என் மலர்

    நீங்கள் தேடியது "Karnataka Governor"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    வீதிக்கு வந்து போராடுமாறு மக்களுக்கு அழைப்பு விடுத்த கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி மீது அரசியல் சாசன சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கவர்னரிடம் பா.ஜனதா புகார் அளித்தது. #Kumaraswamy
    பெங்களூரு:

    கர்நாடகத்தில் காங்கிரஸ்- ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சி நடக்கிறது. இந்த ஆட்சியை கவிழ்த்துவிட்டு, பா.ஜனதா ஆட்சி அமைக்க தீவிர முயற்சி செய்து வருகிறது. இதனால் குமாரசாமி தலைமையிலான அரசு ஆட்டம் கண்டு வருகிறது.

    இதைத் தொடர்ந்து முதல்-மந்திரி குமாரசாமி ஆட்சியை கவிழ்க்க முயற்சி செய்யும் பா.ஜனதாவுக்கு எதிராக மக்கள் வீதிக்கு திரண்டு வந்து கிளர்ச்சியில் ஈடுபடவேண்டும் என்று பகிரங்கமாகவே அழைப்பு விடுத்தார். இதைக் கண்டித்த பா.ஜனதா, குமாரசாமி மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது.

    மேலும் எதிர்க்கட்சிக்கு எதிராக மக்களை போராடத்தூண்டியதாக கூறி முதல்-மந்திரி குமாரசாமியை கண்டித்து பா.ஜனதா சார்பில் கர்நாடகா முழுவதும் நேற்று பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் பெங்களூருவில் மாநில கவர்னர் வஜூபாய் வாலாவை, மத்திய மந்திரி சதானந்த கவுடா, பா.ஜனதா முன்னாள் துணை முதல்-மந்திரி ஆர்.அசோக், நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் ஷோபா, முன்னாள் மந்திரி சுரேஷ்குமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் நேற்று நேரில் சந்தித்தனர்.


    அப்போது அவர்கள் ஒரு புகார் மனுவை கவர்னரிடம் வழங்கினர். அதில், “ஒரு கட்சிக்கு (பா.ஜனதா) எதிராக மக்கள் வீதிக்கு திரண்டு வந்து கிளர்ச்சியில் ஈடுபடவேண்டும் என்று மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் விதமாக ஒரு மாநிலத்தின் முதல்-மந்திரியே பேசுகிறார். இதுபோல் ஒரு முதல்-மந்திரியே பேசுவது மிக ஆபத்தானது.

    மேலும் சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் எடியூரப்பாவின் வீட்டின் மீது காங்கிரஸ் கட்சியினர் தாக்குதல் நடத்தி உள்ளனர். எனவே அரசியல் சாசன சட்டத்தின்படி முதல்-மந்திரி குமாரசாமி மீது தாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறப்பட்டு உள்ளது.  #Kumaraswamy #BJP #Yeddyurappa
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    திவாகரனுக்கும் எனக்கும் எந்த வித சொத்து தகராறும் இல்லை என்று டி.டி.வி. தினகரன் சேலத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். #Divakaran #dinakaran #karnatakagovernor

    சேலம்:

    சேலம் மாவட்டம் எடப்பாடி பகுதியில் நடைபெறும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பிரமுகர் இல்ல திருமண விழாவில் பங்கேற்பதற்காக டி.டி.வி. தினகரன் நேற்றிரவு சேலத்திற்கு வந்தார். இன்று காலை சேலத்தில் தினகரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    அண்ணன் தம்பி என்றால் சொத்து தகராறு வரும். எனது முன்னாள் மாமா திவாகரனுக்கும், எனக்கும் சொத்து தகராறு இருப்பதாக கூறப்படுவது ஏற்புடையது அல்ல, அவருக்கும் எனக்கும் எந்த வித சொத்து தகராறும் இல்லை.

    துரோக கும்பலுடன் அவர் சேர்ந்து விட்டார். இ.பி.எஸ்., ஓ.பி.எஸ்.சுக்கு அவர் ஏஜெண்டாக செயல் படுகிறார். மக்களிடையே பிரிவினை வாதத்தை ஏற்படுத்துபவர்களுக்கு ஆதரவாக இருக்க மாட்டோம்.


    கர்நாடகாவில் எடியூரப்பாவுக்கு முதல்-அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைக்காமல் பெரும்பான்மையை முதலில் நிரூபிக்கும் படி கவர்னர் கூறி இருக்கலாம்.

