என் மலர்
நீங்கள் தேடியது "Karnataka Governor"
கர்நாடகத்தில் காங்கிரஸ்- ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சி நடக்கிறது. இந்த ஆட்சியை கவிழ்த்துவிட்டு, பா.ஜனதா ஆட்சி அமைக்க தீவிர முயற்சி செய்து வருகிறது. இதனால் குமாரசாமி தலைமையிலான அரசு ஆட்டம் கண்டு வருகிறது.
இதைத் தொடர்ந்து முதல்-மந்திரி குமாரசாமி ஆட்சியை கவிழ்க்க முயற்சி செய்யும் பா.ஜனதாவுக்கு எதிராக மக்கள் வீதிக்கு திரண்டு வந்து கிளர்ச்சியில் ஈடுபடவேண்டும் என்று பகிரங்கமாகவே அழைப்பு விடுத்தார். இதைக் கண்டித்த பா.ஜனதா, குமாரசாமி மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது.
மேலும் எதிர்க்கட்சிக்கு எதிராக மக்களை போராடத்தூண்டியதாக கூறி முதல்-மந்திரி குமாரசாமியை கண்டித்து பா.ஜனதா சார்பில் கர்நாடகா முழுவதும் நேற்று பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் எடியூரப்பாவின் வீட்டின் மீது காங்கிரஸ் கட்சியினர் தாக்குதல் நடத்தி உள்ளனர். எனவே அரசியல் சாசன சட்டத்தின்படி முதல்-மந்திரி குமாரசாமி மீது தாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறப்பட்டு உள்ளது. #Kumaraswamy #BJP #Yeddyurappa
சேலம்:
சேலம் மாவட்டம் எடப்பாடி பகுதியில் நடைபெறும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பிரமுகர் இல்ல திருமண விழாவில் பங்கேற்பதற்காக டி.டி.வி. தினகரன் நேற்றிரவு சேலத்திற்கு வந்தார். இன்று காலை சேலத்தில் தினகரன் நிருபர்களிடம் கூறியதாவது:-
அண்ணன் தம்பி என்றால் சொத்து தகராறு வரும். எனது முன்னாள் மாமா திவாகரனுக்கும், எனக்கும் சொத்து தகராறு இருப்பதாக கூறப்படுவது ஏற்புடையது அல்ல, அவருக்கும் எனக்கும் எந்த வித சொத்து தகராறும் இல்லை.
துரோக கும்பலுடன் அவர் சேர்ந்து விட்டார். இ.பி.எஸ்., ஓ.பி.எஸ்.சுக்கு அவர் ஏஜெண்டாக செயல் படுகிறார். மக்களிடையே பிரிவினை வாதத்தை ஏற்படுத்துபவர்களுக்கு ஆதரவாக இருக்க மாட்டோம்.
கர்நாடகாவில் எடியூரப்பாவுக்கு முதல்-அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைக்காமல் பெரும்பான்மையை முதலில் நிரூபிக்கும் படி கவர்னர் கூறி இருக்கலாம்.
104 இடங்களில் பா.ஜனதா வெற்றி பெற்றும் பெரும்பான்மை கிடைக்காததால் குழப்பம் நீடித்துள்ளது. தற்போது உச்சநீதிமன்ற உத்தரவால் ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது. அந்த தீர்ப்பு வரவேற்கதக்கது.
அ.தி.மு.க.வை எம்.ஜி.ஆர். தொடங்கிய காலத்திலேயே பொதுச்செயலாளருக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டது தொடர்பாக தெளிவாக கூறப்பட்டுள்ளது. அ.தி.மு.க. பொதுச்செயலாளரை பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்வார்கள்.
இது தொடர்பாக எங்கள் வாதங்களை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளோம். இதன் அடிப்படையில் எங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரும். 90 சதவீத தொண்டர்கள் எங்கள் பக்கம் உள்ளனர். அ.தி.மு.க. வை சேர்ந்த பலரும் எங்களுக்கு ஆதரவாக உள்ளனர். விரைவில் நிர்வாகிகளும் எங்கள் பக்கம் வருவார்கள்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக விவசாய சங்க பிரதிநிதிகள் அய்யாக்கண்ணு, பி.ஆர்.பாண்டியன் ஆகியோரிடம் பேசினேன். மேலாண்மை ஆணையம் உச்ச நீதிமன்ற உத்தரவை அப்படியே செயல்படுத்த வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.
18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் நல்ல தீர்ப்பு வரும்.
