search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Artificial"

    • கடந்த ஏப்ரல் மாதம் ஆன்லைனில் பிரபல பெயிண்ட் கம்பெனியின் டீலர்ஷிப் கேட்டு பதிவு செய்திருந்தார்.
    • தவமணியிடம் போனில் பேசிய மர்ம நபர் குறிப்பிட்ட தொகையை செலுத்தினால் டீலர்ஷிப் தரப்படும் என்று கூறியதன் பேரில் மர்ம நபர் கூறிய வங்கி கணக்கில் தவமணி ரூ. 7லட்சத்து24 ஆயிரத்து 999 செலுத்தியுள்ளார்.

    சேலம்:

    சேலம் அழகாபுரம் புதூர் பகுதி சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி தவமணி (வயது 39).

    இவர் கடந்த ஏப்ரல் மாதம் ஆன்லைனில் பிரபல பெயிண்ட் கம்பெனியின் டீலர்ஷிப் கேட்டு பதிவு செய்திருந்தார்.

    இதைத்தொடர்ந்து தவமணியிடம் போனில் பேசிய மர்ம நபர் குறிப்பிட்ட தொகையை செலுத்தினால் டீலர்ஷிப் தரப்படும் என்று கூறியதன் பேரில் மர்ம நபர் கூறிய வங்கி கணக்கில் தவமணி ரூ. 7லட்சத்து24 ஆயிரத்து 999 செலுத்தியுள்ளார்.

    பின்னர் மேற்கண்ட நபரை தொடர்பு கொண்ட போது செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டது, இதையறிந்த தவமணி அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து சேலம் மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மற்றொரு சம்பவம்

    இதேபோல் சேலம் அஸ்தம்பட்டி எம்டிஎஸ் நகர் பகுதியைச் சேர்ந்த துரைராஜ் என்பவரின் மகன் திவாகர் (29).

    இவர் ஆன்லைனில் பகுதி நேர வேலைக்கு அதிகம் சம்பளம் தருவதாக வந்த விளம்பரத்தை பார்த்து பதிவு செய்துள்ளார். அதற்கு சமூக வலைதளங்களில் தொடர்பு கொண்ட மர்ம நபர் சில டாஸ்-க்குகளை செய்யச் சொல்லி அதன் மூலம் பணத்தைக் கட்ட சொல்லியுள்ளனர். இதை உண்மை என்று நம்பி திவாகர் ரூ.3 லட்சத்து 97 ஆயிரம் கட்டியுள்ளார்.

    சில நாட்களில் வேலை தருவதாக கூறி குறுந்தகவல் வந்ததை தொடர்ந்து காத்திருந்த திவாகருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அதைத் தொடர்ந்து திவாகர் சேலம் மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ஊராட்சி மன்றம் சார்பில் கால்நடை மருத்துவத்துறை பற்றிய கண்காட்சி முகாம் நடைபெற்றது.
    • குடற்புழு நீக்கம், செயற்கை முறை கருவூட்டல் போன்ற பணிகள் சிறப்பாக நடைபெற்றது.

    பட்டுக்கோட்டை:

    பட்டுக்கோட்டை மனோரா ரோட்டரி சங்கம், தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத் துறை, ஒரத்தநாடு கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் புதுக்கோட்டை உள்ளூர் ஊராட்சி மன்றம் சார்பில் கால்நடை மருத்துவ சிகிச்சை மற்றும் கால்நடை மருத்துவத்துறை பற்றிய கண்காட்சி முகாம் நடைபெற்றது.

    முகாமிற்கு மனோரா ரோட்டரி சங்க தலைவர சிவச்சந்திரன் தலைமை வகித்தார். முகாமை பட்டுக்கோட்டை ஒன்றியக்குழு தலைவர் பழனிவேல் தொடங்கி வைத்தார்.

    கால்நடைமருத்துக்கல்லூரி முதல்வர் டாக்டர் நர்மதா, கால்நடைத்துறை உதவி இயக்குநர் டாக்டர் சுமதி, ஊராட்சி மன்றத் தலைவர் வெங்கிடாசலம், சங்க முன்னாள் தலைவர் பாலசுப்ரமணியன், விவேகானந்தன், அண்ணாத்துரை மற்றும் உறுப்பினர்கள், கல்லூரி பேராசியர்கள் கலந்துகொண்டனர்.

