search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "married"

    இந்தியா-பாகிஸ்தான் இடையே எல்லையில் பதற்றம் நீடித்துவரும் நிலையில் பாகிஸ்தான் பெண் இந்தியாவுக்கு வந்து ஒரு இந்தியரை திருமணம் செய்துள்ளார். #PakistaniGirl #IndianBoy
    பாட்டியாலா:

    இந்தியா-பாகிஸ்தான் இடையே எல்லையில் பதற்றம் நீடித்துவரும் நிலையில் பாகிஸ்தான் பெண் இந்தியாவுக்கு வந்து ஒரு இந்தியரை திருமணம் செய்துள்ளார். #PakistaniGirl #IndianBoy

    அரியானா மாநிலம் அம்பாலா மாவட்டத்தை சேர்ந்தவர் பர்வீந்தர் சிங் (வயது 33). இவரது உறவுப்பெண் கிரண் சர்ஜீத் கவுர் (27), பாகிஸ்தானில் உள்ள சியால்கோட் பகுதியை சேர்ந்தவர். 2016-ம் ஆண்டு இவர்களுக்கு திருமணம் செய்ய இரு குடும்பத்தினரும் முடிவு செய்தனர். திருமணத்துக்காக பிப்ரவரி 23-ந் தேதியே கிரண், பாட்டியாலா வருவதாக இருந்தது. ஆனால் பயங்கரவாத தாக்குதலால் தாமதம் ஏற்பட்டு கடந்த வியாழக்கிழமை 45 நாள் விசாவில் சம்ஜவ்தா எக்ஸ்பிரஸ் மூலம் பாட்டியாலா வந்தார்.

    அவர்களது திருமணம் அங்குள்ள குருத்வாராவில் சீக்கிய முறைப்படி நேற்று நடைபெற்றது. பர்வீந்தர் சிங் கூறும்போது, “கடந்த ஆண்டு நான் பாகிஸ்தான் செல்ல விசா கேட்டபோது மறுக்கப்பட்டது. அதனால் தான் பெண் வீட்டார் இங்கு வந்து திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது. எனது மனைவிக்கு இந்திய குடியுரிமை கேட்டு விண்ணப்பிப்பேன்” என்றார்.
    ஆத்தூர் அருகே மணப்பெண்ணின் அண்ணன் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் குறித்து அவரது மனைவியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள சீலியாம்பட்டி புதூர் பகுதியை சேர்ந்தவர் செல்லக்கண்ணு. இவருக்கு செல்வராஜ் (28) என்ற மகனும், வனிதா, ராஜேஸ்வரி ஆகிய மகள்களும் உள்ளனர்.

    செல்வராஜ் ரிக் வண்டி டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி தீபா. இவர்களுக்கு 5 மாத கைக்குழந்தை உள்ளது.

    செல்வராஜியின் தங்கை வனிதாவுக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது. மற்றொரு தங்கை ராஜேஸ்வரிக்கு வருகிற ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடைபெற உள்ளது.

    இந்த நிலையில் செல்வராஜ் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது பற்றி மல்லியகரை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். அப்போது செல்வராஜ் உடல் அருகே ஈர துணி ஒன்று கயிறாக திரிக்கப்பட்ட நிலையில் கிடந்தது.

    இந்த ஈரதுணியால் அவரது கழுத்தை இறுக்கி யாராவது கொலை செய்திருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் போலீசார், அந்த ஈரதுணியை கைப்பற்றி, கைரேகை குறித்து கண்டுபிடிக்க தடயவியல் ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்

    இதையடுத்து செல்வராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல் வெளியாகின. அதன் விபரம் வருமாறு:-

    கடந்த 4 வருடங்களுக்கு முன்பு ஊரில் உள்ள கோவிலில் தேர் திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவை பார்ப்பதற்காக தீபா வந்திருந்தார்.

    அப்போது செல்வராஜூம் அந்த தேர் திருவிழாவில் கலந்து கொண்டார். அப்போது தீபாவை பார்த்தவுடன் அவருக்கு காதல் ஏற்பட்டது. தீபாவின் அழகில் மயங்கிய அவர், திருமணம் செய்து கொள்ள விரும்பினார்.

    தனது விருப்பத்தை அவரிடம் தெரிவித்தார். தான் உன்னை காதலிப்பதாகவும், என்னை நீ திருமணம் செய்து கொள்வாயா? என செல்வராஜ் கேட்டார். அதற்கு தீபா சம்மதித்தார்.

