search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "women protection"

    என்னதான் சட்டமிருந்தாலும் பொறுப்பான பயணமே பாதுகாப்பான பயணம் என்பதை நாம் உணர்ந்து நடக்காதவரையிலும் விபத்துகளையும் உயிரிழப்புக்களையும் தடுக்க முடியாது.
    சாலை விபத்துகள் அதிகமாக ஏற்படும் மாநிலங்களில் தமிழகம் நாட்டிலேயே மூன்றாவது இடத்தில் உள்ளது. தேசியக் குற்றப் பதிவு ஆணையத்தின் ஆண்டறிக்கை பெரும்பாலான விபத்துகள் மனிதக் கவனக்குறைவினால் ஏற்படுவதாகக் கூறுகிறது. தற்போது இருசக்கர வாகனங்களில் செல்வோர் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று போக்குவரத்து விதி உள்ளது .ஆனால் அதை யாரும் சரி வர கடைப்பிடிப்பதில்லை. அதேபோல் காரோட்டிகள் சீட் பெல்ட அணிய வேண்டும் என்பது முக்கிய அம்சம்.

    அனைத்துக் கார்களுமே பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுத்தே தயார் செய்யப்படுகின்றன. எனினும் பெரும்பாலான நேரங்களில் காரோட்டிகளும் பயணிகளும் கார்களில் உள்ளப் பாதுகாப்பு சாதனங்களைப் பயன்படுத்துவதில்லை, அலட்சியம் காட்டுகிறார்கள். இதுவே பெரும்பாலான விபத்துகளில் மரணம் ஏற்படக் காரணமாகி விடுகிறது. நவீனரக கார்களில் பல பாதுகாப்புச் சாதனங்களிருந்தாலும் அவற்றுள் மூன்று முக்கியமான சாதனங்கள் சீட்பெல்ட், கூடுதல் பாதுகாப்புக் காற்றுப்பை மற்றும் ஹெட்ரெஸ்ட் எனப்படும் தலைத்தாங்கி அணை ஆகியவை. அவை எப்படி உயிர்சேதத்தைத் தடுக்க உதவும் என்பதையும் பார்ப்போம்.

    முதலாவதாக சீட்பெல்ட். அணிந்து கொண்டு பயணம் செய்யும்போது விபத்து ஏற்பட்டால் சீட்பெல்ட் பயணியை இருக்கையோடு சேர்த்து இறுக்கி அணைத்துக் கொள்ளும். அதனால் விபத்து ஏற்படும் போது பயணி முன்பக்கமாகச் சாய்வது தடுக்கப்படுகிறது. பயணியின் தலை முன் இருக்கையின் மீதோ அல்லது வண்டியின் முன்பக்கத் தட்டிலோ மோதுவது தடுக்கப்படுகிறது.

    ஓட்டுநர் சீட்பெல்ட் அணிந்து கொள்ளும்போது விபத்து நடக்கும்போது முன்பக்கமாக சாய்வதால் அவரது தலையும் நெஞ்சும் வண்டியின் ஸ்டியரிங்கில் இடித்துக்கொள்வது தடுக்கப்படும். ஸ்டியரிங்கில் இடித்துக்கொள்ளும்போது தலைக்காயமும் நெஞ்செலும்புகளில் முறிவும் ஏற்படுவதால்தான் மரணம் ஏற்படுகிறது. அதனால்தான் சீட்பெல்ட் அணிவது கட்டாயமெனச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. எனினும் சீட்பெல்ட் அணியாமல் பயணம் செய்வது வாடிக்கையாகிவிட்டது.



    சீட்பெல்ட் அணிவது அசவுகரியமாக இருக்கிறதென்றும் வசதியாக இல்லையென்றும் நினைக்கிறோம். முதலில் சிறிது அசவுகரியமாக இருந்தாலும் உயிர்பாதுகாப்பிற்கு முக்கியம் என்பதால் பழகிக்கொள்ள வேண்டும். அதுபோலவே முன் இருக்கையில் அமர்பவர்தான் கட்டாயமாக சீட்பெல்ட் அணிய வேண்டும் பின் இருக்கைகளில் பயணம் செய்வோருக்கு அது தேவையில்லை என்று பலர் கருதுகின்றனர். இதுவும் தவறு. பின் இருக்கையில் பயணம் செய்வோர் விபத்து ஏற்படும்போது முன் இருக்கையில் மோதிக்கொள்ள நேரிடும், அதனால் பெரும் காயமோ, உயிர்ச்சேதமோ ஆகலாம்.

    அது போலவே பயணியர் பலர் பின் இருக்கையில் நன்றாகச் சாய்ந்து படுத்துத் தூங்கிக்கொண்டு செல்வதும் வாடிக்கையாகும். இது சரியான செயல் அல்ல. பின் இருக்கையில் பயணம் செய்வோரும் சீட்பெல்ட் அணிந்துகொண்டு அமர்ந்தவாறே பயணம் செய்வதுதான் சரியானதாகும். தூக்கம் வந்தாலும் சீட்பெல்ட் அணிந்து கொண்டு அமர்ந்தவாறே தூங்குவதுதான் நல்லது. ஏனெனில் படுத்துக்கொண்டு பயணிக்கும்போது விபத்து ஏற்பட்டால் வண்டி பக்கவாட்டில் இடிபடும்போது பயணியிக்குத் தலைக்காயம் ஏற்படும் வாய்ப்பு அதிகம். பெரும்பாலும் தலைக்காயங்களால் மரணம் ஏற்படும் வாய்ப்பும் அதிகம்.

    இரண்டாவதாக பாதுகாப்பு காற்றுப்பை. இது ஒரு கூடுதல் பாதுகாப்புச் சாதனம். கார் வாங்கும்போது ஓட்டுநர் மற்றும் பயணியருக்கான கூடுதல் பாதுகாப்பாக காற்றுப்பை இருக்கும் வண்டியை வாங்குவது நல்லது. விபத்து நடக்கும்போது காற்றுப் பைகள் தாமாகவே விரிந்துகொள்ளும். அதனால் பயணி வண்டியின் முன்பக்கத்திலோ அல்லது பக்கவாட்டிலோ இடித்துக்கொள்ள நேரிட்டாலும் காற்றுப்பையிலேயே மோதுவார். அது ஒரு தலையணையைப் போல மிருதுவாக இருப்பதால் பெரும் காயமோ உயிர்ச்சேதமோ ஏற்படுவதில்லை.



    என்னுடைய காரில் கூடுதல் பாதுகாப்புக் காற்றுப் பை உள்ளதால் சீட்பெல்ட் அணியாவிட்டால் ஒன்றும் ஆகாது என்றும் பலர் எண்ணுகின்றனர். அது தவறு. சீட்பெல்ட் அணிந்துகொண்டு அமரும் போதுதான் இந்தப் பாதுகாப்பு முழுமையாகக் கிட்டும். சீட்பெல்ட் அணியாமல் அமரும் போது காற்றுப்பை வெளிவந்து விரியும் வேகத்தோடு அதன்மீது மோதினால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிர்ச்சேதமாகும் வாய்ப்பு அதிகம். காரிலுள்ள காற்றுப்பைக் கூடுதல் பாதுகாப்புச் சாதனம்தான்.

