என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
பா.ஜ.க.வுக்கு எதிரான கட்சிகளை ஒன்று சேர்க்கும் குமாரசாமி பதவியேற்பு விழா
Byமாலை மலர்21 May 2018 9:42 AM GMT (Updated: 21 May 2018 9:42 AM GMT)
கர்நாடகா முதல்வராக குமாரசாமி பதவியேற்கும் விழா, பாரதிய ஜனதாவுக்கு எதிரான தேசிய மற்றும் மாநில அளவில் 11 முக்கிய கட்சிகளை ஒன்றிணைக்கும் இடமாக அமைந்துள்ளது. #Karnataka #Kumarasamy
பெங்களூர்:
கர்நாடகா முதல்-மந்திரியாக நாளை மறுநாள் பதவியேற்க உள்ள குமாரசாமி, அந்த விழாவில் கலந்து கொள்ளும்படி நாடு முழுவதும் உள்ள முக்கிய கட்சிகளின் தலைவர்களை அழைத்து வருகிறார். அவரது அழைப்பை ஏற்று பல்வேறு கட்சித் தலைவர்கள் 23-ந்தேதி பெங்களூரில் ஒன்று கூட உள்ளனர்.
குமாரசாமி பதவி ஏற்பு விழாவில் மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, ஆந்திர முதல்- மந்திரி சந்திரபாபு நாயுடு, தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகரராவ், புதுச்சேரி முதல்-மந்திரி நாராயணசாமி ஆகிய 4 முதல்வர்கள் கலந்து கொள்ள உள்ளனர். உத்தரபிரதேசத்தில் இருந்து பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கலந்து கொள்ள உள்ளனர்.
தேசிய மற்றும் மாநில அளவில் 11 முக்கிய கட்சிகள் பாரதிய ஜனதாவுக்கு எதிராக உள்ளன. அந்த 11 கட்சிகளையும் நாளை மறுநாள் ஒரே இடத்தில் திரள செய்யும் முயற்சிகளை குமாரசாமி எடுத்துள்ளார்.
தேசியவாத காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகளும் குமாரசாமி பதவியேற்பு விழாவில் பங்கேற்கின்றன. பதவியேற்பு விழா முடிந்ததும் 4 மாநில முதல்-மந்திரிகள், 11 எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு குமாரசாமி விருந்து அளிக்க உள்ளார்.
இதன் காரணமாக குமாரசாமி முதல்வராக பதவியேற்கும் விழா பா.ஜ.க.வுக்கு எதிராக எதிர்க் கட்சிகளை ஒருங்கிணைக்கும் விழாவாகவும் மாறியுள்ளது. 23-ந்தேதி பிற்பகல் எதிர்க்கட்சித் தலைவர்களை ஒரே இடத்தில் அமர வைத்து பேச திட்டமிடப்பட்டு வருகிறது.
காங்கிரஸ் தலைவர்கள் சோனியா, ராகுலும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளதால் 23-ந்தேதி நடக்கும் எதிர்க்கட்சி தலைவர்களின் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது.
2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு மாநில கட்சிகளை தனது அணியில் இடம்பெற செய்ய காங்கிரஸ் முயன்று வருகிறது. ஆனால் சில மாநில கட்சிகள் தொடர்ந்து காங்கிரசை எதிர்த்தப்படி உள்ளன.
சந்திரபாபு நாயுடு, சரத் பவார் மற்றும் கம்யூனிஸ்ட் தலைவர்களையும் 3-வது அணிக்குள் இழுக்க அவர்கள் பேசியபடி உள்ளனர். இந்த நிலையில் பெங்களுரில் ஒன்று சேரும் 11 எதிர்க்கட்சித் தலைவர்களையும் ஓரணியில் திரட்ட சிலர் ஏற்பாடு செய்து வருகிறார்கள்.
பா.ஜ.க.வுக்கு எதிரான இந்த முயற்சியில் வெற்றி கிடைத்தால் அது தேசிய அரசியலில் மிகப்பெரிய மாற்றங்களுக்கு வித்திடுவதாக இருக்கும். #Karnataka #Kumarasamy
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X