search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "mango"

    • வியாபாரிகள் அதிக லாபம் பார்க்கும் நோக்கில் மாங்காய்களை குறைந்த விலையில் கொள்முதல் செய்து வருவதாக கூறப்படுகிறது.
    • கடை மற்றும் குடோன்களில் குவியலாக வைத்து அதனை கார்பைட் கல் மூலம் பழுக்க வைப்பதாக புகார்கள் எழுந்து வருகிறது.

    செங்கோட்டை:

    தென்காசி மாவட்டம் செங்கோட்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் 10 ஆயிரம் ஏக்கருக்கு மேல் மாம்பழம் விவசாயம் நடைபெறுகிறது. கோடைகால சீசனாக மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் விளையும் மாம்பழங்கள் தற்போது கடைகளில் விற்பனைக்கு வரத் தொடங்கி உள்ளது. இங்கு சப்போட்டா, கிளி மூக்கு, பஞ்சவர்ணம், அல்போன்சா போன்ற ரக மாங்காய்கள் காய்க்கின்றன.

    செங்கோட்டை மற்றும் சுற்று கிராமங்களில் விளையும் இந்த வகை மாங்காய்கள் வெளிமார்க்கெட் மற்றும் பழக்கடைகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், கேரளா ஆந்திரா, புதுச்சேரி உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகின்றன.

    ஆனால் சீசன் தொடங்கும் முன்னே சில வியாபாரிகள் அதிக லாபம் பார்க்கும் நோக்கில் மாங்காய்களை குறைந்த விலையில் கொள்முதல் செய்து வருவதாக கூறப்படுகிறது. கடை மற்றும் குடோன்களில் குவியலாக வைத்து அதனை கார்பைட் கல் மூலம் பழுக்க வைப்பதாக புகார்கள் எழுந்து வருகிறது.

    இவ்வாறு பழுக்கும் பழங்களின் தோல் பகுதி பளபளப்பாக இருக்கும். இது பார்ப்பவர்களை வாங்க தூண்டும். இதேபோல் குவியலாக மாங்காய்களை போட்டு, ஸ்பிரே மூலம் ரசாயன மருந்து அடிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. கல், ரசாயனம் மூலம் காய்கள் சில நாள்களில் பழுக்கின்றன. இந்த பழங்களை சாப்பிட்டால் வயிற்று வலி, வயிற்றுப்போக்கு ஏற்படும். செயற்கை முறையில் மாம்பழங்களை பழுக்க வைப்பதால் குழந்தைகள் முதல் பெரியவர் வரை பாதிக்கின்றனர். இதை அதிகாரிகள் தடுக்க வேண்டும் என பலதரப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதையடுத்து செங்கோட்டையில் பல கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். வல்லம் அருகே உள்ள சிலுவைமுக்கு பகுதியில் செயற்கை முறையில் பழுக்க வைத்துள்ளதாக தகவல் அறிந்து தென்காசி ஊராட்சி ஒன்றிய உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி நாகசுப்பிரமணியன் சம்பவ இடத்தை ஆய்வு செய்தபோது, அவர் யார் என்று தெரியாமல் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி கண் முன்னே மாம்பழங்கள் கெடாமல் இருப்பதற்காகவும், விரைவாக பழுக்கவும் அமிலம் கலந்த ஸ்பிரேவை வியாபாரி மாம்பழங்களில் அடித்துக் கொண்டிருந்துள்ளார்.

    அதை பார்த்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரி குடோனில் வைத்திருந்த மாம்பழங்களை ஆய்வு செய்தார். அப்போது, குடோனில் இருந்த மாம்பழங்கள் முழுவதும் செயற்கையான முறையில் பழுக்க வைக்கப் பட்ட மாம்பழங்களாக இருந்துள்ளது. அதனைத் தொடர்ந்து, அந்த குடோனில் இருந்த சுமார் 600 கிலோ மதிப்பிலான மாம்பழங்களை பறிமுதல் செய்து அதை போலீஸ் பாதுகாப்புடன் அருகே உள்ள குப்பை கிடங்கில் கொட்டி அழித்தார்.

