search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "young man arrest"

    கர்நாடகத்தில் நடத்தையில் சந்தேகம் அடைந்து மனைவி மற்றும் குழந்தையை கொன்ற கணவரை போலீசார் கைது செய்தனர்.
    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் கதக் மாவட்டம், லட்சுமேஸ்வரா வட்டம், கோனாலா கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் (வயது28), இவரது மனைவி நிர்மலா (25), இவர்களது 6 மாத ஆண் குழந்தை நந்தீஷ்.

    மனைவியின் நடத்தையில் ரமேஷ் சந்தேகப்பட்டார். இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று நிர்மலாவுடன் ரமேஷ் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

    அப்போது ஆத்திரமடைந்த ரமேஷ் கோடாலியால் நிர்மலா, குழந்தை நந்தீஷை வெட்டி உள்ளார். இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர். இதையடுத்து லட்சுமேஸ்வரா காவல் நிலையத்தில் ரமேஷ் சரணடைந்தார். அவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆவூர், கீரனூர் பகுதிகளில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட 3 வாலிபர்கள் கைது செய்து, அவர்களிடமிருந்து 33 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
    ஆவூர்:

    புதுக்கோட்டை மாவட்டம், ஆவூர் அருகே உள்ள சித்தாம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் பழனியம்மாள் (வயது 45). இவர் கடந்த வாரம் அப்பகுதியில் கீரனூர்-விராலிமலை சாலையோரத்தில் மாடு மேய்த்துக்கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்கள் பழனியம்மாளை தாக்கிவிட்டு அவர் அணிந்திருந்த 2 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றனர். இதைத்தொடர்ந்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் வழிப்பறியில் ஈடுபட்டவர்களை பிடிக்க விரட்டிச்சென்றபோது அவர்கள் மின்னல் வேகத்தில் தப்பிச்சென்றனர். அப்போது அவர்கள் பேராம்பூர் வழியாக சென்றபோது அங்குள்ள வேகத்தடையில் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து லேசான காயமடைந்தனர்.

    இதையடுத்து அப்பகுதியில் இருந்தவர்கள் அவர்கள் பெண்ணிடம் நகை பறித்து சென்றவர்கள் என்று தெரியாமல் அவர்களை தூக்கி விட்டு அனுப்பி வைத்தனர். ஆனால் பின்னர் தான் தெரிந்தது தாங்கள் அனுப்பி வைத்தது பெண்ணிடம் தங்க சங்கிலி பறித்தவர்கள் என்று தெரிந்தது. இதையடுத்து பழனியம்மாள் மண்டையூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

    போலீசாரின் தீவிர விசாரனையிவ் இலுப்பூரை அடுத்த மலைக்குடிப்பட்டி சீத்தப்பட்டியை சேர்ந்த மாரிமுத்து மகன் பாண்டியன் (30), அவரது தம்பி கார்த்தி (22) மற்றும் இவர்களது நண்பரான பாசிப்பட்டி கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் மகன் விஜய் என்கிற கருப்பையா (20) ஆகியோர் இந்த வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் தங்களது வீட்டில் பதுங்கியிருந்தபோது அவர்களை போலீசார் பிடித்துச்சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், பழனியம்மாளிடம் வழிப்பறி செய்தது மட்டுமின்றி, சித்தாம்பூரை அடுத்த ஆலங்குடியில் ஒரு பெண்ணின் வீட்டுக்கதவை உடைத்து பீரோவில் இருந்த 2½ பவுன், கீரனூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட ஒடுக்கூரில் ஒரு பெண்ணிடம் 3 பவுன் தங்க சங்கிலி, கீரனூரில் ஒரு ஆசிரியரை மிரட்டி 15 பவுன் சங்கிலி, மோதிரத்தை பறித்தது, உடையாளிப்பட்டி போலீஸ் நிலைய பகுதியில் ஒரு நபரை மிரட்டி 7 பவுன் தங்க சங்கிலியை பறித்தது, ஆசிரியையிடம் 4 பவுன் சங்கிலியை பறித்துச்சென்றதை அவர்கள் ஒப்புக்கொண்டனர். இதையடுத்து அவர்களிடம் இருந்து மொத்தம் 33 பவுன் நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    மேலும் இதுகுறித்து மண்டையூர், கீரனூர், உடையாளிப்பட்டி ஆகிய போலீஸ் நிலையங்களில் உள்ள புகார்களின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த பாண்டியன், கார்த்தி, விஜய் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். 
    ஆன்லைனில் திருமணத்துக்கு பதிவு செய்தவரிடம் பெண் குரலில் பேசி பண மோசடி செய்த வாலிபரை கைது செய்தனர்.
    போரூர்:

    பெரம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த்(42). தனியார் நிறுவன ஊழியர்.

