search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "mango"

    • ஆண்டுதோறும் ஜூன் மற்றும் நவம்பர் மாதங்களில் காய்ப்பு சீசன் இருக்கும்.
    • காய்ப்பு சீசனில், ஒரு மரத்திற்கு 300 முதல் 400 கிலோ வரை மாங்காய் கிடைக்கும்.

    உடுமலை :

    உடுமலை அருகே மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரின் அடிவாரத்தில் அமைந்துள்ள மணல் கலந்த செம்மண் பரப்பு மா சாகுபடிக்கு உகந்த மண் வளமாகும். இந்த வளம் மிகுந்த ஜல்லிபட்டி, கொங்குரார்குட்டை, மானுப்பட்டி, ஒன்பதாறு செக்போஸ்ட், திருமூர்த்திநகர், பொன்னலாம்மன்சோலை உள்ளிட்ட பகுதிகளில் பல ஆயிரம் ஏக்கரில் மா சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது.செந்தூரம், நீலம், மல்கோவா, பங்கனப்பள்ளி, பெங்களூரா உட்பட 10-க்கும் மேற்பட்ட ரகங்கள் இப்பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.

    ஆண்டுதோறும் ஜூன் மற்றும் நவம்பர் மாதங்களில் காய்ப்பு சீசன் இருக்கும். கொத்து கொத்தாக காய்கள் பிடித்து கார்பைட் போன்ற ரசாயன பயன்பாடு இல்லாமல்மரங்களில் மாங்காய்கள் பழுக்கும் போது அப்பகுதியில் பரவும் மணம்மக்களை மட்டுமல்லாது மேற்குத்தொடர்ச்சி மலையிலுள்ள யானைகளையும் இழுப்பது வழக்கம்.ஆனால் இந்தாண்டு மரங்களில் பூ பிடிக்கும் தருணத்தில், பெய்த மழை கோடை காலத்தில் போதிய வெயில் இல்லாதது போன்ற காரணங்களால் மகசூல் முற்றிலுமாக பாதித்துள்ளது.

    இது குறித்து விவசாயிகள் கூறுகையில், காய்ப்பு சீசனில், ஒரு மரத்திற்கு 300 முதல் 400 கிலோ வரை மாங்காய் கிடைக்கும். சந்தை நிலவரத்தை பொறுத்து கிலோவிற்கு 50 ரூபாயிலிருந்து விலை கிடைக்கும். இந்த வருவாயே எங்களின் வாழ்வாதாரமாக இருந்தது. இந்தாண்டு ஜூன் மாத சீசன் கைகொடுக்கவில்லை. மரங்களில் பூக்கள் உதிர்ந்து தற்போது தழைவு துவங்கியுள்ளது. இதனால்காய் பிடிக்காமல் மகசூல் முற்றிலுமாக பாதித்துள்ளதுஎன்றனர்.

    • செங்கோட்டை பகுதியில் விளைச்சல் குறைவால் மாம்பழங்கள் விலை அதிகரித்துள்ளது.
    • சீசன் காலமான தற்போது பருவநிலை மாற்றத்தால் காற்று அதிகளவில் இல்லாமல் மரங்கள் விளைச்சல் குறைந்துள்ளதாக செங்கோட்டை பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

    செங்கோட்டை:

    தென்காசி மாவட்டம் செங்கோட்டை, கண்ணுப்புளி மெட்டு, பண்பொழி, வல்லம், புளியரை, தெற்குமேடு உள்ளிட்ட பகுதி களில் அதிகளவில் மா சாகுபடி செய்ய ப்பட்டு விவசயிகள் வாழ்வாதாரம் நடத்தி வருகின்றனர்.

    இந்த பகுதிகளில் விவசாயிகள் நெல்லுக்கு அடுத்தபடியாக மா விவசாயத்தில் அதிகளவில் ஈடுபட்டு வருகின்றனர். சீசன் காலமான ஏப்ரல், மே, ஜுன் மாதம் தோப்புகளில் உள்ள மா மரங்களில் மாங்காய்கள் கொத்துக்கொத்தாக காய்த்து தொங்கும். சாலையோரம் உள்ள மரங்களில் இக்காட்சியை சுற்றுலாப்பயணிகள் செல்பி எடுத்து செல்வார்கள்.

