search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நீட்டிப்பு"

    • 17-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது
    • இரவு 8.30 மணிக்கு அடைக்கப்படும் நடை 9 மணிக்கு அடைக்கப் படுகிறது.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு வசதியாக தினமும் அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு பகல் 12.30 மணிக்கு அடைக்கப்படுவது வழக்கம். அதேபோல தினமும் மாலை 4 மணிக்கு நடை திறக்கப் பட்டு இரவு 8.30 மணிக்கு நடை அடைக்கப்படுகிறது.

    இந்த நிலையில் கேரளா வில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவில் நடை மண்டல பூஜைக்காக வருகிற 16-ந்தேதி திறக்கப்படுகிறது. அன்று முதல் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து அய்யப்ப பக்தர்கள் துளசி மாலை அணிந்து விரதம் இருந்து இருமுடி கட்டு கட்டி சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்வது வழக்கம்.

    சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்களில் பெரும்பாலா னவர்கள் கன்னியாகுமரிக்கு வந்து முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி பகவதி அம்மனை வழிபடுவது வழக்கம். இதனால் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் பக்தர்களின் கூட்ட நெரி சலை தவிர்க்க கோவி லின் நடை திறக்கும் நேரத்தை நீட்டிக்க குமரி மாவட்ட கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதன்படி வருகிற 17-ந்தேதி முதல் பக்தர்களின் தரிசனத்துக்கு வசதியாக பகல் 12.30 மணிக்கு அடைக்கப்படும் நடை மதியம் 1 மணி வரை நீட்டிக்கப்படுகிறது. அதேபோல இரவு 8.30 மணிக்கு அடைக்கப்படும் நடை 9 மணிக்கு அடைக்கப் படுகிறது.

    இந்த தகவலை குமரி மாவட்ட திருக்கோவில் களின் அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராம கிருஷ்ணன், இணை ஆணை யர் ரத்தினவேல் பாண்டி யன், நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளரும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளரு மான ஆனந்த் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

    • சம்பா பருவ சாகுபடி தாமதமாக செய்யப்பட்டு வருகிறது.
    • பயிர் காப்பீடு செய்வதற்கான காலக்கெடுவை தமிழ்நாடு அரசு நீட்டிக்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட கலெக்டருக்கு, தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாவட்ட தலைவர் ராமச்சந்திரன், மாவட்ட செயலாளர் பாஸ்கர் ஆகியோர் மின்னஞ்சல் மூலம் இன்று காலை அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சாவூர், திருவாரூர் , நாகை, மயிலாடுதுறை உள்பட காவிரி டெல்டா பகுதிகளில் நடப்பாண்டில் சாகுபடி செய்யப்பட்ட குறுவைப் பயிர் போதிய தண்ணீர் வரத்தின்றி பெரும்பாலான ஏக்கர் பயிர்கள் கருகி வீணாகி விட்டன.

    இந்நிலையில் சம்பா பருவத்திற்காக போதிய தண்ணீர் கிடைக்காததால், சம்பா பருவ சாகுபடி தாமதமாக செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் சம்பா பருவத்திற்கான பயிர் காப்பீடு செய்வதற்கு நவம்பர் 15 வரை செய்யலாம் என அரசு அறிவித்துள்ளது.

    பயிர் காப்பீடு செய்வதற்கான சிட்டா அடங்கல் பெறுவதற்கு விவசாயிகள் நிர்வாக காரணங்களினால் அலைக்கழிக்கப்படுகின்றனர்.

    தற்போது மழை பெய்து வருவதாலும், காவேரி தண்ணீர் ஓரளவு வருவதை நம்பியும் விவசாயிகள் சம்பா சாகுபடியில் இறங்கி உள்ள நிலையில் காப்பீடு செய்வ தற்கான காலக்கெடுவை தமிழ்நாடு அரசும், தஞ்சை மாவட்டம் நிர்வாகமும் பரிசீலித்து மேலும் ஒரு மாத காலத்திற்கு நீட்டிப்பு செய்ய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பாலக்காடு, சொரனூர், மங்களூரு வழியாக கோவை - ஜபல்பூர் இடையே வாராந்திர சிறப்பு ெரயில்கள் இயக்கப்படுகின்றன.
    • கோவை - ஜபல்பூர் வாராந்திர சிறப்பு ெரயில்கள் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளன.