    இவர் கடந்த 2017ம் ஆண்டு தனது திருமணத்திற்கு பெண் வரன் வேண்டி ஆன்லைன் மூலம் பதிவு செய்து இருந்தார். சிலநாட்களில் ஆனந்தை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட இளம்பெண் ஒருவர் தங்களின் முழு விபரங்களையும் ஆன்லைனில் பார்த்து விட்டேன். எனக்கு மிகவும் பிடித்து விட்டது. தங்களை திருமணம் செய்து கொள்ள ஆசை படுகிறேன் என்று தெரிவித்தார்.

    இதில் மயங்கிய ஆனந்த் அடிக்கடி செல்போன் மூலம் அந்த பெண்ணிடம் பேசி வந்தார். அப்போது ஒரு நாள் ஆனந்தை தொடர்பு கொண்ட பெண் தனது சித்தியின் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் மருத்துவ சிகிச்சைக்கு பணம் வேண்டும் என்று கேட்டார்.

    உடனடியாக ஆனந்த் ரூ.45 ஆயிரம் வங்கி கணக்கில் செலுத்தினார். பின்னர் சில தினங்களில் மீண்டும் தொடர்பு கொண்ட பெண் மருந்து வாங்க பணம் வேண்டும் என்று கேட்டவுடன் ரூ.12ஆயிரத்தை அதே வங்கி கணக்கில் செலுத்தினார் ஆனந்த். பின்னர் அந்த பெண் தீடீரென தலைமறைவானார். ஆனந்த்திற்கு வேறு பெண்ணுடன் திருமணம் முடிந்து விட்டது.

    இந்த நிலையில் ஒன்றரை வருட இடைவெளிக்கு பின் நேற்று முன்தினம் மீண்டும் ஆனந்த்தை தொடர்பு கொண்ட அந்த பெண் ஆசை வார்த்தை கூறி பேசினார். தனக்கு குளிர்சாதனப் பெட்டி வேண்டும் என்று கேட்டார். வாங்கி தருவதாக கூறிய ஆனந்த் வடபழனி அருகே வருமாறு பெண்ணை அழைத்தார்.

    தன்னிடம் பணம் பறித்த பெண்ணை பிடிக்க ஆனந்த் காத்திருந்தார். ஆனால் அங்கு வாலிபர் ஒருவர் மட்டும் வந்தார். சந்தேகமடைந்த ஆனந்த் அவரை மடக்கி பிடித்தார். தன்னிடம் பெண் குரலில் பேசி பணம் பறித்தது வாலிபர் என்பது தெரிந்து அதிர்ச்சி அடைந்தார்.

    அந்த வாலிபரை வட பழனி போலிசில் ஒப்படைத்தார். குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பாலுசாமி விசாரணை நடத்தியதில் பெண் குரலில் பேசி மோசடியில் ஈடுபட்டது பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த செந்தில்(39) என்பது தெரியவந்தது. வேறு யாரிடமும் இதேபோல் பேசி மோசடியில் ஈடுபட்டுள்ளாரா என்ற கோணத்தில் அவரிடம் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றார். #tamilnews
    புதுவையில் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புதுச்சேரி:

    சென்னை ஆவடியை சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவர் புதுவையில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கி இருந்தார். அப்போது புதுவை வ.உ.சி. தெருவை சேர்ந்த ரமேஷ் என்ற வாலிபர் அந்த இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து அந்த இளம்பெண் தனது உறவினரிடம் கூறி கதறி அழுதுள்ளார். இதுதொடர்பாக அவர்கள் ஒதியஞ்சாலை போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குபதிவு செய்து இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் ரமேசை கைது செய்தனர். #tamilnews
    பெருந்துறை அருகே ஏடிஎம் எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி செய்த வாலிபரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
    பெருந்துறை:

    பெருந்துறை அருகே உள்ளது காஞ்சிகோவில். இங்குள்ள நான்கு ரோடு பகுதியில் ஒரு தேசிய வங்கியின் ஏ.டி.எம். உள்ளது.