    • ரசாயன கல் மூலம் பழுக்க வைத்த 679 கிலோ பழங்கள் பறிமுதல் செய்தனர்.
    • மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி ஜெயராம பாண்டியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    மதுரை

    மதுரை மாவட்டத்தில் கோடை காலம் தொடங்கி விட்டது. எனவே உடலுக்கு குளிர்ச்சி தரும் பழங்களின் விற்பனை அதிகரித்து வரு கிறது. பொதுமக்கள் மாட்டுத்தாவணி மார்க்கெட்டில் மாம்பழம், திராட்சை, வாழைப்பழம், கிர்ணி பழம் ஆகியவற்றை ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.

    இந்த நிலையில் மாட்டுத் தாவணி பழ மார்க்கெட்டில் பழங்கள் ரசாயன கல் வைத்து செயற்கை முறை யில் பழுக்க வைக்கப்படுவ தாக மாவட்ட உணவு பாது காப்பு துறைக்கு தொடர்ச்சி யாக புகார் வந்தது. எனவே அங்கு அதிரடியாக சோதனை நடத்துவது என்று அதிகாரிகள் முடிவு செய்த னர்.

    அதன்படி மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி ஜெயராம பாண்டியன் தலைமையில் ஊழியர்கள் நேற்று இரவு மாட்டுத்தாவணி பழ மார்க்கெட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அதிகாரிகள் ஒவ்வொரு கடைகளாக சென்று ஆய்வு செய்தனர். அங்கு உள்ள சுமார் 140 கடைகளும் தணிக்கை செய்யப்பட்டது.

    அப்போது சில கடை களில் மாம்பழம், திராட்சை, கிர்ணி பழம், வாழைப்பழம் ஆகி யவை செயற்கை ரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்பட்டது கண்டறி யப்பட்டது. இதனை தொடர்ந்து உணவு பாது காப்பு துறை அதி காரிகள் மாட்டுத்தாவணி பழ மார்க்கெட்டில் ரசாயன கல் வைத்து பழுக்க வைக்கப் பட்ட 154 கிலோ மாம்பழம், 45 கிலோ திராட்சை, 60 கிலோ தண்ணீர்பழம், 18 தார் (420 கிலோ) வாழைப் பழங்கள் என மொத்தம் 679 கிலோ பழங்கள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.28 ஆயிரம் ஆகும்.

    மாட்டுத்தாவணி வியாபாரிகள் கடந்த சில மாதங்களாகவே பழங்களை செயற்கை முறையில் பழுக்க வைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கிலோ கணக்கில் பழங்கள் அழுகி உள்ளன. அவற்றை யும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதனை தொடர்ந்து செயற்கை முறையில் பழுக்க தடை செய்யப்பட்ட பாலித்தீன் பைகளும் பறிமுதல் செய்யப்பட்டது. சம்பந்தப்பட்ட கடைக ளுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.

    உடலுக்கு தீமை விளைவிக்கும் செயற்கை முறையில் பழங்களை பழுக்க வைத்து விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி ஜெயராம பாண்டியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    • நடவடிக்கை எடுக்க கலெக்டர் வினீத் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
    • மாம்பழங்களின் மொத்த மதிப்பு சுமார் ரூ.1.50 லட்சம் ஆகும்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்தில் உள்ள பழக்கடைகளில் கார்பைடு கல் மூலம் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இது குறித்து நடவடிக்கை எடுக்க கலெக்டர் வினீத் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி களுக்கு உத்தரவிட்டார்.

    இதையடுத்து உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் 3 குழுக்களாக பிரிந்து திருப்பூர் மாநகர் பகுதியில் உள்ள மாம்பழ மொத்த மற்றும் சில்லரை விற்பனை நிலையங்களில் இன்று காலை திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

    ஆய்வின்போது 4 குடோன்களில் இருந்து சுமார் 2 டன் அளவிலான வேதிப்பொருட்களை வைத்து செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட மற்றும் கெட்டுப்போன மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டு மாநகராட்சி மூலம் அழிக்கப்பட்டது. மாம்பழங்களின் மொத்த மதிப்பு சுமார் ரூ.1.50 லட்சம் ஆகும். இது தொடர்பாக 12 மொத்த விற்பனை நிலையங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

    • செயற்கையாக பழுக்க வைத்த மாம்பழம், பிளாஸ்டிக் கவர்களை பறிமுதல் செய்தனர்.
    • இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், சாலையோரம் இருந்த 48 கடைகள் ஆய்வு செய்யப்பட்டது.

