search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kumarasamy"

    கர்நாடகாவில் குமாரசாமி பதவியேற்பு விழாவில் அகிலேஷ் யாதவ், மாயாவதி, சந்திரசேகர ராவ் மற்றும் நவீன்பட்நாயக் ஆகியோர் புறக்கணிப்பதாக தெரிவித்தனர். #Kumarasamy #AkhileshYadav #Mayawati
    பெங்களூர்:

    கர்நாடகத்தில் ஜே.டி.எஸ். தலைவர் குமாரசவாமி காங்கிரசுடன் இணைந்து ஆட்சி அமைக்கிறார். இன்று மாலை பெங்களூரில் நடைபெறும் பிரமாண்ட விழாவில் குமாரசாமி முதல்-மந்திரியாக பதவி ஏற்கிறார்.

    பதவி ஏற்பு விழாவில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பகுஜன் சமாஜ்கட்சி, மாயாவதி, சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் உள்பட அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    உத்தரப்பிரதேசத்தில் மாயாவதியும், அகிலேஷ் யாதவும் எதிரும் புதிருமாக இருந்து வந்தனர். ஆனால் அங்கு பா.ஜனதா ஆட்சி அமைந்த பிறகு இந்த இரு கட்சி தலைவர்களும் கைக்கோர்த்து செயல்படும் நிலை உருவானது. உத்தரப்பிரதேசத்தில் நடந்த கோரக்பூர், புல்பூர் பாராளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அகிலேஷ் யாதவும், மாயாவதி கூட்டணி அமைத்து போட்டி போட்டு பா.ஜனதா வேட்பாளர்களை தோற்கடித்தார். ஆனாலும் இருகட்சி தலைவர்களும் இதுவரை ஒரே மேடையில் எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டது கிடையாது.

    இந்த நிலையில் குமாரசாமி பதவியேற்பு நிகழ்ச்சியில் அகிலேஷ் யாதவும், மாயாவதியும் ஒரே மேடையில் பங்கேற்கிறார்கள். இது உத்தரப்பிரதேசத்தில் மட்டுமின்றி தேசிய அரசியலிலும் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.

    அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பா.ஜனதாவுக்கு எதிராக மற்ற கட்சிகளை ஒருங்கிணைக்கும் முக்கிய நிகழ்ச்சியாகவே குமாரசாமியின் பதவியேற்பு விழா அமைய இருக்கிறது.

    பதவியேற்பு விழாவில் தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் கலந்து கொள்ளவில்லை. தனக்கு முக்கிய அரசு அலுவல் பணி இருப்பதால் நேற்றே அவர் பெங்களூர் வந்து தேவேகவுடாவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து சென்றுவிட்டார்.


    இதேபோல் பா.ஜனதாவின் முன்னாள் கூட்டணி தலைவரான ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக்குக்கு பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள தேவேகவுடா தனிப்பட்ட முறையில் அழைப்பு விடுத்தார். ஆனால் அவரும் பதவி ஏற்பு விழாவுக்கு வரவில்லை. கடந்த ஜனவரி மாதம், நவீன் பட்நாயக் தனது தந்தை பிஜின் பட்நாயக் பற்றிய புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ள தேவேகவுடாவுக்கு அழைப்பு விடுத்தார் ஆனால் அவர் கலந்து கொள்ளவில்லை இதன்காரணமாக தற்போது தேவேகவுடா அமைப்பை நிராகரித்ததாக கூறப்படுகிறது.

    தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், குமாரசாமி பதவியேற்பு விழாவுக்கு செல்லவில்லை. அவருக்கு பதில் 4 எம்.எல்.ஏ.க்கள் கொண்ட தி.மு.க. குழு பெங்களூர் சென்று பதவியேற்பு விழாவில் கலந்து கொள்கிறார்கள்.

    மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசனுக்கும் குமாரசாமி அழைப்பு விடுத்து இருந்தார். இதை ஏற்று கமல்ஹாசன் கலந்து கொள்கிறார். காவிரிக்காக கர்நாடகத்துடன் பேச்சு நடத்துவதற்காக முதல் அடியாகவே இதில் கலந்து கொள்வதாக கமல்ஹாசன் கூறினார். #KarnatakaFloorTest #Kumarasamy #AkhileshYadav #Mayawati #ChandrashekarRao #NaveenPatnaik
    கர்நாடக மாநிலத்தில் ஐந்து ஆண்டுகள் நிலையான ஆட்சியை கொடுப்பேன் என முதலமைச்சராக பதவியேற்க உள்ள குமாரசாமி தெரிவித்தார். #KarnatakaCM #Kumaraswamy
    ஹசன்:

    கர்நாடகத்தில் எடியூரப்பா ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து ஜே.டி.எஸ். தலைவர் குமாரசாமி நாளை மறுநாள் முதல்-மந்திரியாக பதவி ஏற்க இருக்கிறார். 38 இடங்களில் வெற்றி பெற்ற ஜே.டி.எஸ். கட்சிக்கு 78 இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரஸ் ஆதரவு அளித்துள்ளது. மெஜாரிட்டிக்கு 112 எம்.எல்.ஏ.க்கள் தேவை. அதையும் தாண்டி இந்த  கூட்டணிக்கு 116 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு மந்திரி சபைக்கு உள்ளது.

    ஆட்சியமைக்கும் பணியில் தீவிரமாக உள்ள குமாரசாமி இன்று ஹசன் பகுதியில் உள்ள லட்சுமி நரசிம்மர் ஆலயத்தில் சாமி தரிசனம் செய்தார்.

    பின்னர் செய்தியாளர்களை சந்தித்த குமாரசாமி, கர்நாடக மாநிலத்தில் ஐந்து ஆண்டுகள் நிலையான ஆட்சி கொடுப்போம் என்றார்.

    ‘முதலமைச்சர் பதவி என்பது இந்த நேரத்தில் மிகவும் சவாலான பதவி. மற்ற கட்சிகளின் நிலைப்பாட்டையும் உன்னிப்பாக கவனித்து வருகிறேன். நான் ஐந்து ஆண்டுகள் நிலையான ஆட்சியைக் கொடுப்பதை உறுதி செய்யும் வகையில், எங்கள் கூட்டணி கட்சியான காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்க வேண்டும்’ என குமாரசாமி தெரிவித்தார்.

    முதலமைச்சர் பதவியை ஜேடிஎஸ் கட்சியும் காங்கிரசும் பகிர்ந்து கொள்ளலாம் என்றும், ஒவ்வொரு கட்சிக்கும் 30 மாதங்கள் முதலமைச்சர் பதவி கிடைக்கலாம் என்றும் தகவல்கள் வெளியான நிலையில் குமாரசாமியின் இந்த கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. #KarnatakaCMRace #KarnatakaCM #Kumaraswamy
    கர்நாடகா முதல்வராக குமாரசாமி பதவியேற்கும் விழா, பாரதிய ஜனதாவுக்கு எதிரான தேசிய மற்றும் மாநில அளவில் 11 முக்கிய கட்சிகளை ஒன்றிணைக்கும் இடமாக அமைந்துள்ளது. #Karnataka #Kumarasamy
    பெங்களூர்:

    கர்நாடகா முதல்-மந்திரியாக நாளை மறுநாள் பதவியேற்க உள்ள குமாரசாமி, அந்த விழாவில் கலந்து கொள்ளும்படி நாடு முழுவதும் உள்ள முக்கிய கட்சிகளின் தலைவர்களை அழைத்து வருகிறார். அவரது அழைப்பை ஏற்று பல்வேறு கட்சித் தலைவர்கள் 23-ந்தேதி பெங்களூரில் ஒன்று கூட உள்ளனர்.

    குமாரசாமி பதவி ஏற்பு விழாவில் மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, ஆந்திர முதல்- மந்திரி சந்திரபாபு நாயுடு, தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகரராவ், புதுச்சேரி முதல்-மந்திரி நாராயணசாமி ஆகிய 4 முதல்வர்கள் கலந்து கொள்ள உள்ளனர். உத்தரபிரதேசத்தில் இருந்து பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கலந்து கொள்ள உள்ளனர்.

    தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுடன் போனில் பேசிய குமாரசாமி பதவியேற்பு விழாவுக்கு வருமாறு அழைத்தார். அதை ஏற்றுக்கொண்ட மு.க. ஸ்டாலின் 23-ந்தேதி பெங்களூர் சென்று பதவியேற்பு விழாவில் கலந்து கொள்கிறார்.

    தேசிய மற்றும் மாநில அளவில் 11 முக்கிய கட்சிகள் பாரதிய ஜனதாவுக்கு எதிராக உள்ளன. அந்த 11 கட்சிகளையும் நாளை மறுநாள் ஒரே இடத்தில் திரள செய்யும் முயற்சிகளை குமாரசாமி எடுத்துள்ளார்.