    104 இடங்களில் பா.ஜனதா வெற்றி பெற்றும் பெரும்பான்மை கிடைக்காததால் குழப்பம் நீடித்துள்ளது. தற்போது உச்சநீதிமன்ற உத்தரவால் ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது. அந்த தீர்ப்பு வரவேற்கதக்கது.

    அ.தி.மு.க.வை எம்.ஜி.ஆர். தொடங்கிய காலத்திலேயே பொதுச்செயலாளருக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டது தொடர்பாக தெளிவாக கூறப்பட்டுள்ளது. அ.தி.மு.க. பொதுச்செயலாளரை பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்வார்கள்.

    இது தொடர்பாக எங்கள் வாதங்களை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளோம். இதன் அடிப்படையில் எங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரும். 90 சதவீத தொண்டர்கள் எங்கள் பக்கம் உள்ளனர். அ.தி.மு.க. வை சேர்ந்த பலரும் எங்களுக்கு ஆதரவாக உள்ளனர். விரைவில் நிர்வாகிகளும் எங்கள் பக்கம் வருவார்கள்.

    காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக விவசாய சங்க பிரதிநிதிகள் அய்யாக்கண்ணு, பி.ஆர்.பாண்டியன் ஆகியோரிடம் பேசினேன். மேலாண்மை ஆணையம் உச்ச நீதிமன்ற உத்தரவை அப்படியே செயல்படுத்த வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

    18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். 

    இவ்வாறு அவர் கூறினார். #Divakaran #dinakaran #karnatakagovernor

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    கர்நாடகாவில் குறைவான எண்ணிக்கை கொண்ட பா.ஜனதாவை பதவியேற்க அழைத்த கர்நாடக கவர்னர் தாமாகவே பதவி விலக வேண்டும் என நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார்.

    புதுச்சேரி:

    கர்நாடக மாநில ஐ.என்.டி.யூ.சி. சார்பில் ஆண்டுதோறும் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவு ஜோதி யாத்திரை நடத்தப்படுகிறது. 27-வது ஜோதி யாத்திரை கடந்த 15-ந்தேதி பெங்களூரில் இருந்து கிளம்பியது. சேலம், கோவை, கொச்சின், கன்னியாகுமரி, நாகர்கோவில், மதுரை, விழுப்புரம் வழியாக வந்த ஜோதி யாத்திரை நேற்று புதுவைக்கு வந்தது.

    இன்று காலை ஜோதி யாத்திரை ஸ்ரீபெரும் புதூருக்கு கிளம்பியது. ஜோதி யாத்திரையாக வந்தவர்களுக்கு காங்கிரஸ் துண்டு அணிவித்து முதல்-அமைச்சர் நாராயணசாமி வாழ்த்து தெரிவித்து ஜோதியை வழியனுப்பினார்.

    நிகழ்ச்சியில் சபாநாயகர் வைத்திலிங்கம், அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமி நாராயணன் எம்.எல்.ஏ., டெல்லி பிரதிநிதி ஜான்குமார், புதுவை மாநில ஐ.என்.டி.யூ.சி. தலைவர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் முதல்- அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-

    கர்நாடக ஐ.என்.டி.யூ. பொதுச்செயலாளர் சிவப்பிரகாசம் 27-வது ஆண்டாக ராஜீவ் நினைவு ஜோதி யாத்திரையை நடத்துகிறார். அவருக்கு என் பாராட்டுக்கள்.

    ராஜீவ்காந்தி இன்றைய காலத்தில் தலைவர்கள் இறந்தவுடன் மறந்து விடுகின்றனர். சாதனை புரிந்த தலைவர்கள் வாழ்நாள் முழுவதும் நினைவில் இருப்பார். அதுபோல் ராஜீவ்காந்தி நினைவில் இருப்பவர்.

    ராஜீவ் விமான பைலட்டாக இருந்தவர். சந்தர்ப்ப சூழ்நிலையில் இந்திராகாந்தி அவரை அரசியலுக்கு இழுத்தார். அரசியலுக்கு வந்த ராஜீவ், நாடு விஞ்ஞானத்தில் வளர்ச்சி பெற வேண்டும் என விரும்பினார்.

    கம்ப்யூட்டரை அவர்தான் கொண்டு வந்தார். பஞ்சாயத்துராஜ் சட்டம், பெண்களுக்கு 33 சதவீத ஒதுக்கீடு, கிராமப்புற வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்தார். ராஜீவ் கால கட்டத்தில் நாடு நன்றாக வளர்ச்சி அடைந்திருந்தது. இருப்பினும் அரசியல் சூழ்ச்சியால் அவர் தோல்வி அடைந்தார்.