    மூன்றாவதாக ஹெட்ரெஸ்ட் எனப்படும் தலை தாங்கி அணை. பெரும்பாலும் இதன் முக்கியத்துவம் சரியாக உணரப்படுவதில்லை. ஹெட்ரெஸ்ட் கழுத்துக்கும், தண்டுவடத்துக்கும் பெரும் பாதுகாப்பை அளிக்கிறது. வண்டியில் ஓட்டுநர் மற்றும் பயணியின் உயரத்துக்கேற்ப ஹெட்ரெஸ்டைச் சரியான அளவில் பொருத்திக்கொள்ளுதல் அவசியம்.

    விபத்து நேரத்தில் பயணியின் தலைப் பின்பக்கமாகச் சாயநேரிடும். வண்டியின் வேகத்தையும் மோதலின் தீவிரத்தையும் பொருத்து தலை பின்பக்கமாக சாயும் வேகம் அதிகரிக்கலாம். அதனால் கழுத்துப்பகுதியில் பெரும் காயமோ அல்லது கழுத்துமுறிவோ ஏற்படலாம். கழுத்துமுறிவினால் நிச்சயம் மரணம் ஏற்படும். ஹெட்ரெஸ்ட் சரியாகப் பொருந்தியிருந்தால் இதனைத் தடுக்கலாம். ஆனால் 90 சதவீத ஓட்டுனர்கள் இந்த விஷயத்தில் அலட்சியமாக இருக்கிறார்கள். பயணிகளுக்கோ இதுகுறித்த புரிதல் இல்லவேயில்லை என்பது வருத்தமளிக்கும் விஷயமாகும்.

    வண்டியிலுள்ளப் பாதுகாப்பு சாதனங்களைப்பற்றி நன்றாக அறிந்துகொள்வதும், அவற்றைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்வதும் அவசியமாகும். சீட்பெல்ட் அணியாமல் பயணிப்பது குற்றம் என்றும் அதற்கு அபராதம் விதிக்கப்படுகிறது என்றாலும் சட்டத்தால் மட்டுமே விபத்துகளைத் தடுத்துவிடமுடியாது. என்னதான் சட்டமிருந்தாலும் பொறுப்பான பயணமே பாதுகாப்பான பயணம் என்பதை நாம் உணர்ந்து நடக்காதவரையிலும் விபத்துகளையும் உயிரிழப்புக்களையும் தடுக்க முடியாது.

    சோ. கணேச சுப்ரமணியன், கல்வியாளர்
    தீக்காயத்தால் பாதிக்கப்படுபவர்களுக்கு முதலுதவி என்பது முக்கியமானது. தீக்காயம் அடைந்தவர்களுக்கு எப்படி? முதலுதவி அளிக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம்.
    தீக்காயத்தால் பாதிக்கப்படுபவர்களுக்கு முதலுதவி என்பது முக்கியமானது. அதுவே காயத்தின் வீரியத்தை கட்டுக்குள் வைப்பதற்கு உதவும் முதல் கட்ட சிகிச்சையாகும். தீக்காயம் அடைந்தவர்களுக்கு எப்படி? முதலுதவி அளிக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம்.

    விபத்துகளின் மூலமாக ஏற்படும் காயத்திற்கும், தீக்காயத்திற்கும் நிறைய வேறுபாடுகள் இருப்பதால் இரண்டுக்கும் ஒரே மாதிரியான சிகிச்சையை நாமாகவே எடுத்துக்கொள்ளக் கூடாது.

    தீப்புண்ணில் கிருமிகள் தொற்று ஏற்படும் ஆபத்து அதிகம். எனவே அசுத்தம் மற்றும் கிருமிகள் புண்ணில் படாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். கடுமையான தீக்காயங்களுக்கு அதன்மீது காற்றுப்படாமல் மூடி பாதுகாக்க வேண்டும். இது வலியை குறைக்கும்.

    தீ விபத்தில் உடலின் மீது துணி ஒட்டிக் கொண்டிருந்தால் அவசரப்பட்டு அந்த துணியை அகற்றக் கூடாது. தீக்காயங்கள் அதிகம் ஏற்பட்டிருந்தால் பாதிக்கப்பட்டவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும். மண்எண்ணெய், பெட்ரோல் உள்ளிட்ட எண்ணெய் பொருட்களால் தீ விபத்து நிகழ்ந்தால் அங்கே தண்ணீர் ஊற்றக் கூடாது. மீறி ஊற்றினால் அது எரிகின்ற எண்ணெயை மேலும் பரவச் செய்துவிடும்.



    ஒருவரின் ஆடையில் தீப்பற்றி விட்டால் உடனே தண்ணீரை அவர் மேல் ஊற்றி தீயைப் பரவவிடாமல் அணைக்கலாம். அல்லது கம்பளி, ஜமுக்காளம் போன்ற தடிமனான துணியைக் பாதிக்கப்பட்டவர் மீது போர்த்தி அவர்களை தரையில் உருளச் செய்தாலும் தீ அணைந்து விடும். வீடுகளில் சமைக்கும்போது கொதிக்கும் வெந்நீர் அல்லது எண்ணெய் கைதவறி உடம்பில்பட வாய்ப்பு உண்டு. இதனால் தோல் வெந்து கடும் எரிச்சல் ஏற்படும். இம்மாதிரியான சமயங்களில் பாதிக்கப்பட்ட இடத்தில் ரசாயன கலவையான பேனா மை, காபித்தூள் போன்றவைகளை பூசக் கூடாது. இது மேலும் புண்களில் நோய்த் தொற்றுக்கு வழிவகுக்கும். தீக்காயத்தால் ஏற்பட்ட கொப்பளங்களை கூரிய பொருட்களால் குத்தி உடைப்பது தவறானது. இதுவும் நோய்த்தொற்றுக்கு வழிவகுக்கும்.

    தீக்காயத்தை மூன்று வகையாக பிரிக்கலாம். மேல்தோல் மட்டும் சிவந்துவிடுதல் முதல் நிலை பாதிப்பு, தோலின்மேல் கொப்புளங்கள் உண்டாவது இரண்டாம் நிலை, மேல்தோல், கீழ்தோல், அதற்கு அடியில் உள்ள திசுக்கள் வரையிலும் ஆழமாகத் தீயால் கருகிவிடுவதை மூன்றாம் நிலை என்கிறார்கள். தீப்பிடித்தவர் பதற்றத்தில் அங்கும் இங்குமாக ஓடினால் தீயின் வேகம் கூடி பாதிப்பு அதிகரிக்கும். ஆகவே பதற்றப்படாமல் கவனமாக அவரை காப்பாற்ற முயற்சிக்க வேண்டும்.