    சேலம்:

    சேலம் அஸ்தம்பட்டி ரவுண்டானாவில் இருந்து ஏற்காடு செல்லும் வழியில் சாலையோரங்களில் பழக்கடைகள் உள்ளன. அங்கு மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கதிரவன் தலைமையில் அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர்.

    அப்போது செயற்கையாக பழுக்க வைத்த மாம்பழம், பிளாஸ்டிக் கவர்களை பறிமுதல் செய்தனர். இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், சாலையோரம் இருந்த 48 கடைகள் ஆய்வு செய்யப்பட்டது. 2 கடைகளில் செயற்கையாக பழுக்க வைத்த மாம்பழம் 260 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது.

    தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர் 25 கிலோ பறிமுதல் செய்து, அழிக்கப்பட்டன. பிளாஸ்டிக் கவர் பயன்படுத்திய 2 கடைகளுக்கு 4000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

    கடை உரிமையாளர்களிடம் பழங்களை பழுக்க வைப்பது தொடர்பாக அறிவுரை வழங்கி, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    • செந்தூரம், கிளி மூக்கு போன்ற ரக மாம்பழங்கள் கடந்த ஆண்டு விலை குறைந்து விற்பனை செய்யப்பட்டது.
    • பெங்களுரா, மல்கோவா, இமாம் சந்த், குண்டு நடுச்சாலை போன்ற ரக மாம்பழங்களும் விற்பனைக்கு வர தொடங்கியுள்ளன.

    ஈரோடு:

    கோடை காலத்தில் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் கனிகளில் முதலிடத்தில் இருப்பது மாம்பழம் தான். ஈரோடு மாவட்டத்தில் மாம்பழங்கள் குறைந்த அளவிலேயே விளைவிக்கப்படுகிறது. இதனால் ஈரோடு மாவட்டத்திற்கு அருகே உள்ள சேலம், கிருஷ்ணகிரி, சங்ககிரி, மேச்சேரி, ஆத்தூர், வனவாசி, நங்கவள்ளி, தலைவாசல் போன்ற பகுதியில் இருந்து மாம்பழங்கள் அதிக அளவில் விளைச்சலாகி வருகிறது.

    ஈரோட்டில் ஏப்ரல் மாதம் தொடக்கத்தில் இருந்தே வ.உ.சி. நேதாஜி காய்கறி மார்க்கெட், சம்பத் நகர், பெரியார் நகர் உழவர் சந்தைகள் உட்பட அனைத்து கடைகளிலும் பல்வேறு வகை மாம்பழங்கள் விற்பனைக்கு வந்துள்ளன. குறிப்பாக பங்கனப்பள்ளி, செந்தூரம், மல்கோவா, கிளி மூக்கு போன்ற வகை மாம்பழங்கள் அதிக அளவில் விற்பனைக்கு வந்துள்ளன. வ.உ.சி. மார்க்கெட்டிற்கு இன்று 10 டன் மாம்பழம் விற்பனைக்கு வந்துள்ளது.

    சேலம், கிருஷ்ணகிரி போன்ற பகுதிகளில் அதிகம் விளைச்சல் ஆகும். செந்தூரம், கிளி மூக்கு போன்ற ரக மாம்பழங்கள் கடந்த ஆண்டு விலை குறைந்து விற்பனை செய்யப்பட்டது. கடந்த ஆண்டு ஒரு கிலோ ரூ.35-க்கு விற்கப்பட்ட செந்தூரம் இந்த ஆண்டு ரூ.80 முதல் ரூ. 110 வரை விற்கப்படுகிறது. இதேபோல் ரூ.30-க்கு விற்கப்பட்ட கிளி மூக்கு மாம்பழம் இந்த ஆண்டு ரூ.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் மாம்பழம் வரத்து குறைந்து இருப்பது தான்.

    இதேபோல் பெங்களுரா, மல்கோவா, இமாம் சந்த், குண்டு நடுச்சாலை போன்ற ரக மாம்பழங்களும் விற்பனைக்கு வர தொடங்கியுள்ளன. இவற்றின் விலையும் கடந்த ஆண்டை விட 2 மடங்கு அதிகரித்துள்ளது.

