என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Lok Sabha"
- பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இச்சம்பவத்துக்கு பாதுகாப்பு குறைபாடுதான் காரணம் என்றன எதிர்க்கட்சிகள்.
- இந்த விவகாரம் தொடர்பாக 8 பாதுகாப்பு பணியாளர்களை மக்களவை செயலகம் அதிரடியாக சஸ்பெண்ட் செய்தது.
புதுடெல்லி:
பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று மக்களவை நடைபெற்றபோது திடீரென பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து 2 பேர் அவை நடைபெறும் இடத்திற்குள் குதித்து வண்ண புகை குண்டுகளை வீசினர். மஞ்சள் நிறத்தில் புகை வெளியேறி புகை மண்டலமாகக் காட்சி அளித்தது.
பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இச்சம்பவத்துக்கு பாதுகாப்பு குறைபாடுதான் முக்கிய காரணம் என எதிர்க்கட்சிகள் தெரிவித்தன.
இதுதொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது உபா உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக 8 பாதுகாப்பு பணியாளர்களை மக்களவை செயலகம் அதிரடியாக சஸ்பெண்ட் செய்தது.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட 4 பேரும் டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு 15 நாள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் கோரிக்கை விடுத்தனர். ஆனால் 7 நாள் அவகாசம் கொடுத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
- 15 எம்.பி.க்கள் நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்
- ஏன், எப்படி இந்த சம்பவம் நடந்தது என தெரிந்தாக வேண்டும் என ஜெய்ராம் ரமேஷ் கூறினார்
நேற்று மக்களவையில், பார்வையாளர்கள் அரங்கில் இருந்து அவையில் குதித்த இரு இளைஞர்கள், சபாநாயகரை நோக்கி கோஷமிட்டு கொண்டே ஓடி, தங்கள் உடலில் மறைத்து வைத்திருந்த புகை குப்பிகளை வீசினர். அதிலிருந்து மஞ்சள் நிற புகை வெளிக்கிளம்பியதால் அவையில் இருந்த உறுப்பினர்களில் சிலருக்கு கண் எரிச்சல் ஏற்பட்டது.
உறுப்பினர்களில் சிலர் துணிச்சலாக அந்த இருவரையும் மடக்கி பிடித்து அங்கு விரைந்து வந்த சபை பாதுகாவலர்களிடம் ஒப்படைத்தனர். அதே நேரம், அவைக்கு வெளியே பாராளுமன்ற வளாகத்தில் ஒரு ஆண் மற்றும் பெண் கோஷமிட்டு கொண்டே வர்ண புகை குப்பிகளை வீசினர். அவர்களும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
நால்வரையும் கைது செய்த புது டெல்லி காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் மக்களவை இன்று கூடிய போது எதிர்கட்சி உறுப்பினர்கள் நேற்றைய சம்பவம் குறித்து விவாதிக்க வேண்டும் என்றும், உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கமளிக்க வேண்டும் என்றும் ஒன்றுபட்டு கோஷங்களை எழுப்பினர். இதனால் அவையில் கூச்சலும், குழப்பமும் நிலவியது.
இதையடுத்து அவை நடவடிக்கைகளுக்கு இடையூறு செய்ததாக 15 பாராளுமன்ற உறுப்பினர்கள் நடப்பு கூட்டத்தொடர் காலம் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
இந்த சஸ்பென்ஷன் நடவடிக்கை பரவலாக அரசியல் தலைவர்களால் கண்டனம் செய்யப்பட்டு வருகிறது.
இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்ததாவது:
உள்துறை அமைச்சர் அமித் ஷா அவைக்கு வர வேண்டும் என்பதைத்தான் நாங்கள் வலியுறுத்தினோம். நேற்றைய சம்பவம் குறித்து அவர் விளக்கம் அளிக்க வேண்டும் என கோரினோம். ஆனால், இந்த சர்வாதிகார அரசால் அதை கூட ஏற்று கொள்ள முடியவில்லை. இது மிகவும் முக்கியமான பிரச்சனை. அவை நடவடிக்கைகள் தொடர வேண்டுமென்றால் அமித் ஷா வந்தே ஆக வேண்டும். எங்களுக்கு வீண் விவாதங்கள் தேவை இல்லை. ஏன், எப்படி இந்த அச்சுறுத்தும் சம்பவம் நடந்தது என தெரிய வேண்டும். பிரதமரும் உள்துறை அமைச்சரும் அமைதி காக்கின்றனர். அவர்கள் இருவரும் அவைக்கு வந்து தங்கள் தரப்பில் கூற வேண்டியதை கூறட்டும். அதற்கு பிறகுதான் அவை நிகழ்ச்சிகள் நடக்கும்.