    திருப்பூர்:

    கோவை - ஜபல்பூர் வாராந்திர சிறப்பு ெரயில்கள் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளன.

    பாலக்காடு, சொரனூர், மங்களூரு வழியாக கோவை - ஜபல்பூர் இடையே வாராந்திர சிறப்பு ெரயில்கள் இயக்கப்படுகின்றன.இந்த வாராந்திர சிறப்பு ெரயில்களின் சேவை காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.ெரயில் எண் (02198) ஜபல்பூர் - கோவை இடையே, வாராந்திர சிறப்பு ெரயில் 3ந்தேதி முதல் 29ந்தேதி வரை வெள்ளிக்கிழமை அன்று ஜபல்பூரில் இருந்து 11.50 மணிக்கு புறப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை 2.40 மணிக்கு கோவை வரும். ெரயில் எண் (02197) கோவை - ஜபல்பூர் வாராந்திர சிறப்பு ெரயில் கோவையில் இருந்து 6ந்தேதி முதல் ஜனவரி 1-ந்தேதி வரை திங்கட்கிழமை கோவையிலிருந்து 5.05 மணிக்கு புறப்பட்டு, புதன்கிழமை 8:45 மணிக்கு ஜபல்பூரை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • செகந்திராபாத்-ராமநாதபுரம் ரெயில் சேவை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
    • இந்த தகவலை தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

    மதுரை

    செகந்திராபாத்- ராமநாதபுரம்- செகந்திராபாத் சிறப்பு விரைவு ரெயில்களின் சேவையை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீட்டித்து தென்மத்திய ரெயில்வே அறிவிப்பு வெளி யிட்டுள்ளது.

    அதன்படி செகந்திரா பாத்- ராமநாதபுரம் சிறப்பு ரெயில் (07695) செப்டம்பர் 6, 13, 20, 27 ஆகிய புதன் கிழமைகளில் செகந்திரா பாத்தில் இருந்து இரவு 09.10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் இரவு 11.45 மணிக்கு இராமநாதபுரம் வந்து சேரும்.

    மறு மார்க்கத்தில் ராமநாதபுரம் - செகந்திராபாத் சிறப்பு ரெயில் (07696) செப்டம்பர் 8, 15, 22, 29 ஆகிய வெள்ளிக்கிழமைகளில் ராமநாதபுரத்தில் இருந்து காலை 9.50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 12.50 மணிக்கு செகந்திராபாத் சென்று சேரும். இந்த ரெயில்கள் நலகொண்டா, மிரியால் குடா, சட்டெனப்பள்ளி, குண்டூர், தெனாலி, பாபட்லா, ஓங்கோல், காவாலி, நெல்லூர், கூடூர், சென்னை எழும்பூர், செங்கல்பட்டு, விழுப்புரம், திருப்பாதிரிப்புலியூர், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை.

    திருவாரூர், திருத்துறைப்பூண்டி, அதிராம்பட்டினம், பட்டுக் கோட்டை, அறந்தாங்கி, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரெயில்க ளுக்கான பயண சீட்டு முன்பதிவு தற்போது நடை பெற்று வருகிறது.

    • கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் நொய்யல் ஆற்றின் இருபுறமும் சாலை வசதி செய்ய வேண்டும்.
    • கோவை கொடிசியா அரங்கு போல் திருப்பூரில் நிரந்தர வர்த்தக மையம் அமைக்க வேண்டும்.