    இதுகுறித்து மாம்பழம் மொத்த வியாபாரிகள் கூறியதாவது:-

    ஈரோட்டிற்கு சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி போன்ற பகுதியில் இருந்து அதிக அளவில் மாம்பழங்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. தற்போது மாம்பழம் சீசன் தொடங்கி விட்டாலும் வரத்து மிகவும் குறைவாகவே உள்ளது. இதனால் மாம்பழங்கள் விலை அதிகரித்துள்ளது.

    ஓசூர், பெங்களூர், ஆந்திரா, கர்நாடகா போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்து பல்வேறு வகை மாம்பழங்கள் விற்பனைக்கு வர தொடங்கியுள்ளன. இந்த மாம்பழங்கள் வரத்து அதிகரித்தால் விலை குறைய வாய்ப்பு உள்ளது.

    ஈரோட்டில் கடந்த சில மாதங்களாகவே கடும் வெயில் வாட்டி வருவதால் மா மரத்தில் காய் பிடிக்கும் சீசனில் பூக்களிலேயே உதிர்ந்து விடுகிறது. மேலும் மாங்காய் முழு வளர்ச்சி பிடிக்காமல் வெம்பி விழுந்து விடுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இதனால் தான் தற்போது சீசன் தொடங்கியும் மாம்பழம் வரத்து குறைவாக உள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. முயற்சியால் ராஜபாளையத்தில் மாம்பழம் பதப்படுத்தும் தொழிற்சாலை அமைக்கப்படுகிறது.
    • ராஜபாளையம் தொகுதி விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் மகிழ்ச்சியடைவார்கள்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் தொகுதி எம்.எல்.ஏ. தங்கபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரில் குறு-சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் மானியக்கோரிக்கை விவாதம் நடந்தது. ராஜபாளையம் தொகுதியில் விவசாயிகளின் 50 வருட கோரிக்கையான மாம்பழம் பதப்படுத்துதல் மற்றும் மாழ்பழக்கூழ் தொழிற்பேட்டை, தேங்காய் கொள்முதல் நிலையம் மற்றும் சிறு-குறு நடுத்தர தொழிற்பேட்டை அமைக்க கோரிக்கை விடுத்திருந்தேன்.

    இதையடுத்து முதல்-அமைச்சரின் அறிவுறுத்தலின்படி அமைச்சர் அன்பரசனால் ராஜபாளையம் பி.ஏ.சி.ஆர். அரசு மருத்துவமனை எதிர்ப்புறம் சின்மயா பள்ளி செல்லும் சாலையில் தென்காசி மெயின்ரோட்டில் இருந்து சுமார் 1.5 கிலோமீட்டர் தொலைவில் புதிய தொழிற்பேட்டை அமைய உள்ளது என்ற அறிவிப்பு சட்டபேரவையில் வெளியிடப்பட்டுள்ளது.

    இதை ராஜபாளையம் தொகுதி விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். ராஜபா ளையம் பகுதியை சுற்றியுள்ள விவசாயிகளின் நீண்டகால கோரிக்கையை நிறைவேற்ற காரணமாக இருந்து தொடர்ந்து வலியுறுத்திய வருவாய்த்துறை அமைச்சர் , தொழில்துறை அமைச்ச ருக்கு எனது சார்பிலும், விவசாயிகளின் சார்பிலும் ராஜபாளையம் தொகுதி பொதுமக்களின் சார்பிலும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.மானிய கோரிக்கையில் அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து குறு-சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் அமைச்சர் அன்பரசன், அந்த துறையின் நிர்வாக இயக்குநர் மதுமதி ஆகியோரை ராஜபாளையம் சட்ட மன்ற உறுப்பினர் என்ற முறையில் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தேன்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வாரந்தோறும் 6 டன் எடையிலான மாம்பழங்கள் கோவையில் இருந்து ஷார்ஜாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
    • கோவை விமான நிலையத்தில் ஒரே நேரத்தில் 250 டன் சரக்குகள் கையாளும் உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளது.

    கோவை:

    கோவை சர்வதேச விமான நிலைய வளாகத்தில் அமைந்துள்ளது ஒருங்கிணைந்த சரக்கக வளாகம்.

    இங்கிருந்து உள்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும், ஷார்ஜா, சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளுக்கும் கோவையில் இருந்து சரக்குகள் விமானங்களில் அனுப்பி வைக்கப்படுகிறது.