இவ்வாறு ஜெய்ராம் கூறினார்.
#WATCH | Opposition MPs address the media over the suspension of 15 MPs from the House.
— ANI (@ANI) December 14, 2023
Congress MP Jairam Ramesh says, "...We had just one demand that the Home Minister come to the House and give a statement (over Lok Sabha security breach). This dictatorial government does not… pic.twitter.com/kQdn79Gs5N
- பாதுகாப்பு குறைபாடு காரணமாக பாராளுமன்றத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
- பிரதமர் மோடி மந்திரிகளுடன் முக்கிய ஆலோசனை மேற்கொண்டார்.
பாராளுமன்ற மக்களவை இன்று காலை 11 மணிக்கு கூடியதும் எதிர்க்கட்சிகள் பாதுகாப்பு குறைபாடு குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோசம் எழுப்பினர். மேலும், விவாதம் நடத்த வேண்டும் எனவும் கோசமிட்டனர்.
இதற்கிடையே மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் பேசினார். அப்போது அவர் கூறுகையில் "அனைவரும் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த விசயம் குறித்து நீங்கள் (சபாநாயகர்) அறிந்துள்ளீர்கள். பாராளுமன்ற பார்வையாளர்கள் அனுமதி சீட்டு வழங்கும்போது நாம் கவனமாக செயல்பட வேண்டும். எதிர்காலத்தில் அனைத்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்" என்றார்.
இருந்தபோதிலும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வந்ததால் மக்களவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
இன்று காலை பிரதமர் மோடி மந்திரிகளுடன் பாதுகாப்பு குறைபாடு சம்பவம் குறித்து ஆலோசனை மேற்கொண்டார். பாராளுமன்றத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
- மக்களவை பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து இருவர் எம்.பி.க்கள் இடத்திற்குள் குதித்தனர்.
- மஞ்சள் நிற வண்ண புகை குண்டுகள் வீசிய அவர்களை எம்.பி.க்கள் உள்ளிட்டோர் மடக்கி பிடித்தனர்.
பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று மக்களவை நடைபெற்று கொண்டிருக்கும்போது திடீரென பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து இருவர் அவை நடைபெறும் இடத்திற்குள் குதித்து வண்ண புகை குண்டுகளை வீசினர்.
இதனால் மஞ்சள் நிறத்தில் புகை வெளியேறி புகை மண்டலமாக காட்சி அளித்தது. இந்த சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பாதுகாப்பு குறைபாடுதான் இதற்கு முக்கிய காரணம் என எதிர்க்கட்சிகள் தெரிவித்தன.
இந்த சம்பவம் தொடர்பாக ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மீது உபா உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தில் பாதுகாப்பு அதிரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று காலை 11 மணிக்கு வழக்கம்போல் மக்களவை கூடியது. அப்போது பாராளுமன்ற பாதுகாப்பு குறைபாடு குறித்து விவாதம் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.
இதற்கிடையே 8 பாதுகாப்பு பணியாளர்களை மக்களவை செயலகம் அதிரடியாக சஸ்பெண்ட் செய்துள்ளது.
இன்று காலை பிரதமர் மோடி மந்திரிகளுடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டார்.
- பாராளுமன்றத்தில் கலர் புகை குண்டு வீசியதில் 6 பேருக்கு தொடர்புள்ளதாக தகவல் கிடைத்தது.
- இதுவரை இந்தத் தாக்குதலில் தொடர்புடைய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புதுடெல்லி:
பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று மதியம் மக்களவையில் பார்வையாளர் இடத்திலிருந்து 2 பேர் எம்.பி.க்கள் இருந்த இடத்திற்குள் குதித்து கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். பதற்றம் அடைந்த எம்.பி.க்கள் அங்கிருந்து ஓட ஆரம்பித்தனர். பாதுகாவலர்கள், உறுப்பினர்கள் சேர்ந்து அவர்களை மடக்கினர்.
இதேபோல், பாராளுமன்றத்திற்கு வெளியேயும் புகை குண்டு வீச்சில் ஈடுபட்டனர். தாக்குதல் நடத்திய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்,
தாக்குதல் நடத்திய ஆசாமிகளில் ஒருவரான சாகர் சர்மாவிடம் இருந்து மைசூர் பா.ஜ.க. எம்.பி.யான பிரதாப் சிம்ஹாவின் பரிந்துரை பாஸ் கிடைத்துள்ளது.