    அடுத்த தேர்தலில் வெற்றியடைய நாடு முழுவதும் பிரசாரம் மேற்கொண்டார். அப்படி பிரசாரத்துக்கு வந்தபோது ஸ்ரீபெரும்புதூரில் படுகொலை செய்யப்பட்டார்.

    ஸ்ரீபெரும்புதூரில் தப்பினால் புதுவை, மயிலாடுதுறைதான் இலக்காக இருந்தது. இன்று நாடு ஒற்றுமையாக இருக்க ராஜீவ்காந்தி, இந்திராகாந்தி சிந்திய ரத்தம்தான் காரணம்.

    தற்போது நாடு மதச் சார்புடையவர்களிடம் சிக்கி தவிக்கிறது. ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளை சேர்ந்தவர்கள் சிறுபான்மையினருக்கும், தலித் மக்களுக்கும் பல தொந்தரவு தருகின்றனர். தாக்குகின்றனர்.

    பா.ஜனதா ஜனநாயக முறையில் ஆட்சி அமைப்பதில்லை. பல இடங்களில் குறைந்த இடங்களை பெற்றிருந்தாலும் கோவா, மணிப்பூர், மேகாலாயாவில் அங்குள்ளவர்களை அரசியல் பலத்தால் மிரட்டி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி உள்ளனர்.

    அதேபோல கர்நாடகாவிலும் ஆட்சியை பிடிக்க நினைத்தனர். ஆனால், அவர்களின் முயற்சி பலிக்கவில்லை. கர்நாடகாவில் காங்கிரஸ் கூட்டணி 116 இடங்களை பிடித்திருந்தது. பா.ஜ.க. 104 இடங்களையே பிடித் திருந்தது.

    ஆனால், காங்கிரஸ், ஜனதாதள எம்.எல்.ஏ.க்களை பிடிக்க பேரம் பேசினர். அந்த எம்.எல்.ஏ.க்கள் கட்சிக்கு துரோகம் செய்ய மாட்டோம் என கூறிவிட்டனர்.

    மோடி நாங்கள் ஜன நாயகத்தின் மீது நம்பிக்கை உள்ளவர்கள். விலைக்கு வாங்கி ஆட்சி செய்ய மாட்டோம். அரசுக்கு எந்த தொல்லையும் தர மாட்டோம் என்கிறார்.

    பின்னர் ஏன் கர்நாட காவில் பா.ஜனதா ஆட்சி அமைக்க முன்வந்தார்? கர்நாடகாவில் குறைவான எண்ணிக்கை கொண்ட பா.ஜனதாவை பதவியேற்க அழைத்த கர்நாடகா கவர்னர் தாமாகவே பதவி விலக வேண்டும்.

    இதில், ஐகோர்ட்டு மூலம் ஜனநாயகம் வெற்றி பெற்றுள்ளது. 2019 பாராளு மன்ற தேர்தலில் காங்கிரஸ் அதிக இடங்களை பிடித்து வெற்றி பெறும். ராகுல்காந்தி பிரதமராகி நாட்டில் அமைதியை உருவாக்க தொடர்ந்து பாடுபடுவார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    அரசியலில் பண பலமும், அதிகார பலமும் எப்போதுமே கை கொடுக்காது என உ.பி. முன்னாள் முதல் மந்திரி மாயாவதி குறிப்பிட்டுள்ளார். #Mayawati #karnatakapolitical #supremecourt
    புதுடெல்லி:

    கர்நாடக மாநில அரசியலில் இன்று ஏற்பட்ட திடீர் திருப்பம் தொடர்பாக பல்வேறு கட்சி தலைவர்கள் கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், அரசியலில் பண பலமும், அதிகார பலமும் எப்போதுமே கை கொடுக்காது என உ.பி. முன்னாள் முதல் மந்திரி மாயாவதி குறிப்பிட்டுள்ளார்.

    கர்நாடக மாநிலத்தில் பா.ஜ.க. அடைந்துள்ள வீழ்ச்சி, அனைத்து மாநிலங்களிலும் ஆட்சியை கைப்பற்றி விடலாம என்னும் அக்கட்சியினரின் கனவை நிர்மூலமாக்கி உள்ளது. இதை சுப்ரீம் கோர்ட்டின் கண்காணிப்பு தற்போது உறுதிப்படுத்தியுள்ளது.