    நேரடி விமான சேவை இல்லாத ஐரோப்பா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளுக்கும் பாண்டட் டிரக் சேவை மூலம் சாலை வழியாக கொச்சி, பெங்களூரு உள்ளிட்ட விமான நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து ஏற்றுமதியாகின்றன.

    மாதந்தோறும் உள்நாட்டு பிரிவில் 700 டன், வெளிநாட்டு பிரிவில் 150 டன் சரக்குகள் கையாளப்படுகின்றன.

    தற்போது மாம்பழ சீசன் தொடங்கியுள்ளதால் கோவையில் இருந்து ஷார்ஜாவுக்கு வாரந்தோறும் 6 டன் மாம்பழம் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது:-

    வழக்கமாக பொறியியல் உற்பத்தி பொருட்கள், வார்ப்படம், காய்கறிகள், பழங்கள் மற்றும் சிப்ஸ் உள்ளிட்ட பல்வேறு உணவு வகைகள் புக்கிங் செய்யப்பட்டு கொண்டு செல்லப்படும்.

    சிங்கப்பூர் விமானத்தில் சரக்குகள் புக்கிங் மிகவும் குறைவாக உள்ளதால் அரை டன் அல்லது ஒரு டன் மட்டுமே சரக்குகள் கையாளப்படுகின்றன.

    ஷார்ஜாவுக்கு வாரத்தில் 5 நாட்கள் விமான சேவை வழங்கப்படும் நிலையில், ஒவ்வொரு முறையும் 3 டன் எடையிலான சரக்குகள் கொண்டு செல்லப்படுகிறது.

    கோடை காலத்தில் மாம்பழம் அதிகளவு ஏற்றுமதி செய்யப்படும். தற்போது சீசன் தொடங்கி உள்ளதால் கேரளா மற்றும் பொள்ளாச்சியில் இருந்து மாம்பழங்கள் அதிகளவு ஷார்ஜா விமானத்தில் கொண்டு செல்லப்படுகின்றன.

    வாரந்தோறும் 6 டன் எடையிலான மாம்பழங்கள் கோவையில் இருந்து ஷார்ஜாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. கோவை விமான நிலையத்தில் ஒரே நேரத்தில் 250 டன் சரக்குகள் கையாளும் உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளது.

    சர்வதேச நாடுகளுக்கு விமான சேவை அதிகரித்தால் சரக்குகள் கையாளப்படும் அளவும் கணிசமாக அதிகரிக்கும்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • ராஜபாளையத்தில் மாம்பழக்கூழ் பதப்படுத்தும் தொழிற்பேட்டைக்கான இடத்தை தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.
    • 27 ஏக்கர் நிலம் கண்டறியப்பட்டது.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் தொகுதியில் இன்று காலை மாம்பழம் மற்றும் தேங்காய் விவசாயிகளின் நலன்கருதி சிட்கோ மூலம் மாம்பழக்கூழ் மற்றும் பதப்படுத்தும் தொழிற்பேட்டை, தேங்காய் கொள்முதல் நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்ய தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. தலைமையில் வட்டாட்சியர் ராமச்சந்திரன் முன்னிலையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    இதில் ராஜபாளையம்- தென்காசி ரோடு இளந்தோப்பில் உள்ள பி.ஏ.சி.ஆர். அரசு மருத்துவமனை முன்பிருந்து சின்மயா பள்ளி வழியாக 3 கி.மீட்டர் தொலைவில் வருவாய் கிராமம் அயன் கொல்லங்கொண்டான்-II -ல் 27 ஏக்கர் நிலம் கண்டறியப்பட்டது.

    இதில் 2 கி.மீ பாதையாகவும், 1 கி.மீ பட்டா நிலமாகவும் உள்ளது. இந்த பட்டா நில உரிமை யாளர்களிடம் எம்.எல்.ஏ. பேசி ராஜபாளையத்திற்கு பெயர்போன சப்பட்டை மாங்காய்க்கு தொழிற்பேட்டை அமைப்பதன் முக்கியத்து வத்தை கூறினார். இதையடுத்து 1 கி.மீட்டர் தூரத்திற்கு பாதை அமைக்க நில உரிமையாளர் சம்மதம் தெரிவித்தனர்.பின்னர் தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. கூறுகையில், ராஜபாளையம் தொகுதியில் மாம்பழக்கூழ் மற்றும் பதப்படுத்தும் தொழிற்பேட்டை அமைக்க சட்ட மன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டதன் விளைவாக இடம் கண்டறியும் பணி தொடங்கி தற்போது இடம் கண்டறியப்பட்டுள்ளது.

