ளார். அதில் ஃபின்டெக் வல்லுனர் ஒருவர் ஏ.டி.எம்.-இல் யு.பி.ஐ. பயன்படுத்தி எப்படி பணம் எடுக்க வேண்டும் என்பதை விவரிக்கிறார். இந்த வீடியோவுக்கு பூயூஷ் கோயல், "யு.பி.ஐ. ஏ.டி.எம்.: ஃபின்டெக் எதிர்காலம் இங்கே தான் இருக்கிறது!" என்று குறிப்பிட்டுள்ளார்.

    இந்த புதிய வகை ஏ.டி.எம். இயந்திரத்தை தேசிய பேமண்ட் கார்ப்பரேஷன் மற்றும் என்.சி.ஆர். கார்ப்பரேஷன் இணைந்து உருவாக்கி இருக்கின்றன. இந்த யு.பி.ஐ. ஏ.டி.எம். வழக்கமான ஏ.டி.எம். போன்றே இயங்குகிறது. நிர்ணயிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக பயன்படுத்தும் போது, அதற்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிகிறது. 

    • கவுண்டர்களில் நீண்ட நேரம் காத்து நிற்காமல் உடனே செல்ல வசதியாக டிக்கெட் பெறுவதில் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறது.
    • கேட்டில் கார்டை காண்பிக்கும் போது உள்ளே செல்ல தானாகவே அனுமதி கிடைக்கும்.

    சென்னை:

    சென்னை மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்ய டிக்கெட் எடுப்பதற்கு நீண்ட வரிசையில் நிற்பதை தவிர்க்க பல்வேறு வசதிகளை செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    டிக்கெட் கவுண்டர்களில் கட்டணம் செலுத்தி டோக்கன் பெறுதல், பயண அட்டை, கியூஆர் கோடு மற்றும் வாட்ஸ் அப் மூலம் டிக்கெட் பெற்று செல்லுதல் போன்ற நடைமுறைகள் தற்போது உள்ளன.

    பயணிகள் சிரமமில்லாமல் எளிதாக டிக்கெட் தானியங்கி கேட்டுகளில் செல்ல வசதியாக புதிய தொழில் நுட்பங்கள் கையாளப்படுகின்றன. மெட்ரோ ரெயில்களில் நாளுக்கு நாள் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் கவுண்டர்களில் நீண்ட நேரம் காத்து நிற்காமல் உடனே செல்ல வசதியாக டிக்கெட் பெறுவதில் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறது.

    வார நாட்களில் பயணிகள் அதிகளவில் பயணிக்கிறார்கள். தினமும் பயணம் செய்வோரின் எண்ணிக்கை 3 லட்சத்தை நெருங்குகிறது.

    இந்நிலையில் மெட்ரோ ரெயில் 2ம் கட்ட பணியில் அமைகின்ற ரெயில் நிலையங்களில் மெட்ரோ ரெயில் பயணத்தை மேலும் எளிதாக்கும் வகையில் கூடுதல் வசதிகளை நிர்வாகம் தர இருக்கிறது.

    கவுண்டர்களில் காத்து நின்று டிக்கெட் பெற்று பயணிப்பதற்கு பதிலாக பயணிகள் தங்கள் வங்கி டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டை காண்பித்து பயணம் செய்யும் நவீன தொழில் நுட்பம் கையாளப்போவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மெட்ரோ ரெயில் நிலையங்களில் தானியங்கி டிக்கெட் நுழைவு வாயலில் டெபிட், கிரெடிட் கார்டை காண்பித்தால் போதுமானது. கட்டண தொகை வங்கி கணக்கில் இருந்து எடுத்துக் கொள்வதோடு செல்போனில் இது பற்றிய விவரங்கள் வரும்.

    வங்கி அட்டையை பயன்படுத்தும் முறையில் பயணிகள் காத்து நிற்க தேவையில்லை. கேட்டில் கார்டை காண்பிக்கும் போது உள்ளே செல்ல தானாகவே அனுமதி கிடைக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    தற்போது நம்மில் பலரும் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு இரண்டையும் பயன்படுத்துகிறோம். ஆனால் இரண்டு கார்டில் எதை அதிகம் பயன்படுத்துவது சிறந்தது என்று அறிந்து கொள்ளலாம்.
    தற்போது நம்மில் பலரும் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு இரண்டையும் பயன்படுத்துகிறோம்.

    ஆனால் இரண்டு கார்டில் எதை அதிகம் பயன்படுத்துவது சிறந்தது? இந்தக் கேள்வி அவ்வப்போது நமக்குள் எழும்.

    டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு ஆகிய இரண்டுமே 16 இலக்க எண், காலாவதி தேதி மற்றும் பின் எண் கொண்டவைதான்.

    நமது வங்கிக் கணக்கில் பணம் இருந்தால்தான், டெபிட் கார்டில் செலவு செய்ய முடியும். ஆனால் வங்கிக் கணக்கில் பணம் இல்லை என்றாலும் கிரெடிட் கார்டை பயன்படுத்திச் செலவு செய்ய முடியும்.

    பொதுவாக டெபிட் கார்டுகளை விட கிரெடிட் கார்டுகள் ஏன் சிறந்தவை என்பது குறித்துப் பார்க்கலாம்...

    கிரெடிட் கார்டுகள் மூலம் ஷாப்பிங் செய்யும்போது ‘கேஷ் பேக்’, தள்ளுபடி போன்ற பலவிதமான சலுகைகள் கிடைக்கும். மேலும் கிரெடிட் கார்டு மூலம் செலவு செய்யும் தொகையை சரியாகத் திருப்பிச் செலுத்தும்போது வெகுமதி புள்ளிகளும் கிட்டும். அதனைப் பயன்படுத்திப் பரிசுகள், சேவை முன்னேற்றம், புதுப்பித்தல் போன்றவற்றைப் பெற முடியும். டெபிட் கார்டில் எப்போதாவதுதான் இது போன்ற பலன்கள் கிடைக்கும்.

    கிரெடிட் கார்டில் தவணை முறையில் பொருட்களை வாங்க முடியும், டெபிட் கார்டில் அப்படிச் செய்ய முடியாது. ஆனால் தவணை முறையில் கிரெடிட் கார்டை பயன்படுத்திப் பொருட்கள் வாங்கும்போது அதற்கு வட்டி செலுத்த வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

    டெபிட் கார்டு பரிவர்த்தனையில் மோசடி நடைபெற்றால், நம் வங்கிக் கணக்கில் உள்ள மொத்தப் பணத்தையும் இழக்க நேரிடும். ஆனால் கிரெடிட் கார்டில் அப்படிப்பட்ட அபாயம் இல்லை. நமக்குரிய வரம்பை மீறி பரிவர்த்தனை செய்ய முடியாது.

    நாம் ஏதேனும் கடன் பெற விண்ணப்பிக்கும்போது வங்கிகள் நமது கிரெடிட் ஸ்கோர் எனப்படும் கடன் மதிப்பெண்ணை சோதிக்கும். கிரெடிட் கார்டு மூலம் செலவு செய்து அவற்றைச் சரியான நேரத்தில் திருப்பிச் செலுத்தி இருந்தால் கிரெடிட் ஸ்கோர் உயர்ந்து இருக்கும். எனவே எளிதாகக் கடன் பெற முடியும். டெபிட் கார்டு மட்டும் வைத்து இருக்கும்போது கிரெடிட் ஸ்கோரை உயர்த்த முடியாது.

    இதெல்லாம் ஒப்பீட்டு அளவில், டெபிட் கார்டை விட கிரெடிட் கார்டை முன்னே நிறுத்தும் விஷயங்கள்.

    அதேநேரம், கிரெடிட் கார்டு தவணைத் தொகையை சரியான நேரத்தில் திருப்பிச் செலுத்த முடியும் என்றால் மட்டும் கிரெடிட் கார்டு வாங்குவது நல்லது. சரியான நேரத்தில் கடனை திருப்பிச் செலுத்தவில்லை என்றால் தாமதமாகக் கட்டணத்தைச் செலுத்தியதற்கு அபராதமும் வட்டியும் சேர்த்து செலுத்த வேண்டும்.

    கையில்தான் கார்டு இருக்கிறதே என்று, பார்த்த பொருட்களை எல்லாம் வாங்க விரும்புவோருக்கும் கிரெடிட் கார்டு சரி வராது. பாக்கெட்டில் பணம் இல்லாமலே செலவழிக்க முடிவது இன்று இனித்தால், நாளை நீளமான ‘ஸ்டேட்மெண்ட்’ வரும்போது கசக்கும்.

    ஓர் ஆசையில் நம்மை மீறிச் செலவழித்துவிடுவோம் என்று எண்ணுபவர்களும், நிதி நிர்வாகத்தில் ஒழுங்கில்லாதவர்களும் கிரெடிட் கார்டை நாடாமல் இருப்பதே நல்லது.
    ×