இவ்வாறு அவர் கூறினார். #Divakaran #dinakaran #karnatakagovernor
புதுச்சேரி:
கர்நாடக மாநில ஐ.என்.டி.யூ.சி. சார்பில் ஆண்டுதோறும் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவு ஜோதி யாத்திரை நடத்தப்படுகிறது. 27-வது ஜோதி யாத்திரை கடந்த 15-ந்தேதி பெங்களூரில் இருந்து கிளம்பியது. சேலம், கோவை, கொச்சின், கன்னியாகுமரி, நாகர்கோவில், மதுரை, விழுப்புரம் வழியாக வந்த ஜோதி யாத்திரை நேற்று புதுவைக்கு வந்தது.
இன்று காலை ஜோதி யாத்திரை ஸ்ரீபெரும் புதூருக்கு கிளம்பியது. ஜோதி யாத்திரையாக வந்தவர்களுக்கு காங்கிரஸ் துண்டு அணிவித்து முதல்-அமைச்சர் நாராயணசாமி வாழ்த்து தெரிவித்து ஜோதியை வழியனுப்பினார்.
நிகழ்ச்சியில் சபாநாயகர் வைத்திலிங்கம், அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமி நாராயணன் எம்.எல்.ஏ., டெல்லி பிரதிநிதி ஜான்குமார், புதுவை மாநில ஐ.என்.டி.யூ.சி. தலைவர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் முதல்- அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-
கர்நாடக ஐ.என்.டி.யூ. பொதுச்செயலாளர் சிவப்பிரகாசம் 27-வது ஆண்டாக ராஜீவ் நினைவு ஜோதி யாத்திரையை நடத்துகிறார். அவருக்கு என் பாராட்டுக்கள்.
ராஜீவ்காந்தி இன்றைய காலத்தில் தலைவர்கள் இறந்தவுடன் மறந்து விடுகின்றனர். சாதனை புரிந்த தலைவர்கள் வாழ்நாள் முழுவதும் நினைவில் இருப்பார். அதுபோல் ராஜீவ்காந்தி நினைவில் இருப்பவர்.
ராஜீவ் விமான பைலட்டாக இருந்தவர். சந்தர்ப்ப சூழ்நிலையில் இந்திராகாந்தி அவரை அரசியலுக்கு இழுத்தார். அரசியலுக்கு வந்த ராஜீவ், நாடு விஞ்ஞானத்தில் வளர்ச்சி பெற வேண்டும் என விரும்பினார்.
கம்ப்யூட்டரை அவர்தான் கொண்டு வந்தார். பஞ்சாயத்துராஜ் சட்டம், பெண்களுக்கு 33 சதவீத ஒதுக்கீடு, கிராமப்புற வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்தார். ராஜீவ் கால கட்டத்தில் நாடு நன்றாக வளர்ச்சி அடைந்திருந்தது. இருப்பினும் அரசியல் சூழ்ச்சியால் அவர் தோல்வி அடைந்தார்.
அடுத்த தேர்தலில் வெற்றியடைய நாடு முழுவதும் பிரசாரம் மேற்கொண்டார். அப்படி பிரசாரத்துக்கு வந்தபோது ஸ்ரீபெரும்புதூரில் படுகொலை செய்யப்பட்டார்.
ஸ்ரீபெரும்புதூரில் தப்பினால் புதுவை, மயிலாடுதுறைதான் இலக்காக இருந்தது. இன்று நாடு ஒற்றுமையாக இருக்க ராஜீவ்காந்தி, இந்திராகாந்தி சிந்திய ரத்தம்தான் காரணம்.
தற்போது நாடு மதச் சார்புடையவர்களிடம் சிக்கி தவிக்கிறது. ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளை சேர்ந்தவர்கள் சிறுபான்மையினருக்கும், தலித் மக்களுக்கும் பல தொந்தரவு தருகின்றனர். தாக்குகின்றனர்.
பா.ஜனதா ஜனநாயக முறையில் ஆட்சி அமைப்பதில்லை. பல இடங்களில் குறைந்த இடங்களை பெற்றிருந்தாலும் கோவா, மணிப்பூர், மேகாலாயாவில் அங்குள்ளவர்களை அரசியல் பலத்தால் மிரட்டி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி உள்ளனர்.
அதேபோல கர்நாடகாவிலும் ஆட்சியை பிடிக்க நினைத்தனர். ஆனால், அவர்களின் முயற்சி பலிக்கவில்லை. கர்நாடகாவில் காங்கிரஸ் கூட்டணி 116 இடங்களை பிடித்திருந்தது. பா.ஜ.க. 104 இடங்களையே பிடித் திருந்தது.
ஆனால், காங்கிரஸ், ஜனதாதள எம்.எல்.ஏ.க்களை பிடிக்க பேரம் பேசினர். அந்த எம்.எல்.ஏ.க்கள் கட்சிக்கு துரோகம் செய்ய மாட்டோம் என கூறிவிட்டனர்.
