என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
பாராளுமன்ற தாக்குதலில் மேலும் 2 பேருக்கு தொடர்பு: தலைமறைவானவர்களை தேடும் பணி தீவிரம்
- பாராளுமன்றத்தில் கலர் புகை குண்டு வீசிய சம்பவத்தில் 6 பேருக்கு தொடர்புள்ளதாக தகவல் வெளியானது.
- தாக்குதல் நடத்திய ஆசாமிகளில் ஒருவரிடம் இருந்து பா.ஜ.க. எம்.பி.யின் பரிந்துரை பாஸ் கிடைத்தது.
புதுடெல்லி:
பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று மதியம் மக்களவையில் பார்வையாளர் இடத்திலிருந்து 2 பேர் எம்.பி.க்கள் இருந்த இடத்திற்குள் குதித்து கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். பதற்றம் அடைந்த எம்.பி.க்கள் அங்கிருந்து ஓட ஆரம்பித்தனர். பாதுகாவலர்கள், உறுப்பினர்கள் சேர்ந்து அவர்களை மடக்கினர்.
இதேபோல், பாராளுமன்றத்திற்கு வெளியேயும் புகை குண்டு வீச்சில் ஈடுபட்டனர். தாக்குதல் நடத்திய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்,
தாக்குதல் நடத்திய ஆசாமிகளில் ஒருவரான சாகர் சர்மாவிடம் இருந்து மைசூர் பா.ஜ.க. எம்.பி.யான பிரதாப் சிம்ஹாவின் பரிந்துரை பாஸ் கிடைத்துள்ளது.
இந்நிலையில், பாராளுமன்றத்தில் கலர் புகை குண்டு வீசிய சம்பவத்தில் 6 பேருக்கு தொடர்பு உள்ளதாக தகவல் வெளியானது.
இதில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தாக்குதலில் தொடர்புடைய மேலும் 2 பேர் தலைமறைவாக உள்ளனர். அவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்