    அவர்களால் நியமிக்கப்பட்ட மாநில கவர்னர்கள் கட்சியின் உத்தரவின்படி நடந்தாக வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாவதைவிட, தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு செல்லலாம்.  #Mayawati #karnatakapolitical #supremecourt
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய கவர்னர் வஜுபாய் வாலா ராஜினாமா செய்வது நல்ல யோசனையாக இருக்கும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார். #rahulgandhi #karnatakagovernor
    புதுடெல்லி:

    கர்நாடக சட்டசபையில் இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின்போது போதிய எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இல்லாததால் முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்வதாக எடியூரப்பா அறிவித்தார். 

    இதுதொடர்பாக, தனது டுவிட்டர் பக்கத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள பதிவில், ‘கர்நாடக மாநிலத்தில் எம்.எல்.ஏ.க்களை வெளிப்படையாக விலைக்கு வாங்குவதை பிரதமர் மோடி நேரடியாக ஆதரித்ததை மக்கள் பார்த்தனர்.

    எனவே, நாட்டில் ஊழலை ஒழிப்பேன் என்று அவர் பேசி வருவது அப்பட்டமான பொய் என்பதும் அவரே ஊழல்வாதி என்பதும் தெளிவாக புரிகிறது. 

    பா.ஜ.க.வை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து நின்றதை எண்ணி நான் பெருமைப்படுகிறேன். இனியும் காங்கிரஸ் கட்சி இதர எதிர்க்கட்சிகளுடன் இணைந்து பா.ஜ.க.வை வீழ்த்தும். கவர்னர் வஜுபாய் வாலா ராஜினாமா செய்வது நல்ல யோசனையாக இருக்கும் என நான் கருதுகிறேன்’ என குறிப்பிட்டுள்ளார். #rahulgandhi #karnatakagovernor
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    கர்நாடக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்னதாக எடியூரப்பா தனது முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்த நிலையில் கவர்னரிடம் இருந்து அழைப்பை எதிர்பார்த்து குமாரசாமி காத்திருக்கிறார். #KarnatakaCMRace #KarnatakaFloorTest #YeddyurappaResigns
    பெங்களூரு:

    கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தலில் 104 தொகுதிகளில் வெற்றி பெற்ற பா.ஜ.க. மெஜாரிட்டி இல்லாத நிலையில் ஆட்சியமைத்தது. எடியூரப்பா முதலமைச்சராக பதவியேற்றார். 15 நாட்கள் அவகாசம் பெற்று, எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் சிலரது ஆதரவுடன் சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூபிக்க பா.ஜ.க. திட்டமிட்டது. ஆனால் உச்ச நீதிமன்றம் உடனடியாக மெஜாரிட்டியை நிரூபிக்க உத்தரவிட்டது.

    அதன்படி இன்று சட்டமன்ற சிறப்பு கூட்டம்  நடைபெற்றது. காலையில் எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்றனர். 195 எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்ற பிறகு சட்டசபை 3.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

    உணவு இடைவேளியின்போது எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை நடத்திய எடியூரப்பா, 13 பக்கங்கள் கொண்ட உணர்ச்சிமிகு உரையை தயார் செய்தார். பிற்பகல் 3.30 மணிக்கு சட்டமன்றம் மீண்டும் கூடியபோது, மீதமுள்ள எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்றனர். அதன்பின்னர் எடியூரப்பா தனது உரையை வாசித்தார்.

    அப்போது உணர்ச்சிப்பெருக்குடன் தனது உரையை நிறைவு செய்த எடியூரப்பா, நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு போதிய உறுப்பினர்கள் ஆதரவு இல்லாததால் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

    இதை தொடர்ந்து ராஜ் பவனுக்கு சென்ற அவர் கவர்னர் வஜுபாய் வாலாவை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை ஒப்படைத்தார்.

    இதற்கிடையே, சட்டசபையை தேதி குறிப்பிடாமல் ஒப்படைப்பதாக தற்காலிக சபாநாயகர் போபையா அறிவித்தார். அதன் பின்னர் சட்டசபை வாசலில் செய்தியாளர்களை சந்தித்த மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி தலைவர் குமாரசாமி, ஆட்சி அமைக்கும் விவகாரத்தில் நாங்கள் அவசரப்படவில்லை.