    பாதிக்கப்பட்டவரின் உடம்பில் சுத்தமான காற்றுபடுமாறு பார்த்துக் கொள்வது நல்லது. ஒரு போதும் தீக்காயத்தின் மீது சோப்பு உபயோகித்து கழுவக்கூடாது. எண்ணெய் மற்றும் அமிலத்தால் ஏற்பட்ட தீ விபத்துகளுக்கு மணலை உபயோகித்து நெருப்பை அணைக்க முயலுங்கள். மற்ற தீவிபத்துகளை நீரூற்றி அணைக்க முயற்சி செய்யுங்கள். தீ விபத்துகளின்போது அதில் சிக்கியவர்களை மீட்பது குறித்தும், காயம் அடைந்தவர்களுக்கு முதலுதவி அளிப்பது குறித்தும்  விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். 
    ஆண்-பெண் நட்பு என்பது நிச்சயம் எல்லைக்குட்பட்டது என்பதை பெண்கள் நினைவில் வைக்க வேண்டும். அந்த எல்லையைத் தாண்டினால் அளவுக்கு மீறிய பிரச்சினைகளையும், தொல்லைகளையும் சந்திக்க வேண்டியதிருக்கும்.
    பருவ வயதுப் பெண்கள் `பாய்பிரண்ட்’ உடன் சுற்றித் திரிவதை இயல்பாக பார்க்க முடிகிறது. ஆண் நண்பர்களை தங்கள் அழகுக்கு கிடைத்த அங்கீகாரமாக அனேக பெண்கள் நினைக்கிறார்கள். பாய் பிரண்ட் இல்லையென்று வருத்தப்படும் பெண்களும் உண்டு.

    பாய்பிரண்டுகளுடன் இருப்பதே `ஜாலி` என்ற நினைப்பும் பெண்களிடம் இருக்கிறது. இளம்பெண்கள் இப்படி நினைத்துக் கொண்டிருக்க, பெற்றோருக்குள் எப்போதுமே பிள்ளைகள் மீது உரிமையுள்ள பொறுமல் இருந்து கொண்டுதான் இருக்கிறது.

    `ஆண் பெண் நட்பால் கலாசாரமே சீரழிந்து வருகிறது` என்ற எண்ணமும் சமூகத்தினரிடையே உள்ளது. பள்ளி - கல்லூரிகளில் ஆண், பெண் இருவரும் சேர்ந்து படிக்கிறார்கள். இது குழந்தைப் பருவத்திலேயே இயல்பாக பழகும் வாய்ப்பை ஏற்படுத்தி தருகிறது.

    ஆணும் பெண்ணும் சமூகத்தில் சமமாக, ஒன்றாக இருப்பது நல்லதுதான் என்றாலும், இப்படி இருக்கும்போது ஏற்படும் புரிதலும், தெளிவும் இல்லாத பழக்கம்தான் இன்றைய சீரழிவு நிலைக்கு முக்கிய காரணம். பணத்தை வாரி இறைத்து பெண்களை வளைக்கும் பாய்பிரண்டுகளும் பெருகி வருகிறார்கள்.

    வெறும் பொழுதுபோக்கிற்காக பழகும் பாய்பிரண்டுகளும் அனேகம். நல்ல நட்புடன் இருப்பவர்கள் கொஞ்சப்பேர் தான். எனவே ஆண்-பெண் நட்பு என்பது நிச்சயம் எல்லைக்குட்பட்டது என்பதை பெண்கள் நினைவில் வைக்க வேண்டும்.

    அந்த எல்லையைத் தாண்டினால் அளவுக்கு மீறிய பிரச்சினைகளையும், தொல்லைகளையும் சந்திக்க வேண்டியதிருக்கும் என்பதை மறந்து விடக்கூடாது.
    பல்வேறு வசதிகளை வாரி வழங்கும் ஸ்மார்ட்போன்களால் ஆபத்துகளும் அதிகம். அதிலும் பெண்களே ஸ்மார்ட்போன்களால் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள் என்பதே நிதர்சனமான உண்மை.
    ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தற்போதைய நிலவரப்படி நமது நாட்டில் 53 கோடி பேர் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

    பல்வேறு வசதிகளை வாரி வழங்கும் ஸ்மார்ட்போன்களால் ஆபத்துகளும் அதிகம். அதிலும் பெண்களே ஸ்மார்ட்போன்களால் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள் என்பதே நிதர்சனமான உண்மை.

    ஸ்மார்ட்போன் என்பது அதனை பயன்படுத்துபவருக்கு சிறந்த நண்பனாக விளங்குகிறது என்றால், அவர்களை ரகசியமாக உளவுபார்க்கும் உளவாளியும் அதுவே என்றால் அது மிகையாகாது.

    தமிழகத்தில் சில மாதங்களுக்கு முன்பு வாலிபர் ஒருவர் ஸ்மார்ட்போனில் உள்ள ஒரு செயலி மூலம் 80 பெண்களை ரகசியமாக கண்காணித்து அவர்களின் அந்தரங்கத்தை திருடி வெளிநாட்டு இணையதளங்களுக்கு விற்பனை செய்தார் என்கிற செய்தி அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

    ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் பெண்கள் விழிப்புணர்வுடன் செயல்பட்டால் தான் இது போன்ற குற்றங்களை தடுக்க முடியும். இதுபோன்ற குற்றங்களுக்கு முழுமுதற்காரணம் பெண்கள் அவர்களின் ஸ்மார்ட்போனை பிறரின் கையில் கொடுப்பது. இதுவே பல பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.

    ஒருவர் உங்களை ரகசியமாக கண்காணிக்க நினைத்தால் ஒரு செயலி (ஆப்) மூலம் நீங்கள் செய்யும் அனைத்து நடவடிக்கைகளையும் கண்காணிக்க முடியும் என்றால் உங்களால் நம்ப முடியுமா?

    பெண்களை கண்காணிப்பதற்கான பல செயலிகள் கூகுள் ப்ளே ஸ்டோரில் கொட்டிக்கிடக்கின்றன. அதன் மூலம் உங்கள் ஸ்மார்ட்போனின் கேமரா, போன் கால்கள், குறுஞ்செய்திகள், இருப்பிடம் மற்றும் அனைத்து நடவடிக்கையும் கண்காணிக்க முடியும்.

    இதில் சுவாரசியமான விஷயம் என்னவென்றால் அந்த கண்காணிக்கும் செயலி, உங்கள் ஸ்மார்ட்போனின் கேமராவை ஆன் செய்து விடும் என்பது தான். அதிலும் கேமரா ஆன் ஆகி இருக்கிறது என்பதை உங்களால் கண்டுபிடிக்கவே முடியாது. இதுபோன்ற செயலிகளை உங்கள் ஸ்மார்ட்போனில் மறைத்து வைக்கவும் முடியும்.

    இதனால் உங்கள் ஸ்மார்ட்போனில் கண்காணிக்கும் செயலிகள் இருப்பதை நீங்கள் அறிந்திருக்க மாட்டீர்கள். இது பெண்களுக்கு மிகவும் ஆபத்தான ஒன்று.



    பெண்கள் தங்களின் ஸ்மார்ட்போனில் ஏதேனும் செயலிகள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதா என்பதை கண்டறிய வேண்டும் என்றால் கூகுள் ப்ளே ஸ்டாரில் உள்ள “பிரி ஸ்பைவேர் ஆன்டு மால்வேர் ரீமுவர்” என்ற செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும். அந்த செயலி மூலம் ஸ்மார்ட்போனை முழுவதும் ஸ்கேன் செய்தால் ஏதேனும் கண்காணிக்கும் செயலி இருந்தால் காட்டிவிடும்.