பாராளுமன்றத்தில் கலர் புகை குண்டு வீசிய சம்பவத்தில் 6 பேருக்கு தொடர்பு உள்ளது. இதில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். தாக்குதலில் தொடர்புடைய மேலும் 2 பேர் தலைமறைவாக உள்ளனர். அவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், பாராளுமன்ற தாக்குதல் நடத்திய ஆசாமிகளில் மேலும் ஒருவர் குர்கானில் கைது செய்யப்பட்டுள்ளார். மற்றொருவரை தேடி வருகின்றனர்.
- பாராளுமன்றத்தில் கலர் புகை குண்டு வீசிய சம்பவத்தில் 6 பேருக்கு தொடர்புள்ளதாக தகவல் வெளியானது.
- தாக்குதல் நடத்திய ஆசாமிகளில் ஒருவரிடம் இருந்து பா.ஜ.க. எம்.பி.யின் பரிந்துரை பாஸ் கிடைத்தது.
புதுடெல்லி:
பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று மதியம் மக்களவையில் பார்வையாளர் இடத்திலிருந்து 2 பேர் எம்.பி.க்கள் இருந்த இடத்திற்குள் குதித்து கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். பதற்றம் அடைந்த எம்.பி.க்கள் அங்கிருந்து ஓட ஆரம்பித்தனர். பாதுகாவலர்கள், உறுப்பினர்கள் சேர்ந்து அவர்களை மடக்கினர்.
இதேபோல், பாராளுமன்றத்திற்கு வெளியேயும் புகை குண்டு வீச்சில் ஈடுபட்டனர். தாக்குதல் நடத்திய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்,
தாக்குதல் நடத்திய ஆசாமிகளில் ஒருவரான சாகர் சர்மாவிடம் இருந்து மைசூர் பா.ஜ.க. எம்.பி.யான பிரதாப் சிம்ஹாவின் பரிந்துரை பாஸ் கிடைத்துள்ளது.
இந்நிலையில், பாராளுமன்றத்தில் கலர் புகை குண்டு வீசிய சம்பவத்தில் 6 பேருக்கு தொடர்பு உள்ளதாக தகவல் வெளியானது.
இதில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தாக்குதலில் தொடர்புடைய மேலும் 2 பேர் தலைமறைவாக உள்ளனர். அவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
- மக்களவையின் உள்ளே மற்றும் வெளியே கண்ணீர் புகை குண்டு வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
- பாராளுமன்றத்தில் தாக்குதல் நடத்திய 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புதுடெல்லி:
பாராளுமன்றத்தில் நடைபெற்ற தாக்குதல் சம்பவம் குறித்து தி.மு.க. எம்.பி. கனிமொழி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கலர் புகை குண்டு வீசிய போது நான் மக்களவைக்குள் இருந்தேன். திடீரென சத்தம் கேட்டபோது ஒருவர் மேஜைகள் மீது ஏறி ஓடினார்.
முதலில் குதித்தவர் கையில் காலணி இருந்தது. பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து குதித்தவர்களை எம்.பி.க்கள் தடுத்தனர்.
இருவரும் தங்கள் காலுக்கு கீழ் இருந்த சிலிண்டர் போன்ற கருவியில் இருந்து புகையைப் பரப்பினர். புகையில் அவையில் மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
அவை மீண்டும் கூடியபோதும் புகையால் அங்கு மூச்சுத்திணறல் இருந்தது. பார்வையாளர் மாடத்தில் இருந்து எளிதாக எம்பிக்கள் இருக்கும் இடத்தை அடையும் வகையில் கட்டட அமைப்பு உள்ளது.
எம்.பி.க்கள் வருவதற்கு கட்டுப்பாடுகள் இருக்கும்போது இவர்கள் எப்படி வந்தார்கள்? உச்சபட்ச பாதுகாப்பு வழங்கப்படும் பிரதமரே இங்கு வரும்போது இந்த தாக்குதலானது அச்சத்தை ஏற்படுத்துகிறது. பாராளுமன்ற கட்டடத்தில் பாதுகாப்பு இல்லாத உணர்வு ஏற்படுகிறது.
கலர் புகைக்கு பதில் ஏதேனும் வைத்து தாக்குதல் நடத்தியிருந்தால் உயிரிழப்புகள் நடந்திருக்கும். இது திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல் தான் என தெரிவித்துள்ளார்.
- ஜனநாயக கோவிலான பாராளுமன்றத்துக்கு மிகப்பெரும் அச்சுறுத்தல்.