    கவர்னரிடம் இருந்து அழைப்புக்காக காத்திருக்கிறோம் என்று குறிப்பிட்டார். #KarnatakaCMRace #KarnatakaFloorTest #YeddyurappaResigns
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    கர்நாடகாவில் எடியூரப்பா அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்காக நாளை காலை 11 மணிக்கு சட்டசபை சிறப்பு கூட்டத்தை கூட்ட ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். #KarnatakaGovernor #KarnatakaAssembly
    பெங்களூரு:

    கர்நாடக மாநில சட்டப்பேரவையில் எடியூரப்பா அரசு மீது நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. ஆட்சியமைக்க 112 உறுப்பினர்கள் ஆதரவு தேவை என்ற நிலையில் பா.ஜ.க.விடம் 104 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே உள்ளது. எனவே, வாக்கெடுப்பில் வெற்றி பெறுவதற்காக எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு வலை விரித்துள்ளது. இதனால் தங்களிடம் இருக்கும் எம்.எல்.ஏ.க்களை தக்க வைப்பதில் காங்கிரஸ் மற்றும் ஜேடிஎஸ் கட்சிகள் கண்ணும் கருத்துமாக இருக்கின்றன. அதேசமயம் நம்பிக்கை வாக்கெடுப்பில் எடியூரப்பா அரசை வீழ்த்தவும் ஆயத்தமாகி வருகின்றன.

    இந்த சூழ்நிலையில்  நாளை காலை 11 மணிக்கு சிறப்பு சட்டமன்றத்தை கூட்டும்படி ஆளுநர் வஜூபாய் வாலா உத்தரவிட்டுள்ளார். சபையை வழிநடத்துவதற்கு தற்காலிக சபாநாயகராக கே.ஜி.போபையாவை அவர் நியமனம் செய்து பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

    போபையா நியமனத்திற்கும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள காங்கிரஸ், இது தொடர்பாக சட்டப்படி நடவடிக்கை எடுக்க ஆயத்தமாகி வருகிறது. உச்ச நீதிமன்றத்தை அணுகி, போபையாவின் முந்தைய செயல்பாடுகளை சுட்டிக்காட்டி  தடை பெறவும் முயற்சிக்கலாம் என தெரிகிறது. 

    நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளதால் கர்நாடக காவல்துறை உயரதிகாரிகள் இன்று மாலை அவசரமாக கூடி ஆலோசனை நடத்தினர். எம்.எல்.ஏ.க்கள் வரும்போது கூடுதல் பாதுகாப்பு அளிப்பது குறித்து இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. #KarnatakaGovernor #KarnatakaAssembly
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    கர்நாடக மாநிலத்தில் எடியூரப்பா அரசு மீது நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில், தற்காலிக சபாநாயகராக பா.ஜ.க. எம்.எல்.ஏ. போப்பையா நியமிக்கப்பட்டுள்ளார். #KarnatakaElection #KarnatakaProtermSpeaker
    பெங்களூரு:

    கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், அதிக தொகுதிகளைக் கைப்பற்றிய கட்சி என்ற அடிப்படையில் பா.ஜ.க. ஆட்சியமைத்துள்ளது. முதல்வராக எடியூரப்பா பதவியேற்றார். 15 நாட்களில் அவர் பெரும்பான்மையை நிரூபிக்க கவர்னர் உத்தரவிட்டார்.

    இதற்கிடையே எடியூரப்பா பதவியேற்புக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், நாளை மாலை 4 மணிக்கு கர்நாடக சட்டசபையில் எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என உத்தரவிட்டது.

    எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் நாளையே பதவியேற்க வேண்டும். மூத்த எம்.எல்.ஏ ஒருவர் தற்காலிக சபாநாயகராக செயல்பட வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவில் தெரிவித்தனர். நம்பிக்கை வாக்கெடுப்பு ரகசியமாக நடக்காது என்பதையும் நீதிமன்றம் தெளிவு படுத்தியுள்ளது.

    நீதிமன்ற உத்தரவின்படி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்காக நாளை சட்டமன்றம் கூட உள்ளது. சபையை நடத்துவதற்கு தற்காலிக சபாநாயகராக பா.ஜ.க. எம்.எல்.ஏ. போப்பையாவை ஆளுநர் வஜுபாய் வாலா நியமித்துள்ளார். முன்னாள் சபாநாயகரான போப்பையா, விராஜ்பேட் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ஆவார்.