    நம் ஸ்மார்ட்போனை யாரிடமும் கொடுக்கவில்லை என்றால் நாம் பாதுகாப்பாக இருக்கிறோம் என்று அர்த்தம் இல்லை. நாம் ஒரு செயலியை பதிவிறக்கம் செய்து ஸ்மார்ட்போனில் இன்ஸ்டால் செய்யும் போது அது கேட்கும் அனுமதி அனைத்திற்கும் படித்து பார்க்காமல் ‘ஐ அக்ரி’ என்பதை கிளிக் செய்துவிடுகிறோம். இது நம்மை அறியாமல் நாமே நமது தகவல்கள் திருட வழி ஏற்படுத்தி விடும். இது மிக பெரிய தவறு.

    ஒரு செயலி நமது ஸ்மார்ட்போனில் எதனையெல்லாம் அனுமதி கேட்கின்றது என்று கவனிக்காமல் ஐ அக்ரி என்பதை கிளிக் செய்து இன்ஸ்டால் செய்வதால் அந்த செயலியை உருவாக்கியவர் உங்களை கண்காணிக்க முடியும் மற்றும் உங்களை பற்றிய தகவல்களை உங்கள் அனுமதியுடன் திருடுவதற்கும் அதிக வாய்ப்பு உள்ளது.

    ஒரு செயலி கேட்கும் அனுமதிகளை படித்து பார்த்தாலே அது எவ்வளவு ஆபத்தான செயலி என்பதை உணர முடியும். மேலும் அந்த செயலியை உருவாக்கியவர் முதலிலே அவர்கள் என்ன தகவல்கள் உங்கள் ஸ்மார்ட்போனில் இருந்து எடுக்கிறார்கள் மற்றும் அதனை எந்தெந்த வழிகளில் பயன்படுத்துகிறார்கள் என்பதை தெளிவாக அவர்களின் பிரைவசி பாலிசியில் கூறிவிடுவார்கள். ஆனால் அதையும் நாம் கவனிக்காமல் இன்ஸ்டால் செய்கிறோம். இது நமக்கும், நம் ஸ்மார்ட்போனுக்கும் பாதுகாப்பு இல்லை.

    கூகுள் ப்ளே ஸ்டோரில் பல போலியான மற்றும் ஆபத்தான செயலிகளும் கொட்டிக்கிடக்கின்றன. முதலில் ஒரு செயலி பதிவிறக்க செய்யும் முன் அந்த செயலியின் ரேட்டிங் மற்றும் ரிவ்யூவை பார்க்க வேண்டும். ஏனென்றால் அதனுடைய ரேட்டிங் வைத்து அதனை எத்தனை நபர்கள் பயன்படுத்துகிறார்கள் என்பதையும், அதன் நம்பகத்தன்மையை அறிந்து கொள்ள முடியும்.

    ரிவ்யூ மூலம் அந்த செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தியவரின் கருத்துகளை தெரிந்து கொள்ளலாம். அடுத்ததாக நீங்கள் ஒரு செயலியை பதிவிறக்கம் செய்யும் முன் டெவலப்பர்ஸ் பெயரை கவனியுங்கள். டெவலப்பர்ஸ் பெயர் இல்லாத செயலிகளை பதிவிறக்கம் செய்வதை தவிர்த்துவிடுங்கள்.

    பெண்கள் தங்களின் ஸ்மார்ட்போனை பழுது நீக்க கொடுக்கும் போது சற்று கவனத்துடன் செயல்பட வேண்டும். ஏனெனில் நீங்கள் உங்களின் தனிப்பட்ட படங்கள், வீடியோக்களை ஸ்மார்ட்போனில் பதிவு செய்து, பின்னர் அவற்றை நீக்கி இருப்பீர்கள். ஆனால் மென்பொருள் மூலம் உங்கள் ஸ்மார்ட்போனில் இருந்து நீக்கப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்களை மீட்டு எடுத்துவிட முடியும்.

    எனவே ஸ்மார்ட்போனை பழுது நீக்குபவர்கள் அது பெண்ணின் ஸ்மார்ட்போனாக இருந்தால் அதில் நீக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்து ஆபாச இணையதளங்களுக்கு விற்க வாய்ப்பு இருக்கிறது.

    பெண்களுக்கு இத்தனை இன்னல்களை தரும் ஸ்மார்ட்போனால் அவர்களுக்கு ஒரு சில பயன்களும் இருக்கிறது. இன்றைய சூழலில் பெண்கள் பயன்படுத்தும் பல இடங்களில் ரகசிய கேமராக்களை வைத்து அவர்களின் அந்தரங்கங்களை வீடியோ எடுக்கிறார்கள் சில விஷக்கிருமிகள். கண்களுக்கே தெரியாத சிறிய ரகசிய கேமராவெல்லாம் வந்துவிட்டது.

    பெண்கள் ஓர் இடத்துக்கு சென்றால் அங்கே ஏதேனும் கேமரா இருக்கிறது என்ற சந்தேகம் எழுந்தால் தனது ஸ்மார்ட்போனை பயன்படுத்தி அதனை கண்டுபிடித்து விடலாம். கூகுள் ப்ளே ஸ்டாரில் “ஹிட்டன் கேமரா டிடெக்டர்” என்று செயலி கிடைக்கிறது. ரகசிய கேமரா இருக்கலாம் என்ற சந்தேகம் இருக்கும் அந்த இடத்தில் இந்த செயலியை பயன்படுத்தி ஸ்கேன் செய்தால், ஏதேனும் சிறிய ரகசிய கேமரா இருந்தால் கூட பிப் சத்தத்தை எழுப்பும். அதை வைத்து எளிதாக அந்த இடத்தில் கேமரா இருக்கிறது என்று தெரிந்து கொள்ள முடியும்.

    இந்த செயலியை ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் பெண்கள் அனைவரும் பயன்படுத்த வேண்டியது அவசியம். இன்றைக்கு பெண்கள் அவர்களுடைய ஸ்மார்ட்போனில் ஏராளமான செயலிகளை வைத்திருப்பார்கள். மிக முக்கியமாக வைத்திருக்க வேண்டிய செயலி “பீ சேப்” என்ற செயலி. இது பெண்கள் ஆபத்தான சூழ்நிலைகளில் உள்ள போது உதவும்.

    எந்த ஒரு தொழில்நுட்பத்திலும் உள்ள ஆபத்தினால் அதனை கைவிடுவது அறியாமை ஆகும். அதனை விழிப்புணர்வுடனும், பாதுகாப்பாகவும் பயன்படுத்துவது நமது கைகளில் தான் இருக்கிறது. இன்றைக்கு தொழில் நுட்பம் பாதுகாப்பாக தான் இருக்கிறது. அதனை பயன்படுத்தும் நாம் தான் பாதுகாப்பற்ற மற்றும் விழிப்புணர்வற்ற நிலையில் இருக்கிறோம் என்பதே நிதர்சனமான உண்மை.

    ப.பொன்விக்னேஷ்,
    கல்லூரி மாணவர்
    தற்போது நம்மில் பலரும் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு இரண்டையும் பயன்படுத்துகிறோம். ஆனால் இரண்டு கார்டில் எதை அதிகம் பயன்படுத்துவது சிறந்தது என்று அறிந்து கொள்ளலாம்.
    தற்போது நம்மில் பலரும் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு இரண்டையும் பயன்படுத்துகிறோம்.