    செங்கோட்டை அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இமாம்பசந், சப்போட்டா, அல்போன்ஸா, கிளிமூக்கு, மல்கோவா உள்ளிட்ட 11-க்கும் மேற்பட்ட வகையான மாம்பழங்கள் இப்பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. ஏப்ரல், மே, ஜுன் ஆகிய மாதங்கள் இப்பகுதியில் மா அறுவடை செய்யப்படுகிறது.

    நகர்புறங்களில் இருப்பது போன்று குடோன்களில் இருப்பு வைத்து தேவைக்கேற்ப செயற்கையாக மாம்பழங்களை பழுக்க வைப்பதில்லை என விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இதனால் இப்பகுதிகளில் இருக்கும் தோப்புகளில் இருந்து இறக்கப்படும் மாம்பழங்கள் சாலையோர கடைகளுக்கு நேரடியாக வியாபாரத்துக்கு வந்துவிடுகிறது.

    சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களுக்கும், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மும்பை போன்ற வெளி மாநிலங்களுக்கும் இங்கிருந்து மாம்பழங்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    சீசன் காலமான தற்போது பருவநிலை மாற்றத்தால் காற்று அதிகளவில் இல்லாமல் மரங்கள் விளைச்சல் குறைந்துள்ளதாக செங்கோட்டை பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இதனால் மா விலை அதிகரித்துள்ளது. மாம்பழங்கள் தரம் வாரியாக பிரிக்கப்பட்டு கிலோவுக்கு ரூ. 50 முதல் ரூ. 150 வரை விற்கப்படுகிறது.

    இதுபற்றி இப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:-

    செங்கோட்டை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் 500 ஏக்கருக்கும் அதிகளவில் சாகுபடி செய்யப்படும் மாம்பழங்களை பதப்படுத்தி வைக்க இப்பகுதிகளில் சேமிப்பு கிடங்கு ஏதும் இல்லை. எனவே இங்கு விளையும் மாம்பழங்களை வியாபாரிகள் நிர்ணயிக்கும் விலைக்கு கொடுக்க வேண்டிய சூழல் எங்களுக்கு ஏற்படுகிறது.

    தமிழக அரசு இப்பகுதியில் மாம்பழங்களை பதப்படுத்தி வைக்கும் அளவில் ஒரு சேமிப்பு கிட்டங்கி அமைத்தால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைவார்கள். கிட்டங்கி வசதி இருந்தால் வெளிநாடுகளுக்கும் இங்கு விளையும் மாம்பழங்களை ஏற்றுமதி செய்ய வசதியாக இருக்கும்.

    இதனால் தொழில் வர்த்தக ரீதியாக செங்கோட்டை அதன் சுற்று வட்டார பகுதி மாங்காய் உற்பத்தியாளர்கள் முன்னேர்வதோடு அரசுக்கும் வருவாய் கூடும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    உத்தரப்பிரதேசத்தில் நடைபெறும் 2 நாள் மாம்பழ கண்காட்சியினை முதல்மந்திரி யோகி ஆதித்யநாத் இன்று துவக்கி வைத்தார். #MangoFest #UP
    லக்னோ:

    உத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று முதல் 2 நாட்களுக்கு மாம்பழ கண்காட்சி நடைபெறுகிறது. இந்த கண்காட்சியில் நாடு முழுவதிலும் இருந்து சுமார் 700 வகை மாம்பழங்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

    இந்த மாம்பழ கண்காட்சியை முதல்மந்திரி யோகி ஆதித்யநாத் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பேசிய முதல்மந்திரி யோகி ஆதித்யநாத், நாட்டிலேயே அதிக அளவில் மாம்பழங்களை விளைவிக்கும் மாநிலம் உத்தரப்பிரதேசம் என பெருமிதம் தெரிவித்தார்.

    மேலும், விவசாயிகளின் வருவாய் மற்றும் தேவைகளை இரு மடங்காக உயர்த்த தோட்டக்கலை உதவும் எனவும், இந்த கண்காட்சி அதற்கான முயற்சியாக நடத்தப்படுவதாகவும் அப்போது அவர் தெரிவித்துள்ளார்.