    தேர் திருவிழாவின் போது சந்தித்த இருவரும் தொடர்ந்து இரண்டு நாட்கள் காதலித்தனர். பின்னர் 2 நாட்கள் கழித்து இருவரும் பெற்றோர் முன்னிலையில் முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிறைமாத கர்ப்பிணியாக இருந்த தீபா பிரசவத்திற்காக கீரிப்பட்டியில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றார். அங்கு அவருக்கு அழகான குழந்தை பிறந்தது.

    இதையடுத்து செல்வராஜ் நேற்று காலை கீரிப்பட்டிக்கு சென்று தனது தங்கை ராஜேஸ்வரிக்கு வருகிற ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடைபெற உள்ளது. ஆகவே திருமணத்தை முன்னின்று நாம் நடத்த வேண்டும். எனவே குழந்தையுடன் வருமாறு கூறி தீபாவை அழைத்து வந்தார்.

    வீட்டிற்கு வந்ததும் செல்வராஜின் பெற்றோர் மகனின் 5 மாத குழந்தையை பார்க்க வேண்டி ஆசையுடன் எடுத்தனர். அப்போது கணவரிடம் தீபா நான் உங்கள் அப்பா, அம்மாவுடன் வீட்டில் வசிக்க மாட்டேன். தனியாக குடும்பம் நடத்துவோம் என்று கூறினார். குழந்தையையும் அவர்கள் எடுக்கக் கூடாது என தெரிவித்தார்.

    மனைவி தகராறு செய்ததை தொடர்ந்து செல்வராஜ், தனி குடித்தனம் நடத்துவதற்காக அதே ஊரில் வாடகைக்கு வீடு ஒன்று எடுத்து நேற்று பால் காய்ச்சி அந்த வீட்டில் குடியேறினார்.

    இந்த நிலையில் இரவு அவர்களுக்கு வீட்டில் தகராறு ஏற்பட்டது. நள்ளிரவில் தீபா வீட்டில் இருந்து வெளியே சென்று விட்டார். இன்று காலையில் கதவு திறந்து கிடந்ததை பார்த்ததும் உறவினர்கள் வீட்டிற்குள் சென்று பார்த்தனர். அங்கு செல்வராஜ் பிணமாக கிடந்தார் என்பது தெரியவந்தது.

    இன்று காலை சகோதரிக்கு நலுங்கு வைக்கும் நிகழ்ச்சி நடைபெறுவதாக இருந்தது. அண்ணன் இறந்ததால் நலுங்கு வைக்கும் நிகழ்ச்சி சோகமாக மாறியது.

    போலீசார், தலைமறைவான தீபாவை தேடி வருகிறார்கள். #tamilnews
    திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலில் அமெரிக்க பெண்ணை தமிழக ஆராய்ச்சியாளர் தமிழ் முறைப்படி திருமணம் செய்து கொண்டார். #Marriage
    வெள்ளக்கோவில்:

    திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் டி.ஆர். நகரை சேர்ந்தவர் செல்லமுத்து. இவரது மகன் பிரித்வி செல்லமுத்து. இவர் பிளஸ்-2 வரை ஈரோடு பள்ளியூத்தில் உள்ள தனியார் பள்ளியில் படித்தார். பின்னர் வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் படித்தார். இதனை தொடர்ந்து அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல் நகரில் ஒரு பல்கலைக்கழகத்தில் பயோ டெக்னாலஜி படிக்க சென்றார்.

    அங்கு படிப்பு முடிந்ததும் அதே பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சியாளராக வேலை பார்த்து வந்தார். இந்த பல்கலைக்கழகத்தில் அமெரிக்காவை சேர்ந்த ஏஞ்செலா கிளைபர் என்ற பெண் டாக்டருக்கு படித்து வந்தார். இவருக்கும் பிரித்வி செல்லமுத்துவுக்கும் காதல் ஏற்பட்டது. ஏஞ்செலா கிளைபர் டாக்டருக்கு படித்து முடித்தார். பின்னர் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். தங்களது காதலை பெற்றோரிடம் தெரிவித்தனர். இரு வீட்டு பெற்றோரும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தனர்.

    அதன் படி பிரித்வி செல்லமுத்து - ஏஞ்செலா கிளைபர் திருமணம் வெள்ளக்கோவில் முத்தூர் சாலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.

    தமிழ் முறைப்படி இந்த திருமணம் நடைபெற்றது. மணமகள் பட்டு சேலை அணிந்து இருந்தார். அவரது கழுத்தில் பிரித்வி செல்லமுத்து தாலி கட்டினார்.