    ஆனால் இரண்டு கார்டில் எதை அதிகம் பயன்படுத்துவது சிறந்தது? இந்தக் கேள்வி அவ்வப்போது நமக்குள் எழும்.

    டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு ஆகிய இரண்டுமே 16 இலக்க எண், காலாவதி தேதி மற்றும் பின் எண் கொண்டவைதான்.

    நமது வங்கிக் கணக்கில் பணம் இருந்தால்தான், டெபிட் கார்டில் செலவு செய்ய முடியும். ஆனால் வங்கிக் கணக்கில் பணம் இல்லை என்றாலும் கிரெடிட் கார்டை பயன்படுத்திச் செலவு செய்ய முடியும்.

    பொதுவாக டெபிட் கார்டுகளை விட கிரெடிட் கார்டுகள் ஏன் சிறந்தவை என்பது குறித்துப் பார்க்கலாம்...

    கிரெடிட் கார்டுகள் மூலம் ஷாப்பிங் செய்யும்போது ‘கேஷ் பேக்’, தள்ளுபடி போன்ற பலவிதமான சலுகைகள் கிடைக்கும். மேலும் கிரெடிட் கார்டு மூலம் செலவு செய்யும் தொகையை சரியாகத் திருப்பிச் செலுத்தும்போது வெகுமதி புள்ளிகளும் கிட்டும். அதனைப் பயன்படுத்திப் பரிசுகள், சேவை முன்னேற்றம், புதுப்பித்தல் போன்றவற்றைப் பெற முடியும். டெபிட் கார்டில் எப்போதாவதுதான் இது போன்ற பலன்கள் கிடைக்கும்.

    கிரெடிட் கார்டில் தவணை முறையில் பொருட்களை வாங்க முடியும், டெபிட் கார்டில் அப்படிச் செய்ய முடியாது. ஆனால் தவணை முறையில் கிரெடிட் கார்டை பயன்படுத்திப் பொருட்கள் வாங்கும்போது அதற்கு வட்டி செலுத்த வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

    டெபிட் கார்டு பரிவர்த்தனையில் மோசடி நடைபெற்றால், நம் வங்கிக் கணக்கில் உள்ள மொத்தப் பணத்தையும் இழக்க நேரிடும். ஆனால் கிரெடிட் கார்டில் அப்படிப்பட்ட அபாயம் இல்லை. நமக்குரிய வரம்பை மீறி பரிவர்த்தனை செய்ய முடியாது.

    நாம் ஏதேனும் கடன் பெற விண்ணப்பிக்கும்போது வங்கிகள் நமது கிரெடிட் ஸ்கோர் எனப்படும் கடன் மதிப்பெண்ணை சோதிக்கும். கிரெடிட் கார்டு மூலம் செலவு செய்து அவற்றைச் சரியான நேரத்தில் திருப்பிச் செலுத்தி இருந்தால் கிரெடிட் ஸ்கோர் உயர்ந்து இருக்கும். எனவே எளிதாகக் கடன் பெற முடியும். டெபிட் கார்டு மட்டும் வைத்து இருக்கும்போது கிரெடிட் ஸ்கோரை உயர்த்த முடியாது.

    இதெல்லாம் ஒப்பீட்டு அளவில், டெபிட் கார்டை விட கிரெடிட் கார்டை முன்னே நிறுத்தும் விஷயங்கள்.

    அதேநேரம், கிரெடிட் கார்டு தவணைத் தொகையை சரியான நேரத்தில் திருப்பிச் செலுத்த முடியும் என்றால் மட்டும் கிரெடிட் கார்டு வாங்குவது நல்லது. சரியான நேரத்தில் கடனை திருப்பிச் செலுத்தவில்லை என்றால் தாமதமாகக் கட்டணத்தைச் செலுத்தியதற்கு அபராதமும் வட்டியும் சேர்த்து செலுத்த வேண்டும்.

    கையில்தான் கார்டு இருக்கிறதே என்று, பார்த்த பொருட்களை எல்லாம் வாங்க விரும்புவோருக்கும் கிரெடிட் கார்டு சரி வராது. பாக்கெட்டில் பணம் இல்லாமலே செலவழிக்க முடிவது இன்று இனித்தால், நாளை நீளமான ‘ஸ்டேட்மெண்ட்’ வரும்போது கசக்கும்.

    ஓர் ஆசையில் நம்மை மீறிச் செலவழித்துவிடுவோம் என்று எண்ணுபவர்களும், நிதி நிர்வாகத்தில் ஒழுங்கில்லாதவர்களும் கிரெடிட் கார்டை நாடாமல் இருப்பதே நல்லது.
    நாம் இயற்கை முறையில் வளர்க்கும் காய்கனிகளில் இயற்கை உரங்களை இட்டு வளர்ப்பதால் பூச்சி மருந்து மற்றும் நச்சு இல்லாத காய்கனிகளை பெறலாம்.
    வீடுகளில் இருக்கும் காலி இடங்களில் தோட்டம் அமைத்து காய்கனிகளை சாகுபடி செய்யலாம். கடைகளில் வாங்கும் காய்கறிகளில் பூச்சி மருந்தின் தாக்கம் இருக்கும். ஆனால், நாம் இயற்கை முறையில் வளர்க்கும் காய்கனிகளில் இயற்கை உரங்களை இட்டு வளர்ப்பதால் பூச்சி மருந்து மற்றும் நச்சு இல்லாத காய்கனிகளை பெறலாம்.

    காலி இடம்

    வீடுகளில் இருக்கும் காலி இடங்களில் சிறிய அளவில் வீட்டு தோட்டம் அமைக்கலாம். ஆனால், ஒரு குடும்பத்திற்கு ஆண்டு முழுவதும் காய்கனிகளை பெற சற்று கூடுதலான இடத்தில் தோட்டங்களை அமைக்கலாம். ஒரு நபருக்கு ஒரு சென்ட் என்ற விகிதத்தில் 5 நபர்கள் உள்ள குடும்பத்திற்கு 5 சென்ட் வீதம் தோட்டம் அமைத்தால் ஆண்டு முழுவதும் வீட்டிற்கு தேவையான காய்கனிகளை பெறலாம்.

    வீட்டு தோட்டம் அமைக்க உள்ள இடத்தை தேர்வு செய்து கொண்டு அந்த இடத்தில் காணப்படும் தேவையற்ற சிமெண்டு கட்டிகள், கற்கள் உள்பட செடிகளின் வளர்ச்சியை பாதிக்கும் பொருட்களை முதலில் அகற்ற வேண்டும். தேர்ந்தெடுத்த நிலத்தை சத்துள்ளதாக மாற்ற அந்த மண்ணின் வளத்தை மேம்படுத்த வேண்டும்.