- தவறிழைத்தவர்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்கவேண்டும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னை:
பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று மக்களவையின் உள்ளேயும், பாராளுமன்றத்திற்கு வெளியேயும் புகை குண்டுவீச்சில் ஈடுபட்ட 4 பேரும் பாதுகாப்புப் படையினரால் கைதுசெய்யப்பட்டனர்,
பாதுகாப்பு குளறுபடிகள் காரணமாக இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது என எம்.பி.கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், பாராளுமன்றத்தில் இன்று நடந்த பாதுகாப்பு குறைபாட்டிற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள செய்தியில், ஜனநாயக கோவிலான பாராளுமன்றத்துக்கு மிகப்பெரும் அச்சுறுத்தல். இதுவரையில் இல்லாத வகையில் பாராளுமன்றத்தில் பாதுகாப்பு குளறுபடி. தவறிழைத்தவர்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என பதிவிட்டுள்ளார்.
- சாகர் சர்மா மற்றும் மனோரஞ்சன் ஆகிய இருவரும் பாஸ் பெற்று உள்ளே நுழைந்துள்ளனர்
- புது டெல்லியில் முக்கிய அரசியல் பிரமுகர்களுக்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது
மக்களவையில் இன்று மதியம், சபை நடவடிக்கைகள் நடைபெற்று கொண்டிருந்த போது பார்வையாளர்கள் அரங்கில் இருந்து திடீரென கீழே குதித்த இருவர் கோஷமிட்டு கொண்டே சபாநாயகரை நோக்கி சென்றனர். அவர்கள் தங்கள் உடலில் மறைத்து வைத்திருந்த புகை குண்டுகளை வீசினர். அதிலிருந்து மஞ்சள் நிற புகை வெளிப்பட்டது.
இச்சம்பவத்தில் சில உறுப்பினர்கள் அதிர்ச்சியடைந்தாலும், வேறு சில உறுப்பினர்கள் அந்த இருவரையும் துணிந்து மடக்கி பிடித்து அங்கு விரைந்து வந்த சபை காவலர்களிடம் ஒப்படைத்தனர்.
இச்சம்பவம் நடந்த அதே நேரம் பாராளுமன்ற கட்டிடத்திற்கு வெளியேயும் இருவர் கோஷமிட்டபடி புகை குண்டுகளை வீசினர். அவர்களும் காவல்துறையால் பிடிக்கப்பட்டனர். நால்வரும் காவலில் எடுக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களிடம் புது டெல்லி துணை ஆணையர் நேரடியாக விசாரணை நடத்தி வருகிறார்.
மக்களவையின் உள்ளே நுழைந்து தாக்குதலில் ஈடுபட முயன்ற, சாகர் சர்மா மற்றும் மனோரஞ்சன் எனப்படும் இரு நபர்களும் பார்வையாளர்களாக உள்ளே சென்று சபை நடவடிக்கைகளை காண, எம்.பி.க்களின் பரிந்துரையில் வழங்கப்படும் "பாஸ்" (அனுமதிச்சீட்டுக்களை) பெற்றிருந்தது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதனை தொடர்ந்து பார்வையாளர்களுக்கான பாஸ் வழங்குதலை நிறுத்தவும் ஓம் பிர்லா உத்தரவிட்டுள்ளார்.
பிரதமர், உள்துறை அமைச்சர் உள்ளிட்ட புது டெல்லியில் உள்ள அனைத்து முக்கிய பிரமுகர்களின் அலுவலகங்கள் மற்றும் இல்லங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.
- சில எம்.பி.க்கள் அந்த இருவரையும் பிடித்து காவலர்களிடம் ஒப்படைத்தனர்
- நால்வரும் காவலில் எடுக்கப்பட்டு முழு விசாரணை நடந்து வருகிறது என்றார் ஓம் பிர்லா
மக்களவையில் இன்று அலுவலகள் நடந்து கொண்டிருந்த போது பார்வையாளர்கள் அரங்கில் இருந்து அவைக்குள் இருவர் குதித்தனர். கோஷமிட்டு கொண்டே சபாநாயகரின் இருக்கைக்கு அருகே செல்ல முயன்ற அவர்கள் புகை குண்டுகளை போன்று எதையோ வீசினர். அதிலிருந்து மஞ்சள் நிற புகை வெளிக்கிளம்பியது.
இச்சம்பவத்தில் ஒரு சில எம்.பி.க்கள் அச்சத்துடன் ஓட முயன்றனர்.
ஆனால், ஒரு சில எம்.பிக்கள் அஞ்சாமல் அவர்களை பிடித்து சபை பாதுகாவலர்களிடம் ஒப்படைத்தனர்.