    இந்த திருமணத்தில் மணமகனின் உறவினர்கள், நண்பர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.

    பின்னர் அங்கு வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதிலும் நண்பர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். திருமணம் முடிந்ததும் மணமக்கள் இன்று அமெரிக்கா புறப்பட்டு சென்றனர். #Marriage



    தெலுங்கானா மாநிலத்தில் தற்கொலைக்கு முயன்று உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்ற காதல் ஜோடிகளுக்கு டாக்டர் உதவியால் ஆஸ்பத்திரியில் திருமணம் நடந்த வீடியோ வைரலாகியது. #Telanganalovers #MarriedinHospital
    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநிலம், விகாராபாத் பகுதியை சேர்ந்தவர் நவாஸ்(21). தனது உறவுக்காரப் பெண்ணான ரேஷ்மா(19) என்பவரை நவாஸ் உயிருக்குயிராக காதலித்து வந்தார். இரண்டாண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்த இந்த காதல் உறவுக்கு இருவரின் குடும்பத்தினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    ஏற்கனவே, நவாசின் சகோதரருக்கு ரேஷ்மாவின் அக்காவை திருமணம் செய்து கொடுத்துள்ளதால் அதே குடும்பத்தில் மீண்டும் ஒரு சம்பந்தம் செய்துகொள்ளக்கூடாது என்பதில் அவர்கள் உறுதியாக இருந்தனர்.

    இதற்கிடையில், பெற்றோர் தனக்கு மாப்பிள்ளை தேடுவதை அறிந்த ரேஷ்மா சமீபத்தில் தற்கொலைக்கு முயன்று, காப்பாற்றப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் விகாராபாத் நகரில் உள்ள கிராஃபோர்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    காதலிக்கு நேர்ந்த இந்த துயரத்தை தாங்கிக்கொள்ள முடியாத ரியாஸ் தனது உயிரை மாய்த்துக்கொள்ளும் முயற்சியில் தற்கொலைக்கு முயன்றார். ரேஷ்மா அனுமதிக்கப்பட்ட அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.



    இதற்கிடையில், ரேஷ்மாவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர் அவினாஷ், அவரது விபரீத முடிவுக்கான காரணம் தொடர்பாக அக்கறையுடன் விசாரித்தார். ரியாஸ் காதல் விவகாரம் பற்றி தெரியவந்த டாக்டர் இரு குடும்பத்தாரையும் அழைத்து சமரசம் பேசினார்.

    உங்களது பிடிவாதத்தால் இரு உயிர்கள் பலியாக வேண்டுமா? அவர்கள் மீண்டும் தற்கொலைக்கு முயன்றால் என்னவாகும்? என்று சிந்தித்துப் பாருங்கள் என்று அவர் கூறிய அறிவுரை கைமேல் பலனைத் தந்தது. அதுவும் உடனடியாக.

    இதையடுத்து, அந்த மருத்துவமனையில் மூக்கில் சுவாசக் குழாயுடன் இருந்த ரேஷ்மாவுக்கு  மணமகள் அலங்காரம் செய்யப்பட்டது. நடக்க முடியாமல் சிகிச்சை பெற்றுவந்த நவாஸ் மணமகன் கோலத்தில் சக்கர நாற்காலியில் அழைத்து வரப்பட்டார்.

    இருவீட்டார் முன்னிலையில் மதகுருவின் தலைமையில் மணமகளுக்கு ‘மஹர்’ பணம் மற்றும் தங்க நகைகளை தந்து நவாஸ் குடும்பத்தார் ரேஷ்மாவை மருமகளாக ஏற்றுக்கொண்டனர்.

    இந்த சம்பவம் தொடர்பான செய்திகளும் வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. #Telanganalovers #MarriedinHospital




    புகழ் பெற்ற அமெரிக்க ‘பாப்’ இசை நட்சத்திரம் மைலி சைரஸ், ஆஸ்திரேலிய நடிகர் லியாம் ஹெம்ஸ்வொர்த்தை திருமணம் செய்து கொண்டார். #MileyCyrus #LiamHemsworth
    வாஷிங்டன் :

    புகழ் பெற்ற அமெரிக்க ‘பாப்’ இசை நட்சத்திரம் மைலி சைரஸ் (வயது 26). இவர் ‘தி லாஸ்ட் சாங்’ என்ற படத்தின் படப்பிடிப்பு தளத்தில் ஆஸ்திரேலிய நடிகர் லியாம் ஹெம்ஸ்வொர்த்தை (28) 10 ஆண்டுகளுக்கு முன்னர் சந்தித்தார். இருவருக்கு இடையேயும் காதல் மலர்ந்தது.