    தொழு உரம்

    உதாரணமாக, நிலத்தின் மண் உவர் மண்ணாக இருந்தால் பசுந்தாள், செம்மண் மற்றும் தொழுஉரத்தை நிலத்தில் இட்டு 2½ அடி ஆழம் வரை மண்ணை கொத்தி விட வேண்டும். களிமண் நிலமாக இருந்தால் பசுந்தாள் உரம், தொழுஉரம், சாம்பல் இவைகளை கலந்தும், களர் மண்ணாக இருந்தால் பசுந்தாள் உரத்தை அதிக அளவில் இட வேண்டும். சாதாரணமாக தோட்ட மண்ணில் தொழுஉரம் அல்லது கம்போஸ்ட் இவைகளை அதிகமாக இட்டு மண்ணை வளப்படுத்தி கொள்ளலாம்.



    காய்கனிகளை பயிரிடும் போது நீண்ட காலப்பயிர்களான முருங்கை, கருவேப்பிலை, கொய்யா, மாதுளை, எலுமிச்சை, பப்பாளி, லட்சக்கொட்டை கீரை, தவசிக்கீரை போன்றவற்றை தோட்டத்தின் ஓரத்தில் நட வேண்டும். இந்த சிறிய ரக செடிகளில் நிழலானது, தோட்டத்தின் உள்பகுதியில் விளையும் காய்கனி பயிர்களின் மீது படாதவாறு இருக்க வேண்டும். விரைவில் பலன் தரக்கூடிய கீரைவகைகள், கொத்தமல்லி இவைகளை தோட்டத்தில் நடப்பதற்காக விடப்பட்ட நடைபாதைகளின் 2 பக்கங்களிலும் சிறுபாத்தி அமைத்து பயிரிடலாம். பாத்திகளை பிரித்து, வரப்புகளில் வெங்காயம், முள்ளங்கி, இஞ்சி இவைகளை பயிரிடலாம்.

    கொடி வகைகள்

    படரும் கொடிவகைகளை தனி கவனத்துடன் பயிரிட வேண்டும். தோட்டத்தின் 4 மூலைகளிலும் பந்தல் அமைத்து அதன்கீழ் பாகல், பீர்க்கு, புடலை, அவரை ஆகியவற்றை விதைத்து பயன் பெறலாம். அவரை மற்றும் புடலையை ஒரே பந்தலில் படர விட வேண்டும். அவரை பூ விடும் முன் புடலை பூ விட்டு பலன் கொடுத்து விடும். அதிக வயதுடைய பயிரான கத்தரி, மிளகாய் பயிர்களுக்கு இடையே ஊடுபயிராக குறைந்த கால வயது பயிரான முள்ளங்கி, தண்டுக்கீரை இவைகளை சாகுபடி செய்து பலன் பெறலாம்.

    பயிர் நோய்கள் தாக்கும் நிலை காணப்பட்டால் வேம்பு கரைசல் உள்ளிட்ட இயற்கை பூச்சி கொல்லிகளை பயன் படுத்தி நோய்களை கட்டுப்படுத்த வேண்டும்.

    நடவு காலம்

    வீட்டு தோட்டம் அமைக்க தேர்ந்தெடுக்கப்பட்ட காலி இடத்தை சம அளவுள்ள பாத்திகளாக பிரித்து கொண்டால் முதல் பாதி பிப்ரவரி, மே மாதத்தில் தக்காளி பயிரும், ஜூன், ஜூலை மாதத்தில் டிசம்பர் மாதம் வரை கத்தரியும், ஜனவரி முதல் பிப்ரவரி வரை கீரை வகைகளையும் பயிர் செய்யலாம். இதே போல் 2-வது பாத்தியில் மார்ச் முதல் ஜூன் வரை வெண்டையும், ஜூன் முதல் செப்டம்பர் வரை கொத்தவரையும், செப்டம்பர், அக்டோபரில் முள்ளங்கியும், நவம்பர், பிப்ரவரியில் வெங்காயமும் பயிரிடலாம்.

    இதே போல் 3-வது, 4-வது பாத்திகளில் பயிரினை மாற்றி மாற்றி ஆண்டு முழுவதும் அனைத்து காய்கறிகளும் தினந்தோறும் கிடைக்கும் வண்ணம் திட்டமிட்டு பயிரிடலாம். காய்கறி பயிருக்கு என்று தயாரிக்கப்படும் நுண்ணுயிர் மற்றும் காய்கனி கலப்புரத்தை இட்டு கூடுதல் மகசூல் பெறலாம். இதன் மூலம் அன்றாடம் வீட்டு சமையலுக்கு நமது வீட்டு தோட்டத்தில் விளையும் காய்கறிகள் சுவையுடன் சத்தையும் தருவதாக இருக்கும்.
    பெண்ணால் படைக்கப்பட்ட இந்த உலகத்தில் பெண்ணை தவிர்த்து பார்க்க முடியாது. பெண்களை கொண்டாடும் காலமாக மாறிக் கொண்டு இருக்கிறது.
    இன்று (அக்டோபர் 11-ந்தேதி) உலக பெண் குழந்தைகள் தினம்.

    பெண்ணால் படைக்கப்பட்ட இந்த உலகத்தில் பெண்ணை தவிர்த்து பார்க்க முடியாது. பெண் என்பவள் அவளுக்காக வாழ்பவள் அல்ல. பிறருக்காக வாழ்பவள். அதனால் தான் மகாத்மா காந்தியடிகள் கூறினார் பெண்கள் முன்னேற வேண்டும் என்று. இதையே தான் இன்றைய ஜனாதிபதி, பிரதமர், முதல்-அமைச்சர் உள்ளிட்டோரும் வலியுறுத்துகிறார்கள்.

    ஒரு குடும்பத்தில் பெண் குழந்தை பிறந்து விட்டால் வருத்தப்படுபவர்களின் எண்ணிக்கை இன்று குறைந்து விட்டது. பெண்களை கொண்டாடும் காலமாக மாறிக் கொண்டு இருக்கிறது. எனவே வீட்டில் பெண் குழந்தை பிறந்து விட்டால் கொண்டாட வேண்டும். பெண்கள் இன்று கல்வி, கலை, விளையாட்டுகளில் ஆண்களை விடமுன்னேறி பல சாதனைகளை படைத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

    பிறக்கும் போது பெண்ணாக பிறப்பவள் பல உறவுகளுடன் இந்த உலகத்தில் வாழ்கிறாள். ஒரு ஆண் கல்வி கற்றால் அந்த கல்வி அவருக்கு மட்டுமே பயன்படும். ஆனால் ஒரு பெண் கல்வி கற்பது என்பது அவருக்கு மட்டுமல்ல, அவரது குடும்பம், இந்த சமுதாயத்துக்கே பயன்படும்.மேலும் பெண் குழந்தை பிறந்து விட்டால் அவர்களை நிறைய படிக்க வைக்க வேண்டும். அவர்களை குறுகிய வட்டத்தில் அடைத்து விடக்கூடாது. இன்று பெண்கள் பல சாதனையாளர்களாக வலம் வந்து கொண்டு இருக்கிறார்கள்.

    எவ்வளவு வேலை இருந்தாலும் ஆண்களை விட பெண்கள் திறமையாக செய்து முடிக்கும் ஆற்றலை பெற்று இருக்கிறார்கள். பெண்கள் என்ன தான் சாதனைபடைத்தவர்களாக வலம் வந்தாலும் அவர்கள் ஒருவரை சார்ந்து இருக்கும் நிலை சமுதாயத்தில் இருந்து வருகிறது. இந்த நிலை மாற வேண்டும். அவர்களுக்கான வாழ்க்கையை அவர்கள் வாழ வேண்டும். பெற்றோர் சொல்படி கேட்டு நடக்க வேண்டும் என்பதில் எந்த கருத்து மாறுபாடும் இல்லை. பெற்றோர் தான் அவர்களது வாழ்க்கையில் முதல் வழிகாட்டி என்பதை மறந்து விடக்கூடாது.