    தற்போது நடைபெறும் சட்ட மன்ற கூட்டத்தொடரில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறையின் மானியக்கோரிக்கையில் ராஜபாளையம் தொகுதியில் மாம்பழக்கூழ் மற்றும் பதப்படுத்துதல் தொழிற்பேட்டை, தேங்காய் கொள்முதல் நிலையம் அமைக்க அறிவிப்பு வெளியிட தொடர்ந்து முயற்சி மேற்கொள்வேன்.

    மாம்பழக்கூழ் மற்றும் பதப்படுத்தும் தொழிற்பேட்டை, தேங்காய் கொள்முதல் நிலையம் அமைந்தால் இந்த பகுதியை சுற்றியுள்ள பல்லாயிரக்கனக்கான மாம்பழச்சாகுபடி, தேங்காய் சாகுபடி விவசாயிகள் பயன்பெறுவார்கள் என்றார்.

    இதில் தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர், கிளை செயலாளர் அங்குராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • 2000 ஏக்கரில் விவசாயிகள் மாங்காய் சாகுபடி செய்துள்ளனர்.
    • சீசன் காலங்களில் வழக்கமாக ஏக்கருக்கு 60 முதல் 70டன் மாங்காய் கிடைக்கும்.

    உடுமலை :

    திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியில் தென்னை, கரும்பு ,மக்காச்சோளம் சாகுபடிக்கு அடுத்தபடியாக அதிகளவு மாங்காய் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். ஜல்லிப்பட்டி , வாளவாடி, மானுப்பட்டி, சின்ன குமாரபாளையம் ,கொழுமம், கொங்குரார் குட்டை உள்ளிட்ட இடங்களில் சுமார் 2000 ஏக்கரில் விவசாயிகள் மாங்காய் சாகுபடி செய்துள்ளனர்.

    மார்ச் ,ஏப்ரல் மாதங்களில் மாமரத்தில் பூ பிடித்து காய்க்கத் துவங்கும். இந்த ஆண்டு பூ பிடித்த நிலையில் நோய் தாக்குதல் காரணமாக பூக்கள் உதிர்ந்து வருகின்றன.இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:- சீசன் காலங்களில் வழக்கமாக ஏக்கருக்கு 60 முதல் 70டன் மாங்காய் கிடைக்கும். ஆனால் தற்போது கொத்துக்கொத்தாக பூக்கள் உதிர்ந்து வருகின்றன.சுமார் இரண்டு டன் பூக்கள் வரை உதிர்ந்துவிட்டன. இதனால் விளைச்சல் பாதித்து எங்களுக்கு நஷ்டம் ஏற்படும் .ஏக்கருக்கு பல ஆயிரம் ரூபாய் செலவு செய்துள்ளோம் .ஆண்டுக்கு ஒரு முறை சீசன் காலங்களில் விளையும் மாங்காய் மூலம் தான் எங்கள் வாழ்வாதாரம் உள்ளது. பூச்சி தாக்குதல் குறித்து தோட்டக்கலைத் துறையினர் ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும். ஏற்கனவே காட்டு யானைகள் தொல்லை உள்ளது. மாமரத்தில் பிஞ்சு பிடித்த உடன் அதன் வாசத்தை மோப்பம் பிடித்து வரும் யானைகள் பிஞ்சுகளை பெருமளவுக்கு தின்று விடும். இந்த நிலையில் நோய் தாக்குதல் ஏற்பட்டு பூ உதிர்ந்து வருவதுகவலை அளிக்கிறது. எனவே தோட்டக்கலைத் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்என்றனர்.

    • மண்டி உரிமையாளர்கள் மாம்பழங்களை பெட்டிகளில் அடைத்து வெளியூர்களுக்கு அனுப்பி வைத்தும் வருகின்றனர்.
    • மாங்காய் வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு விலை குறைய வாய்ப்புள்ளது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மா மரங்கள் வளர்க்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் சேலம் மாவட்டத்தில் இருந்து மாம்பழங்கள் சென்னை மற்றும் டெல்லி, மும்பை உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

    இது தவிர மண்டி உரிமையாளர்கள் மாம்பழங்களை பெட்டிகளில் அடைத்து வெளியூர்களுக்கு அனுப்பி வைத்தும் வருகின்றனர். இந்த ஆண்டு தற்போது மாங்காய்கள் மண்டிகளுக்கும், பழக்கடைகளுக்கும் வியாபாரத்திற்கு வந்துள்ளது.