    முகாம் ஏற்பாடுகளை அதிராம்பட்டினம் கால்நடை மருத்துவர் தெய்வ விருத்தம் செய்திருந்தார்.

    செயலாளர் சத்தியமூர்த்தி நன்றி கூறினார். முகாமில் குடற்புழு நீக்கம், சுண்டுவாத அறுவைச் சிகிச்சை, அல்ட்ரா ஸ்கேன் சினை பரிசோதனை, செயற்கை முறை கருவூட்டல் போன்ற பணிகள் சிறப்பாக நடைபெற்றது. 1800 கால்நடைகள் பயன்பெற்றன.

    சேலத்தில் இன்று பழ குடோன்களில் அதிகாரிகள் நடத்திய சோதனையில் செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட 2¾ டன் மாம்பழங்கள், வாழை பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
    சேலம்:

    சேலத்தில் மாம்பழ சீசன் தற்போது உச்சத்தை எட்டியுள்ளது.

    இதனால் கடை வீதி, புதிய மற்றும் பழைய பஸ் நிலையம், ஜங்சன், ஏற்காடு ரோடு உள்பட பல்வேறு பகுதிகளில் மாம்பழங்கள் விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் மாம்பழ குடோன்களில் இயற்கைக்கு மாறான வகையில் உடலுக்கு கேடு ஏற்படும் வகையில் செயற்கையாக பழங்களை பழுக்க வைக்கப்படுவதாக புகார்கள் எழுந்தது. இது தொடர்பாக உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி மாரியப்பனுக்கு புகார்கள் சென்றது.

    இந்தநிலையில் இன்று காலை 5 மணியளவில் உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி மாரியப்பன் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பாலு, சரவணன், இளங்கோ உள்ளிட்ட 8 பேர் கொண்ட குழுவினர் சேலம் சின்ன கடை வீதி பகுதியில் உள்ள குடோன்களில் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.

    இந்த ஆய்வில் அனுமதிக்கப்படாத எத்திலின் கரைசல் மற்றும் சோடா உப்பு கொண்டு செயற்கை முறையில் பழங்கள் பழுக்க வைக்கப்பட்டது கண்டு பிடிக்கப்பட்டது.

    இவ்வாறு பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் 1 டன்னும், வாழைப்பழம் 1.75 டன்னும் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. பின்னர் செயற்கையான முறையில் பழங்களை இது போல பழுக்க வைத்தால் வழக்கு பதிவு செய்து மேல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எச்சரித்தார். இதனால் சேலத்தில் மாம்பழ வியாபாரிகள் மத்தியில் பெரும் பீதி ஏற்பட்டது.

    இது குறித்து உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி மாரியப்பன் கூறியதாவது:-

    பழங்களை இயற்கையான முறையில் மட்டுமே பழுக்க வைக்க வேண்டும், சிலர் அனுமதிக்கப்படாத சோடா உப்பினை, மாம்பழங்கள் மீது தெளித்து செயற்கையான முறையில் பழுக்க வைக்கின்றனர். இதனை சாப்பிடும் நபர்களுக்கு உடலுறுப்புகள் பாதிக்கப்பட்டு உடல் நலக்குறைவு ஏற்படும்.

    பழங்களை இயற்கையான முறையிலும், எத்திலின் கியாஸ் சேம்பரிலும் பழுக்க வைக்க வேண்டும். இன்று நடத்தப்பட்ட ஆய்வில் செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது.

    மேலும் பாதுகாப்பற்ற முறையில் பழங்களை பழுக்க வைத்தது உணவு பாதுகாப்பு வணிக சான்றிதழ் இல்லாமல் இயங்கியது ஆகிய குற்றத்திற்காக உணவு பாதுகாப்பு தரங்கள் சட்டத்தன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    மேலும் மருந்து தெளிப்பான் உள்ளிட்ட உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த கண்காணிப்பு, நடவடிக்கைகள் தொடரும் என்றும் எச்சரிக்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #tamilnews
    ×