    இருவரும் பல இடங்களில் சந்தித்து தங்கள் காதலை வளர்த்துக்கொண்டார்கள். 2012-ம் ஆண்டு அவர்கள் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து, நிச்சயதார்த்தம் நடந்தது. ஆனால் அடுத்த ஆண்டே அவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர்.

    பிரிந்த ஜோடி, 2015-ம் ஆண்டு திரும்பவும் சேர்ந்தது.

    இருவரும் மறுபடியும் காதல் வானில் சிறகடித்துப் பறந்தனர்.

    கலிபோர்னியாவில் கடந்த மாதம் ஏற்பட்ட காட்டுத்தீயில் இந்த ஜோடியின் வீடு எரிந்து நாசமானது. ஆனால் அது அவர்களுடைய காதலுக்கு ஒரு தடையாக இல்லை.

    இந்த நிலையில் டென்னிசி மாகாணத்தில் உள்ள தனது பங்களாவில் வைத்து மைலி சைரஸ், தன் காதலர் லியாமை மணந்து கொண்டார். இதை அவர் உறுதி செய்துள்ளார். இந்த திருமணத்தில் மிக நெருக்கமானவர்கள் மட்டுமே கலந்து கொண்டதாக தகவல்கள் கூறுகின்றன.

    டுவிட்டரில் மைலி சைரஸ் திருமணம் தொடர்பான படத்தை வெளியிட்டுள்ளார்.#MileyCyrus #LiamHemsworth
    வில்லியனூரில் வீட்டை விட்டு வெளியே சென்ற பட்டதாரி பெண் காதலனை திருமணம் செய்து கொண்டார்.

    புதுச்சேரி:

    வில்லியனூர் பெரியபேட் பால்வாடி தெருவை சேர்ந்தவர் முனுசாமி. ஜிப்மர் ஆஸ்பத்திரியில் தினக்கூலி ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மகள் விஷ்ணுபிரியா (வயது24). இவர் பி.காம். படித்து முடித்து தற்போது சி.ஏ. படித்து வந்தார். இந்த நிலையில் சம் பவத்தன்று வீட்டை விட்டு வெளியேறிய விஷ்ணுபிரியா அதன்பிறகு வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் எங்கும் விஷ்ணுபிரியா இல்லை.

    இதையடுத்து முனுசாமி தனது மகள் மாயமானது குறித்து வில்லியனூர் போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலய்யன், உதவி சப்-இன்ஸ்பெக்டர் வினாயகம் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் விஷ்ணுபிரியா தனது உறவினர் மகனான புவியரசன் (27) என்பவரை காதலித்து வந்ததும் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் வீட்டை விட்டு வெளியேறி காதலனை திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் இருவரின் பெற்றோர்களையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

    திருமணத்துக்கு வற்புறுத்தியதால் ஆற்றில் தள்ளி நர்சை கொன்ற சம்பவம் குறித்து காதலனை போலீசார் கைது செய்தனர்.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டம் குழித்துறை அருகே மீனச்சல், பாட்டத்துவிளை பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீஜா (வயது 23). நர்சிங் படித்துள்ளார்.

    இவர் தேங்காய் பட்டினத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்து நித்திரவிளையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக பணிபுரிந்து வந்தார். கடந்த 19-ந் தேதி வீட்டில் இருந்து வேலைக்கு சென்ற ஸ்ரீஜா, அதன் பின்பு வீடு திரும்பவில்லை.

    இதனால் உறவினர்கள் ஸ்ரீஜாவை தேடிவந்தனர். தோழிகளிடமும் கேட்டனர். எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

    இந்த நிலையில் குழித்துறை ஆற்றில் ஒரு இளம்பெண் பிணம் கடந்த 21-ந் தேதி காலையில் மிதந்தது. இதை கண்ட அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் பிணமாக மிதந்த பெண் யார்? என்று விசாரித்தனர். இதில் அவர் தேங்காய்பட்டினம் உறவினர் வீட்டில் இருந்து மாயமான ஸ்ரீஜா என தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் ஸ்ரீஜாவின் உறவினர்களை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து ஸ்ரீஜாவின் உடலை அடையாளம் காட்டியதோடு, அவரது சாவில் மர்மம் இருப்பதாக கூறினர்.

