search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு மனைவி, குழந்தையை கொன்ற வாலிபர் கைது
    X

    நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு மனைவி, குழந்தையை கொன்ற வாலிபர் கைது

    கர்நாடகத்தில் நடத்தையில் சந்தேகம் அடைந்து மனைவி மற்றும் குழந்தையை கொன்ற கணவரை போலீசார் கைது செய்தனர்.
    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் கதக் மாவட்டம், லட்சுமேஸ்வரா வட்டம், கோனாலா கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் (வயது28), இவரது மனைவி நிர்மலா (25), இவர்களது 6 மாத ஆண் குழந்தை நந்தீஷ்.

    மனைவியின் நடத்தையில் ரமேஷ் சந்தேகப்பட்டார். இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று நிர்மலாவுடன் ரமேஷ் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

    அப்போது ஆத்திரமடைந்த ரமேஷ் கோடாலியால் நிர்மலா, குழந்தை நந்தீஷை வெட்டி உள்ளார். இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர். இதையடுத்து லட்சுமேஸ்வரா காவல் நிலையத்தில் ரமேஷ் சரணடைந்தார். அவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×