     திருப்பூர்:

    கோவை மண்டல அளவிலான மாஸ்டர் பிளான்-2047 திட்டம் தயாரிக்கும் பணியை நகர் ஊரமைப்புத்துறை தொடங்கியுள்ளது. கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களுக்கு அறிக்கை தயார் செய்யப்படுகிறது. திட்ட அறிக்கை தயாரிக்கும் முன்பு, திருப்பூர் பனியன் தொழில் அமைப்புகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். அதன்படி திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க அலுவலகத்தில் தொழில்துறையினருடன் கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்துக்கு திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் கே.எம்.சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். நகர் ஊரமைப்புத்துறை உதவி இயக்குனர் புஷ்பராஜ் வரவேற்றார். சைமா சங்க தலைவர் ஈஸ்வரன், நிட்மா தலைவர் அகில் ரத்தினசாமி, திருப்பூர் நகர்ப்புற வளர்ச்சிக்குழு உறுப்பினர் சண்முகராஜ், திருப்பூர் வெற்றி அமைப்பின் தலைவர் சிவராம், டெக்பா சங்க தலைவர் ஸ்ரீகாந்த், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க பொதுச் செயலாளர் திருக்குமரன் உள்ளிட்டோர் பங்கேற்று, திருப்பூரின் எதிர்கால தேவைகள் குறித்து பேசினார்கள்.

    கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் நொய்யல் ஆற்றின் இருபுறமும் சாலை வசதி செய்ய வேண்டும். மெட்ரோ ரெயில் திட்டத்தை திருப்பூர் வரை நீட்டிக்க வேண்டும். கோவை கொடிசியா அரங்கு போல் திருப்பூரில் நிரந்தர வர்த்தக மையம் அமைக்க வேண்டும். திருப்பூரில் உள்ள ரெயில்வே கூட்ஷெட்டை விரைவில் வஞ்சிப்பாளையத்துக்கு மாற்ற வேண்டும். தொழிலாளர்களுக்கு வீட்டுவசதி வேண்டும்.

    விளையாட்டு அரங்கம் பெரிய அளவில் அமைக்க வேண்டும். தூத்துக்குடி துறைமுகத்துக்கு பின்னலாடைகளை எளிதில் கொண்டு செல்லும் வகையில் சாலை வசதிகளை மேம்படுத்த வேண்டும்.

    திருப்பூர் மாநகரை தொழில் நகருக்கு ஏற்ப அடிப்படை கட்டமைப்புகள் அனைத்தையும் செய்து கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

    • நெல்லையிலிருந்து வியாழக்கிழமை புறப்பட்டு வெள்ளிக்கிழமை பொள்ளாச்சி வந்து மேட்டுப்பாளையம் வரை இயக்கப்பட்டது.
    • இரவு 7:45 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்படும் ெரயில் பொள்ளாச்சிக்கு இரவு 10:03 மணிக்கு வந்து 10:05க்கு புறப்படும். செவ்வாய்க்கிழமை காலை 7:45 மணிக்கு இந்த ெரயில் நெல்லை சென்றடையும்.

     உடுமலை:

    நெல்லை - மேட்டுப்பாளையம் வாராந்திர சிறப்பு ெரயில் இயக்கப்படுகிறது. கடந்த ஏப்ரல் மாதம் முதல் 3மாதங்களாக இயக்கப்பட்ட iயில் நெல்லையில் வியாழக்கிழமை புறப்பட்டு வெள்ளிக்கிழமை பொள்ளாச்சி வந்து மேட்டுப்பாளையம் வரை இயக்கப்பட்டது.

    அதன்பின் மேட்டுப்பாளையத்தில் இருந்து வெள்ளிக்கிழமை இரவு புறப்பட்டு பொள்ளாச்சி வழியாக மீண்டும் நெல்லைக்கு சனிக்கிழமை சென்றடைந்தது.தற்போது ஜூலை 2-ந் தேதி முதல் செப்டம்பர் 25-ந் தேதி வரை இந்த ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனால் ரயில் இயக்கப்படும் நாட்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

    ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணிக்கு நெல்லையில் புறப்படும் சிறப்பு ரெயில் திங்கட்கிழமை காலை 4:45 மணிக்கு பொள்ளாச்சி அடையும். அதன்பின் 4:47 மணிக்கு புறப்பட்டு மேட்டுப்பாளையம் சென்றடையும்.மறு மார்க்கத்தில் திங்கட்கிழமை இரவு 7:45 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்படும் ரயில் பொள்ளாச்சிக்கு இரவு 10:03 மணிக்கு வந்து 10:05க்கு புறப்படும். செவ்வாய்க்கிழமை காலை 7:45 மணிக்கு இந்த ரயில் நெல்லை சென்றடையும். மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை, போத்தனூர், பொள்ளாச்சி, உடுமலை, பழநி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்துார், ராஜபாளையம், சங்கரன்கோவில், கடையநல்லுார், தென்காசி, பாவூர்சத்திரம், கீழக்கடையம், அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி ரெயில்நிலையங்களில் நிறுத்தப்படும். இத்தகவலை தெற்கு ெரயில்வே பாலக்காடு கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ரயில்வே அதிகாரிகள் வெளியிட்ட அறிவிப்பில், பொள்ளாச்சிக்கு அடுத்ததாக போத்தனூர் ரயில்வே சந்திப்பில் வாராந்திர ரயில் நிற்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.கடந்த முறை கிணத்துக்கடவில் நிறுத்தப்பட்ட இந்த ரயில், தற்போது அங்கு நிறுத்தம் செய்ய அறிவிப்பு இல்லை.கிணத்துக்கடவில் ரயில் நிற்காமல் செல்வதால் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.இங்கும் ரயில் நிறுத்தம் செய்ய வேண்டும் என கிணத்துக்கடவு ரயில் பயணியர் வலியுறுத்தியுள்ளனர்.

    • தமிழக அரசு 6 மாதங்களுக்கு ஒருமுறை ஒப்பந்தம் மேற்கொண்டு நிதி வழங்குகிறது.
    • இ-சேவை மையங்களுக்கான உள்கட்டமைப்பு வசதிகளையும் செய்து கொடுத்து வருகிறது.

    சென்னை:

    அரசு அலுவலகங்களை, மாநில தரவு மையத்துடன் இணைப்பதற்கு தேவையான தொழில்நுட்ப வசதிகளை டி.சி.எஸ் நிறுவனம் செய்து கொடுத்து வருகிறது. இ.சேவை மையங்களுக்கான உள்கட்டமைப்பு வசதிகளையும் செய்து கொடுத்து வருகிறது.

    இதற்காக தமிழக அரசு 6 மாதங்களுக்கு ஒருமுறை ஒப்பந்தம் மேற்கொண்டு நிதி வழங்குகிறது.

    இப்போது இதன் ஒப்பந்தம் முடிவடையும் நிலையில் டி.சி.எஸ்.நிறு வனத்துக்கு மேலும் 6 மாத காலத்துக்கு ஒப்பந்தத்தை நீட்டித்து தமிழக அரசு ஆணை பிறப்பித்து உள்ளது. இதற்காக டி.சி.எஸ் நிறுவனத்துக்கு அரசு ரூ.12.56 கோடி நிதி ஒதுக்கி உள்ளது.

    • வேளாண்மை, தோட்டக்கலை, மற்றும் வேளாண்மை பொறியியல் ஆகிய பட்டயப் படிப்புகளுக்கு தகுதியான வர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டது.
    • இப்படிப்புகளில் சேர சேலம், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த மாணவ- மாணவிகள் ஏராளமானோர் ஆர்வத் துடன் விண்ணப்பித்தனர்.

    சேலம், ஜூன்.12-

    தமிழ்நாடு அரசு வேளாண்மை பல்கலைக் கழகத்தில் நடப்பு கல்வி ஆண்டில் வேளாண்மை, தோட்டக்கலை, மற்றும் வேளாண்மை பொறியியல் ஆகிய பட்டயப் படிப்புகளுக்கு தகுதியான வர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டது. இப்படிப்புகளில் சேர சேலம், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த மாணவ- மாணவிகள் ஏராளமானோர் ஆர்வத் துடன் விண்ணப்பித்தனர். மாணவர்கள் தங்களது பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப் பங்களை இணைய தளத்தில் பதிவேற்றம் செய்வதற்கான கடைசி தேதி கடந்த 9-ந்தேதி வரை எனவும் நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் பட்டயப்படிப்புகளுக்கான விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் கடைசி தேதியை நீட்டிக்க வேண்டும் என்று பெற்றோர்கள், பொதுமக்கள் பல்கலைக்கழகத்துக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இதனை ெதாடர்ந்து வேளாண்மை, தோட்டக்கலை, மற்றும் வேளாண்மை பொறியியல் ஆகிய பட்டயப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க வசதியாக இணையதளம் மூலம் விண்ணப்பத்தை பதிவேற்றம் செய்வதற்கான கடைசி தேதி அடுத்த மாதம் 1-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    • சேலம், நாமக்கல், கரூர் வழியாக சிறப்பு ரெயில்கள் இருமார்க்கத்திலும் வாராந்திர சிறப்பு ரெயில்க ளாக இயக்கப்பட்டு வரு கின்றன.
    • இந்த ரெயில்களின் சேவை காலம் வருகிற 27-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    சேலம்:

    பெங்களூரு-வேளாங்கண்ணி இடையே சேலம், நாமக்கல், கரூர் வழியாக சிறப்பு ரெயில்கள் இருமார்க்கத்திலும் வாராந்திர சிறப்பு ரெயில்க ளாக இயக்கப்பட்டு வரு கின்றன. இந்த ரெயில்களின் சேவை காலம் வருகிற 27-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி பெங்களூரு-வேளாங்கண்ணி வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண்-06547) சனிக்கிழமை களில் காலை 7.50 மணிக்கு பெங்களூருவில் இருந்து புறப்பட்டு கிருஷ்ணரா ஜபுரம், பங்காருபேட்டை வழியாக காலை 11.50 மணிக்கு சேலம் வந்தடை யும். இங்கிருந்து 11.55 மணிக்கு புறப்பட்டு நாமக்கல், கரூர் திருச்சி, தஞ்சாவூர், நீடாமங்கலம், நாகப்பட்டினம் வழியாக இரவு 7 மணிக்கு வேளாங் கண்ணி சென்றடையும்.

    இதேபோல் மறு மார்க்கத்தில் வேளாங் கண்ணி- பெங்களூரு வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண்-06548) சனிக்கிழமைகளில் வேளாங்கண்ணியில் இருந்து இரவு 11.55 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 6.10 மணிக்கு சேலம் வந்த டையும். இங்கிருந்து 6.15 மணிக்கு புறப்பட்டு மதியம் 12.30 மணிக்கு பெங்களூரு சென்றடையும் என்று சேலம் ரெயில்வே கோட்ட அலுவலம் தெரிவித்துள்ளது.

    • ஒரத்தூர் சாலையில் மேம்பாலம் அமைக்கப்பட வேண்டியதின் அவசர அவசியம் குறித்து தீர்மானம் கொண்டு வந்தார்
    • அவசர பொது முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வின் பொது பணித் துறையால் நிறை வேற்றப்பட வேண்டியதுகுறித்து சிவகுமார் எம்.எல்.ஏ. பேசினார்

    விழுப்புரம்,

    சட்டமன்ற கூட்டத் தொடரில் மயிலம் எம்.எல்.ஏ. சிவக்குமார் முண்டியம்பாக்கம் ஒரத்தூர் சாலையில் மேம்பாலம் அமைக்கப்பட வேண்டியதின் அவசர அவசியம் குறித்து தீர்மானம் கொண்டு வந்தார். அவசர பொது முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வின் பொது பணித் துறையால் நிறை வேற்றப்பட வேண்டியது குறித்து சிவகுமார் எம்.எல்.ஏ. பேசினார்.

