search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செயற்கை"

    • ஊராட்சி மன்றம் சார்பில் கால்நடை மருத்துவத்துறை பற்றிய கண்காட்சி முகாம் நடைபெற்றது.
    • குடற்புழு நீக்கம், செயற்கை முறை கருவூட்டல் போன்ற பணிகள் சிறப்பாக நடைபெற்றது.

    பட்டுக்கோட்டை:

    பட்டுக்கோட்டை மனோரா ரோட்டரி சங்கம், தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத் துறை, ஒரத்தநாடு கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் புதுக்கோட்டை உள்ளூர் ஊராட்சி மன்றம் சார்பில் கால்நடை மருத்துவ சிகிச்சை மற்றும் கால்நடை மருத்துவத்துறை பற்றிய கண்காட்சி முகாம் நடைபெற்றது.

    முகாமிற்கு மனோரா ரோட்டரி சங்க தலைவர சிவச்சந்திரன் தலைமை வகித்தார். முகாமை பட்டுக்கோட்டை ஒன்றியக்குழு தலைவர் பழனிவேல் தொடங்கி வைத்தார்.

    கால்நடைமருத்துக்கல்லூரி முதல்வர் டாக்டர் நர்மதா, கால்நடைத்துறை உதவி இயக்குநர் டாக்டர் சுமதி, ஊராட்சி மன்றத் தலைவர் வெங்கிடாசலம், சங்க முன்னாள் தலைவர் பாலசுப்ரமணியன், விவேகானந்தன், அண்ணாத்துரை மற்றும் உறுப்பினர்கள், கல்லூரி பேராசியர்கள் கலந்துகொண்டனர்.

    முகாம் ஏற்பாடுகளை அதிராம்பட்டினம் கால்நடை மருத்துவர் தெய்வ விருத்தம் செய்திருந்தார்.

    செயலாளர் சத்தியமூர்த்தி நன்றி கூறினார். முகாமில் குடற்புழு நீக்கம், சுண்டுவாத அறுவைச் சிகிச்சை, அல்ட்ரா ஸ்கேன் சினை பரிசோதனை, செயற்கை முறை கருவூட்டல் போன்ற பணிகள் சிறப்பாக நடைபெற்றது. 1800 கால்நடைகள் பயன்பெற்றன.

    ×