    தேசியவாத காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகளும் குமாரசாமி பதவியேற்பு விழாவில் பங்கேற்கின்றன. பதவியேற்பு விழா முடிந்ததும் 4 மாநில முதல்-மந்திரிகள், 11 எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு குமாரசாமி விருந்து அளிக்க உள்ளார்.

    இதன் காரணமாக குமாரசாமி முதல்வராக பதவியேற்கும் விழா பா.ஜ.க.வுக்கு எதிராக எதிர்க் கட்சிகளை ஒருங்கிணைக்கும் விழாவாகவும் மாறியுள்ளது. 23-ந்தேதி பிற்பகல் எதிர்க்கட்சித் தலைவர்களை ஒரே இடத்தில் அமர வைத்து பேச திட்டமிடப்பட்டு வருகிறது.

    காங்கிரஸ் தலைவர்கள் சோனியா, ராகுலும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளதால் 23-ந்தேதி நடக்கும் எதிர்க்கட்சி தலைவர்களின் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது.

    2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு மாநில கட்சிகளை தனது அணியில் இடம்பெற செய்ய காங்கிரஸ் முயன்று வருகிறது. ஆனால் சில மாநில கட்சிகள் தொடர்ந்து காங்கிரசை எதிர்த்தப்படி உள்ளன.


    பா.ஜ.க., காங்கிரஸ் இரு கட்சிகளுக்கும் மாற்றாக மூன்றாவது அணியை உருவாக்க அந்த கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. குறிப்பாக மம்தா பானர்ஜி, சந்திரசேகரராவ் இருவரும் மூன்றாவது அணி திட்டத்தை முன்னெடுத்து சென்றபடி உள்ளனர்.

    சந்திரபாபு நாயுடு, சரத் பவார் மற்றும் கம்யூனிஸ்ட் தலைவர்களையும் 3-வது அணிக்குள் இழுக்க அவர்கள் பேசியபடி உள்ளனர். இந்த நிலையில் பெங்களுரில் ஒன்று சேரும் 11 எதிர்க்கட்சித் தலைவர்களையும் ஓரணியில் திரட்ட சிலர் ஏற்பாடு செய்து வருகிறார்கள்.

    பா.ஜ.க.வுக்கு எதிரான இந்த முயற்சியில் வெற்றி கிடைத்தால் அது தேசிய அரசியலில் மிகப்பெரிய மாற்றங்களுக்கு வித்திடுவதாக இருக்கும். #Karnataka #Kumarasamy
    கர்நாடக முதல்வராக குமாரசாமி பதவியேற்கும் விழாவில் பங்கேற்குமாறு தேவேகவுடா விடுத்த அழைப்பை ஏற்று பெங்களூரு செல்ல உள்ளார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால். #Kumarasamy #Devegowda #ArvindKejriwal
    புதுடெல்லி :

    கர்நாடக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பே எடியூரப்பா தனது முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து, காங்கிரஸ்- மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி சார்பில் ஆட்சி அமைக்க உள்ளது. ஆட்சியமைக்க உரிமை கோரி மதசார்பற்ற ஜனதா தள தலைவர் குமாரசாமி கவர்னரை சந்தித்து பேசினார். அப்போது ஆட்சி அமைக்க வருமாறு கவர்னர் அழைப்பு விடுத்தார்.

    அதன் அடிப்படையில் வருகிற 23-ந்தேதி (புதன் கிழமை) கர்நாடக முதல்- மந்திரியாக குமாரசாமி பதவி ஏற்க உள்ளார். அவருடன் அமைச்சர்களும் பதவியேற்க உள்ளனர். இந்த பதவி ஏற்பு விழாவில் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் ஒத்த கருத்துடைய கட்சி தலைவர்கள் பங்கேற்பதற்கு அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது. 

