search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நம்பிக்கை வாக்கெடுப்பு- நாளை காலை 11 மணிக்கு சட்டமன்றத்தை கூட்ட கவர்னர் உத்தரவு
    X

    நம்பிக்கை வாக்கெடுப்பு- நாளை காலை 11 மணிக்கு சட்டமன்றத்தை கூட்ட கவர்னர் உத்தரவு

    கர்நாடகாவில் எடியூரப்பா அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்காக நாளை காலை 11 மணிக்கு சட்டசபை சிறப்பு கூட்டத்தை கூட்ட ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். #KarnatakaGovernor #KarnatakaAssembly
    பெங்களூரு:

    கர்நாடக மாநில சட்டப்பேரவையில் எடியூரப்பா அரசு மீது நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. ஆட்சியமைக்க 112 உறுப்பினர்கள் ஆதரவு தேவை என்ற நிலையில் பா.ஜ.க.விடம் 104 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே உள்ளது. எனவே, வாக்கெடுப்பில் வெற்றி பெறுவதற்காக எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு வலை விரித்துள்ளது. இதனால் தங்களிடம் இருக்கும் எம்.எல்.ஏ.க்களை தக்க வைப்பதில் காங்கிரஸ் மற்றும் ஜேடிஎஸ் கட்சிகள் கண்ணும் கருத்துமாக இருக்கின்றன. அதேசமயம் நம்பிக்கை வாக்கெடுப்பில் எடியூரப்பா அரசை வீழ்த்தவும் ஆயத்தமாகி வருகின்றன.

    இந்த சூழ்நிலையில்  நாளை காலை 11 மணிக்கு சிறப்பு சட்டமன்றத்தை கூட்டும்படி ஆளுநர் வஜூபாய் வாலா உத்தரவிட்டுள்ளார். சபையை வழிநடத்துவதற்கு தற்காலிக சபாநாயகராக கே.ஜி.போபையாவை அவர் நியமனம் செய்து பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

    போபையா நியமனத்திற்கும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள காங்கிரஸ், இது தொடர்பாக சட்டப்படி நடவடிக்கை எடுக்க ஆயத்தமாகி வருகிறது. உச்ச நீதிமன்றத்தை அணுகி, போபையாவின் முந்தைய செயல்பாடுகளை சுட்டிக்காட்டி  தடை பெறவும் முயற்சிக்கலாம் என தெரிகிறது. 

    நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளதால் கர்நாடக காவல்துறை உயரதிகாரிகள் இன்று மாலை அவசரமாக கூடி ஆலோசனை நடத்தினர். எம்.எல்.ஏ.க்கள் வரும்போது கூடுதல் பாதுகாப்பு அளிப்பது குறித்து இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. #KarnatakaGovernor #KarnatakaAssembly
    Next Story
    ×