    இது குறித்து தமிழக சட்ட சபையில் சிவக்குமார் எம்.எல்.ஏ. பேசியதாவது:- சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலை முண்டி யம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே அமையுள்ள மேம்பா லத்தை ஒரத்தூர் பிரிவு சாலை வரை அமைக்கப்பட வேண்டும். இந்த மேம்பா லம் ரூ.60 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட உள்ளதாகவும், கூடுதலாக ரூ.17.245 கோடி நிலம் எடுப்பதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முண்டியம்பாக்கம் மருத்துவமனை மட்டும் அல்லாமல் இதன் அருகே 300 மீட்டர் தொலைவில் ஒரத்தூர் பிரிவு சாலையும் 200 மீட்டர் தொலைவில் முண்டியம்பாக்கம் சர்க்கரை ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடந்த 4 ஆண்டுகளில் சாலை விபத்தில் 2100 பேர் மரணம் அடைந்துள்ளனர். 6300 விபத்துக்கள் நடை பெற்றுள்ளன. இப்பகுதியில் தொடர் விபத்தில் நடைபெறுவதால் முண்டியம்பாக்கம் மருத்து வக் கல்லூரி மருத்துவமனை மேம்பாலம் ஒரத்தூர் பிரிவு சாலை வரை நீடிக்கப்பட வேண்டுமென தமிழக முதல்வரையும், பேரவை தலைவரையும் துறை அமைச்சரையும் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார். இதற்கு பதில் அளித்த துறை அமைச்சர், இது சம்பந்த மாக தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் அதிகாரி களிடம் நேரடியாகவும் தொலை பேசி மூலமாகவும் தொடர்பு கொண்டு பேசப் பட்டுள்ளது. முண்டியம் பாக்கம் மேம்பாலம் நீட்டிக்க நடவடிக்கை மேற்கொள் ளப்படும் என்று பதில் அளித்தார்.

    • இந்த ரெயில் சேவை நாளை (15-ந் தேதி) மற்றும் 22-ம் தேதிகளில் நீட்டிக்கப்பட்டுள்ளது.
    • ஞாயிற்றுக்கிழமை மாலை 6.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 11.40 மணிக்கு எர்ணாகுளம் சென்றடையும்.

    தஞ்சாவூர்:

    தெற்கு ரெயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    வேளாங்கண்ணி- எர்ணாகுளம் வாராந்திர சிறப்பு ரெயில் ஏப்ரல் மாதம் 4 சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி எர்ணாகுளம்- வேளாங்கண்ணி வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண் - 06035) எர்ணாகுளத்தில் இருந்து சனிக்கிழமை மதியம் 1.10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 5.40 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும்.

    இந்த ரயில் சேவை நாளை (15-ந் தேதி) மற்றும் 22-ம் தேதிகளில் நீட்டிக்கப்பட்டுள்ளது.

    அதேபோல் வேளாங்கண்ணி- எர்ணாகுளம் சிறப்பு ரெயில் (வண்டி எண் -06036) வேளாங்கண்ணியில் இருந்து ஞாயிற்றுக்கிழமை மாலை 6.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 11.40 மணிக்கு எர்ணாகுளம் சென்றடையும்.

    இந்த ரயில் 16 மற்றும் 23-ந் தேதிகளில் நீடிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • செகந்திராபாத்-ராமநாதபுரம் சிறப்பு ரெயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.
    • மாற்றுத் திறனாளிகளுக்கான பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.

    மதுரை

    செகந்திராபாத்-ராமநாதபுரம் இடையே வாராந்திர சிறப்பு ரெயில் ஜனவரி மாத இறுதி வாரம் வரை இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த ரெயில்களின் சேவை பிப்ரவரி மாத இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி செகந்திராபாத்- ராமநாதபுரம் வாராந்திர சிறப்பு ரெயில் (07695) பிப்ரவரி 1 முதல் பிப்ரவரி 22 வரை புதன்கிழமைகளில் இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் இரவு 10.30 மணிக்கு ராமநாதபுரம் சேரும்.

    மறு மார்க்கத்தில் ராமநாதபுரம்-செகந்திராபாத் வாராந்திர சிறப்பு ரெயில் (07696) பிப்ரவரி 3 முதல் பிப்ரவரி 24 வரை வெள்ளிக்கிழமைகளில் ராமநாதபுரத்தில் இருந்து காலை 9.50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 12.50 மணிக்கு செகந்திராபாத் சேரும்.

    இந்த ரெயில்கள் நெல்லூர், கூடூர், சென்னை எழும்பூர், செங்கல்பட்டு, விழுப்புரம், சீர்காழி, மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இதில் 3 குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 2 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 10 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், 4 இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள், 2 மாற்றுத் திறனாளிகளுக்கான பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.

    ×