    இந்த கண்காட்சியில் முதல்மந்திரி யோகி ஆதித்யநாத்தை கவுரவிக்கும் விதமாக உத்தரகாண்ட், மத்திய பிரதேசம், குஜராத் ஆகிய பகுதிகளில் விளையும் மாம்பழ வகைக்கு ‘யோகி மாம்பழம்’ என பெயர் சூட்டப்பட்டது. #MangoFest #UP
    நிபா வைரஸ் பீதியால் ஊத்துக்கோட்டை மாம்பழ மார்க்கெட்டு வியாபாரம் இன்றி வெறிச்சோடி கிடக்கிறது. மாம்பழம் வாங்க வியாபாரிகள் தயங்குகின்றனர்.
    ஊத்துக்கோட்டை:

    ஊத்துக்கோட்டை அருகே உள்ள சென்னேரி, நரசாரெட்டி கண்டிகை, புதுகுப்பம், ஆம்பாக்கம், பேரடம், மதனம்பேடு, என்.எம். கண்டிகை, தாராட்சி, நெல்வாய், பாலவாக்கம், கரடிபுத்தூர், செங்கரை, தேர்வாயகண்டிகை, கண்ணன்கோட்டை.

    பூண்டி, சீதஞ்சேரி, அம்மம் பாக்கம், காரணி, சுப்பாநாயுடு கண்டிகை, நந்தனம், கொடியமேபேடு, படயகொடியமேபேடு, வெள்ளாத்துக்கோட்டை, நம்பாக்கம், அரியத்தூர், சென்றான்பாளையம் பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் மாந்தோட்டங்கள் உள்ளன.

    இங்கு பங்கினபள்ளி, ருமானி, ஜவாரி, சில்பசந்த், மல்கோவா, ஹாபிஸ், செந்துரை பழரகங்கள் பயிரிடப்படுகின்றன. இந்த மாம்பழங்களுக்கு கடும் கிராக்கி உண்டு.

    தஷ்போது சீசனையொட்டி ஊத்துக்கோட்டை மார்க்கெட்டுக்கு விற்பனைக்காக அதிக அளவில் மாம்பழங்கள் வந்து குவிந்து வருகின்றன.

    இங்கு திருவள்ளூர், பூந்தமல்லி, போரூர், செங்கல்பட்டு, காஞ்சீபுரம், தாம்பரம், சென்னை போன்ற வெகு தூரத்தில் இருந்து வரும் மொத்தம் மற்றும் சில்லரை வியாபாரிகள் மாம்பழங்களை வாங்கி செல்வது வழக்கம்.

    இந்த நிலையில் நிபா வைரஸ் பழங்களால் பரவுகிறது என்ற பீதியால் பெரும்பாலான பொதுமக்கள் மாம்பழங்களை சாப்பிட தயங்குகின்றனர்.

    இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் ஊத்துக்கோட்டை மாம்பழ மார்க்கெட்டு தற்போது வெறிச்சோடி காணப்படுகிறது. மேலும் விலையும் கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது

    பங்கனபல்லி கிலோ ரூ. 20-க்கு விற்கப்படுறது. அதேபோல் ஜவாரி கிலோ ரூ. 25, ருமானி ரூ. 8, செந்துரை ரூ. 8, நாட்டு ரகம் வெறும் ரூ. 5-க்கு விற்கப்படுகிறது.

    கடந்த ஆண்டு பங்கனபல்லி ரூ. 40, ஜவாரி ரூ. 50, ருமானி ரூ. 25, செந்துரா ரூ. 30 நாட்டு ரகம் ரூ.20 விற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    நிபா வைரஸ் பீதி காரணமாக பொது மக்களிடத்தில் மாம்பழம் வாங்கும் ஆர்வம் குறைந்துள்ளதாக புதுகுப்பத்தை சேர்ந்த மாரி என்ற வியாபாரி தெரிவித்தார்.

    வியாபாரம் இல்லாததால் ஊத்துக்கோட்டை மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு கொண்டு வந்த மாம்பழங்கள் அழுகி வருகின்றன. விவசாயிகள் லாரி மற்றும் டிராக்டர்களில் கொண்டு சென்று கொட்டி அழித்து வருகின்றனர். #tamilnews
    சேலத்தில் இன்று பழ குடோன்களில் அதிகாரிகள் நடத்திய சோதனையில் செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட 2¾ டன் மாம்பழங்கள், வாழை பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
    சேலம்:

    சேலத்தில் மாம்பழ சீசன் தற்போது உச்சத்தை எட்டியுள்ளது.