    பின்னர் ஸ்ரீஜாவின் உடல் பிரேத பரிசோதனை முடிந்த பின்பு குழித்துறை அருகே மஞ்சரவிளை பகுதியில் மருதங்கோடு - களியக்காவிளை சாலையில் மறியல் போராட்டமும் நடத்தினர்.

    போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் சமரசம் செய்தனர். மேலும் ஸ்ரீஜாவின் பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்ததும் அதன் தகவல் அடிப்படையில் விசாரணை நடத்தி குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் எனவும் உறுதி அளித்தனர்.இதையடுத்து உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

    அதன்பின்பு போலீசாரின் விசாரணை தீவிரமானது. மேலும் ஸ்ரீஜாவின் பிரேத பரிசோதனை அறிக்கையும் கிடைத்தது. அதில் ஸ்ரீஜா 5 மாத கர்ப்பிணியாக இருந்தது தெரியவந்தது.

    திருமணத்திற்கு முன்பே ஸ்ரீஜா, கர்ப்பமாக இருந்ததால் அவரது சாவில் மர்மம் இருப்பதை புரிந்து கொண்ட போலீசார், ஸ்ரீஜாவின் கர்ப்பத்திற்கு காரணமானவர் யார் என விசாரித்தனர். இதில் நித்திரவிளையை அடுத்த எஸ்.டி.மங்காடு பகுதியை சேர்ந்த வேன் டிரைவர் பிபின் (26) என்பவரை ஸ்ரீஜா காதலித்து வந்தது தெரியவந்தது.

    போலீசார் பிபினை தேடி சென்றனர். அங்கு அவர் தலைமறைவாகி இருந்தார். இதனால் ஸ்ரீஜா சாவில் பிபினுக்கு தொடர்பு இருப்பதை உறுதி செய்த போலீசார் அவரை தேடி கண்டுபிடிக்க நடவடிக்கை எடுத்தனர்.

    களியக்காவிளை சப்- இன்ஸ்பெக்டர் மோகன அய்யர் தலைமையிலான போலீசார் இன்று அதிகாலையில் பிபினை கண்டு பிடித்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்திய போது அவர் தான் ஸ்ரீஜாவை ஆற்றில் தள்ளி கொலை செய்ததாக கூறினார். இதையடுத்து போலீசார் பிபினை கைது செய்தனர்.

    பின்னர் அவர் கொலைக்கான காரணம் குறித்து போலீசாரிடம் கூறியதாவது:-

    நித்திரவிளை ஆஸ்பத்திரிக்கு சென்று வந்த ஸ்ரீஜாவுடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசி வந்தோம். அப்போது அவரை திருமணம் செய்து கொள்வதாக நான் ஆசை வார்த்தை கூறினேன்.

    இதனால் நாங்கள் இருவரும் உல்லாசமாக இருந்தோம். இதில் ஸ்ரீஜா கர்ப்பம் ஆனார். இது பற்றி ஸ்ரீஜா என்னிடம் கூறினார்.ஆஸ்பத்திரிக்கு சென்று பரிசோதித்த போது அவர் 5 மாத கர்ப்பம் ஆக இருப்பது தெரியவந்தது.

    கர்ப்பிணி ஆனதும் ஸ்ரீஜா தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி என்னை வற்புறுத்தினார். அதற்கு நான் ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் எங்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

    இந்த நிலையில் தான் கடந்த 19- ந் தேதி இரவு நான் ஸ்ரீஜாவை சந்தித்து என்னுடன் வருமாறு கூறினேன். நாங்கள் இருவரும் குழித்துறையில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு சென்று கர்ப்பத்தை கலைத்துவிட முடிவு செய்தோம். கர்ப்பமாகி 5 மாதம் ஆகிவிட்டதால் கர்ப்பத்தை கலைக்க முடியாது என்று ஆஸ்பத்திரியில் கூறிவிட்டனர்.