    அந்த வகையில் குமாரசாமியின் தந்தையும் முன்னாள் பிரதமருமான தேவேகவுடா தொலைபேசி மூலம் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அழைப்பு விடுத்தார். தேவேகவுடாவின் அழைப்பை ஏற்று அரவிந்த் கெஜ்ரிவால் 23-ம் தேதி பெங்களூரு சென்று பதவி ஏற்பு விழாவில் பங்கேற்பார் என டெல்லி அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். #Kumarasamy #Devegowda #ArvindKejriwal
    கர்நாடக முதல்வராக வருகிற 23-ந்தேதி பதவியேற்க உள்ள எச்.டி.குமாரசாமி இன்று ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வருகை தந்து எம்.எல்.ஏ.க்கள் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வைத்து தரிசிக்க உள்ளார். #KarnatakaElection2018 #Kumarasamy
    பெங்களூரு:

    கர்நாடகத்தில் எடியூரப்பா ராஜினாமாவை தொடர்ந்து ஜே.டி.எஸ். தலைவர் குமாரசாமி வருகிற 23-ந்தேதி முதல்-மந்திரியாக பதவி ஏற்க இருக்கிறார்.

    38 இடங்களில் வெற்றி பெற்ற ஜே.டி.எஸ். கட்சிக்கு 78 இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரஸ் ஆதரவு அளிக்கிறது. மெஜாரிட்டிக்கு 112 எம்.எல்.ஏ.க்கள் தேவை என்ற நிலையில், அதையும் தாண்டி 6 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு குமாரசாமிக்கு உள்ளது.

    தனக்கு ஆதரவு அளிக்கும் முடிவு எடுத்த சோனியா காந்தி, ராகுல்காந்தி ஆகியோருக்கு குமாரசாமி நன்றி தெரிவித்துள்ளார். மேலும்  நாளை டெல்லி சென்று அவர்களை நேரில் சந்திக்க உள்ளார்.

    இந்நிலையில், திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு அவர் இன்று  வருகை தர உள்ளார். கர்நாடக தேர்தலில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்களின் சான்றிதழ்களை வைத்து சிறப்பு பூஜை நடத்த அவர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

    கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக குமாரசாமியின் சகோதரர், தேர்தலில் போட்டியிடும் மதச்சார்பற்ற ஜனதா தள எம்.எல்.ஏ.க்களின் வேட்பாளர் பட்டியலை ஸ்ரீரங்கம் கோவிலில் வைத்து பூஜை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. #KarnatakaElection2018 #Kumarasamy
    குதிரை பேரம் நடத்துவதற்கு வசதியாக 15 நாட்கள் அவகாசம் அளித்துள்ளதாகவும் அரசியலமைப்புச் சட்டத்தை மோடி அரசு மீறி விட்டதாகவும் குமாரசாமி குற்றம் சாட்டியுள்ளார்.#KarnatakaElections2018 #Yeddyurappa #Kumarasamy
    பெங்களூர்:

    கர்நாடகத்தில் பா.ஜனதாவை ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பு விடுத்தார். இதை தொடர்ந்து எடியூரப்பா முதல்- மந்திரியாக இன்று பதவி ஏற்றார்.

    எடியூரப்பாவை ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பு விடுத்ததற்கு மதசார்பற்ற ஜனதாதள தலைவர் குமாரசாமி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

    இது தொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    எடியூரப்பாவை ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பு விடுத்த வி‌ஷயத்தை நாங்கள் எளிதாக விட்டுவிட மாட்டோம். ஏனெனில் ஆட்சிக்கு தேவையான பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்கள் பட்டியலை நாங்கள் அளித்துள்ளோம். ஆனால் எங்கள் கூட்டணிக்கு பதிலாக பெரும்பான்மை இல்லாத பா.ஜனதாவை ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பு விடுத்தார்.



    மெஜாரிட்டியை நிரூபிக்க எடியூரப்பாவுக்கு 3 அல்லது 4 நாட்கள் அவகாசம் கொடுத்திருந்தால் கூட பரவாயில்லை. அவர்கள் குதிரை பேரம் நடத்துவதற்கு வசதியாக 15 நாட்கள் அவகாசம் அளித்து உள்ளார்.

    கவர்னரை பயன்படுத்தி இந்த நாடகத்தை நடத்தியதன் மூலம் மோடி தலைமையிலான மத்திய அரசு அரசியலமைப்பு சட்டத்தை மீறியுள்ளது.

    எங்கள் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விரைவில் முடிவு எடுப்போம்.

    இவ்வாறு குமாரசாமி கூறியுள்ளார்.#KarnatakaElections2018 #Yeddyurappa #Kumarasamy
    கர்நாடகாவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் 12 பேர் பங்கேற்கவில்லை என தகவல் வெளியான நிலையில், 78 எம்.எல்.ஏ.க்களும் தொடர்பில் இருப்பதாக அம்மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வரா தெரிவித்துள்ளார். #Karnataka
    பெங்களூர்:

    கர்நாடகாவில் நேற்று வெளியான சட்டசபை தேர்தல் முடிவுகளில் ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை எந்த கட்சிக்கும் கிடைக்கவில்லை. இதனால், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆட்சியமைக்க காங்கிரஸ் ஆதரவு அளித்தது. இரு கட்சிகளும் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க முடிவு செய்தது.

