search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ArvindKejriwal"

    டெல்லிக்கு மாநில அந்தஸ்து வழங்க வலியுறுத்தி மார்ச் 1 முதல் தொடர் உண்ணாவிரதம் மேற்கொள்வேன் என ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். #ArvindKejriwal #indefinitefast #Delhistatehood
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தோ்தலுக்கான பிரச்சாரம் நாடு முழுவதும் சூடுபிடிக்கும் வேளையில், டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் துணைநில ஆளுநரின் கட்டுப்பாட்டில் இருக்கும் டெல்லிக்கு மாநில அந்தஸ்து வழங்க வலியுறுத்தி வருகிறார்.

    இதுதொடர்பாக, பல பொதுக்கூட்டங்களில் பேசியுள்ள அவர் பிரதமர் மோடிக்கும் இந்த கோரிக்கையை வலியுறுத்தி கடிதம் அனுப்பியுள்ளார்.

    இந்நிலையில், இன்று டெல்லி சட்டசபையில் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லிக்கு மாநில அந்தஸ்து அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி மார்ச் முதல் தேதியில் இருந்து தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தார்.



    டெல்லியில் உள்ள மக்கள் தங்களை ஆளும் அரசை வாக்களித்து தேர்ந்தெடுத்து அனுப்பி வைக்கின்றனர். ஆனால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு அதிகாரம் அளிக்கப்படவில்லை. நாடு முழுவதும் அமலில் இருக்கும் ஜனநாயகம் டெல்லிக்கு மட்டும் இல்லாமல் போனது ஏன்?

    எனவே, மார்ச் முதல் தேதியில் இருந்து டெல்லிக்கு மாநில அந்தஸ்து அளிக்கப்படும் வரை மத்திய அரசுக்கு எதிரான எங்களது உண்ணாவிரதப் போராட்டம் தொடரும் என செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கெஜ்ரிவால் குறிப்பிட்டுள்ளார்.  #ArvindKejriwal  #indefinitefast #Delhistatehood  
    டெல்லி மக்களுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்த துணை நிலை ஆளுனர் ஒத்துழைப்பு வழங்கும் வரை தர்ணா போராட்டம் தொடரும் என டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் இன்று தெரிவித்துள்ளார். #AnilBaijal #CMArvindKejriwal
    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் ஆம் ஆத்மி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் ரேஷன் பொருட்களை வீடு தேடி சென்று வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு சேவை திட்டங்களை கொண்டுவந்தார்.

    இந்த திட்டங்களை அமல்படுத்திட சம்பந்தப்பட்ட துறை ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஆனால் கெஜ்ரிவால் உத்தரவை ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் புறக்கணித்தனர்.

    இதுதொடர்பாக அவர் நேற்று இரவு துணை நிலை கவர்னர் அனில் பைஜாலை சந்திக்க அவரது இல்லம் சென்றார். ஆனால், அவரை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டது. அதனால் கவர்னர் வீட்டின் வரவேற்பாளர் அறையில் நேற்று இரவு முழுதும் படுத்து தூங்கி தர்ணாவில் ஈடுபட்டார். அவருடன் துணை முதல்வர் மற்றும் 2 மந்திரிகளும் உடனிருந்தனர். 

    இந்நிலையில், இது குறித்து இன்று வீடியோ பதிவு வெளியிட்டுள்ள அரவிந்த் கெஜ்ரிவால், நாங்கள் நேற்று டெல்லி துணை நிலை ஆளுனரின் இல்லத்தில் அவரை சந்தித்தோம். சந்திப்பின் போது, ரேசன் பொருட்களை வீடு தேடி சென்று வழங்கும் திட்டத்தை செயல்படுத்த ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தோம். 

    திட்டங்களை அமல்படுத்திட உத்தரவிட்டும் செயல்படுத்தாமல் வேலைநிறுத்தத்தில் இருப்பது போல் உள்ள ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் அரசு செல்வதை கேட்க வேண்டும். இந்த கோரிக்கைகள் நிறைவேற்றினால் தான் வீட்டை விட்டு வெளியே செல்வோம் என கவர்னரிடம் தெரிவித்துவிட்டோம்.