    இதை கேட்டதும் ஸ்ரீஜா என்னிடம் மீண்டும் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி பிரச்சினை செய்தார். இதில் எனக்கு ஆத்திரம் ஏற்பட்டது. எனவே நான் அவரை குழித்துறை ஆற்று பாலம் அருகே அழைத்து வந்தேன். அங்கு ஸ்ரீஜாவுடன் பேசிக்கொண்டிருந்தேன். திடீரென அவரை ஆற்றில் தள்ளிவிட்டேன். இதில் அவர் தண்ணீரில் மூழ்கி இறந்து விட்டார்.அவர் இறந்தது தெரிந்ததும் நான் தலைமறைவாகி விட்டேன். ஆனால் போலீசார் என்னை தேடி கண்டுபிடித்து கைது செய்துவிட்டனர். இவ்வாறு அவர் போலீசில் கூறியுள்ளார். இது தொடர்பாக சப்- இன்ஸ்பெக்டர் மோகன அய்யர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார். #tamilnews
    வாலாஜா அருகே திருமணத்தை மறைத்து இளம்பெண்ணிடம் உல்லாசம் அனுபவித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    வாலாஜா:

    ஆற்காடு தாஜ்புரா பகுதியை சேர்ந்தவர் 20 வயது இளம்பெண். ஆற்காடு கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜசேகரன் (26). 2 பேருக்கும் நட்பு ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியது.

    இதையடுத்து அந்த வாலிபர் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி இளம்பெண்ணிடம் அடிக்கடி உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார்.

    சில நாட்களுக்கு பிறகு இளம்பெண் ராஜசேகரிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கட்டாயபடுத்தி வந்துள்ளார். இதையடுத்து அந்த வாலிபர் இளம்பெண்ணிடம் பேசுவதையும், பார்ப்பதையும் முற்றிலும் தவிர்த்து வந்தார்.இளம்பெண் ராஜசேகரை பார்ப்பதற்காக அவரது வீட்டிற்கு சென்றார். அப்போது தான் தெரியவந்தது. ராஜசேகருக்கு ஏற்கனவே திருமணமாகி 1 மகன் 2 மகள்கள் உள்ளனர் என்று அதிர்ச்சியடைந்த இளம்பெண்.

    இதுகுறித்து ராணிப்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜசேகரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    அரியலூர் அருகே வேத மந்திரங்களின்றி திருக்குறள் வாசித்து மத்திய அரசு ஊழியரின் திருமணம் நடைபெற்றது.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள தா.பழுரை சேர்ந்தவர் சக்திவேல். மத்திய அரசு ஊழியரான இவருக்கும், அதே ஊரை சேர்ந்த சத்யாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. தமிழ்மொழி மேல் உள்ள பற்றுதல் காரணமாக தனது திருமணத்தை திருக்குறள்படி நடத்த சக்திவேல் முடிவு செய்தார். அது பற்றி மணமகள் வீட்டில் தெரிவித்த போது, முதலில் மறுப்பு தெரிவித்தனர். பின்னர் சக்திவேல் தனது நிலையில் உறுதியாக இருந்ததால், அவரது விருப்பத்திற்கு அனைவரும் சம்மதித்தனர். இதையடுத்து  தா.பழுரில் உள்ள திருமண மண்டபத்தில் வேத மந்திரங்களின்றி சக்திவேல் திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது திருவள்ளுவர் உருவச்சிலை வைத்து, புலவர் மோகன் திருக்குறள் வாசித்து அதன் பொருள் கூறினார்.

    அதனைத்தொடர்ந்து மணமக்கள் உறுதிமொழி ஏற்றனர். இதையடுத்து மணமகன் சக்திவேல், மணமகள் சத்யாவுக்கு திருமாங்கல்யம் அணிவித்தார். தொடர்ந்து மணமக்கள் அரசு மற்றும் வேப்ப மரக்கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்ற, உறவினர்கள் ஆசீர்வாதம் செய்தனர். இந்த திருக்குறள் திருமணத்தை உறவினர்கள், பொதுமக்கள் ஆச்சரியத்துடன் கண்டு மகிழ்ந்தனர். திருமணத்தையொட்டி மண்டபம் முழுக்க இல்வாழ்க்கை, வாழ்க்கை துணை நலம்,மக்கட்பேறு, அன்புடமை ஆகிய 4 அதிகாரங்களில் உள்ள திருக்குறள் வரிகள் ஆங்காங்கே எழுதப்பட்டிருந்தன.