மோடி நாங்கள் ஜன நாயகத்தின் மீது நம்பிக்கை உள்ளவர்கள். விலைக்கு வாங்கி ஆட்சி செய்ய மாட்டோம். அரசுக்கு எந்த தொல்லையும் தர மாட்டோம் என்கிறார்.
பின்னர் ஏன் கர்நாட காவில் பா.ஜனதா ஆட்சி அமைக்க முன்வந்தார்? கர்நாடகாவில் குறைவான எண்ணிக்கை கொண்ட பா.ஜனதாவை பதவியேற்க அழைத்த கர்நாடகா கவர்னர் தாமாகவே பதவி விலக வேண்டும்.
இதில், ஐகோர்ட்டு மூலம் ஜனநாயகம் வெற்றி பெற்றுள்ளது. 2019 பாராளு மன்ற தேர்தலில் காங்கிரஸ் அதிக இடங்களை பிடித்து வெற்றி பெறும். ராகுல்காந்தி பிரதமராகி நாட்டில் அமைதியை உருவாக்க தொடர்ந்து பாடுபடுவார்.
இவ்வாறு அவர் பேசினார்.


கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தலில் 104 தொகுதிகளில் வெற்றி பெற்ற பா.ஜ.க. மெஜாரிட்டி இல்லாத நிலையில் ஆட்சியமைத்தது. எடியூரப்பா முதலமைச்சராக பதவியேற்றார். 15 நாட்கள் அவகாசம் பெற்று, எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் சிலரது ஆதரவுடன் சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூபிக்க பா.ஜ.க. திட்டமிட்டது. ஆனால் உச்ச நீதிமன்றம் உடனடியாக மெஜாரிட்டியை நிரூபிக்க உத்தரவிட்டது.
அதன்படி இன்று சட்டமன்ற சிறப்பு கூட்டம் நடைபெற்றது. காலையில் எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்றனர். 195 எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்ற பிறகு சட்டசபை 3.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
உணவு இடைவேளியின்போது எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை நடத்திய எடியூரப்பா, 13 பக்கங்கள் கொண்ட உணர்ச்சிமிகு உரையை தயார் செய்தார். பிற்பகல் 3.30 மணிக்கு சட்டமன்றம் மீண்டும் கூடியபோது, மீதமுள்ள எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்றனர். அதன்பின்னர் எடியூரப்பா தனது உரையை வாசித்தார்.
அப்போது உணர்ச்சிப்பெருக்குடன் தனது உரையை நிறைவு செய்த எடியூரப்பா, நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு போதிய உறுப்பினர்கள் ஆதரவு இல்லாததால் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.
இதை தொடர்ந்து ராஜ் பவனுக்கு சென்ற அவர் கவர்னர் வஜுபாய் வாலாவை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை ஒப்படைத்தார்.
இதற்கிடையே, சட்டசபையை தேதி குறிப்பிடாமல் ஒப்படைப்பதாக தற்காலிக சபாநாயகர் போபையா அறிவித்தார். அதன் பின்னர் சட்டசபை வாசலில் செய்தியாளர்களை சந்தித்த மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி தலைவர் குமாரசாமி, ஆட்சி அமைக்கும் விவகாரத்தில் நாங்கள் அவசரப்படவில்லை.
கவர்னரிடம் இருந்து அழைப்புக்காக காத்திருக்கிறோம் என்று குறிப்பிட்டார். #KarnatakaCMRace #KarnatakaFloorTest #YeddyurappaResigns

கோவை:
கோவை மாவட்ட காங்கிரஸ் சார்பில் கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் மயூரா ஜெயக்குமார் தலைமை தாங்கினார்.
முன்னாள் எம்.எல்.ஏ. எம்.என். கந்தசாமி, மகேஷ் குமார், கே.பி.எஸ். மணி, கே.வி. செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கர்நாடகாவில் பெரும்பான்மையான காங்கிரஸ், மத சார்பற்ற ஜனதா தளத்தை ஆட்சி அமைக்க அழைக்காமல் பாரதீய ஜனதாவை ஆட்சி அமைக்க அழைத்த கர்நாடக கவர்னரை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் ஈடுபட்டவர்கள் மத்திய அரசுக்கு எதிராகவும், மோடிக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள் தென்றல் நாகராஜ், கணபதி சிவகுமார், உமாபதி, குருமூர்த்தி, கருணாகரன், திலகவதி, வக்கீல் கருப்பசாமி, சவுந்திரகுமார், ராம. நாகராஜன், குமரேசன், பாஸ்கர், வசந்தி, துளசிராஜ், காந்தகுமார், ஆடிட்டர் குருசாமி, விஜயசாந்த், இஸ்மத், விஜயகுமார் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.