    24 மணி நேரம் செயல்படும் இந்த ஏ.டி.எம்.மில் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பணம் எடுத்து செல்வார்கள். மேலும் இந்த ஏ.டி.எம். அருகே கடைகளும், வீடுகளும் உள்ளன.

    அதிகாலையில் இந்த ஏ.டி.எம்.மில் நுழைந்த மர்ம ஆசாமி ஒருவன் சுற்று முற்றும் பார்த்தான். பிறகு அவன் கொண்டு வந்த இரும்பு கம்பியால் பணத்தை கொள்ளையடிக்க ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்தான்.

    இந்த சத்தம் கேட்டு பக்கத்து வீட்டில் உள்ள பொதுமக்கள் எழுந்து வெளியே வந்தனர். அப்போது ஏ.டி.எம்.மில் இருந்து சத்தம் வரவே அங்கு சென்றனர்.

    பொதுமக்களை கண்டதும் மர்ம ஆசாமி அங்கிருந்து தப்பி ஓட முயன்றான். ஆனால் அவனை பொதுமக்கள் விரட்டி மடக்கி பிடித்தனர்.

    பிறகு அவனுக்கு தர்ம அடி கொடுத்து காஞ்சிகோவில் போலீசில் பொதுமக்கள் ஒப்படைத்தனர்.

    அவனை கைது செய்த போலீசார் அவனிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் விசாரணையில் அவன் பெயர் அரவிந்த்சாமி (வயது 27) என்றும் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு மான்குட்டை பாளையத்தை சேர்ந்தவன் என்றும் தெரிய வந்தது.

    போலீசார் அவனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
    கேரளாவில் இருந்து அரசு பேருந்தில் மதுபாட்டில் கடத்தியது தொடர்பாக வாலிபரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 20 மதுபாட்டிகளை பறிமுதல் செய்தனர்.
    செங்கோட்டை:

    செங்கோட்டை வழியாக வாகனங்களில் கேரளாவுக்கு தடை செய்யப்பட்ட பொருட்களை கொண்டு செல்வதும், அங்கிருந்து தமிழகத்திற்குள் கொண்டு வருவதும் வாடிக்கையாக நடந்து வருகிறது. இதனை தடுக்க புளியரை சோதனை சாவடியில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் கேரளாவில் இருந்து அரசு பேருந்து தென்காசி செல்வதற்காக புளியரை சோதனை சாவடி வந்தது. அப்போது போலீசார் பேருந்தில் உள்ளே சென்று சோதனை செய்த போது அங்கு சந்தேகம்படும்படியாக ஒருவர் இருந்தார். அருகில் ஒரு பேக் இருந்தது. அதை போலீசார் திறந்து பார்த்தபோது 20 மதுபாட்டில்கள் இருந்தது.
     
    இதையடுத்து அதனை பறிமுதல் செய்து விசாரணை நடத்தியதில் அவர் தேவிபட்டணத்தை சேர்ந்த வன்னியராஜ்(வயது 35) என்றும்,  கேரளாவில் இருந்து கடத்தி வந்ததும் தெரியவந்தது. இது குறித்து புளியரை சப்-இன்ஸ்பெக்டர் தினேஷ்பாபு வழக்கு பதிவு செய்து வன்னிராஜை கைது செய்தார். #tamilnews
    ராஜபாளையம் வியாபாரியிடம் ரூ.3 கோடி மோசடி செய்த வாலிபரை கைது செய்த போலீசார் சொகுசு காரை பறிமுதல் செய்தனர்.
    கோவை:

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 45). பருத்தி மொத்த வியாபாரம் செய்து வருகிறார்.