    திருக்குறள் திருமணம் செய்த சக்திவேலின் தந்தை நீலகண்டன் டீக்கடை வைத்துள்ளார். இவர் தனது பேச்சின் போது அடிக்கடி திருக்குறளை மேற்கோள் காட்டி பேசுவார். இதனால் சக்திவேலுக்கு சிறுவயது முதலே திருக்குறள் மீதும், தமிழ்மொழி மீதும் தீராத பற்று ஏற்பட்டுள்ளது. அதன் விளைவால் திருக்குறள்படி தனது திருமணத்தை நடத்தியுள்ளார்.
    கோவை வாலிபருக்கும், ஸ்காட்லாந்து நாட்டை சேர்ந்த பெண்ணுக்கும் தமிழ் கலாசாரப்படி கோவையில் திருமணம் நடந்தது.
    வடவள்ளி:

    கோவை பூண்டி அருகே உள்ள, செம்மேடு கிராமத்தை சேர்ந்த வேலுச்சாமி- வெள்ளையம்மாள் தம்பதியரின் மகன் சிவகார்த்திகேயன்(33). எம்.எஸ்.சி., படித்துள்ளார். இவர் 2008-ல் ஸ்காட்லாந்தில் உள்ள பிரபலமான நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தார்.

    இவர் அதே நிறுவனத்தில் பணிபுரிந்த அலிஷியா டெய்லர் (26) என்பவரை 5 ஆண்டுகள் காதலித்தார். இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இதற்கு இரு வீட்டு பெற்றோரும் சம்மதம் தெரிவித்தனர்.

    அதன் படி பெற்றோர் விருப்பத்துடன் ஜூலை 27-ல் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.இதையடுத்து தன் பெற்றோர் முன்னிலையில், இந்து முறைப்படி திருமணம் செய்வதற்கு சிவகார்த்திகேயன் முடிவு செய்தார்.

    கடந்த, 22-ந் தேதி ஸ்காட்லாந்திலிருந்து, இருவரும் கோவை வந்தனர். பின்னர் செம்மேடு முட்டம் நாகேஸ்வரர் கோவிலில் பெற்றோர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில், சிவகார்த்திகேயன்-அலிஷியா டெய்லர் திருமணம் தமிழ் கலாசார படி எளிமையாக நடந்தது. இத்தம்பதிகள், தீபாவளி பண்டிகை முடிந்தவுடன் மீண்டும் ஸ்காட்லாந்து செல்ல உள்ளனர். #tamilnews
    தூத்துக்குடியில் பெற்றோர் எதிர்ப்பை மீறி திருநங்கையை ரெயில்வே ஒப்பந்த ஊழியர் திருமணம் செய்துகொண்டார். மணமக்களுக்கு கல்லூரி மாணவிகள், நண்பர்கள் வாழ்த்து தெரிவித்தனர். #TransgenderMarriage
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி தாளமுத்துநகர் தாய்நகரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவருடைய மகன் அருண்குமார் (வயது 22). என்ஜினீயரிங் பட்டதாரியான இவர் ரெயில்வேயில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருகிறார்.

    தூத்துக்குடி-எட்டயபுரம் ரோட்டில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் ஸ்ரீஜா (20). திருநங்கையான இவர் தூத்துக்குடியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ. படித்து வருகிறார்.

    இவரும், அருண்குமாரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இதையடுத்து 2 பேரும் திருமணம் செய்ய முடிவு செய்தனர். இதற்கு அருண்குமார் வீட்டில் எதிர்ப்பு கிளம்பியது. எனினும் பெற்றோர் எதிர்ப்பையும் மீறி ஸ்ரீஜாவை திருமணம் செய்ய அருண்குமார் முடிவு செய்தார்.

    அதன்படி, அக்டோபர் 31-ந் தேதி (நேற்று) தூத்துக்குடி சிவன் கோவிலில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து, திருமண அழைப்பிதழ் அச்சிட்டு உறவினர்கள், நண்பர்களுக்கு கொடுத்தனர்.

    இதையடுத்து, மணமக்கள் நேற்று காலை சிவன் கோவிலுக்கு வந்தனர். அவர்களுடன் ஸ்ரீஜாவின் கல்லூரி தோழிகள், அருண்குமாரின் சில உறவினர்கள் மற்றும் நண்பர்களும், ஏராளமான திருநங்கைகளும் வந்து இருந்தனர். அருண்குமாரின் பெற்றோர் வரவில்லை.

    மணமக்கள் கோவில் அலுவலகத்துக்கு சென்றபோது, இந்த திருமணத்தை நடத்த அனுமதிக்க முடியாது என்று அங்கிருந்த ஊழியர்கள் தெரிவித்தனர். இந்து திருமண சட்டப்படி ஒரு ஆண், பெண்ணைத்தான் திருமணம் செய்ய முடியும் என்றும் திருநங்கையை திருமணம் செய்ய முடியாது என்றும் அவர்கள் திட்டவட்டமாக கூறினர்.