    அடுத்த மாதம் முதல் கூடுதலாக விற்பனைக்கு மாங்காய்கள் வரும் என வியாபாரிகள் தெரிவித்தனர். மேலும் அவர்கள் கூறியதாவது:

    தற்போது அல்போன்சா மற்றும் செந்தூரா போன்ற மாங்காய்கள் விற்பனைக்கு வருகிறது. ஏப்ரல் மாதம் 15-ம் தேதிக்கு பிறகு கூடுதலாக மாங்காய் விற்பனைக்கு வரும். ஏப்ரல் மாத இறுதியில் மா அறுவடை சீசன் முழுவீச்சில் நடைபெறும். ஏப்ரல், மே, ஜூன் மாதம் வரை சீசன் இருக்கும்.

    இந்தாண்டு மாங்காய் வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு விலை குறைய வாய்ப்புள்ளது. தற்போது சேலம் மாவட்டம் நங்கவள்ளி, வரகம்பாடி, மல்லூர் உள்ளிட்ட ஊர்களில் இருந்து அதிகம் மாங்காய் வர தொடங்கி இருக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • ஆண்டுதோறும் ஜூன் மற்றும் நவம்பர் மாதங்களில் காய்ப்பு சீசன் இருக்கும்.
    • காய்ப்பு சீசனில், ஒரு மரத்திற்கு 300 முதல் 400 கிலோ வரை மாங்காய் கிடைக்கும்.

    உடுமலை :

    உடுமலை அருகே மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரின் அடிவாரத்தில் அமைந்துள்ள மணல் கலந்த செம்மண் பரப்பு மா சாகுபடிக்கு உகந்த மண் வளமாகும். இந்த வளம் மிகுந்த ஜல்லிபட்டி, கொங்குரார்குட்டை, மானுப்பட்டி, ஒன்பதாறு செக்போஸ்ட், திருமூர்த்திநகர், பொன்னலாம்மன்சோலை உள்ளிட்ட பகுதிகளில் பல ஆயிரம் ஏக்கரில் மா சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது.செந்தூரம், நீலம், மல்கோவா, பங்கனப்பள்ளி, பெங்களூரா உட்பட 10-க்கும் மேற்பட்ட ரகங்கள் இப்பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.

    ஆண்டுதோறும் ஜூன் மற்றும் நவம்பர் மாதங்களில் காய்ப்பு சீசன் இருக்கும். கொத்து கொத்தாக காய்கள் பிடித்து கார்பைட் போன்ற ரசாயன பயன்பாடு இல்லாமல்மரங்களில் மாங்காய்கள் பழுக்கும் போது அப்பகுதியில் பரவும் மணம்மக்களை மட்டுமல்லாது மேற்குத்தொடர்ச்சி மலையிலுள்ள யானைகளையும் இழுப்பது வழக்கம்.ஆனால் இந்தாண்டு மரங்களில் பூ பிடிக்கும் தருணத்தில், பெய்த மழை கோடை காலத்தில் போதிய வெயில் இல்லாதது போன்ற காரணங்களால் மகசூல் முற்றிலுமாக பாதித்துள்ளது.

    இது குறித்து விவசாயிகள் கூறுகையில், காய்ப்பு சீசனில், ஒரு மரத்திற்கு 300 முதல் 400 கிலோ வரை மாங்காய் கிடைக்கும். சந்தை நிலவரத்தை பொறுத்து கிலோவிற்கு 50 ரூபாயிலிருந்து விலை கிடைக்கும். இந்த வருவாயே எங்களின் வாழ்வாதாரமாக இருந்தது. இந்தாண்டு ஜூன் மாத சீசன் கைகொடுக்கவில்லை. மரங்களில் பூக்கள் உதிர்ந்து தற்போது தழைவு துவங்கியுள்ளது. இதனால்காய் பிடிக்காமல் மகசூல் முற்றிலுமாக பாதித்துள்ளதுஎன்றனர்.