    இதனால் கடை வீதி, புதிய மற்றும் பழைய பஸ் நிலையம், ஜங்சன், ஏற்காடு ரோடு உள்பட பல்வேறு பகுதிகளில் மாம்பழங்கள் விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் மாம்பழ குடோன்களில் இயற்கைக்கு மாறான வகையில் உடலுக்கு கேடு ஏற்படும் வகையில் செயற்கையாக பழங்களை பழுக்க வைக்கப்படுவதாக புகார்கள் எழுந்தது. இது தொடர்பாக உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி மாரியப்பனுக்கு புகார்கள் சென்றது.

    இந்தநிலையில் இன்று காலை 5 மணியளவில் உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி மாரியப்பன் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பாலு, சரவணன், இளங்கோ உள்ளிட்ட 8 பேர் கொண்ட குழுவினர் சேலம் சின்ன கடை வீதி பகுதியில் உள்ள குடோன்களில் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.

    இந்த ஆய்வில் அனுமதிக்கப்படாத எத்திலின் கரைசல் மற்றும் சோடா உப்பு கொண்டு செயற்கை முறையில் பழங்கள் பழுக்க வைக்கப்பட்டது கண்டு பிடிக்கப்பட்டது.

    இவ்வாறு பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் 1 டன்னும், வாழைப்பழம் 1.75 டன்னும் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. பின்னர் செயற்கையான முறையில் பழங்களை இது போல பழுக்க வைத்தால் வழக்கு பதிவு செய்து மேல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எச்சரித்தார். இதனால் சேலத்தில் மாம்பழ வியாபாரிகள் மத்தியில் பெரும் பீதி ஏற்பட்டது.

    இது குறித்து உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி மாரியப்பன் கூறியதாவது:-

    பழங்களை இயற்கையான முறையில் மட்டுமே பழுக்க வைக்க வேண்டும், சிலர் அனுமதிக்கப்படாத சோடா உப்பினை, மாம்பழங்கள் மீது தெளித்து செயற்கையான முறையில் பழுக்க வைக்கின்றனர். இதனை சாப்பிடும் நபர்களுக்கு உடலுறுப்புகள் பாதிக்கப்பட்டு உடல் நலக்குறைவு ஏற்படும்.

    பழங்களை இயற்கையான முறையிலும், எத்திலின் கியாஸ் சேம்பரிலும் பழுக்க வைக்க வேண்டும். இன்று நடத்தப்பட்ட ஆய்வில் செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது.

    மேலும் பாதுகாப்பற்ற முறையில் பழங்களை பழுக்க வைத்தது உணவு பாதுகாப்பு வணிக சான்றிதழ் இல்லாமல் இயங்கியது ஆகிய குற்றத்திற்காக உணவு பாதுகாப்பு தரங்கள் சட்டத்தன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    மேலும் மருந்து தெளிப்பான் உள்ளிட்ட உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த கண்காணிப்பு, நடவடிக்கைகள் தொடரும் என்றும் எச்சரிக்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #tamilnews
    சேலத்தில் 3 கிலோ எடை கொண்ட அரிய வகை மாம்பழம் விளைந்துள்ளது. இது விரைவில் சேலம் சந்தைக்கு விற்பனைக்கு வர உள்ளது.
    சேலம்:

    சேலத்தில் மாம்பழ சீசன் உச்சத்தை எட்டி உள்ளது. இனால் கடைவீதி, ஏற்காடு ரோடு, ஜங்சன், பழைய பஸ் நிலைம், புதிய பஸ் நிலையம் உள்பட அனைத்து பகுதிகளிலும் ஏராளமான மாம்பழங்கள் விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டுள்ளன.

    இந்த நிலையில் சேலம் கொண்டப்பநாயக்கன்பட்டி யை சேர்ந்த ஒரு விவசாயியின் தோட்டத்தில் 200 ஆண்டுகளுக்கு முந்தைய அரிய வகை மாம்பழ வகையான தலையணை மாம்பழம் காய்த்து உள்ளது.