    104 இடங்களில் வென்ற பாஜக ஆட்சியமைக்க ஆளுநரை சந்தித்து உரிமை கோரியது. காங்கிரஸ் மற்றும் மஜத எம்.எல்.ஏ.க்களை தங்கள் பக்கம் இழுக்க பாஜக முயற்சி எடுத்து வருகிறது. இதனை அடுத்து, 100 கோடி ரூபாய் எம்.எல்.ஏ.க்களிடம் பாஜக பேரம் பேசுவதாக மஜத தலைவர் குமாரசாமி பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.

    இந்நிலையில், இன்று நடந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் 12 பேர் பங்கேற்கவில்லை. இதனால், அவர்கள் முகாம் மாறியதாக தகவல்கள் வெளியானது. ஆனால், இந்த தகவலை மறுத்துள்ள அம்மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வரா, “78 எம்.எல்.ஏ.க்களும் எங்களுடன் தொடர்பில் உள்ளனர். 12 பேர் பிதார் பகுதியில் இருந்து வருவதால் கூட்டத்திற்கு வர தாமதம் ஆகியுள்ளது” என கூறினார். #KarnatakaElections
    மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு காங்கிரஸ் கட்சி அளித்த ஆதரவை ஏற்றுகொண்ட குமாரசாமி கர்நாடகத்தில் ஆட்சி அமைக்க தனக்கு அழைப்பு விடுக்குமாறு கோரி கர்நாடக கவர்னரை இன்று மாலை சந்தித்தார். #Kumarasamy #KarnatakaElection2018
    பெங்களூரு:

    கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவுகள் படிப்படியாக வெளியாகிவரும் நிலையில் இன்று பிற்பகல் ஐந்தரை மணி நிலவரப்படி பா.ஜ.க. வேட்பாளர்கள் 91 தொகுதிகளிலும், காங்கிரஸ் வேட்பாளர்கள் 70 தொகுதிகளிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் வேட்பாளர்கள் 37 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிள்ளனர்.

    பா.ஜ.க. அதிக இடங்களில் வெற்றி பெற்றிருந்தாலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு காங்கிரஸ் கட்சி அளித்த ஆதரவை ஏற்றுகொண்ட குமாரசாமி கர்நாடகத்தில் ஆட்சி அமைக்க தனக்கு அழைப்பு விடுக்குமாறு கேட்டு கொள்வதற்காக கவர்னரை சந்திக்க நேரம் கேட்டு கடிதம் அனுப்பினார்.

    இதற்கிடையில், பா.ஜ.க. மாநில தலைவரும் முன்னாள் முதல் மந்திரியுமான எடியூரப்பா, அதிக இடங்களில் வெற்றி பெற்ற கட்சி என்ற முறையில் ஆட்சி அமைக்க எங்களுக்கு அழைப்பு விடுக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் மாலை சுமார் 5 மணியளவில் கவர்னர் வஜுபாய் வாலா-வை சந்தித்தார்.

    சட்டசபையில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க 7 நாள் அவகாசம் தாருங்கள் என கவர்னரை எடியூரப்பா கேட்டுகொண்டதாக தெரிகிறது.

    இந்த சந்திப்பு முடிந்த சில நிமிடங்களில் ஆட்சி அமைக்க தனக்கு அழைப்பு விடுக்குமாறு கோரி கர்நாடக கவர்னரை குமாரசாமி இன்று மாலை சந்தித்தார்.

    குமாரசாமியுடன் முன்னாள் முதல் மந்திரி சித்தராமையா, காங்கிரஸ் மேலிட தலைவர் குலாம் நபி ஆசாத் மற்றும் காங்கிரஸ் எம்.எம்.எல்.ஏக்கள் உடன் சென்றிருந்தனர்.

    ஆட்சி அமைக்க தனக்கு அழைப்பு விடுக்க வேண்டும் என்ற கோரிக்கை கடிதத்தை கவர்னரிடம் குமாரசாமி அளித்தார். #Kumarasamy #KarnatakaElection2018

    ×