    • செங்கோட்டை பகுதியில் விளைச்சல் குறைவால் மாம்பழங்கள் விலை அதிகரித்துள்ளது.
    • சீசன் காலமான தற்போது பருவநிலை மாற்றத்தால் காற்று அதிகளவில் இல்லாமல் மரங்கள் விளைச்சல் குறைந்துள்ளதாக செங்கோட்டை பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

    செங்கோட்டை:

    தென்காசி மாவட்டம் செங்கோட்டை, கண்ணுப்புளி மெட்டு, பண்பொழி, வல்லம், புளியரை, தெற்குமேடு உள்ளிட்ட பகுதி களில் அதிகளவில் மா சாகுபடி செய்ய ப்பட்டு விவசயிகள் வாழ்வாதாரம் நடத்தி வருகின்றனர்.

    இந்த பகுதிகளில் விவசாயிகள் நெல்லுக்கு அடுத்தபடியாக மா விவசாயத்தில் அதிகளவில் ஈடுபட்டு வருகின்றனர். சீசன் காலமான ஏப்ரல், மே, ஜுன் மாதம் தோப்புகளில் உள்ள மா மரங்களில் மாங்காய்கள் கொத்துக்கொத்தாக காய்த்து தொங்கும். சாலையோரம் உள்ள மரங்களில் இக்காட்சியை சுற்றுலாப்பயணிகள் செல்பி எடுத்து செல்வார்கள்.

    செங்கோட்டை அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இமாம்பசந், சப்போட்டா, அல்போன்ஸா, கிளிமூக்கு, மல்கோவா உள்ளிட்ட 11-க்கும் மேற்பட்ட வகையான மாம்பழங்கள் இப்பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. ஏப்ரல், மே, ஜுன் ஆகிய மாதங்கள் இப்பகுதியில் மா அறுவடை செய்யப்படுகிறது.

    நகர்புறங்களில் இருப்பது போன்று குடோன்களில் இருப்பு வைத்து தேவைக்கேற்ப செயற்கையாக மாம்பழங்களை பழுக்க வைப்பதில்லை என விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இதனால் இப்பகுதிகளில் இருக்கும் தோப்புகளில் இருந்து இறக்கப்படும் மாம்பழங்கள் சாலையோர கடைகளுக்கு நேரடியாக வியாபாரத்துக்கு வந்துவிடுகிறது.

    சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களுக்கும், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மும்பை போன்ற வெளி மாநிலங்களுக்கும் இங்கிருந்து மாம்பழங்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    சீசன் காலமான தற்போது பருவநிலை மாற்றத்தால் காற்று அதிகளவில் இல்லாமல் மரங்கள் விளைச்சல் குறைந்துள்ளதாக செங்கோட்டை பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இதனால் மா விலை அதிகரித்துள்ளது. மாம்பழங்கள் தரம் வாரியாக பிரிக்கப்பட்டு கிலோவுக்கு ரூ. 50 முதல் ரூ. 150 வரை விற்கப்படுகிறது.

    இதுபற்றி இப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:-

    செங்கோட்டை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் 500 ஏக்கருக்கும் அதிகளவில் சாகுபடி செய்யப்படும் மாம்பழங்களை பதப்படுத்தி வைக்க இப்பகுதிகளில் சேமிப்பு கிடங்கு ஏதும் இல்லை. எனவே இங்கு விளையும் மாம்பழங்களை வியாபாரிகள் நிர்ணயிக்கும் விலைக்கு கொடுக்க வேண்டிய சூழல் எங்களுக்கு ஏற்படுகிறது.

    தமிழக அரசு இப்பகுதியில் மாம்பழங்களை பதப்படுத்தி வைக்கும் அளவில் ஒரு சேமிப்பு கிட்டங்கி அமைத்தால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைவார்கள். கிட்டங்கி வசதி இருந்தால் வெளிநாடுகளுக்கும் இங்கு விளையும் மாம்பழங்களை ஏற்றுமதி செய்ய வசதியாக இருக்கும்.

    இதனால் தொழில் வர்த்தக ரீதியாக செங்கோட்டை அதன் சுற்று வட்டார பகுதி மாங்காய் உற்பத்தியாளர்கள் முன்னேர்வதோடு அரசுக்கும் வருவாய் கூடும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×