அதே நேரம், பாராளுமன்ற கட்டிடத்திற்கு வெளியேயும் இருவர் கோஷங்களை எழுப்பி கொண்டே "கலர்" புகை குண்டுகளை வீசினர்.
நால்வரும் காவல்துறையால் காவலில் எடுக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
பெரும் பாதுகாப்பு குளறுபடியாக பார்க்கப்படும் இச்சம்பவம் குறித்து மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கருத்து தெரிவித்தார்.
"பாராளுமன்ற வளாகத்திற்கு வெளியேயும் உள்ளேயும் வழங்கப்பட்டு வரும் பாதுகாப்பில் நடந்திருக்கும் குளறுபடிகள் மற்றும் குறைபாடுகள் குறித்து முழு விசாரணை நடக்கிறது. இன்று அனைத்து கட்சி எம்.பி.க்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடப்பட்டுள்ளது. அனைவரிடமும் இது குறித்து கருத்து கேட்கப்படும். டெல்லி காவல்துறையும் மக்களவையும் தனித்தனியே விசாரணை மேற்கொண்டு வருகிறது. மர்ம நபர்கள் குண்டுகளை வீசி அதிலிருந்து வெளியே வந்த வர்ண புகை ஆபத்தில்லாதது என தெரிய வந்துள்ளது. பரபரப்புக்காக அவர்கள் இதை வீசியுள்ளதாக தெரிகிறது" என ஓம் பிர்லா கூறினார்.
- கடந்த 2001ஆம் ஆண்டு பாராளுமன்றத்தின் மீது தாக்குதல் நடைபெற்றதன் நினைவு தினமான இதே நாளில் இத்தகைய சம்பவம் நடந்திருப்பது வேதனைக்குரியது.
- பாராளுமன்றத்தின் பாதுகாப்பு குறைபாடுகளை உடனடியாக வலிமைப்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
இந்திய பாராளுமன்ற வளாகத்திற்குள் கண்ணீர் புகைக் குண்டுகளுடன் அத்துமீறி இருவர் நுழைந்ததற்கு கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த 2001ஆம் ஆண்டு பாராளுமன்றத்தின் மீது தாக்குதல் நடைபெற்றதன் நினைவு தினமான இதே நாளில் இத்தகைய சம்பவம் நடந்திருப்பது வேதனைக்குரியது.
இந்திய இறையாண்மைக்கு சவால் விடும் இத்தகைய சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துவதுடன், இந்திய பாராளுமன்றத்தின் பாதுகாப்பு குறைபாடுகளை உடனடியாக வலிமைப்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் மத்திய அரசை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இந்திய நாடாளுமன்ற வளாகத்திற்குள் கண்ணீர் புகைக் குண்டுகளுடன் அத்துமீறி இருவர் நுழைந்ததற்கு எனது கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த 2001ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடைபெற்றதன் நினைவு தினமான இதே நாளில் இத்தகைய சம்பவம் நடந்திருப்பது வேதனைக்குரியது.…
— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) December 13, 2023
- மக்களவையின் உள்ளே மற்றும் வெளியே கண்ணீர் புகை குண்டு வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
- தாக்குதல் நடத்திய ஆசாமிகளில் ஒருவரிடம் இருந்து மைசூரு பா.ஜ.க. எம்.பி.யின் பாஸ் கிடைத்துள்ளது.
புதுடெல்லி:
பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று மதியம் மக்களவையில் பார்வையாளர் இடத்தில் இருந்து இருவர் எம்.பி.க்கள் இடத்திற்குள் குதித்தனர். அவர்கள் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இதனால் எம்.பி.க்கள் பதற்றம் அடைந்து ஓட ஆரம்பித்தனர். அதன்பின், பாதுகாவலர்கள் மற்றும் உறுப்பினர்கள் சேர்ந்து அவர்களை மடக்கிப் பிடித்தனர்.
இதேபோல், பாராளுமன்றத்திற்கு வெளியே ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் என 2 பேர் புகை குண்டு வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டனர். இதனால் வெளியேயும் பதற்றம் நிலவியது. தாக்குதல் நடத்திய அனைவரும் கைது செய்யப்பட்டனர்,
இந்நிலையில், தாக்குதல் நடத்திய ஆசாமிகளில் ஒருவரான சாகர் சர்மாவிடம் இருந்து மைசூரு பா.ஜ.க. எம்.பி.யான பிரதாப் சிம்ஹாவின் பரிந்துரை பாஸ் கிடைத்துள்ளதாக தகவல் வெளியானது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்