    ஒரு பெற்றோர் இருக்கிறார்கள் என்றால் அந்த பெற்றோரை ஆண்களை விட பெண் குழந்தைகள் தான் கடைசி வரை பொறுப்போடும், கடமையோடும் பார்த்துக்கொள்வார்கள். இது நமது சமுதாயத்தில் இப்போதும் நடந்து கொண்டு இருக்கிறது. பெண்கள் குழந்தை பருவத்தில் கல்வி, கலை, விளையாட்டு துறையில் முத்திரை பதிக்ககூடியவர்களாக விளங்கினாலும் திருமண பந்தத்துக்குள் வரும் போது அவர்களது கல்வி, கலை, விளையாட்டு என அத்தனை தனித்திறமையும் அப்படியே மூழ்கடிக்கப்படுகிறது.

    திருமணத்துக்கு பிறகும் பெண்கள் தங்களது திறமையை வெளிப்படுத்த இந்த சமுதாயம் அனுமதிக்க வேண்டும். அப்போது தான் அவர்களது குடும்பமும் இந்த சமுதாயமும் முன்னேற்றத்தை காண முடியும். திருமணத்துக்கு பின்னர் பெண்கள் படிக்க விரும்பினால் அவர்களை கண்டிப்பாக அனுமதிக்க வேண்டும். கல்விக்கு தடை போடக்கூடாது. இன்று பல பெண்கள் திருமணத்துக்கு பிறகு உயர்கல்வி பெற்று இன்று சாதனையாளர்களாக மாறி இருக்கிறார்கள். பெண்கள் விருப்பத்தை அவர்களது குடும்பத்தினர் ஏற்றுக்கொள்ள வேண்டும்.



    அவர்கள் ஒரு தொழில் முனைவோராக, கல்வியாளராகவோ வர விரும்பினால் அதற்கு தடை போடாமல் அவர்களது ஆசையை நிறைவேற்ற அனுமதிக்க வேண்டும். திருமணம் செய்து கொள்ளப்போகிறாயே இது எல்லாம் வேண்டாம் என அவர்களது கனவை சிதைத்து விடக் கூடாது.அதே போன்று பெண் குழந்தைகள் படித்தால் மட்டும் போதாது.

    சொந்த காலில் நிற்க பணமும் தேவைப்படுகிறது. எனவே பொருளாதாரத்திலும் கால்பதிக்க வேண்டும். அப்போது தான் பெண்களுக்கு முழுமையான சுதந்திரம் கிடைத்ததாக கருத முடியும். தயக்கம், தன்னம்பிக்கை, மனதில் உறுதி இவற்றை எல்லாம் மனதில் நிறுத்திக்கொண்டு பெண்கள் எந்த சவாலையும் எதிர்கொள்ள தங்களை தயார்படுத்திக்கொள்ள வேண்டும். தங்களுக்கு எதிரான தடைகளை முறியடித்து முன்னேற வேண்டும்.

    பெண் குழந்தைகள் மீது பெற்றோர் மட்டுமல்ல அவர்களை சுற்றி இருக்கிற ஒவ்வொருவரும் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும். பெண் குழந்தை பிறப்பை பிறவியிலேயே தடுக்கும் செயல் முன்பெல்லாம் நடந்து வந்தது. அந்த குற்ற செயல் இப்போது குறைந்து வருகிறது. அப்படி ஒரு செயல் இன்றும் நடந்து வந்தால் அதனை நாம் வன்மையாக கண்டிக்க வேண்டும். பெண் குழந்தை பிறப்பை தடுப்பது என்பது ஒரு மன்னிக்க முடியாத மாபெரும் குற்றமாகும். பெண் குழந்தை பிறப்பை சந்தோஷமாக பார்க்க வேண்டும்.கொண்டாட வேண்டும்.

    பெண்கள் இல்லாத இடமே இல்லை என்று சொல்லும் வகையில் ராணுவம், விமானப்படை, கடலோர காவல்படை, ரெயில்வே என பல துறைகளில் இன்று பெண்கள் தடம் பதித்துக்கொண்டு இருக்கிறார்கள். ராணுவத்தில் பெண்கள் அதிக அளவில் சேர வேண்டும் என சமீபத்தில் மத்திய ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். பெண்கள் அதிக அளவு ராணுவத்தில் சேர வேண்டும். விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா போன்று ஒவ்வொரு பெண்களும் ஒரு வீராங்கனையாக வர வேண்டும். தன்னம்பிக்கை, துணிச்சல், திறன் மேம்பாடு போன்றவற்றை பெண்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும்.

    பெண்ணை தாயாக மதிக்கும் இந்த சமுதாயத்தில் பெண் குழந்தைகளிடம் பாலியல் துன்புறுத்தல்கள் நடந்து வருவது மிகவும் கண்டிக்கத்தக்கது. படிக்கிற இடத்திலும் சரி அல்லது பணி செய்யும் எல்லா இடங்களிலும் சரி பெண்களுக்கு பாலியல் ரீதியாக வரும் துன்புறுத்தல், கொடுமைகள் களையப்படவேண்டும். அத்தகைய குற்ற செயல்களில் ஈடுபடுவோரை உடனடியாக தண்டிக்க வேண்டும். அப்போது தான் பெண் குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்ற செயல்கள் குறையும். மனரீதியாகவோ அல்லது உடல் ரீதியாகவோ குற்றம் இழைப்பவர்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும்.

    இந்த சமுதாயத்துக்காகவே படைக்கப்பட்ட பெண்ணினம் தன்னை மட்டும் கவனிக்க தவறி விடும். எனவே எல்லா பெண்களும், பெண் குழந்தைகளும் தங்களையும் பார்த்துக்கொள்ள வேண்டும். தங்கள் மீது அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும். இந்தியா வளர்ந்த நாடாக இருக்க வேண்டும் என்றால் பெண்களுக்கு ஊக்கமும் உற்சாகமும் அளிக்க வேண்டும்.

    பெண்கள் முன்னேற்றத்துக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். மகாத்மா காந்தியடிகள் நமது நாட்டில் கிராமம் முன்னேற வேண்டும் விரும்பினார். கிராமமாக இருந்தாலும் நகரத்தின் முன்னேற்றமாக இருந்தாலும் அது பெண்கள் முன்னேற்றத்தை பொறுத்தே அமையும்.பெண்ணை இந்த உலகத்தின் பூமியாகவும், கடவுளாகவும், நதியாகவும் சித்தரித்து கொண்டாடும் நாம் பெண்ணினத்துக்கு துரோகம் இழைப்பதை விட்டு விட்டு பெண்மையை போற்ற உறுதிமொழி ஏற்போம்.