    இந்த மாம்பழம் பார்ப்பதற்கு பெரிய அளவில் சுமார் 3 கிலோ எடை கொண்டதாக உள்ளது. விரைவில் சேலம் சந்தைக்கு விற்பனைக்கு வர உள்ளது. இது குறித்து மாம்பழம் விளைவித்த விவசாயி கூறியதாவது:-

    சேலத்தில் தலையணை மாம்பழம் சில தோட்டங்களில் மட்டுமே பயிரிடப்படுகிறது. இந்த மாம்பழம் பருவமழை சரியாக பெய்தால் மட்டுமே பூ பூத்து காயாகும். பருவமழை பொய்த்து விட்டால் பூ உதிர்ந்து விடும். கடந்த ஆண்டு பருவமழை பெய்ததாலும், தற்போது கோடையில் தொடர்ந்து மழை பெய்து வந்ததாலும் இந்த அரியவகை மாம்பழம் எங்களது தோட்டத்தில் விளைந்துள்ளது.

    இத்தகைய மாம்பழங்கள் 200 ஆண்டுகளுக்கு முன்பு மட்டுமே விளைந்த மாம்பழங்களாகும். அப்போது பருவமழை தவறாமல் பெய்து வந்ததே மாம்பழங்களில் விளைச்சலுக்கு காரணமாகும். எங்களது தோட்டத்தில் அரிதாக விளைந்துள்ள இந்த தலையணை மாம்பழத்தை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் கண்டு செல்கின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மாங்கனியில் 20 வகையான வைட்டமின்களும், தாது சத்துகளும் உள்ளன. இயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களை சாப்பிட்டு உடல் நலத்தை மேம்படுத்துங்கள்.
    மாங்கனி முக்கனிகளுள் ஒன்று. தமிழ் இலக்கியத்தில் மாம்பழத்துக்கு தனி சிறப்பு உண்டு. பழனி மலை முருகன் மாங்கனி (ஞானப்பழம்) கிடைக்காததால் தன் பெற்றோரிடம் கோபித்துக்கொண்டு சென்ற கதையை நாம் அறிவோம்.

    இந்தியாவில் மட்டும் கிட்டத்தட்ட 283 மாம்பழ வகைகள் இருக்கின்றன. இவற்றில் 30 வகைகள் பிரசித்திப் பெற்றவை. நமது தேசிய கனி என்ற சிறப்பை பெற்றது மாங்கனி.

    மாமரம் 300 வருடத்துக்கு பிறகும் கூட கனி தரும். இந்திய மாம்பழ வகைகளில் அல்போன்சா, மல்கோவா, சேலம் குண்டு, சேலம் அல்போன்சா, செந்தூரா, பங்கனப்பள்ளி, நீலம், லாங்க்ரா, காலாப்பட், பாதாமி அல்போன்சா, ராஸ்புரி, கோல, பெத்தரசலு, சுவர்ணரேகா, லாங்க்ரா போன்றவை பிரசித்தி பெற்றவை.



    உலகில் இனிப்பான மாங்கனி பிலிப்பைன்ஸ் நாட்டில் விளையும் காரபோவ் தான். இதில் 14 வகைகள் உண்டு. தமிழகத்தில் ஏழைகளின் மாம்பழம் ருமானி. இதன் விலை குறைவு.

    உலகில் மாம்பழம் அதிகம் விளைவது இந்தியாவில் தான். மாங்கனியில் 20 வகையான வைட்டமின்களும், தாது சத்துகளும் உள்ளன. மாங்கனி கொழுப்பைக் குறைக்கும். முகப்பருக்களை அழிக்கும். முகப்பொலிவு தரும். எலும்புகளை வலுவாக்கும். உடலில் உள்ள நச்சுத்தன்மையை முறியடிக்கும். தாம்பத்ய வாழ்க்கைக்கு சிறந்தது.

    சர்க்கரை நோயாளிகள் தங்கள் உடல் நிலைக்கேற்ப மருத்துவ ஆலோசனை பெற்று மாம்பழம் சாப்பிடலாம். கார்பைடு கல் வைத்து பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களை சாப்பிடக் கூடாது. அவை உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கும். பருவகாலத்துக்கு ஏற்ப கனிகளை உட்கொள்ள வேண்டும்.

    தற்போது மாம்பழ சீசன் நடந்துகொண்டு இருக்கிறது. இயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களை சாப்பிட்டு உடல் நலத்தை மேம்படுத்துங்கள்.

    வக்கீல் ஏ.எஸ்.பிலால், சென்னை
    ×