    இவரிடம் உடுமலை அருகே உள்ள இலுவன்காட்டூரை சேர்ந்த ஷேக்அப்துல்காதர் (37) என்பவர் பருத்தி வாங்கிய வகையில் ரூ.1 கோடியே 93 லட்சத்து 47 ஆயிரத்து 607 பாக்கி வைத்துள்ளார். இந்த தொகையை கேட்ட போது, ஷேக்அப்துல் காதர் தான் புதிதாக மில் வாங்குவதாகவும், மில்லை வாங்கிய பின்னர் பணத்தை மொத்தமாக கொடுத்து விடுவதாகவும் கூறி உள்ளார்.

    அதோடு, மில் வாங்குவதற்கு பணம் தேவைப்படுதாக கூறி சீனிவாசனிடம் பணம் கேட்டார். இதை நம்பிய சீனிவாசன் மேலும் ரூ.1 கோடியே 17 லட்சத்தை கொடுத்துள்ளார். மொத்தம் ரூ.3 கோடியே 10 லட்சத்து 47 ஆயிரத்து 60-ஐ வாங்கிய ஷேக் அப்துல் காதர் அந்த பணத்தை திருப்பிக் கொடுக்கவில்லை.

    இதுகுறித்து சீனிவாசன் கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் ஷேக்அப்துல் காதர் மீது மோசடி, கொலை மிரட்டல் உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். இன்ஸ்பெக்டர் மகேஷ்வரன் விசாரணை நடத்தி ஷேக்அப்துல்காதரை கைது செய்தார். அவரிடம் இருந்து சொகுசு கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    கைதான ஷேக்அப்துல் காதர் மீது ஒரு கொலை வழக்கு உள்ளதாகவும், இரிடியம் மோசடி கும்பலுடன் இவருக்கு தொடர்பு இருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். #tamilnews
    ஆண்டிப்பட்டி அருகே வீடு புகுந்து தனியாக இருந்த பெண்ணை மிரட்டியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தேனி:

    ஆண்டிப்பட்டி அருகே கடமலைக்குண்டு சீனிநாயக்கர் தெருவைச் சேர்ந்தவர் கிருஷ்ணசாமி மனைவி பாப்பம்மாள் (வயது 35). இவருக்கு எதிர் வீட்டில் வசிப்பவர் சரவணன் (23). சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த பாப்பம்மாளிடம் சரவணன் கையை பிடித்து இழுத்து தகராறு செய்துள்ளார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த பாப்பம்மாள் சத்தம் போட்டார். இதனைத் தொடர்ந்து சரவணன் இந்த வி‌ஷயத்தை வெளியில் கூறினால் கொன்று விடுவதாக மிரட்டி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார். இது குறித்து கடமலைக்குண்டு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து சரவணனை கைது செய்தனர்.

    தேவதானப்பட்டி தெற்கு தெருவைச் சேர்ந்தவர் அங்கம்மாள் (40). இவரது உறவினர் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றார். அப்போது டி.கள்ளிப்பட்டியைச் சேர்ந்த பிச்சை முத்து, ஆனந்தன், முத்தாயி ஆகியோர் அங்கம்மாளை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

    இது குறித்து தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரனிடம் அங்கம்மாள் புகார் அளித்தார். எஸ்.பி. உத்தரவின் பேரில் தேவதானப்பட்டி போலீசார் 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். #tamilnews
    வள்ளியூரில் இளம்பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து கைதான வாலிபருக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வலியுறுத்தி கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    வள்ளியூர்:

    குமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள பெருஞ்சிலம்பு, வலியவிளை கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகள் மெர்சி (வயது23). இவர் வள்ளியூரில் தங்கி இருந்து அங்குள்ள பிரபல ஜவுளிக்கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

    அதே கடையில் திருக்குறுங்குடி அருகே உள்ள மகிழடி கிராமத்தை சேர்ந்த ரவீந்திரன் (31) என்பவரும் ஊழியராக வேலை பார்த்து, 15 நாட்களுக்கு முன்பு வேலையை விட்டு நின்று விட்டார். ரவீந்திரனும், மெர்சியும் வேலை பார்க்கும் போது அடிக்கடி பேசி பழகினர். இதில் அவர்களுக்குள் காதல் ஏற்பட்டது.

    பின்னர் ரவீந்திரன் வேலையை விட்டு நின்று விட்டதால், மெர்சி அவருடன் பேசி பழகுவதை நிறுத்தி விட்டார்.