    டாக்டர் கே.மீனா,
    முன்னாள் துணை வேந்தர்,
    பாரதிதாசன் பல்கலைக்கழகம்
    சபரிமலைக்கு வரும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வது திருவிதாங்கூர் தேவஸ்தானம் போர்டின் பொறுப்பு ஆகும் என்று கேரள தேவஸ்தான துறை மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன் கூறினார். #KadakampallySurendran
    திருவனந்தபுரம்:

    சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு பற்றி கேரள தேவஸ்தான துறை மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன் திருவனந்தபுரத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    வரலாற்று சிறப்பு மிக்க இந்த தீர்ப்பை வரவேற்கிறோம். சபரிமலையில் அனைத்து தரப்பு பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்பதே கேரள அரசின் நிலைப்பாடு. அதைத்தான் நீண்ட நாட்களாக வலியுறுத்தி வந்தோம். சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் மூலம் அரசின் முடிவு நியாயப்படுத்தப்பட்டு இருக்கிறது.

    சபரிமலையில் மட்டுமின்றி ஆராதனை கோவில்கள் எதுவானாலும், பெண்களை தனிமைப்படுத்துவது அவர்களை அவமதிப்பதற்கு சமமானது. சாதி, மத, பேதம் இன்றி அனைத்து மக்களும் தரிசிக்கும் சபரிமலை கோவிலில் குறிப்பிட்ட வயது பெண்களுக்கு தடை விதிப்பது மனித உரிமை மீறல் ஆகும். இதற்கு சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு மூலம் நியாயம் கிடைத்து உள்ளது.

    சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை அமல்படுத்தவேண்டியதும், அங்கு வரும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதும் திருவிதாங்கூர் தேவஸ்தானம் போர்டின் பொறுப்பு ஆகும். இதுகுறித்து தேவஸ்தானம் போர்டு அதிகாரிகளுடன் கலந்து ஆலோசனை நடத்தி தீர்மானிக்கப்படும்.

    கால மாற்றத்திற்கு ஏற்ற வளர்ச்சியை ஏற்று கொள்ளும் மக்கள், சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பை ஏற்றுக் கொள்வார்கள் என்று நம்புகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #KadakampallySurendran
    பாலியல் வன்முறை ரீதியாக பெண்கள் வஞ்சிக்கப்படும் சம்பவங்கள் நடக்கும்போது, அந்த சம்பவம் எப்படி நடந்தது, ஏன் நடந்தது என்று அம்மாக்கள் மகள்களுக்கு சொல்லிக் கொடுக்கவேண்டும்.
    சிறுமிகள், டீன்ஏஜ் பெண்கள் பாலியல் தொடர்புடைய சிக்கல்களில் எளிதாக மாட்டிக் கொள்கிறார்கள். செல்போன், இன்டர்நெட் போன்றவை அதற்கு காரணமாக இருக்கின்றன.

    அம்மாக்கள் கவனமாக இருந்தால், பெண்களுக்கு சிக்கல் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளலாம்!

    அதாவது, பாலியல் வன்முறை ரீதியாக பெண்கள் வஞ்சிக்கப்படும் சம்பவங்கள் நடக்கும்போது, அந்த சம்பவம் எப்படி நடந்தது, ஏன் நடந்தது என்று அம்மாக்கள் மகள்களுக்கு சொல்லிக் கொடுக்கவேண்டும். அப்படி ஒரு சம்பவம் நடந்தால் எப்படி அதில் இருந்து தப்பிக்கவேண்டும் என்று சொல்லிக்கொடுக்கவேண்டும்.

    அறிமுகமற்ற ஆண்களோடு பேசும்போது எப்படி எல்லாம் முன்னெச்சரிக்கையாக நடந்து கொள்ளவேண்டும் என்பதை மகள்களுக்கு கற்றுக்கொடுங்கள். செல்போன், இன்டர்நெட் போன்றவை மூலம்தான் சிக்கலுக்குரிய பந்தங்கள் உருவாகின்றன. அதனால் மகள் எதற்காக செல்போன், இன்டர்நெட் போன்றவைகளை பயன்படுத்துகிறாள் என்பதை எப்போதும் அம்மா கண்காணிக்கவேண்டும்.

    அவளது நண்பர்கள் யார், அவர்களது நடவடிக்கைகள் எப்படி இருக்கின்றன என்பதை எல்லாம் அம்மா அறிந்திருக்கவேண்டும். காதல் தொடர்பு ஏதாவது இருப்பதாக அறிந்தால் டென்ஷம் ஆகாதீர்கள். மகளை அடக்குதல், அடித்தல், முடக்கிப்போடுதல் போன்றவை எதிர்விளைவுகளையும், பழிவாங்கும் உணர்வுகளையும் தோற்றுவித்துவிடும். சரியான பருவத்தில் ஏற்படும், சரியான காதலுக்கு தான் ஒருபோதும் எதிரியல்ல என்பதை புரியவைத்து, பிரச்சினையை சுமூகமாக தீர்க்க முன்வரவேண்டும்.



    டீன்ஏஜ் பருவத்தில் மாடர்ன் டிரஸ் அணியும் ஆர்வம் அதிகரிக்கும். ஆனால் அது அவள் உடலுக்கு பொருத்தமாக இருக்கிறதா என்பதைப் பார்த்து சரியான முறையில் அணியச் செய்ய வேண்டும். உடல் உறுப்புகளை பாதுகாப்பதில் உடையின் பங்கு என்ன என்பதை மகள்களுக்கு புரிய வைக்கவேண்டும்.

    ஆண் ஒருவர் அனாவசியமாக பெண்ணின் உடலைத் தொடுதல், உடலை வர்ணித்தல், அனாவசிய அழைப்பு விடுத்தல் போன்ற எதிலாவது ஈடுபட்டால் அந்த நிமிடத்திலே விழிப்படைந்து கோபத்தையும், ஆக்ரோஷத்தையும் காட்டத் தெரியவேண்டும்.

    ‘இந்த மாதிரி வேலைகளை எல்லாம் என்னிடம் வைத்துக்கொள்ளாதே’ என்று தைரியமாக சொல்லவேண்டும். அவ்வாறு தைரியமாக சொன்னால், ‘இந்தப் பெண்ணிடம் தன் எதிர்பார்ப்பு எதுவும் நடக்காது’ என்று அவன் ஒதுங்கிவிடுவான்.

    எதை வேண்டுமானாலும் என் அம்மாவிடம் என்னால் பேச முடியும் என்ற நம்பிக்கையை மகளுக்கு கொடுங்கள். அப்படி ஒரு நம்பிக்கை அவளுக்கு ஏற்பட்டுவிட்டால், எந்த விஷயத்தையும் அவள் மனதில் வைக்கமாட்டாள். எல்லாவற்றையும் மனந்திறந்து பேசத் தொடங்கி விடுவாள்.

    டீன்ஏஜில் ஒரு பெண் செக்ஸ் பற்றி எதை எல்லாம் தெரிந்துகொள்ள வேண்டுமோ அதை எல்லாம் அவள் தன் தாய் மூலம் தெரிந்துகொள்வது நல்லது. தவறான புத்தகங்கள், தோழிகள், படங்கள் மூலம் அவள் தெரிந்துகொள்ள விரும்புவது நல்லதாக இருக்காது.

    ×