    ஆனால், திருநங்கையை திருமணம் செய்ய அரசு அங்கீகாரம் அளித்து உள்ளதாகவும், எனவே சட்டப்படி இந்த திருமணத்தை நடத்தலாம் என்றும் கூறி திருமண வீட்டார் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் திடீரென திருநங்கைகள் கோவில் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

    இதையடுத்து அலுவலகத்தில் இருந்த ஊழியர்கள் கோவில் நிர்வாக அதிகாரி மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு தெரிவித்தனர். பின்னர் அவர்கள், திருமணத்தை வேண்டுமானால் கோவிலில் நடத்திக் கொள்ளுங்கள். அதற்கான பதிவு சான்றிதழை தரமுடியாது என்று கூறினார்.

    ஆனால், அதனை ஏற்க மறுத்த திருநங்கைகள் இந்த திருமணத்தை சட்டப்படி பதிவு செய்ய வேண்டும் என்றும் முறைப்படி சான்றிதழ் வழங்க வேண்டும் என்றும் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி மத்தியபாகம் போலீசார் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, அருண்குமாரிடம், திருநங்கையை திருமணம் செய்ய அரசு அங்கீகாரம் அளித்ததற்கான அரசாணை நகல் இருந்தால் கொடுங்கள், அதிகாரிகளிடம் பேசி திருமணத்தை நடத்த அனுமதி பெறலாம் என்று போலீசார் தெரிவித்தனர். ஆனால் அருணிடம் அதற்கான நகல் ஏதும் இல்லை.

    அதே நேரத்தில் முகூர்த்த நேரம் முடியும் சூழல் உருவானது. எனவே திருமணத்தை முதலில் முடித்துவிட்டு, சான்றிதழ் விவகாரத்தை பிறகு பார்த்துக்கொள்ளலாம் என மணமக்கள் முடிவு செய்தனர்.



    அதன்படி காலை 11.40 மணிக்கு மணமக்கள் மாலை மாற்றினர். பின்னர் திருநங்கை ஸ்ரீஜா கழுத்தில் அருண்குமார் தாலி கட்டினார். அப்போது அங்கு கூடி இருந்த திருநங்கைகள் உற்சாகமாக ஆரவாரம் செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மணமக்களுக்கு கல்லூரி மாணவிகள், நண்பர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

    இதுகுறித்து திருநங்கைகள் கூறும்போது, ‘தற்போது திருமணம் நடந்து உள்ளது. இந்த திருமணத்தை முறைப்படி பதிவு செய்வதற்கான நடவடிக்கை எடுப்போம்’ என்று தெரிவித்தனர்.  #TransgenderMarriage

    பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே ரன்வீர் சிங்கை திருமணம் செய்துகொள்ளும் தேதியை அறிவித்துள்ளார். #DeepikaPadukonemarriage #RanveerSinghmarriage #DeepikaPadukone #RanveerSingh #DeepikaRanveermarriage
    மும்பை:

    ராணி பத்மினியின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்ட பத்மாவத் படத்தில் ராணியாக நடித்த பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே அதே படத்தில் தன்னுடன் நடித்த ரன்வீர் சிங்கை காதலிப்பதாக மும்பை திரையுலக வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டது.

    இதை இருவரும் மறுக்கவில்லை. இந்நிலையில்  தீபிகா படுகோனே ரன்வீர் சிங்கை திருமணம் செய்துகொள்ளும் தேதியை தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று அறிவித்துள்ளார்.

    திருமண அழைப்பிதழ் வடிவில் அவர் இன்று வெளியிட்டுள்ள பதிவில், ‘எங்கள் குடும்பாத்தாருடன் ஆசிகளுடன் எங்கள் திருமணம் நவம்பர் 14,15 தேதிகளில் நடைபெறும் என்பதை தெரிவித்து கொள்கிறேன். 

    இத்தனை காலமாக எங்கள்மீது நீங்கள் தொடர்ந்து காட்டிவரும் அன்புக்கு நன்றி தெரிவிப்பதுடன், இந்த வாழ்க்கை தொடங்கப்போகும் எங்களை ஆசீர்வதிக்க வேண்டுகிறேஎன்’ என தீபிகா படுகோனே குறிப்பிட்டுள்ளார். #DeepikaPadukonemarriage #RanveerSinghmarriage  #DeepikaPadukone #RanveerSingh #DeepikaRanveermarriage
    ×