    இதில் ஆத்திரம் அடைந்த ரவீந்திரன் நேற்று முன்தினம், மெர்சியை வள்ளியூர் பஸ் நிலையம் அருகே அழைத்து பேசி கொண்டு இருந்தார். அப்போது அவர் தன்னை திருமணம் செய்ய வலியுறுத்தி உள்ளார். ஆனால் மெர்சி அதற்கு மறுத்தார். இதனால் ஆத்திரத்தில் இருந்த ரவீந்திரன், மெர்சியை கத்தியால் சரமாரி குத்தி கொலை செய்தார். இந்த சம்பவம் வள்ளியூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதுதொடர்பாக வள்ளியூர் டி.எஸ்.பி. கனகராஜ், இன்ஸ்பெக்டர் அனிதா, சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரவீந்திரனை கைது செய்து விசாரணை நடத்தினர்.

    அப்போது அவர், “தன்னை காதலித்துவிட்டு திருமணம் செய்ய மறுத்ததால், மெர்சியை குத்தி கொலை செய்ததாக” வாக்குமூலம் அளித்தார். இதைத்தொடர்ந்து போலீசார் அவரிடம் இருந்து கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட கத்தியை பறிமுதல் செய்தனர். அவரை நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    இந்த நிலையில் இந்த கொலை வழக்கில் கைதான ரவீந்திரனுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும், பாதிக்கப்பட்ட மெர்சி குடும்பத்துக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும் என்று வலியவிளை கிராம மக்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மனோ தங்கராஜ், பிரின்ஸ் உள்பட ஏராளமானவர்கள் குமரி மாவட்டம் குமாரபுரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். #tamilnews
    வாலாஜா அருகே திருமணத்தை மறைத்து இளம்பெண்ணிடம் உல்லாசம் அனுபவித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    வாலாஜா:

    ஆற்காடு தாஜ்புரா பகுதியை சேர்ந்தவர் 20 வயது இளம்பெண். ஆற்காடு கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜசேகரன் (26). 2 பேருக்கும் நட்பு ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியது.

    இதையடுத்து அந்த வாலிபர் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி இளம்பெண்ணிடம் அடிக்கடி உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார்.

    சில நாட்களுக்கு பிறகு இளம்பெண் ராஜசேகரிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கட்டாயபடுத்தி வந்துள்ளார். இதையடுத்து அந்த வாலிபர் இளம்பெண்ணிடம் பேசுவதையும், பார்ப்பதையும் முற்றிலும் தவிர்த்து வந்தார்.இளம்பெண் ராஜசேகரை பார்ப்பதற்காக அவரது வீட்டிற்கு சென்றார். அப்போது தான் தெரியவந்தது. ராஜசேகருக்கு ஏற்கனவே திருமணமாகி 1 மகன் 2 மகள்கள் உள்ளனர் என்று அதிர்ச்சியடைந்த இளம்பெண்.

    இதுகுறித்து ராணிப்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜசேகரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    பாலக்கோடு அருகே வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக பண மோசடி செய்ததாக வாலிபர் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
    காரிமங்கலம்:

    தருமபுரி மாவட்டம், பாலக்கோடு கணம்பள்ளி தெருவை சேர்ந்தவர் ரெங்கநாதன். இவரது மகன் அசோக்குமார் (வயது33). இவர் பாலக்கோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, ஓசூர் ஆகிய பகுதிகளில் வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்பும் ஏஜென்சி வைத்து நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில் அசோக் குமாரிடம் பாலக்கோடு சுற்று வட்டார பகுதியில் உள்ள என்ஜினீயர், டிப்ளமோ படித்த பாலக்கோடு பகுதியை சேர்ந்த சிவசங்கர், சிரஞ்சீவி, கார்த்திக்கேயன் ஆகியோர்கள் உள்பட பலர் வெளிநாட்டு வேலைக்கு செல்ல விண்ணப்பித்து இருந்தனர். அவர்களிடம் அசோக்குமார் ஒருவருக்கு சுமார் ரூ.3 லட்சம் முதல் 9 லட்சம் வரை வசூல் செய்து வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்பியுள்ளார்.