    இது குறித்து எந்த நடவடிக்கையும் கவர்னர் எடுக்காத காரணத்தினால் எங்களின் தர்ணா போராட்டம் இரண்டாவது நாளாக இன்றும் தொடர்கிறது. எங்களுக்காக நாங்கள் கவர்னர் வீட்டில் தர்ணா போராட்டம் நடத்தவில்லை, டெல்லி மக்களுக்காக செயல்படுத்தப்பட வேண்டிய பல்வேறு நலத்திட்டங்கள் நிலுவையில் உள்ளது. அவற்றை நிறைவேற்ற ஒத்துழைப்பு கோரியே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம், இது டெல்லி மக்களுக்கான போராட்டம் என கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். #AnilBaijal #CMArvindKejriwal
    கர்நாடக முதல்வராக குமாரசாமி பதவியேற்கும் விழாவில் பங்கேற்குமாறு தேவேகவுடா விடுத்த அழைப்பை ஏற்று பெங்களூரு செல்ல உள்ளார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால். #Kumarasamy #Devegowda #ArvindKejriwal
    புதுடெல்லி :

    கர்நாடக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பே எடியூரப்பா தனது முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து, காங்கிரஸ்- மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி சார்பில் ஆட்சி அமைக்க உள்ளது. ஆட்சியமைக்க உரிமை கோரி மதசார்பற்ற ஜனதா தள தலைவர் குமாரசாமி கவர்னரை சந்தித்து பேசினார். அப்போது ஆட்சி அமைக்க வருமாறு கவர்னர் அழைப்பு விடுத்தார்.

    அதன் அடிப்படையில் வருகிற 23-ந்தேதி (புதன் கிழமை) கர்நாடக முதல்- மந்திரியாக குமாரசாமி பதவி ஏற்க உள்ளார். அவருடன் அமைச்சர்களும் பதவியேற்க உள்ளனர். இந்த பதவி ஏற்பு விழாவில் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் ஒத்த கருத்துடைய கட்சி தலைவர்கள் பங்கேற்பதற்கு அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது. 

    அந்த வகையில் குமாரசாமியின் தந்தையும் முன்னாள் பிரதமருமான தேவேகவுடா தொலைபேசி மூலம் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அழைப்பு விடுத்தார். தேவேகவுடாவின் அழைப்பை ஏற்று அரவிந்த் கெஜ்ரிவால் 23-ம் தேதி பெங்களூரு சென்று பதவி ஏற்பு விழாவில் பங்கேற்பார் என டெல்லி அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். #Kumarasamy #Devegowda #ArvindKejriwal
    டெல்லி தலைமை செயலாளர் அன்ஷு பிரகாஷ் தாக்கப்பட்ட விவகாரத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது என போலீசார் தெரிவித்துள்ளனர். #DelhiChiefSecretary #ArvindKejriwal
    புதுடெல்லி:

    டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. சிவிக்லைனில் உள்ள கெஜ்ரிவால் இல்லத்தில் மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் கடந்த பிப்ரவரி மாதம் 19-ம் தேதி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தலைமை செயலாளர் அன்ஷு பிரகாஷ் பங்கேற்றார்.

    கூட்டத்தின் போது வார்த்தைகள் மோதலால் தலைமை செயலாளரை ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் தன்னை தாக்கியதாக தலைமை செயலாளர் அன்ஷு பிரகாஷ் துணை நிலை கவர்னர் அனில் பைஜாலை நேரில் சந்தித்து புகார் கொடுத்தார்.



    எம்.எல்.ஏ.க்கள் அஜத்தத், பிரகாஷ் ஜார்வால் ஆகியோர் தன்னை தாக்கியதாகவும், அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் அவர் கவர்னரிடம் வலியுறுத்தி இருந்தார்.

    இது தொடர்பாக ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக வருகின்ற வெள்ளிக்கிழமை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் விசாரணை நடத்தப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து கெஜ்ரிவாலுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. #DelhiChiefSecretary #ArvindKejriwal

    ×