    7 முறை எம்.எல்.ஏ.வாக பதவி வகித்துள்ள காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினர்  தேஷ்பாண்டே இடைக்கால சபாநாயகராக நியமிக்கப்படலாம் என்று பேசப்பட்ட நிலையில் போப்பையா நியமிக்கப்பட்டுள்ளார். எனவே, போப்பையா நியமனத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 

    இதுபற்றி காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் மனு சிங்வி கூறுகையில், ‘பா.ஜ.க.வின் செயல் சரியல்ல. இந்த விஷயத்தில் நாங்கள் என்ன செய்ய உள்ளோம் என்பதை பிறகு தெரிவிக்கிறோம். பாராளுமன்ற மக்களவையில் கூட மூத்த உறுப்பினர்களுக்கே இடைக்கால சபாநாயகர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது’ என்றார். #KarnatakaElection #KarnatakaProtermSpeaker
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    கர்நாடகாவில் பெரும்பான்மை இல்லாத பாஜகவை ஆட்சியமைக்க அழைத்ததை கண்டித்து, குஜராத்தில் உள்ள கவர்னர் வஜுபாய் வாலாவின் வீட்டின் முன் காங்கிரசார் தர்ணாவில் ஈடுபட்டனர். #Vajubhaivala #Congress #Protest
    அகமதாபாத்: 

    கர்நாடக மாநிலத்தில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. பா.ஜ.க.வுக்கு தனி பெரும்பான்மை இல்லாத நிலையில் அக்கட்சியை ஆட்சியமைக்க கவர்னர் வஜுபாய் வாலா அழைப்பு விடுத்தார். அத்துடன் எடியூரப்பாவுக்கு முதல் மந்திரியாக பதவிப் பிரமாணமும் செய்து வைத்தார். இன்னும் 15 நாட்களுக்குள் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார். 

    கர்நாடகத்தில் ஆட்சியமைக்க 112 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை என்ற நிலையில் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணியை கவர்னர் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கவில்லை. எனவே, கவர்னரை கண்டித்து காங்கிரசார் நாடு முழுவதும் இன்று பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், கர்நாடகாவில் பெரும்பான்மை இல்லாத பாஜகவை ஆட்சியமைக்க அழைத்ததை கண்டித்து, குஜராத்தில் உள்ள கவர்னர் வஜுபாய் வாலாவின் வீட்டின் முன் காங்கிரசார் தர்ணா நடத்தினர்.

    ராஜ்கோட்டின் நியூட்டன் நகர் சொசைட்டியில் உள்ள வஜுபாய் வாலா வீட்டின் முன்பு காங்கிரசார் திரண்டு தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கவர்னருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

    இதுதொடர்பாக குஜராத் மாநில காங்கிரஸ் தலைவர் மகேஷ் ராஜ்புத் கூறுகையில், கவர்னர் வஜுபாய் வாலாவின் நடவடிக்கை ஜனநாயகத்தின் மீது படிந்துள்ள கறை போல் உள்ளது. மாநிலத்தை நிர்வகிக்கும் கவர்னர் பாஜக தொண்டர் போல் செயல்பட்டு வருகிறார் என குற்றம் சாட்டினார்.

    இதேபோல். குஜராத்தில் அகமதாபாத் மற்றும் வதோதராவிலும் காங்கிரசார் தர்ணாவில் ஈடுபட்டனர். #Vajubhaivala #Congress #Protest
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    கோவையில் கர்நாடக கவர்னரை கண்டித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

    கோவை:

    கோவை மாவட்ட காங்கிரஸ் சார்பில் கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் மயூரா ஜெயக்குமார் தலைமை தாங்கினார்.

    முன்னாள் எம்.எல்.ஏ. எம்.என். கந்தசாமி, மகேஷ் குமார், கே.பி.எஸ். மணி, கே.வி. செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கர்நாடகாவில் பெரும்பான்மையான காங்கிரஸ், மத சார்பற்ற ஜனதா தளத்தை ஆட்சி அமைக்க அழைக்காமல் பாரதீய ஜனதாவை ஆட்சி அமைக்க அழைத்த கர்நாடக கவர்னரை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் ஈடுபட்டவர்கள் மத்திய அரசுக்கு எதிராகவும், மோடிக்கு எதிராகவும் கோ‌ஷங்கள் எழுப்பினர்.

    ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள் தென்றல் நாகராஜ், கணபதி சிவகுமார், உமாபதி, குருமூர்த்தி, கருணாகரன், திலகவதி, வக்கீல் கருப்பசாமி, சவுந்திரகுமார், ராம. நாகராஜன், குமரேசன், பாஸ்கர், வசந்தி, துளசிராஜ், காந்தகுமார், ஆடிட்டர் குருசாமி, விஜயசாந்த், இஸ்மத், விஜயகுமார் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.