    அங்கு தகுந்த படிப்பிற்கு வேலை செய்து கொடுக்காமல் சம்பளம் குறைவாகவும், கொத்தடிமையாகவும் வேலை வாங்கி கொடுத்துள்ளார். இதனால் அங்கு 2 மாதங்கள் வேலை செய்து விட்டு திரும்பி சொந்த நாட்டுக்கு திரும்பினர்.

    இதனால் விரக்தியடைந்த அவர்கள் அசோக்குமாரிடம் சென்று தாங்கள் செலுத்திய பணத்தை திரும்ப வேண்டும் என்று கூறினர். ஆனால் அவர்களை பணத்தை திரும்ப தர முடியாது என்று கூறி கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக தெரிகிறது.

    இது குறித்து சிரஞ்சீவி, சிவசங்கர், கார்த்திக்கேயன் ஆகியோர் பாலக்கோடு போலீசில் புகார் கொடுத்துள்ளனர். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் வழக்கு பதிவு செய்து அசோக்குமாரை கைது செய்து பாலக்கோடு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். பின்னர் அவரை தருமபுரி கிளை சிறையில் அடைத்தனர்.

    வெளிநாட்டில் வேலை செய்தால் வீட்டில் உள்ள அனைத்து கடன்களையும் அடைத்து விடலாம் என்று எங்களது பெற்றோர்கள் பணம் கட்டி வெளிநாட்டுக்கு பாலக்கோடு அசோக்குமார் என்பவர் ஏஜென்சி மூலம் அனுப்பி வைத்தனர்.

    ஆனால் அவர்கள் எங்களது பெற்றோர்களிடம் பணம் பெற்று கொண்டு வெளிநாட்டில் கொத்தடிமைகளாக எங்களை பயன்படுத்தி உள்ளனர்.

    ஆனால் அவர்களிடம் நாங்கள் என்ஜினீரிங் படித்துள்ளோம். அதற்கு தகுந்தாற்போல் வேலை கொடுக்காமல் இப்படி கொத்தடிமையாக எங்களை பயன்படுத்தி உள்ளீர்கள் என்று கூறினோம்.

    அதற்கு உங்களை அனுப்பிய ஏஜென்சி அசோக்குமாரிடம் தான் நீங்கள் கேட்க வேண்டும் என்றார். இதனால் கடந்த 3 மாதம் வேலை செய்து முடித்து அந்த பணத்தில் வெளி நாட்டில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பி வந்தோம்.

    மேலும் அசோக்குமார் கலெக்டர் பதவிக்கு வேலை வாங்கி தருவதாக ரூ.75 லட்சம் பெற்று உள்ளதாக தொழிலதிபரிடம் பணம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இது போன்று போலி ஏஜென்சி நடத்தி வரும் அசோக்குமார் போன்றவர்களை போலீசார் கைதுசெய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர். #tamilnews
    பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் முன்விரோதம் காரணமாக தொழிலாளியை கத்தியால் குத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    வடலூர்:

    கடலூர் மாவட்டம் வடலூர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன்(வயது38). தொழிலாளி.

    இவருக்கும் கடலூர் பகுதியை சேர்ந்த காதர் மொய்தீனுக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் முன்விரோதம் இருந்து வந்தது.

    இந்த நிலையில் காதர் மொய்தீன் அவரது நண்பர் ராம்குமார் (29) என்பவரை அழைத்து கொண்டு வடலூருக்கு சென்றார்.

    அப்போது அந்த பகுதியில் நடந்து வந்து கொண்டிருந்த மணிகண்டனை வழிமறித்து காதர் மொய்தீனும்,ராம்குமாரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    இதில் ஆத்திரம் அடைந்த ராம்குமார் அவர் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மணிகண்டனின் வயிற்றில் குத்தினார்.

    இதில் மணிகண்டன் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். பலத்த காயம் அடைந்த மணிகண்டனை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சையளிக்கபட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு மணிகண்டனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இது குறித்து வடலூர் போலீசில் மணிகண்டன் புகார் செய்தார். புகாரின் பேரில் காதர் மொய்தீன், ராம்குமார் ஆகிய 2 பேர் மீதும் போலீசார்வழக்குபதிவு செய்து ராம்குமாரை கைது செய்தனர்.காதர் மொய்தீனை வலை வீசி தேடி வருகின்றனர். #tamilnews
    ×